-
27th July 2014, 06:11 PM
#11
Senior Member
Veteran Hubber
ரமலான் ஸ்பெஷல் (3)
கலைஞர் கருணாநிதி எழுதிய 'வெள்ளிக்கிழமை' நாவல் அதே பெயரில் நடிகை ஜி.சகுந்தலா தயாரிக்க மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடிப்பதாக ஏற்பாடாகி, கைவிடப்பட்டு, அதன்பின் சுந்தர்லால் நகாதா தயாரிப்பில் மு.க.முத்து நடிக்க 'நெய்னா முகம்மது' என்ற பெயரில் உருவாவதாக தினத்தந்தியில் முழுப்பக்கம் விளம்பரம் வந்து அதுவும் நின்று போய், இறுதியாக கலைஞரின் குடும்ப நிறுவனமான அஞ்சுகம் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'அணையாவிளக்கு' என்ற பெயரில் ஒருவழியாக வெளியானது.
அதில் ஒரு பாடல் மு.க.முத்து சொந்தக்குரலில்...
நல்ல மனத்தில் குடியிருக்கும்
நாகூர் ஆண்டவா
மக்கள் நலத்தை நினைத்து உ(ன்)னை
நானும் வேண்டாவா?
யாரும் வருவார் யாரும் தொழுவார்
நாகூர் ஆண்டவர் சந்நிதியில்
நானும் ஒன்றே நீயும் ஒன்றே
நபிகள் நாயகம் முன்னிலையில்
நல்ல மனத்தில் குடியிருக்கும்
நாகூர் ஆண்டவா
மக்கள் நலத்தை நினைத்து உ(ன்)னை
நானும் வேண்டாவா?...
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
27th July 2014 06:11 PM
# ADS
Circuit advertisement
Bookmarks