-
3rd August 2014, 03:18 PM
#11
Junior Member
Diamond Hubber
எம்ஜிஆர் முதன்முறையாக தமிழகமுதலமைச்சாரானபோது., சபாநாயகராக க.ராசாராம் தேர்ந்தெடுக்கப்பட்டு சபை மரபுபடி வலது கையை முதல்வர் எம்ஜிஆரும், இடது கையை எதிர்கட்சி தலைவர் மு.கருணாநிதியும் பிடித்து அழைத்துசென்று, சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர், க.ராசாராம் "அவை துவங்கலாம் "என்றார், சபை மரபுப்படி முதலில் முதலமைச்சர்தான் பேச்சை துவங்கவேண்டும், ஆனால் எம்ஜிஆரோ "இந்த சபையில் என்னைவிட அனுபவம் வாய்ந்த கலைஞர் அவர்களே பேச்சை துவங்கட்டும் "என்று சொல்லி அமர்ந்தார், கலைஞர் பேச்சை துவக்கினார் "சபாநாயகர் என்பவர் வீணை போன்று இருக்கவேண்டும், மன்ற உறுப்பினர்கள் வீணையுலுள்ள தந்திகம்பிகளை போன்றவர்கள்,ஆதலால்., வீணையிலிருந்து இனிய நாதத்தை எதிர்பார்க்கிறோம் "என்றார், தி.மு.கவினர் கரவொலி எழுப்பினர், அடுத்து முதலமைச்சர் எம்ஜிஆர் பேசத்துவங்கினார், "எதிர்க்கட்சி தலைவர் சபாநாயகரை வீணை போன்றவரென்றும், சட்டமன்ற உறுப்பினர்கள் தந்திகம்பிகள் போன்றவரென்றும் பேசினார் அதை நானும் ஆமோதிக்கிறேன், ஆனால் தந்தி கம்பிகளில் ஒன்று அறுந்தாலும், வீணையிலிருந்து இனிய நாதம் வராது, அபஸ்வர நாதம்தான் வரும், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைத்தால்தான், இனிய நாதத்தை எதிர்பார்க்கமுடியும் "என்று சொல்லி அமர்ந்தார்.
sattasabai pechugal
-
3rd August 2014 03:18 PM
# ADS
Circuit advertisement
Bookmarks