நிலவைப் பற்றிய பாடல்கள் என்றுமே அழகு..அதுவும் நிலவு என்றால் டபக்கென்று..

விலகாமல் கிட்டவும் வீழாமல் நிற்கும்
நிலவும் அவளழகும் நேர்

என்று ஆன்றோர்கள் (?!) சொன்னது போல பெண்ணிற்குத் தான் உவமிக்கிறார்கள்..

சரீஈ ஈ இ.ஸ்பெஷலில் வாசு சார் எழுதியிருக்க கூடாதென்று கருப்ப சாமி முதல் கள்ளழகர் வரை க் கும்பிட்டு எழுத ஆரம்பித்தால்...

அதோ அங்கே ஒரு பொன்னிற ரோஜா சிரிக்கிறதே கிட்டச் சென்று அமுதூறும் விழிகளை உற்று நோக்கில்..யாரந்த தேவதை..யெஸ்.. டி.ராஜேந்தர் அறிமுகம் செய்வித்த சொர்ண புஷ்பம் அமலா தான்..கொஞ்சம் வித்யாச அழகு.. கூடவே..மலையாளத் திரையில் கோலோச்சிய, கின்ற நாயகன் மம்முட்டி..

படம் த்ரில்லர் தான்..ஆனால் அதனூடாடி வருகின்ற இந்த அழகான பாடல்..கேட்டாலே - மயக்கத்தைத் தந்தவர் யாரடி எனக் கூற வைக்குமாக்கும்..

என்னவாக்கும் பாட்டு அது..

**

கல்யாணத் தேனிலா காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா


தென்பாண்டிக் கூடலா
தேவாரப் பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா

என் அன்புக் காதலா
என்னாளும் கூடலா
பேரின்பம் நெய்யிலா
நீ தீண்டும் கையிலா

பார்ப்போமே ஆவலாய்
வா வா நிலா


உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதிக் கூண்டிலா

சங்கீதம் பாட்டிலா -
நீ பேசும் பேச்சிலா.

என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா
தேனூறும் ??
உன் சொல்லிலா


தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

**

நல்ல பாட்டு தானே..