-
20th September 2014, 01:24 AM
#11
Junior Member
Devoted Hubber
பாடல்: சிரிச்சா கொல்லிமலை குயிலு
படம்: ஜோதி
பாடியவர்கள்: பாலசுப்ரமணியம் & ஷைலஜா
வரிகள்: வைரமுத்து
மேற்கு தொடர்ச்சி மலைகளில் கொல்லிமலைக்கு ஒரு அழகும், ஐய்தீகமும் உண்டு. அங்கு, கொல்லிமலை குயிலு காதலில் விழும் வரை, கழுகுகள் வட்டமிடும் ஊரில் தன்னை பாதுகாத்து கொள்ள கரடு மொரடாக இருக்கிறாள். நாயகன் அழகாய் சொல்கிறான்.
கல்லா கெடந்து பூ ஆனா (ள்)
ரெண்டாந்தடவ ஆளானா (ள்)
கரும்பாறைய போல் இருந்தா (ள்)
சொக மாம்பழமா கனிஞ்சா (ள்)
வழக்கம் போல், ராஜா சாரை என்ன சொல்வது? அவர் இல்லை என்றால் கல் பூ ஆனால் என்ன, பொன் ஆனால் நமக்கென்ன? இன்று மட்டும் இந்த பாடலை 30 முறை கேட்டேன்.
இந்த பாடலை பல நூறு முறை கேட்டு ரசித்திருந்தாலும், பாடல் இடம் பெற்ற ஜோதி படத்தை நான் இது வரை பார்க்கவில்லை. ஒவ்வொரு முறை பாடலை கேட்கும் போதெல்லாம் தியாகராஜனும் சரிதாவும் சேர்ந்து பாடுவது போல எனக்கு ஒரு பிரம்மை ஏற்படும். அருமையான பாடல். சரியாக படமாக்கபடாத பல நூறு பாடல்களில் இதுவும் ஒன்று. முதலாம் இடை இசையை ராட்டினத்தை காட்டி இயக்குனர் மணிவண்ணன் எப்படி வீனடிதிருப்பாரோ, அதே போல், அம்பிகா மோகனுக்கு சாப்பாடு பரிமாறி, இலையை எடுக்கும் வரை உள்ள மொக்கை காட்சிகளுக்கு ஒரு அருமையான BGM குடுத்து, ராஜா சாரும் தன்னுடைய நேரத்தை வீணடித்திருக்கிறார்.
Last edited by rajaramsgi; 20th September 2014 at 01:38 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th September 2014 01:24 AM
# ADS
Circuit advertisement
Bookmarks