-
14th October 2014, 11:16 AM
#11
Originally Posted by
KALAIVENTHAN
தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்....
வாழ்க்கையில் தீர்மானம் சரியாக ஆடுவோம். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
டியர் கலைவேந்தர் சார்
நேற்று மாலை நண்பர் திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் தொலை பேசியில் தொடர்பு கொண்டு விக்கரமாதித்தன் படத்தின் 'தீர்மானம் சரியாக ஆடாவிட்டால் ' பாடலை பற்றி நீங்கள் எழுதி மேலும் இந்த பாடல் பார்க்கும் போது என் நினைவு வந்ததாக நீங்கள் எழுதி உள்ளதாக சொன்னார் .நேற்று இன்டெர்நெட் டௌன் ஆகி இருந்ததால் உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை. மன்னிக்கவும் . இன்று காலை இப்போது முழுமை ஆக படித்தேன். மிக சிறந்த கலை ரசிகர் நீங்கள் என்றால் சொன்னால் அது மிகை ஆகாது .புகழ்ச்சிக்கு கூறுகிற வார்த்தை அல்ல இது.மனதின் அடித்தளத்தின் இருந்து வரும் வார்த்தைகள் .
நீங்கள் கூறியது போல் நானும் கர்நாடக சங்கீதம் ராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடல்களை ஒப்பிட்டு பார்த்து தான் தெரிந்து கொள்கிறேன். இந்த பாடல் மிக அருமையான பாடல். சற்று கல்யாணி ராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடல் போல் இருக்கும். ஆனால் இது வாசஸ்பதி என்ற ராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடல் என்று நினைக்கிறன் .
வாசஸ்பதி,லதாங்கி,கல்யாணி மூன்றுமே கிட்டத்தட்ட ஒரே ராகம் போல் இருக்கும் .63,64 மற்றும் 65வது மேள கர்த்த ராகங்கள் இவை.
ஒரு சுரம் மற்றும் ஒன்று கொன்று மாறும் .இந்த படத்தின் இசை அமைப்பாளர் ராஜேஸ்வர் ராவ் என்று நினைவு .
இந்த பாடலின் போது நீங்கள் சொன்னது போல் மக்கள் திலகம் தேக்கு மரத்தில் ஆக்கி வைத்த தேகம் போன்று தான் இருப்பார் . சும்மாவா சொன்னார் கவிஞர் 'தேக்கு மரம் உடலை தந்தது ' என்று
நல்லதொரு வாய்ப்பினை வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி
இந்த பாடலை மீண்டும் ஒன்று அல்லது இரண்டு முறை கேட்டு நிச்சயம் ஒரு நீண்ட ஆய்வு கட்டுரை எழுத வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு விட்டது. அது நடக்கும் என்றே நம்புகிறேன்
என்றும் நட்புடன்
கிருஷ்ணா
இந்த நேரத்தில் நண்பர் எஸ்வி அவர்களையும்,முரளி அவர்களையும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்
-
14th October 2014 11:16 AM
# ADS
Circuit advertisement
Bookmarks