-
9th March 2015, 07:49 AM
#11
Junior Member
Devoted Hubber
தோழியின் சொல் :
பறந்திடுமே கவலை தோழி
மறைந்திடுமே உந்தன் வலி
மனதினில் உறுதி கொள் மகன்
மாறிடுவான் ஒரு நாள்
குறை உன்னிடமில்லை- மகன்
குறை தீர்க்க மருந்துமில்லை
குறையற்ற மனிதர் யாருமிலை
குறைத்திடுவாயே உன் குமுறலை
வாழும் வழி வழுக்கினான் விடு
வயதின் கோளாறு வினையாகாது
விருப்பம் போல் நடக்கிறவன் போக்கு
வெந்து விம்முவதால் அது மாறாது
வளர்ந்த மகன் உன் பையன் - நீ
வருந்தி மட்டும் என்ன பயன் ?
விடியும் நிச்சயம் ஒருநாள் வருவான்
விதிப்படி விடு ! வேறு வேலை எடு !
Courtesy :
பின் குறிப்பு:
தோழி சொல் ஏன்?
காரணம் தெரிந்து கொள்ள :
**
தாயின் புலம்பல் தோழியிடம் :
இவனைப்பெற வேண்டி அழுதேன் அன்று
இவனைப் பெற்றேனே அழுகிறேன் இன்று
வேலைக்கு போக மாட்டானாம்
வீணாய் அடிமை ஆகானாம்
சொந்த தொழிலும் வேண்டாமாம் அது
சூனியம் கொள்வது போல்தானாம்
படித்தவன் பகுத்தே பேசுகிறான்
எதிர்த்தால் சினந்தே ஏசுகிறான்
சோம்பி சும்மா அலைகின்றான்
சொகுசாய் சுகமே தேடுகிறான்
ஏதுமிலை ஜோலி குடிப்பதே ஜாலி
இருந்த வீடு நகை எல்லாம் காலி
ஏகமாய் கொடுத்து விட்டான் எனக்கு
ஏக்கம் இதயநோய் அல்சர் எல்லாமே
இதுவே என் சோகக் கதை
தினமும் படும் சித்ரவதை
என்ன செய்ய என் மகன் உய்ய
ஏதேனும் வழியென்று உண்டா
இருந்தால் சொல் ஒரு வழி !
Last edited by Muralidharan S; 10th March 2015 at 10:19 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th March 2015 07:49 AM
# ADS
Circuit advertisement
Bookmarks