-
13th March 2015, 10:15 AM
#11
Senior Member
Senior Hubber
Originally Posted by
kalnayak
சி.க.,
சத்தியமாக சொல்கிறேன். மருத காசி இவ்வளவு நிறைய நல்ல பாடல்களை வழங்கியுள்ளார் என்று எனக்கு தெரியாது. அதுவும் நீங்கள் உங்களுக்கு பிடித்த பிரபலமான பாடல்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளதாக சொல்லும் போது அவர் எழுதியுள்ள எல்லாப் பாடல்களையும் நினைத்தால் மலைப்பாய் இருக்கிறது.
பாவை விளக்கு குற்றாலத்துப் பாடல் நல்ல அழகானப் பாடல். குற்றாலக் குறவஞ்சியுடன் போட்டி போடும் பாடல்தான். நல்ல தேர்வு. Kvm-ன் நாட்டுப் புறப் பாடல் எனப் பெயர் பெற்ற "சிட்டு போல பென்ணிருந்தா..." tms குரலில் மயக்குமே.
வாலியின் இரங்கற்பாவில் அவரது வழக்கமான டச்சிங் தெரிகிறது.
மருதகாசி ஐயா மிகச்சிறந்த பாடலாசிரியர். அதற்கு முன் கவிஞர்களாக பாடல்கள் எழுதி வந்தனர். பாடலாசிரியர் எப்படி எழுதவேண்டும் என்று வழி வகுத்தவர் மருதகாசி ஐயா.
திரையிசைத்திலகம் தான் அவருக்கு கடைசி வரை நிறைய வாய்ப்புகள் வழங்கினார்.
நமக்கெல்லாம் பிடித்த நீல வண்ண கண்ணா வாடா முதல் ஓசை கொடுத்த நாயகியே வரை எல்லாவிதமான பாடல்களையும் எழுத வல்லவர்.
முகனூலில் இவரைப்பற்றி நான் எழுதியதை விரைவில் இங்கே பதிவிடுகிறேன்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
13th March 2015 10:15 AM
# ADS
Circuit advertisement
Bookmarks