-
1st April 2015, 10:37 AM
#11
Senior Member
Senior Hubber
சந்திரன் பாடல் 55: "ஒரு மாலை சந்திரன் மலரைத் தேடுது"
-------------------------------------------------------------------------------------
பார்த்திபன் காதல் சோகத்தில் பாடி ஆரம்பிக்க ஒரு நடனக் குழுவினர் காதல் மோகத்தைப் பற்றி பாடி அவரது பாடலுடன் கலக்குகின்றனர். இல்லை. இல்லை. ராஜாதான் கலக்குகிறார். எஸ்.பி.பாலசுப்ரமணியமும், மின்மினியும் பாடியுள்ள நல்ல பாடல்.
பாடல் வரிகள்:
----------------------
ஆண்: பால் நெலவு சூரியன்போால் சுட்டதென்ன நியாயம்
பச்சாக்கிளி தோளைக்கொத்தி வந்ததிந்த காயம்
ஓடிவந்த வைகை நதி காஞ்சதென்ன மாயம்
கூடவழி இல்லையென்றே ஆனது பெண் பாவம்
பெண்: ஒரு மாலைச் சந்திரன் மலரைத் தேடுது மலையடிவாரத்திலே
இள மானைக் கண்டிட கானம் பாடுது மன்மத ராகத்திலே
புயல் வீசும் மாசியிலே ஒரு ஆசை மேகமடி
அது பேசும் பாஷையிலே ஒரு காதல் விரகமடி
ஒரு தேகம் வெந்தது மோகத் தீயினிலே ஆஆஆ
ஆண்: வெண்ணிலவில் தேடுகின்றேன் கன்னி முகம் காணோம்
புன்னகையும் நானிழந்தேன் என் மனதில் சோகம்
சித்திரத்தைப் பார்க்க வந்தேன் கற்குவியல் கண்டேன்
செம்மலையைப் போலிருந்தேன் தென்னிலங்கையானேன்
செல்லக் குயில் கூவ மெல்ல வரும் நேரம்
சொல்லில் வரும் சோகம் கங்கை நதியாகும்
எங்கிருந்த போதிலும் நீ வந்துவிடு தேவி
பெண்: ஒரு மாலைச் சந்திரன் மலரைத் தேடுது மலையடிவாரத்திலே
இள மானைக் கண்டிட கானம் பாடுது மன்மத ராகத்திலே
புயல் வீசும் மாசியிலே ஒரு ஆசை மேகமடி
அது பேசும் பாஷையிலே ஒரு காதல் விரகமடி
ஒரு தேகம் வெந்தது மோகத் தீயினிலே ஆஆஆ
ஒரு மாலைசந்திரன்
காணொளி:
---------------------
உன்னை வாழ்த்திப்பாடுகிறேன் என்று சொல்லி யாரும் இப்படி பாடக்கூடும். இனிமைதான், ஆனால் சோகமாயிற்றே!!!
Last edited by kalnayak; 1st April 2015 at 10:43 AM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
1st April 2015 10:37 AM
# ADS
Circuit advertisement
Bookmarks