Results 1 to 10 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

Threaded View

  1. #11
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    டைரக்டர் கே.பாக்யராஜ் அமெரிக்கா பறந்தார்; எம்.ஜி.ஆரை சந்தித்து பேசினார்

    திரைப்படங்களுக்கு கதை_வசனம் எழுதி டைரக்ஷனும் செய்து அதில் கதாநாயகனாகவும் நடித்து தனி முத்திரை பதித்தவர் பாக்யராஜ். ஏராளமான வெற்றிப்படங்களை தந்தவர். எம்.ஜி.ஆரின் மீது தீவிர பற்று கொண்டிருந்த அவர், "நான் எம்.ஜி.ஆரின் ரசிகன்" என்று பெருமையுடன் கூறி வந்தார். தனது படங்களில் சில காட்சிகளில் எம்.ஜி.ஆரின் படத்தை காட்டினார்.

    இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு பேசும்போது, "பாக்யராஜ் எனது கலை வாரிசு" என்று அறிவித்தார். எம்.ஜி.ஆர். இப்படி அறிவித்தது பாக்யராஜூக்கு சற்றும் எதிர்பாராததாக இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

    இந்த நிலையில் 7_2_1984 அன்று பாக்யராஜூக்கும், நடிகை பூர்ணிமாவுக்கும் திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் திருமணம் நடை பெற்றது. எம்.ஜி.ஆர். தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். 1984_ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் எம்.ஜி.ஆருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அப்போது எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவை நினைத்து பாக்யராஜ் மிகவும் கவலை கொண்டார். எம்.ஜி. ஆர். தமிழ்நாட்டில் இல்லாத நிலையில் சட்டசபைக்கு தேர்தல் வந்தது. அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர். உடல் நிலை குறித்து எதிர்க்கட்சிகள் சில சந்தேகங்களை கிளப்பிவிட்டன. எம்.ஜி.ஆர். குணம் அடைந்து திரும்பினாலும் அவரால் முன்போல் செயல் பட முடியுமா என்று கேள்விகள் எழுப்பின.

    நடிகர் பாக்யராஜை அவரது நண்பர்கள், ரசிகர்கள் "எம்.ஜி. ஆர். உங்களை கலை வாரிசு என்று அறிவித்து இருக்கிறார். கட்சிக்கு இந்த நேரத்தில் நீங்கள் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாதா?" என்று கேட்டனர்.இதனால், அமெரிக்கா சென்று எம்.ஜி.ஆரை நேரில் பார்ப்பது என்றும், தேர்தல் பிரசாரம் செய்வதற்கு அவரிடம் ஆசி பெறுவது என்றும் பாக்யராஜ் தீர்மானித்தார்.

    பிறகு உதவியாளர், பட தயாரிப்பாளர் பாபுஜி, டாக்டர் தம்பு ஆகியோரை அழைத்துக்கொண்டு அமெரிக்கா புறப்பட்டார். டிசம்பர் 14_ந்தேதி அமெரிக்கா சென்றடைந்த பாக்யராஜ் எம்.ஜி.ஆரை சந்தித்து விட்டு 19_ந்தேதி சென்னை திரும்பினார். பின்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் பாக்யராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:_

    "15_ந்தேதி காலை ஆஸ்பத்திரிக்கு சென்றேன். ஆனால் அங்குள்ள காவலர்கள் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டார்கள். ஆஸ்பத்திரியில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கும் "தங்கும் விடுதி"யில் தங்கி இருந்த ஜானகி அம்மாளை சந்தித்து பேசினேன். அவர் மறுநாள் அனுமதி பெற்று தருவதாக கூறினார்கள். மறுநாள் காலை 11 மணிக்கு அனுமதி கிடைத்தது.

    அதற்கான `பாட்ஜ்' அணிந்து கொண்டு சென்றேன். நான் மட்டும் தனியாக சென்றேன். நான் கதவை திறந்து கொண்டு சென்றதும் என் கண்ணில் படுக்கை தென்பட்டது. ஆனால் அதில் எம்.ஜி.ஆர். இல்லை. அதன் ஒரு பக்கத்தில் உள்ள ஜன்னல் ஓரமாக போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்து வெளியே தெரியும் இயற்கை காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்தார்.

    என்னைக் கண்டதும் சிரித்த முகத்துடன் நாற்காலியில் இருந்து எழுந்து எனது இரு கைகளையும் பிடித்தார். எதிரே இருக்கும் நாற்காலியில் உட்காரும்படி சுட்டிக்காட்டினார். "நான் உங்களை சந்தித்து ஆசி பெறவே வந்திருக்கிறேன்" என்றேன். எனக்கு மகள் பிறந்ததையும், அவளுக்கு `சரண்யா' என்று பெயர் சூட்டப்பட்டு இருந்ததையும் கூறினேன்.

    அதை முகம் மலர கேட்டுக் கொண்டார். தேர்தல் நிலவரம் பற்றி நான் சொன்னபோது அதை கூர்ந்து கவனித்துக் கேட்டார். தேர்தல் நேரத்தில் தான் தமிழ்நாட்டில் இல்லையே என்ற உணர்ச்சி மேலிடுவதை அவர் முகத்தில் கண்டு எனக்கு கண்கள் கலங்கின.

    "நான் தேர்தல் பிரசாரத்துக்கு போகிறேன். அதற்கு முன் உங்கள் ஆசி பெற வந்தேன்" என்று காலை தொட்டு வணங்கினேன். என்னை தனது இரு கைகளாலும் தூக்கி நிறுத்தி தனது வலது கையை என் தலை மீது வைத்து ஆசி வழங்கினார். நான் விடை பெறும்போது தனது இரு கைகளையும் குவித்து வணங்கி வழி அனுப்பினார்.

    இவ்வாறு பாக்யராஜ் கூறினார்.





    http://www.maalaimalar.com/2011/08/2...nt-to-ame.html
    Last edited by saileshbasu; 21st August 2015 at 09:47 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •