Results 1 to 10 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

Threaded View

  1. #11
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    சிவாஜி பாட்டு-5

    வார்த்தைகளில் இருக்கிற தெளிவை ஒரு வாத்தியத்தில்
    கொண்டு வந்த இசை வித்தகர்,
    வயலின் மேதை அமரர்.குன்னக்குடி வைத்தியநாதன்
    அவர்களின் நினைவு நாள் இன்று என அறிந்த நிமிஷத்தில்
    பளீரென்று நினைவுக்கு வந்தது
    இந்தப் பாட்டு.

    கம்பீரம்,கம்பீரம் என்கிறோமே..
    அதன் பொருளை இந்தப்
    பாடலில் அறியலாம்.

    அதிரும் அந்தக் குரலில் கம்பீரம்.

    தெளிவான பாடலின் தெளிவான இசையில் கம்பீரம்.

    நல்ல தமிழ் வரிகளில் கம்பீரம்.

    நடந்தாலும்,
    படி இறங்கினாலும்,
    படி ஏறினாலும்,
    கொஞ்சமும் சாதாரண மனிதனின் தளர்வுத் தோற்றம்
    காட்டாத அய்யா நடிகர் திலகத்தின் அசைவுகளில் ராஜ
    கம்பீரம்.

    "நாட்டையும் தமிழையும் வாழ வைத்தான்" என்று அருகில்
    நிற்கிற தமக்கை பாட, உணர்ச்சி
    வசப்பட்டு,உதடுகள் சுழித்து,
    விழிகள் மலர்த்தி நம் நடிகர் திலகம் காட்டும் பாவங்களுக்கு
    புல்லரிக்காத உடம்புகளை..

    கண்ணம்மாப் பேட்டைகளும்
    மதிக்காது.
    -------
    நடிகர் திலகமெனும் மாபெரும்
    கலைஞன், நாட்டையும்,தமிழையும் வாழ வைத்து,
    நமக்கென உள்ளதை வழங்கி விட்டு,தலை நிமிர்ந்து நிற்கிறான்..

    தஞ்சை பெரிய கோயில் போல.

    அவனுக்கென உள்ள மரியாதையையும், கௌரவத்தையும்..
    எப்போது,எப்படி தரப்போகிறோம்..நாம்..?


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •