Results 1 to 10 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னா!

    உமக்கு பழைய பாக்கி ஒன்று இருக்கிறது. நான் சொன்ன அருமை அருவிப் பாடல்.

    மலைப்பாறைகளுக்கு இடையில் பாலூற்றாய்க் கொட்டிக் கொண்டிருக்கும் தேனூற்று அருவிகள். அங்கு இடை ஒடித்து நடந்து குளிக்கச் செல்லும் குள்ளி குயிலி. கொட்டங்கச்சி வயலின் இசை போல ஆரம்ப இசை அதே அருவி போல நம்மை 'அலேக்'காக அள்ள, 'சின்னக்குயில்' சித்ரா சிதறாமல் ஹம்மிங் எடுக்க, வழுக்குப் பாறையில் சறுக்கிச் செல்லும் குயிலையை அவருக்குத் தெரியாமல் குளிப்பதை ரசிக்கும் 'மலை நாட்டு மச்சான்' 'சத்தத்' தியாகு. அங்கே மாதுரி டீசன்ட் என்றால் இங்கே குயிலி அபாய கட்டம். கிணற்றுக்கடியில் 'ஆத்தாடி பாவாடை கூத்தாட' கட்டிக் குளித்து, முரளி மச்சானுக்கு 'பூவிலங்கு' போட்டவர் இங்கு கொட்டும் அருவியில் தனியே கொண்டாட்டம். தியாகுவின் கனவில் குயில் அவர் அருகில் வந்து ஆட புதுப் பையன் 'முழி முழி' என்று கை வைத்த பனியன் அணிந்து, கை கட்டிக் கொண்டு முழிக்கிறார்.! (உம்ம பாணியில் சொன்னா 'அசமஞ்சமாயா நீ?'

    முதல் சரணம் முடிந்து அந்த அருவி கொட்டும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும். அப்படியே படிகளின் அடுக்குகளில் பால் கொட்டுவது போல் 'வெள்ளை வெளேர்' என்று நீர் கொட்டுவது பிரம்மாண்டம். அருவியின் வளைவுகளுக்கும், அன்னத்தின் வளைவுகளுக்கும் இயக்குனர் போட்டி வைத்திருப்பார் போல. ஜெயிப்பது எது என்று தீர்மானிப்பது கஷ்டம்.

    அதெல்லாம் கிடக்கட்டும்.

    சித்ராவின் குரலும், M.S. முராரியின் அறிமுக இசையும் இந்தப் பாடலை எங்கோ தூக்கிக் கொண்டு போய் நிறுத்தி விட்டது. சித்ரா ஒவ்வொரு வரியையும் அனுபவித்துப் பாடியிருப்பார். ஒவ்வொரு வரி முடிவிலும் அவர் கொடுக்கும் அதிர்வுகள் நெஞ்சாங்கூட்டில் ஆழமாய் இறங்குகின்றன. இந்தப் பாட்டின் டியூனையும், அதன் இனிமையையும் சொல்ல வார்த்தைகளே வரவில்லை. இசைக் கருவிகள் ஒவ்வொன்றும் செய்யும் சாகச வித்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல. முராரி பார்த்து பார்த்து பாடலை செதுக்கியிருப்பார். மலைக்காட்டு கிராமப் பின்னணி இசை, குறிப்பாக மூங்கில் குழல்களின் சப்தம் நம்மை அப்படியே ஈர்க்கும். என்ன! கொஞ்சம் ராஜாவின் சாயல் இருக்கும். ஆனால் தனித்தன்மை முத்திரை பதிக்க தவறாது.

    கேட்கும் போது மெய் மறந்து போவோம் என்பது உண்மை. உண்மை.

    'மலை நாட்டு மச்சானே!'


    Last edited by vasudevan31355; 10th October 2015 at 07:44 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes madhu, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •