-
31st October 2015, 09:10 PM
#11
Senior Member
Senior Hubber
ஆதிராம் சார்..
வழக்கம் போல் தகவல்கள் தகவல்கள்.. இதில் நீர் எங்களைப் பாராட்டுகிறீர்கள்..உம்மை எப்படிப் பாராட்டுவது..
குக நாதன் ஜெயா ஜோடி என்பது தெரியும்.. இன்ஃபேக்ட் தொண்ணூறுகளில் என் சகோதரியின் கணவர் அரசு வங்கியில் மேலாளராக இருந்த போது – நுங்கம்பாக்கம் கிளையோ, ஆயிரம் விளக்கு கிளையோ நினைவிலில்லை – திருமதி ஜெயா பணம் வித்ட்ரா செய்ய வந்தார்களாம்.. ச.கணவரிடம் வரவில்லை..பட் அங்கு வேலை பார்த்த காஷியர் வந்து சொன்னாராம்..ச.க வுக்கு இண்ட்ரெஸ்ட்லாம் இல்லை..தவிர யார் என்பதும் தெரியாது எனில் பார்க்கவெல்லாம் இல்லை.. பட் விடுமுறையில் சென்றிருந்த போது தமிழ் சினிமா தக்குணுண்டு தகவல் களஞ்சியமான (அப்பப்ப சொல்லிக்கணும் ) என்னிடம் ஜெயா யாரு எனக் கேட்டுவிட்டு இந்த விஷயம் சொன்னார்..
தங்கள் வார்த்தைகளுக்கு நன்றி.. அனுஷ்கா பற்றி பிறிதொரு சமயம் எழுதலாம்..இ.இ. வ ந்தபின்பு.. ஓகேயா..
மூங்கில் மரக் காட்டினிலே கேட்குமொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால் உண்டாகும் சங்கீதம்..
நாதமில்லை என்றால் கீதம் கிடையாது
ராகமில்லை என்றால் தாளம் கிடையாது
காதல் இல்லையென்றால் உலகம் கிடையாது
காதல் இல்லையென்றால் உலகம் கிடையாது
கண்கள் இல்லையென்றால் காட்சியும் கிடையாது
கண்கள் இருந்தென்ன காட்சியும் இருந்தென்ன
கொஞ்சும் மொழியில்லை குறிப்பும் தெரியவில்லை
பிஞ்சும் காயாகும் காயும் கனியாகும்
கனியில் சுவையிருக்கும் காலம் வந்தால் பலன் கொடுக்கும்
சீர்காழி பிஎஸ் பாட்டு உங்களால் இப்போது தான் கேட்டேன் பார்த்தேன்..கல்யாண்குமார் இளமை..கூடவே குறுகுறு விழிப் பாவை சாயலுக்கு ஜெயந்தி, பத்மினி கொண்டிருக்கிறார்..சொல்ல மாட்டாங்களா என்ன..
இனிய பாட் சொன்னதற்கு நன்றி..
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
31st October 2015 09:10 PM
# ADS
Circuit advertisement
Bookmarks