-
2nd May 2016, 09:52 PM
#11
Senior Member
Senior Hubber
எதிரெதிர் பாடல்கள்.. 3
ஏட்டில் எழுத்தில் இயற்கையில் பல்வாறாய்
காட்டிடும் காட்சிகள் கண்களிலே – கூட்டியே
இங்கெழுத வந்தாலோ ஏனென்று கேட்கின்றீர்
பொங்கியே பேசுவேன் போ(ம்)
பேசு இன்னும் இருக்கே..
பேசு என் அன்பே உன் அன்பை என் என்பேன்..
இந்த விடியும் வரை காத்திரு பார்தது சேலத்தில்..சேலத்தில் ஒரு தெருவா இரண்டு தெருவா என நினைவில்லை..போனால் ஒரே தியேட்டர்கள்.. ஒரு சனி மாலை என நினைக்கிறேன்..நானும் என் அக்கா கணவரின் தம்பியும் சென்று என்னபடம் பார்க்கலாம் என செலக்ட் செய்து – இது புதுசாச்சே.. நல்லா இருக்குமா.. பாக்யராஜ்படம் டிக்கட் கிடைக்குதான்னு பார்க்கலாம் என ட்ரை பண்ணியதில்…ஆச்சரியம் கிடைத்து விட்டது (ஏசி.. நாலோ ஐந்தோ நினைவு..அக் அத்திம் என்ன சொல்வார்கள் என சின்னதாய்க் கலக்கல் – திரும்பியதில் எதுவும் சொல்லவில்லை..பத்திரமாய் எடுத்துச் சென்ற பணத்தின் மிச்சத்தைக்கொடுத்தால் எல்லாம் நோக்கு என்றுவிட்டார்கள்)
பொய்மையும் வாய்மையுரைத்துபுரை தீர்த்த
நன்மை பயக்குமெனின்..
பின்ன இந்தப் பாட்டுக்கு எதுவும் தோணலையே..சரி ஒருவிருத் போட்டுப் பார்க்கலாம்..
வளவள வென்றே பேசி
…வயணமாய் அலைகள் நீட்டி
பளபள தோற்றங் கொண்டே
…பாங்குடன் இருக்கும் ஆறாய்
கலகல கண்ணன் இங்கே
..கனிவுடன் எழுதிப் பார்க்க
மளமள பேசா மல்தான்
…முடித்திடு என்றால் மாட்டேன்..
பேசாதே வாயுள்ள ஊமை நீ
சொந்தம் என்றும் பந்தம் என்றும் சொன்னால் பாவமே
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
2nd May 2016 09:52 PM
# ADS
Circuit advertisement
Bookmarks