Results 1 to 10 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

Threaded View

  1. #11
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    இதய தெய்வத்தின் ஆட்சி




    "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
    தெய்வத்துள் வைக்கப்படும்" எனும் வள்ளுவனின் வாய்மொழிக்கேற்ப தமிழ்மக்களின் இல்லங்களில் எல்லாம் இதய தெய்வமாய் வீற்றிருக்கும் புரட்சித்தலைவரின் நூற்றாண்டை கொண்டாடும் வேளையில் அவர் தந்த கட்சியும் சின்னமும் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்பது ஒவ்வொரு எம்ஜிஆர் பக்தரின் ஆவல் என்பது அனைவரும் அறிந்தது. இரட்டை இலை இந்நாட்டை ஆளவேண்டும் என்று கண் துஞ்சாத எம்ஜிஆரின் உள்ளங்கள் 19.05.2016 அன்று இரவுதான் உறங்கியிருக்கும் என்னையும் சேர்த்து. ஏன்? எதனால்? உலகம் போற்றும் உத்தம தலைவரின் விழாவை சிறந்த முறையில் அரசு விழாவாக ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட வேண்டும் என்பதால். பேருக்காக கொண்டாடப்பட்ட அண்ணா நூற்றாண்டு விழாவாக ஆகிவிடக் கூடாது என்பதால்.. இன்று இந்த ஆட்சி இங்கே வந்தது என்றால் முழு முதற்காரணம்...எம்ஜிஆரும்..இரட்டை இலையும் என்பதை அனைத்து மக்களும் ஊடகங்களும் ஒப்புக்கொண்டு விட்டன. ஆளுங்கட்சியில் அதிருப்தி எனும் நோய் இருந்தாலும் அனைத்தையும் ஓட்டிய பச்சிலையாக இன்று இரட்டை இலை மிளிர்கிறது. இந்த இரட்டை இலை சின்னத்தை தன் வீட்டில் மட்டுமல்ல இதயத்திலேயே வரைந்து வைத்து தேர்தலில் முத்திரைப்பதித்த ஒவ்வொரு பக்தனின் உள்ள வேட்கை இந்த நூற்றாண்டு விழாவாகும்.. இதை ஆட்சியாளர்கள் உணர்ந்து நம் தெய்வத்தின் நூற்றாண்டு விழாவை உலகில் எங்குமில்லாதபடி கொண்டாடி சிறப்பு செய்யவேண்டும் என்று எம்ஜிஆர் பக்தர்கள் சார்பாக கேட்டுகொள்கிறேன்.


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
    Last edited by kaliaperumal vinayagam; 25th May 2016 at 04:56 PM.

  2. Thanks orodizli, Richardsof thanked for this post
    Likes orodizli, mgrbaskaran, oygateedat liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •