-
5th June 2016, 10:08 AM
#11
Senior Member
Diamond Hubber
மாலை மயக்கம் போய் இரவில் மங்கிய நிலவில் கனவிலிது கண்டேன்.
டி.எம்.எஸ் குரல் குழலோசையுடன் இழைந்து இதயம் இனிக்கச் செய்யும் பாடல். நடிகர் திலகத்திற்கு கிடைத்திருந்தால் நானிலம் முழுதாகச் சென்று சேர்ந்திருக்கும். கற்பனையில் கண்டு இன்புறுகிறேன்.
மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை
பொங்கி வரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும்
புன்னகையின் புது நிலவும் போற்ற வரும் தோற்றம்
மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
துங்கமணி மின் போலும் வடிவத்தாள் வந்து
துங்கமணி மின் போலும் வடிவத்தாள் வந்து
தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்
அங்கதனிற் கண்விழித்தேன் அடடா ஓ அடடா
அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன்
மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ என்றேன்
காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ என்றேன்
காலமே மதியினுக்கோர் கருவியாம் என்றாள்
ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்
நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள்
'அடடா ஓ அடடா!'.... பாடலில் வரும் இவ்வரிகளே இப்பாடலுக்கு புகழுரை. பாடலாசிரியரைப் பற்றி கூறவும் வேண்டுமோ?
Last edited by vasudevan31355; 5th June 2016 at 10:13 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
5th June 2016 10:08 AM
# ADS
Circuit advertisement
Bookmarks