-
15th November 2016, 08:23 AM
#11
Senior Member
Diamond Hubber
ஆதவன் ரவி!
'அன்பைத் தேடி' காட்சி விளக்கம் அருமை. தங்கள் ரசனை மெச்சத் தகுந்தது.
தங்கள் விருப்பம் போல மரணப்பிடியில் இருக்கும் பாதிரியாரிடம் மடிந்து, ஒடிந்து விழும் ஆண்டனியின் உடல் மொழியையும், உள்வேதனைகளையும் இன்னும் வெளிக்கொணர முயல்கிறேன். அதைவிடவும் இன்னொரு சிறப்பான காட்சி. அவ்வளவு இலகுவாக வார்த்தைகளில் வடித்துவிட இயலாது. அதை நம் ராகவேந்திரன் சாருக்காக எழுதுவதாக கூறியிருந்தேன். இப்போது அது உங்களுக்குமாக சேர்த்து விரைவில்.
'கடவுள் தந்த இருமலர்கள்' பாடலில் 'சுந்தர' சுந்தர் உண்மை நிலையை உணருமுன் மாடியில் கருவண்ண உடையில் நின்றபடி தன்னை கருவருத்தவளை அழுத்தமான இறுக்கத்துடன், ஆழ்மனதில் புதைந்து போன ஆழமான மாறாத வடுக்களுடன், நெஞ்சமெல்லாம் வஞ்சமாக 'பாடுடி...பாடு. உன் நடிப்புக்கெல்லாம் மயங்கிய ஏமாளி சுந்தர் என்று இப்போதும் என்னை நினைக்கிறாயா? என்னிடமே நடிக்கிறாயா?... இனி உன் ஆட்டம் செல்லாது' என்று பழைய காதலி உமாவை மெளனமாக, அதே சமயம் தீர்க்கமாக, மூர்க்கமாக முறைத்தபடி (மனைவிக்கும் தெரிந்துவிடாதபடி) நிற்கும் அந்த ஒரு வினாடிக் காட்சியை தங்கள் கவிதை நடையில் ஆழமாகத் தருக.
(முரளி சாரும், ராகவேந்திரன் சாரும், நானும் இமை கொட்டாமல் பார்த்து பார்த்து, ரசித்து ரசித்து, வியந்து வியந்து இப்போதும் வியக்கும் காவியக் காட்சி. எப்போதும் வியக்கப் போகும் விலையில்லா உயரிய உயிர்க் காட்சி)
Last edited by vasudevan31355; 15th November 2016 at 11:56 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
15th November 2016 08:23 AM
# ADS
Circuit advertisement
Bookmarks