-
24th March 2017, 06:22 PM
#11
Junior Member
Devoted Hubber
Actor Vijayakumar interview in Tamil The Hindu.,
ஐம்பது ஆண்டுகளைக் கடந்து திரையுலகில் பயணித்து வருகிறீர்கள். திரும்பிப் பார்க்கும்போது எப்படி உணர்கிறீர்கள்?
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, நாட்டுச்சாலை கிராமத்தில் உள்ள ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். அந்தக் காலத்திலேயே அப்பா ஊரில் இரண்டு ரைஸ் மில் வைத்து ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அரிசி அனுப்பும் தொழிலில் இருந்தார். அப்பா, அம்மாவுக்கு நான் மருத்துவராக வேண்டும் என்பது ஆசை. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’மேடை நாடகமாகக் கும்பகோணத்தில் நிகழ்வதையும், அதில் சிவாஜி சார் நடிக்கிறார் என்பதையும் கேள்விப்பட்டு அதைப் பார்க்கச் சென்றோம்.
மகாமகம் நடக்கும்போது எவ்வளவு கூட்டம் இருக்குமோ அப்படி ஒரு கூட்டம். மரத்தில் ஏறிக்கொண்டு சிவாஜி சாரைப் பார்த்தோம். அவருக்குக் கிடைத்த மரியாதையைப் பார்த்து வாழ்ந்தால் இப்படி ஒரு மனிதனாக வாழ வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இனி படிப்பு வேண்டாம், நடிப்புதான் நம் வேலை என்று சென்னைக்கு ரயில் ஏறினேன்.
ஒருமுறை சிவாஜி அண்ணன் சாப்பாடு பரிமாற சாப்பிட்டுக்கிட்டிருந்தேன். ‘‘டேய் விஜயா? எப்படிடா நீ சினிமாவுக்கு வந்தே?’ன்னு கேட்டார். நீங்க மேடையில நடித்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகத்தைப் பார்த்துட்டு வந்தேன்ணே!’ என்று சொன்னேன். பரிமாறுவதை நிறுத்திட்டு, ‘அடப்பாவிப் பயலே... என்னோட நாடகத்தைப் பார்த்துட்டு வந்தவன் இன்னைக்கு என்னையே அந்தக் குழம்பு ஊத்துங்க, இந்தக் குழம்பு ஊத்துங்கன்னு ஆர்டர் போடுற!’ன்னு கிண்டல் பண்ணினார். ‘‘இதுதான்ணே சாதனை!’’ன்னு சிரிச்சிக்கிட்டே சொன்னேன். அதுக்கு அவர், ‘‘டேய் விஜயா... ‘வீர பாண்டிய கட்டபொம்மன்’ தெருக்கூத்தைப் பார்த்துட்டுத்தான் நான் நாடகத்துலயே சேர்ந்தேன்!’’ன்னு சொன்னார். ரெண்டு பேரோட அலைவரிசையும் ஒத்துப்போகிறதே என்று நினைத்து சந்தோஷமானேன்’’
-
24th March 2017 06:22 PM
# ADS
Circuit advertisement
Bookmarks