-
24th September 2006, 12:23 PM
#11
Senior Member
Veteran Hubber
சற்றேற்குறைய
அந்தி கவியும் நேரம்,
மந்திகள் எனைச்சூழும் தூரம்,
சிந்திய தேனீர்த்துளி சட்டைமேல்,
விந்தியம்போல் இமைகளோ நிரம்பமேல்.
சற்றேற்குறைய
கடவுள் அங்கே வீற்றிருந்தார்,
அடவுன் கடையாசை என்னவென்றார்,
அடியேன் மனைவியின் புன்னகைதான்
குடியே!கேட்டுக்கொள்ளதையென வரந்தந்தான்.
சற்றேற்குறைய
கண்ணாடி அவிழ்ந்து உடைய
என்னகரம் மேகச்சாறுகளால் சிதைய
மெல்ல பட்சியினிறகு உதற
சில்லறையாய் உயிர் சிதற
சற்றேற்குறைய
மரணம் மேகங்களின் அழுகையோடு.
________________________________________________
உணர்வுகளின்றி
உச்சாணிக்கொம்பினில்
உணவால்
உள்ளத்திற்கு
உரம்சேர்த்துக்கொண்டிருக்கையில்
உடைந்த
உறுமுகில்கள்
உப்பினைக்கொண்டு
உயிரீயும்
உன்னதம்
உளத்தாலறியவியலாது
உப்பளமன்ன
உருண்டையாய்
உபயோகமின்றி
உம்மணாமூஞ்சியாக
உட்கர்ந்திருந்தேனிந்த
உட்டாலக்கடி.
______________________________________________
'கும்'மென பூத்திருந்த
காந்தி
சொன்னதாம்
சூரியனுக்காக காத்திருக்கிறேன்,
அவனுக்கு பொருத்தமான துணியில்!
'ஜம்'மென விரிந்திருந்த
செம்பருத்தி
சொன்னதாம்
வண்டுக்காக காத்திருக்கிறேன்,
அவனுக்கு விருப்பமான மணத்தில்!
'கம்'மென அகழ்ந்திருந்த
அல்லி மட்டும்
சொன்னதாம்
நிலா எனக்காக காத்திருக்கிறான் பார்,
எனக்கு பொருத்தமான உடையொப்பனையில்!
நீதி:தன்னம்பிக்கையே தனக்கு உதவி.
__________________________________________________ __
வாரீர் என
வாரியணைக்கும்
வங்காளக்கடல் போன்ற
வரையா மரபு
விரிகாலமாய் இருப்பினும்
விசாலமான அறிவின்றி
வீணணாய்ப் போனேனே
விதண்டாவாதம் செய்யும்
வேலையற்ற வேளையிலே
வெங்காயங்கொணர்வதொப்ப
வேண்டாம் என்னால்
விழியின் விழுதாய் நீர்.
__________________________________________________ __
எனக்கே பிடிக்காத என் படைப்புகள் இவை.இருப்பினும் ஒரு அல்ப ஆசை,யாராவது ஓரே ஒருவர் ஏதோ பரவாயில்லை என்று சொல்வார்களென்ற எதிர்பார்ப்பிலே.........
-
24th September 2006 12:23 PM
# ADS
Circuit advertisement
Bookmarks