டியர் நௌ சார்,
தகவலுக்கு நன்றி!
ஒரு மேடைக் கச்சேரியில், மலேசியாவின் பாட்டுக்குரலை கேட்டு அசந்த மெல்லிசை மாமன்னர், அவருக்கு அளித்த முதல் வாய்ப்பு "பாரத விலாஸ்". அதற்குப் பின்னர் "தலைப்பிரசவம்". முத்துராமன்-லக்ஷ்மி-பிரமீளா பிரதான பாத்திரங்களில் நடித்த இப்படம் 1973-ம் ஆண்டின் இறுதியில் வெளியானது. தாங்கள் குறிப்பிட்ட 'மாலையிட்டு பூ முடித்த மணமகளாக.....' பாடலை, கவிஞர் அவினாசி மணி இயற்றித் தர, எம்.எஸ்.வியின் இசையில், ஸோலோவாகப் பாடினார் மலேசியா வாசுதேவன்.
வாசுவுக்கு "தலைப்பிரசவ"த்தில் தனியாக தலைப்பாடல்.
அன்புடன்,
பம்மலார்.





Bookmarks