Quote Originally Posted by RAGHAVENDRA View Post
அன்பு நண்பர்களே,
நம்மில் எத்தனை பேர் கடந்த 28.04.2011 அன்று இரவு விஜய் டி.வி. நடந்தது என்ன நிகழ்ச்சியைப் பார்த்திருப்பீர்கள் என் று தெரியாது. ஆனால் அன்றைய நிகழ்ச்சியில் கமலா திரையரங்கு உரிமையாளர் திரு சிதம்பரம் அவர்கள் கூறிய தகவல் நம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் என்றால் மிகையில்லை. சமீபத்தில் மறைந்த ஆன்மீக குரு பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்கள் ஒரு முறை நடிகர் திலகத்தை அழைத்திருந்தாராம். சிதம்பரம் அவர்கள் அழைத்து சென்றிருக்கிறார். அங்கே நடுநாயகமாக வீற்றிருந்த பகவான் அவர்கள் 50 அடி தூரத்திலுள்ள பாதையை விட்டு விட்டு, 150 அடி தூரத்திலுள்ள பாதை வழியாக நடிகர் திலகத்தை வரச் சொல்லியிருக்கிறார். அதே மாதிரி சென்ற நடிகர் திலகத்திடம் பாபா அவர்கள் கேட்டிருக்கிறார், கணேசு, உன்னை ஏன் 150 அடி தூரத்திலுள்ள பாதை வழியாக வரச்சொன்னேன் தெரியுமா என்று. பதில் தெரியாமல் நடிகர் திலகம் ஆவலுடன் பாபா அவர்களை நோக்க, பாபாவே பதிலளித்திருக்கிறார். உன்னுடைய நடையழகை பார்க்கவே உன்னை அப்படி வரசொன்னேன் என கூறியிருக்கிறார்.
திரு சிதம்பரம் அவர்கள் அளித்த பேட்டியின் காணொளி

அனைத்து இறையருளும் ஒருங்கே அமையப் பெற்ற நடிகர் திலகத்தின் மேல் தூற்று மாரி பொழிவோரைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டாம். அவர்களை அந்த இறைவன் பார்த்துக்கொள்வார். நாம் நம்முடைய பணியைத் தொடர்வோம்.
அன்புடன்
அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களே,

நேற்று சிங்கை அன்பர்கள் மேற்கொண்ட முயற்சியினைத் தாங்கள் பதிந்த போது அதைப் பார்த்துப் பெரு மகிழ்ச்சி அடைந்த எண்ணற்ற ரசிகர்களுள் நானும் ஒருவன். அதற்காக உங்களுக்கும் சிங்கை நண்பர்களுக்கும் கோடானுகோடி நன்றிகளைக் காணிக்கையாக்குகிறோம். இதைப் பதிவிடுவதற்கு முன் உடனேயே, கமலா திரைஅரங்கு உரிமையாளரும், நடிகர் திலகத்தின் மிக நெருங்கிய நண்பருமான திரு. வி.என். சிதம்பரம் அவர்கள் நடிகர் திலகம் மறைந்த ஆன்மீக குரு சத்ய சாய் பாபா அவர்களை பார்க்கச் சென்ற செய்தியையும் பதிவிட்டு கடைசியில் ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளீர்கள். தூற்றுவோர் தூற்றட்டும்; நம் பணியை நாம் தொடர்வோம் என்று.

நீங்கள் இப்போது எழுதியதைப் படித்த போது, என் கண்கள் பனிக்க ஆரம்பித்து விட்டது. எண்ணற்ற மக்களைத் தன் ரசிகர்களாகப் பெற்றக் கலைத் தாயின் தலைமகன் நடிகர் திலகம் மறைந்த ஆன்மீக குருவையும் ஆக்கிரமித்திருக்கிறார் என்று படிக்கின்றபோது, ஆனந்தக் கண்ணீர் வருகிறது.

நாம் அனைவரும் வழக்கம் போல் நடிகர் திலகத்தைப் பற்றிய அந்த ஆனந்த நினைவுகளிலேயே மூழ்கித் திளைப்போம்.

அன்புடன்,

பார்த்தசாரதி