பம்மலார் சார்,

சரியா போச்சா?. 'கோடு போட்டால் போதும் நீங்கள் ரோடே போடுபவர்' என்று எல்லோரும் சொன்னது சரியா போச்சா?.

பாருங்கள், இயக்குனர் திரு டி யோகானந்த் பற்றி நான் ஒரு பதிவு எழுதப்போக, அதற்கு ராகவேந்தர் சார் அருமையாக விளக்கம் தரப்போக, அதன் தொடர்ச்சியாக நெய்வேலி வாசுதேவன் சார் நடிகர்திலகம் - யோகானந்த் காம்பினேஷனில் வந்த 'தாய்' என்ற அற்புதப்படத்தைப்பற்றிய ஆய்வு எழுத, முத்தாய்ப்பாக நீங்கள், திரு டி யோகானந்த் அவர்களின் 'பிலிமாலயா'வில் வந்த அருமையான பேட்டியை அளித்து சூப்பராக நிறைவு செய்துவிட்டீர்கள். இப்போது டி.யோகானந்த பற்றி பலரும் அறிய நல் வாய்ப்பாக அமைந்து விட்டது.

இதற்காக ராகவேந்தர் சார், வாசுதேவன் சார் ஆகியோருடன் உங்களுக்கு மிகப்பெரிய நன்றியை சமர்ப்பிக்கிறேன். நாளுக்கு நாள் உங்கள் சேவை மலைக்க வைக்கிறது.

டி.யோகானந்த் அவர்களைப்பற்றி அறிய, தீக்குச்சியை கொளுத்திப்போட்டவன் என்ற வகையில் நானும் பெருமை அடைகிறேன்.