-
13th August 2011, 07:59 PM
#981
Senior Member
Veteran Hubber
பம்மலார் சார்,
சரியா போச்சா?. 'கோடு போட்டால் போதும் நீங்கள் ரோடே போடுபவர்' என்று எல்லோரும் சொன்னது சரியா போச்சா?.
பாருங்கள், இயக்குனர் திரு டி யோகானந்த் பற்றி நான் ஒரு பதிவு எழுதப்போக, அதற்கு ராகவேந்தர் சார் அருமையாக விளக்கம் தரப்போக, அதன் தொடர்ச்சியாக நெய்வேலி வாசுதேவன் சார் நடிகர்திலகம் - யோகானந்த் காம்பினேஷனில் வந்த 'தாய்' என்ற அற்புதப்படத்தைப்பற்றிய ஆய்வு எழுத, முத்தாய்ப்பாக நீங்கள், திரு டி யோகானந்த் அவர்களின் 'பிலிமாலயா'வில் வந்த அருமையான பேட்டியை அளித்து சூப்பராக நிறைவு செய்துவிட்டீர்கள். இப்போது டி.யோகானந்த பற்றி பலரும் அறிய நல் வாய்ப்பாக அமைந்து விட்டது.
இதற்காக ராகவேந்தர் சார், வாசுதேவன் சார் ஆகியோருடன் உங்களுக்கு மிகப்பெரிய நன்றியை சமர்ப்பிக்கிறேன். நாளுக்கு நாள் உங்கள் சேவை மலைக்க வைக்கிறது.
டி.யோகானந்த் அவர்களைப்பற்றி அறிய, தீக்குச்சியை கொளுத்திப்போட்டவன் என்ற வகையில் நானும் பெருமை அடைகிறேன்.
-
13th August 2011 07:59 PM
# ADS
Circuit advertisement
-
13th August 2011, 09:13 PM
#982
Junior Member
Senior Hubber
Dear friends
Further to my earlier mails we have to bow our head for the excellent remarks made by late avm chettiar comparing NT with world class actors. true statement when I visited OSCAR theatre in LOS ANGELES in 2006 i stood for a while there and wept myself for our great actor of all times for not being awarded oscar. had the movie deivamagan had final entry iam sure he would have won the oscar. even now I am daily dreaming why not heget the oscar honors posthumously as a specialcase
-
13th August 2011, 10:11 PM
#983
Senior Member
Diamond Hubber
அன்பு நண்பர்களே!
சமீபத்தில் N.T.அவர்களின்" தெனாலிராமன்" படத்தை பார்த்தபோது அற்புத காட்சி ஒன்று காண நேர்ந்தது. விஜயநகர பேரரசை எதிரிகளிடமிருந்து காப்பாற்ற தெனாலி ராமனாக வரும் N.T அவர்களும், மந்திரி அப்பாஜியாக வரும் திரு. V.நாகைய்யா அவர்களும் ஆலோசனை செய்து கொண்டிருப்பார்கள். அப்போது N.T எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க 'ஒரு நாடகம் நடத்த வேண்டும்," என்பார். அதற்கு நாகைய்யா அவர்கள்," நடிப்பது யார்?" என்று கேட்க, அதற்கு N.T அவர்கள் ,"நான்தான் இருக்கிறேனே எல்லாவற்றிலும் நடிக்க," என்பார். {எவ்வளவு நிதர்சனமான உண்மை!} பின் தொடர்ந்து நாகைய்யாவிடம்," ஆனால் எனக்கு ஒரு சிஷ்யன் மட்டும் தேவை," என்பார். அதற்கு நாகைய்யா அவர்கள் சற்று யோசித்து விட்டு N.T.அவர்களிடம் தன் இரு கைகளையும் நீட்டி,"குருதேவரின் அருள் இருந்தால் அந்த சிஷ்யனாகும் பாக்கியம் எனக்கே கிடைக்கலாமே!," என்பார். அதற்கு N.T.அவர்கள் சற்று அதிர்ந்து ,"என்ன இது ? தாங்களா!,"என்று கேட்பார்.
{அடடா !நடிப்பில் N.T.அவர்களை விட பல வருடங்கள் சீனியரான நாகைய்யா அவர்கள் N.T அவர்களிடம் தன்னை சிஷ்யனாக்கிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்வது நடிகர்திலகத்தின் நடிப்புத் திறமைக்குக் கிடைத்த கௌரவமல்லவா!} அதற்கு நாகைய்யா அவர்கள் நடிகர் திலகத்திடம் ,"ஏன்? எனக்கென்ன நடிக்கத் தெரியாதா?", என்று சற்று பரிதாபமாக கேட்பார்.[இது நடிகர்திலகத்தின் நடிப்புக்கு முன்னால் அது எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவர் இரண்டாம் பட்சம் தான் என்பதைப் போல இருக்கும்] அதற்கு நடிகர்திலகம் தன்னடக்கத்துடன் ,"ஐயோ! அப்படிச் சொல்லவில்லை," என்பார். என்ன ஒரு அருமையான சீன்! நடிகர்திலகத்தை மனதில் வைத்துக்கொண்டே அமைக்கப்பட்ட அற்புதமான காட்சி. இத்தனைக்கும் இந்தப் படம் நடிகர்திலகத்தின் 29-ஆவது படம். அப்போதே அவர் திறமைகளைக் கண்டு எழுதப்பட்ட வசனங்கள். அந்தக் காட்சி இதோ உங்களுக்காக.
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 13th August 2011 at 10:17 PM.
-
13th August 2011, 11:19 PM
#984
Senior Member
Veteran Hubber
டியர் mr_karthik,
பாராட்டுக்கு நன்றி !
தாங்கள் கூறியது முற்றிலும் சரி !
டைரக்டர் திரு.டி.யோகானந்த் அவர்களைப் பற்றி தாங்கள் முதலில் வினாக்களை வினவிப் பதிவிட, அதற்கு விளக்கமான ஒரு பதில் பதிவை ராகவேந்திரன் சார் வழங்க, அதன் தொடர்ச்சியாக நெய்வேலி வாசுதேவன் சார் அருமையான "தாய்" ஆய்வு அளிக்க, அடியேனும் என் பங்குக்கு யோகானந்த் அவர்களின் அரிய 'பிலிமாலயா' பேட்டியை நிழற்படங்களாக இங்கே இடுகை செய்ய, ஆக மொத்தம் யோகானந்த் அவர்கள் நமது நடிகர் திலகம் கிருபையில் ஒரு round வந்து விட்டார். அவர் குறித்த கணிசமான தகவல்களும் கிடைத்துவிட்டன என்றும் சொல்லலாம்.
இவையனைத்துக்கும் காரணகர்த்தாவாகிய தங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
Last edited by pammalar; 13th August 2011 at 11:22 PM.
pammalar
-
14th August 2011, 12:18 AM
#985
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Subramaniam Ramajayam
Dear friends
Further to my earlier mails we have to bow our head for the excellent remarks made by late avm chettiar comparing NT with world class actors. true statement when I visited OSCAR theatre in LOS ANGELES in 2006 i stood for a while there and wept myself for our great actor of all times for not being awarded oscar. had the movie deivamagan had final entry iam sure he would have won the oscar. even now I am daily dreaming why not heget the oscar honors posthumously as a specialcase
In my understanding , Oscar award is for hollywood movies , except one category "Best foreign film" .. So how can we expect oscar for NT ? Oscar is not an International award , but Hollywood award ..IMO , Asian - Africa Best actor award and Chevalie award are more international compare to Oscar .
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
14th August 2011, 03:50 AM
#986
Senior Member
Veteran Hubber
-
14th August 2011, 04:22 AM
#987
Senior Member
Veteran Hubber
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
மூன்று தெய்வங்கள்
[14.8.1971 - 14.8.2011] : 41வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம்

அன்புடன்,
பம்மலார்.
-
14th August 2011, 06:39 AM
#988
Senior Member
Seasoned Hubber
டியர் பம்மலார்,
பொன்விழா மருதாணி இதழ் மலர் பக்கங்களுக்கும் மூன்று தெய்வங்கள் விளம்பர நிழற்படத்திற்கும் நன்றியும் பாராட்டுக்களும். சூப்பர்...
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
14th August 2011, 06:44 AM
#989
Senior Member
Seasoned Hubber
சித்ராலயா இதழில் வெளிவந்த வெளியீட்டு விளம்பரம்

இத்திரைப்படத்திற்காக வெளியிடப் பட்டுள்ள ஒளித்தகட்டின் நிழற்படம்

இத்திரைப்படத்தினைப் பற்றி துக்ளக் இதழில் வெளிவந்த விமர்சனம் மற்றும் இயக்குநரின் பதில்

நடப்பது சுகமென நடத்து, வரும் நாளை உனதென நினைத்து... இப்பாடலை ஏற்கெனவே நடிகர் திலகத்தின் கொள்கைப் பாடல் பகுதியில் இத்திரியில் விவாதிக்கப் பட்டுள்ளது. தற்போது இப்பாடல் காட்சி மீண்டும் நமக்காக...
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
14th August 2011, 11:17 AM
#990
Senior Member
Veteran Hubber
பம்மலார் சார்,
பொன்விழாப்பதிவுகள் அருமை மட்டுமல்ல, இன்றைய தலைமுறைக்கு காணக்கிடைத்திராத பொக்கிஷப்புதையலும் கூட. அவற்றைப் படிக்க, படிக்க நெஞ்சத்தில் மலரும் நினைவுகள் வெள்ளமாகப்பெருகி வருகிறது. தங்களின் சேவையை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை. இன்னும் எப்படியெல்லாம் அசத்தப்போகிறீர்கள் என்று எண்ணி வியக்கிறேன்.
'மூன்று தெய்வங்கள்' வெளியான தினத்தை முன்னிட்டு பதித்த விளம்பரத்துக்கும் நன்றி. அப்படத்தின் 50-வது நாள், 75-வது நாள் விளம்பரங்களையும் (கிடைத்ததும்) பதிவிடுவீர்கள் என்று நம்புகிறோம்.
ராகவேந்தர் சார்,
'மூன்று தெய்வங்கள்' பட விளம்பரம், டி.வி.டி. உறை, துக்ளக் விமர்சனம் மற்றும் பாடலின் வீடியோ இணைப்பு அனைத்துக்கும் நன்றி. மிகவும் சிக்கனமாக எடுக்கப்பட்ட படமாதலால் நன்றாக ஓடி தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பெரிய லாபத்தை சம்பாதித்துக்கொடுத்த படம் மூன்று தெய்வங்கள். சிவந்த மண்ணில் துவங்கி நிறைய படங்கள் சென்னை மேகலாவில் வெளியாயின. அவற்றில் மூன்று தெய்வங்களும் ஒன்று.
Bookmarks