-
28th April 2012, 06:42 AM
#11
Junior Member
Newbie Hubber
அன்பு நண்பர்களே,
வாசு சார்,
படிக்காத மேதை ரங்கன் போல் திரியில் திரும்பியதற்கு வாழ்த்துக்கள்.இவ்வளவு அழகாக பாராட்டும் ஒருவர் பாராட்டை பெரும் பாக்கியம் அற்று ;போனேனே என்று ஒரு ஏக்கம் கொள்ள வைக்கும் அளவு வஞ்சனையற்ற பாராட்டு.பம்மலார் சார்பில் என் நன்றி.
முரளி சார்,
தங்களின் அரசியல் சார்ந்த எழுத்துக்களும் ,பம்மலார் சாரின் பதிவுகளுமே என்னை திரியின் பால் ஈர்த்த விஷயங்கள்.(பிறகு கார்த்திக்,சாரதா, சாரதி என்று பலரின் எழுத்துக்கள் தங்க வைத்தன.) தங்களை கவர்ந்த வரிகளை எழுதும் போதே என் டார்கெட் நீங்களே.உங்கள் பாராட்டுக்கு நன்றி.தங்களை அழைக்க Sumathi En Sundari இறுதி காட்சி போல், மது..... என்று இழுத்தாலே போதும் போல் உள்ளதே?
பம்மலார் சார்,
வாசு அவர்களின் எழுத்து பாராட்டை போல் ,பல ஆயிரம் மடங்கு உள்ளத்தினால் தங்களை பாராட்டி மகிழ்கிறேன்.நான் சுருக்கமாக அனுப்புவது கடிதம் அல்ல. உள்ளம். அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல. உங்கள் உள்ளத்தை கொள்ளை கொண்டு,மேலும் பிரசாதம் பெற எண்ணும் பக்தனின் பாமாலை
Last edited by Gopal.s; 28th April 2012 at 06:54 AM.
-
28th April 2012 06:42 AM
# ADS
Circuit advertisement
Bookmarks