-
8th November 2012, 12:48 AM
#11
நமது வசந்த மளிகை ஆனந்திற்குக் கிடைக்கும் இத்தனைக் கொண்டாட்டங்களையும் கண்டு இந்த எளிய nt யின் அடிமை ஆனந்திற்கு எல்லையில்லா பேரானந்தம்.
அந்த நாள் நினைவுகள்................
எத்துணை முறை கண்டு களித்திருப்போம், எண்ணிலடங்காத தடவை.
வாசு சார் அவர்கள் கூறியது போல பராசக்தி, வீர பாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு பின் " வசந்த மாளிகையின்" ஒவ்வொரு வார்த்தைகளையும் மறப்போரும் உண்டோ!!!! ஏனென்றால் எல்லா வசனங்களுமே "பஞ்ச" டயலாக் ஆயிற்றே!!!
"முத்தம்' கொடுப்பதிலேயே (சினிமாவில்) புதுமையைப் புகுத்தி எல்லார் புருவத்தையும் உயர்த்திய படமாயிற்றே !!!!!
காதல் வயப்படாதவரையும் காதல் வயப்பட வைத்த காவியமாயிற்றே !!!!!!!!
நன்றிகள் ஆயிரம் நண்பர்களே அந்த நாள் அனுபவங்களை மீண்டும் நெஞ்சில் உணர வைத்தமைக்கு !!!!!!! !!!!!!!
ஆனந்த்.
-
8th November 2012 12:48 AM
# ADS
Circuit advertisement
Bookmarks