-
17th January 2013, 10:09 PM
#1391
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Prabo
//Dig
[I]En pEr Prabhu-nga....since that name is already taken, Prabo-nu maathitaen. Namma real name thaan nammalaala decide panna mudiyala, virtual name ennavaavathu vachika vaendiyathu thaan...who cares.
//
Neengalaam body language pathi discuss panrathaala, enakku pidicha oru clip. Hand acting is risky...it diverts attention to hands. But, this clip can be watched once for expressions, once for hand gestures, once for dialogue delivery and once for all at a time. Wonderful.
நண்பர் பிரபு,
அருமையான காணொளி பதிவிட்டிட்ட உங்களுக்கு,
நன்றி சொல்லிட விழைகிறேன்.
தலைவர் உச்சரிப்பை புகழ்ந்திடுவதா,
குரல் மாற்றங்களை புகழ்ந்திடுவதா,அல்லது
கலைஞர் எழுதிட்ட வசனங்களை புகழ்ந்திடுவதா என்று
நினைத்திட்டு,நினைத்திட்டு மனம் மருண்டிட்டதுதான் மிச்சம்.
கல் தோன்றிட்டு மண் தோன்றிடா காலத்தே,
முன் தோன்றிட்டு மூத்த செம்மொழியாம் தமிழ் மொழி தனக்கு,
ஆடைகள் பல சூட்டி,
ஆபரணங்கள் பல பூட்டி,
பூரண நிலவைக்காட்டி,
கொம்புத்தேனோடோடு கலந்திட்ட முக்கனி ஊட்டி,
உறங்கிட வைத்து போல இருந்திட்டது.
அயகோ மீண்டும் வந்திடுமோ அத்தகைய நாட்கள்!
கேட்டிடுமோ நம் செவிகள் இத்தகைய வசனங்களை!
பார்த்திடுமோ நம் நயனங்கள் இத்தகைய நடிப்பினை!
என தவித்திட்டு துடிக்குது நம் மனது.
வாழ்க தலைவர் புகழ்!
-
17th January 2013 10:09 PM
# ADS
Circuit advertisement
-
17th January 2013, 10:13 PM
#1392
Junior Member
Devoted Hubber
நன்றி கோபால்,நீங்கள் இந்தப்படத்தை பார்த்திருக்க மாட்டீர்கள் என நான் கனவிலும் நினைத்திருப்பேனா?
நான் சொன்னது மற்ற நண்பர்களுக்கு..
-
17th January 2013, 10:36 PM
#1393
Senior Member
Seasoned Hubber
டியர் கண்பத்,
இந்தப் படத்தில் நீதிபதியாக வரும் ஸ்பென்சர் டிரேசி செய்யும் மேனரிஸம் அல்லது body language போன்றவற்றை, வேறு வகையில் சொன்னால் தாங்கள் கற்பனை செய்து வைத்துள்ளவற்றை, அவள் யார் படத்திலேயே நடிகர் திலகம் நீதிபதியாக வரும் காட்சிகளில் செய்து விட்டார். சொல்லப் போனால் Judgement at Nuremberg படம் வெளிவந்தது ஹாலிவுட்டிலேயே 1961ல் தான். ஆனால் நம் நடிகர் திலகமோ அதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்னரே 1959லேயே அவள் யார் படத்தில் செய்து விட்டார். நம் நாட்டு மனிதர் நீதிபதியாக இருக்கும் போது செய்யக் கூடிய மேனரிஸம் அல்லது பாடி லேங்குவேஜாக அது இருக்கும்.
இது மட்டுமல்ல. தான் ஏற்றுக் கொண்ட நீதிபதி கதாபாத்திரத்திடம் வரக் கூடிய வழக்குகளின் அடிப்படையில் நீதிமன்ற நடைமுறைகள்முடிந்த பின்னர் வழக்கை அணுகும் முறையில் கூட ஒவ்வொரு வழக்கினிற்கும் பாணி மாறுபடும் வகையில் அந்த கதாபாத்திரத்தின் நடை உடை பாவனைகள் அமைந்திருக்கும்.
Last edited by RAGHAVENDRA; 18th January 2013 at 12:29 AM.
-
18th January 2013, 06:36 AM
#1394
Junior Member
Newbie Hubber

Originally Posted by
RAGHAVENDRA
டியர் கண்பத்,
இந்தப் படத்தில் நீதிபதியாக வரும் ஸ்பென்சர் டிரேசி செய்யும் மேனரிஸம் அல்லது body language போன்றவற்றை, வேறு வகையில் சொன்னால் தாங்கள் கற்பனை செய்து வைத்துள்ளவற்றை, அவள் யார் படத்திலேயே நடிகர் திலகம் நீதிபதியாக வரும் காட்சிகளில் செய்து விட்டார். சொல்லப் போனால் Judgement at Nuremberg படம் வெளிவந்தது ஹாலிவுட்டிலேயே 1961ல் தான். ஆனால் நம் நடிகர் திலகமோ அதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்னரே 1959லேயே அவள் யார் படத்தில் செய்து விட்டார். நம் நாட்டு மனிதர் நீதிபதியாக இருக்கும் போது செய்யக் கூடிய மேனரிஸம் அல்லது பாடி லேங்குவேஜாக அது இருக்கும்.
இது மட்டுமல்ல. தான் ஏற்றுக் கொண்ட நீதிபதி கதாபாத்திரத்திடம் வரக் கூடிய வழக்குகளின் அடிப்படையில் நீதிமன்ற நடைமுறைகள்முடிந்த பின்னர் வழக்கை அணுகும் முறையில் கூட ஒவ்வொரு வழக்கினிற்கும் பாணி மாறுபடும் வகையில் அந்த கதாபாத்திரத்தின் நடை உடை பாவனைகள் அமைந்திருக்கும்.
Thank you Ragavendar Sir. If K.J.Mahadevan listened to our NT and released the movie Aval Yaar at a later date(instead of placing it with Baga pirivinai) ,it should have been a hit and most talked about film like andha naal. Aval yaar is an exemplary performance.
-
18th January 2013, 06:52 AM
#1395
Senior Member
Seasoned Hubber
Yes, It's the hurry shown by KJM that made the film Aval Yaar suffer. It was definitely another parallel to Andha Naal. See a hollywood judge and Indian judge in the following two films. The eyes speak more than words.


aval yaar image courtesy: our dear pammalar
-
18th January 2013, 07:06 AM
#1396
Junior Member
Newbie Hubber
சகோதரி,
ஒரு காலத்தில் எனக்கு இது ஒரு பொழுதுபோக்கு. நிறைய திரைக்கதைகள் அமைப்பேன்(படமானதில்லை.). எனக்கு பிடித்த எழுத்தாளர்கள் கதையை மூலமாக கொண்டு.
கரைந்த நிழல்கள்(அசோக மித்திரன்),ரிஷி மூலம்(ஜெயகாந்தன்), kaafka வின் விசாரணை, silence ,கோர்ட் in progress (டெண்டுல்கர்) இரண்டையும் இணைத்து ஒன்று, காகித மலர்கள்(ஆதவன்) ,கடல் புரத்தில்(வண்ண நிலவன்) இப்படியாக,
அந்த வகையில் நான் அமைத்த திரைக்கதை (1990).(judgement at nurenberg , நிரபராதிகள் காலம், இலங்கை பிரச்சினை எல்லாம் கலந்தது) NT கேரக்டர், சிறிது பிரபாகரன், சிறிது பாலசிங்கம், சிறிது ஓமர் முக்தார் கலந்தது. திரைகதை பாணியிலேயே எழுவதென்றால், 20 பக்கங்கள் செல்லும். சுருக்கம் இதோ.(1990 )
ஒரு கற்பனை தேசம். சிவந்த மண்ணின் வசந்தபுரி போல்.
முதல் காட்சி- பேச்சு வார்த்தை- சம உரிமை, தன்னாட்சி, மொழிக்கு அந்தஸ்து, கல்வியில் சம உரிமை கோரி ஒரு சிறுபான்மை இன தலைவருக்கும்((சிறு வயது சிவாஜி),ஒரு நாட்டு அதிபருக்கும்., ஒரு ஒப்பந்தம் கையெழுத்து. அடுத்து நடு வயது சிவாஜி, வேறு அதிபர். உதட்டசைவுகள் மட்டும், மீண்டும் ஒரு ஒப்பந்த கையெழுத்து. அடுத்து 55 வயது சிவாஜி. முதல் அதிபரின் மகன் . உதட்டசைவுகள். மீண்டும் ஒரு ஒப்பந்த கையெழுத்து. அடுத்த காட்சி. 65 வயது நடிகர் திலகம். ஒரு வட்ட மேஜை அதில் வெவ்வேறு கட்சி பெயர்கள் குறிக்க பட்டு. முதலில் விவாதிக்க பட்ட அதே பிரச்சினைகள் அதே வரிசையில் மீண்டும்.அப்போது எல்லோரும் அரசின் பாராமுகத்தை விவரித்து ஆயுத போராட்ட அவசியத்தை NT சக குழுக்களுடன் விளக்குவார். முதல் பணி ,தங்கள் இனத்தையே கோடரி காம்பாய், வெட்டி கொண்டிருக்கும் இனத்துரோகி governor ஒருவனை அழித்தொழிக்கும் பணி .
புதிதாக இயக்கத்தில் சேர்ந்த ஒருவனை(இளைய NT பாத்திரம்), நம்பிக்கை வைத்து இந்த வேலையை ஒப்படைக்கிறார்கள்.(Flashback சென்று முதிய சிவாஜியின் இளமை நாட்களில்,அவர் காதலில் விழுந்து,இயக்க நடவடிக்கைகளில் சோர்வதும், அந்த பெண் , வயிற்றிலிருக்கும் குழந்தையுடன், அவருடன் சொல்லாமல் வெளியேறுவதும், மகனுடன் தந்தையை பற்றி கூறுவதுடன், தந்தையிடம் இது பற்றி சொல்ல வேண்டாம் என தெரிவித்து விடுகிறாள்.அந்த வாலிபன்தான் சொல்லாமல் இயக்கத்தில் சேரும் புது வாலிபன். இது தமிழ் பட நியதிகளை முன்னிட்டும், NT க்கு duet கொடுக்கவும் செய்த திரைகதை சதி)).அந்த வாலிபன் ,பல வேலைகளை திறமையை கையாண்டு இயக்கத்தில் வளர்கிறான். ஒரு நட்பு நாட்டில், இன்னொரு இயக்கத்தை சேர்ந்த போராளி குழு ஒன்றை சேர்ந்த நால்வரை கொல்ல அனுப்பப்பட்டு, அந்த நாட்டின் காவலர்களால் பிடி பட்டு ,சொந்த நாட்டுக்கு அனுப்ப படுகிறான். பிடிபட்ட ஐந்து சக போராளிகளுடன், இளைய NT யும் சேர்ந்து ஒரு பாதுகாப்பான இடத்தில் வைக்க படுகிறார்கள். இவர்கள் இனத்தை சேர்ந்த ஒரு ஆறு நிரபராதிகளை(வக்கீல், பொறியாளர்,டாக்டர்,விவசாயி ,ஒரு நிறுவன தலைமை அதிகாரி, ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி என கலந்து), தேர்ந்தெடுத்து(எந்த போலீஸ் complaint இலும் வராத,தன் வேலையுண்டு என்று இருக்கும் ஆட்கள்) இதே சிறையில் தள்ளி, உண்மையை வாங்கும் பொறுப்பை ஒப்படைக்கின்றனர். அல்லது, இவர்களை சித்ரவதை செய்து கொள்ளலாம் ,கொல்லலாம் என்றும் உரிமை வழங்க படுகிறது.ஆனால்,அது வரை, இந்த ஆறு பேருக்கும் சொட்டு தண்ணீர் கூட தரப்பட மாறாது,வெளியிலும் செல்ல முடியாது என்று அரசு காவலர்களால் சொல்ல பட்டு இந்த நிரபராதிகள் ,போராளிகளுடன் அடைக்க படுகிறார்கள். ஒரு மூன்று நாட்கள், battle of wits ,ஒருவர் பக்க நியாயத்தை இன்னொருவர் புரிந்து நடக்க அறிவுருத்த பட்டு,அவரவர் வழியில் அவரவர் வேண்டுதல்,மிரட்டுதல், அடிதடி என்று ஒரு கலந்து கட்டியான நிலை. ஒவ்வொரு இரவிலும் ஒரு போராளி,யாராலோ கொல்ல படுகிறார். இறுதியில் NT ,சிறையிலுருந்து தப்பிக்க, மற்ற ஐந்து போராளிகளும், ஆறு நிரபராதிகளால் கொல்ல படுகிறார்கள்.அரசு, ஆறு நிரபராதிகளையும், விடுவிக்கின்றனர்.
இறுதியில், போராளிகள் போராட்டத்தில் வென்று அரசமைக்க, periya NT ,இளைய NT ஐ ,நீதி துறைக்கு பொறுப்பாக்குகிறார் . அடுத்த காட்சி, முந்தைய முறை கண்ட ஆறு நிரபராதிகளும், தேடி பிடிக்க பட்டு,இளைய NT நீதிபதி பீடத்தில் அமர, விசாரணை. நடுவில்,ஒரு துப்பாக்கியை வைத்து, யார் வேண்டுமானாலும் தற்கொலை செய்து கொள்ளும்,யாரும் யாரையும் கொன்று கொள்ளும் , உரிமையும் நிரபராதிகளுக்கு வழங்க படுகிறது. விசாரணை,தீர்ப்பு, ..........
இந்த திரைக்கதையில், மூத்தவர் ஒரு cool devil type missionary .Focussed ஆக உணர்ச்சிகளுக்கு இடமளிக்காத பாத்திரம் ஆகவும், இளையவரை rebel போன்று, நிறைய பேச கூடிய,உணர்ச்சி வய படும், கொள்கைகளை கேள்விக்கு ஆட்படுத்தும், ஆர்ப்பாட்டமான பாத்திரமாக உருவாகியிருந்தேன்.
பல கேள்விகள், அந்த பத்து பேரின் உணர்ச்சி மயமான சிறை காட்சியில், தேச பற்று, தீவிர வாதம், தியாகம், தனி ஒருவனின் மனசாட்சி, சமூக மனசாட்சி, மேலிடத்தின் அழுத்தத்தினால், குற்றமிழைக்க தூண்ட படுபவரின் குற்றத்தில் பங்கு பற்றிய விவாதம், பொறுப்புணர்ச்சி, என்று பல விஷயங்கள் விவாதத்துக்கு உள்ளாகி, NT க்கு மிக மிக வாய்ப்பு கொடுக்கும் வசனங்கள்,மௌனங்கள், action என்று தூள் பரத்தும் scope . என்ன செய்வது, அவர் பிறந்து, முப்பது வருடங்கள் பின் தங்கி பிறந்து விட்ட நான் ஏங்கத்தானெ ,முடியும்?
Last edited by Gopal.s; 20th January 2013 at 07:21 AM.
-
18th January 2013, 08:21 AM
#1397
Junior Member
Devoted Hubber
Ref:1491
ராகவேந்திரா ஸார்!
JAN படத்தின் ஒரு முக்கிய காணொளியை போட்டிருப்பது நீங்கள் அந்தப்படத்தை பார்த்து ரசித்திருக்கிறீர்கள் என்பதை தெரிவிக்கிறது.அந்த நம்பிக்கையில் தொடர்கிறேன்.
மனித வரலாற்றில் இதுவரை நிகழ்ந்திடா அக்கிரமம், ஜெர்மனி நாட்டில் ஒரு குறுகிய பத்தாண்டுகளில் நடந்தேறுகிறது.இது முடிந்து உண்மை வெளிவரும்போது ஜெர்மானியர்கள் தங்களுக்கும்,தங்கள் தந்தை நாட்டிற்கும், அழிக்கமுடியாத அவப்பெயர் ஏற்பட்டு விட்டதை எண்ணி கதி கலங்குகிறார்க்கள்.ஒவ்வொருவரும் நடந்த அக்கிரமங்களுக்கு, தாங்கள் பொறுப்பில்லை, அவை தங்களுக்கு தெரியாமல் நடந்தது.அதை தங்களால் தடுத்திருக்கமுடியாது எனும் சௌகரியமான பொய்யில் தங்களை தற்காத்துக்கொள்ள எண்ணுகிறார்கள்.
இந்நிலையில், நடந்தேறிய அக்கிரமங்களை விசாரிக்க அமெரிக்க தரப்பில் ஒரு நேர்மை மிக்க நீதிபதி(Spencer Tracy) தலைமையில் ஒரு விசாரணைக்குழு கூட்டப்படுகிறது.குற்றம் சாட்டப்படுள்ளவர்கள் அனைவரும் ஜெர்மனியின் முன்னாள் நீதிபதிகள்.தங்கள் தீர்ப்புகளின் வாயிலாக ஹிட்லரின் கொடுமைக்கு உதவியவர்கள்.இதில் ஒரே ஒரு நீதிபதி (Burt Lancaster) உலகப்புகழ் வாய்ந்தவர்.தன் நாட்டு மக்களால் பெரிதும் மதிக்க,நேசிக்கப்படுபவர்.இவர் தன் செய்தது குற்றமே என உணர்ந்து, குற்ற உணர்வில் வெம்பி மருகுகிறார் .ஆனால் இவர்களுக்காக வாதிடும் வழக்கறிஞரரோ (Maximilian Schell) தன் திறமையால், இவர்கள் செய்தது சட்டப்படி குற்றமில்லை என வாதிடுகிறார்.சாட்சியங்களை உடைக்கப்பார்க்கிறார்.இந்த நிலையில் அமெரிக்க அரசே பல்வேறு காரணங்களுக்காக அந்த ஜெமானிய நீதிபதிகள் தண்டிக்கப்படுவதை விரும்பாமல் அந்த விசாரணைக்குழு தலைவரை தங்கள் எண்ணப்படி தீர்ப்பு சொல்ல வைக்க முயல்கிறது.இப்படிப்பட்ட சூழ் நிலையில் அந்த விசாரணை குழுவின் தலைவர் என்ன செய்கிறார் என்பதே கதை.
இதில் இந்த மூன்று பாத்திரங்களும் மூன்று வெவ்வேறு பரிமாணத்தில் அமைந்தவை.அந்தந்த நடிகர்களால் மிக சிறப்பாக செய்யப்பட்டவை.இதில் ஒருபாததிரத்தை ஏற்று நடிக்கவே ஊர்பட்ட திறமை தேவை.ஆனால் நம் தலைவர் இந்த மூன்றையுமே தான் ஒருவராக ஏற்று நடிக்க வல்ல திறன் படைத்தவர் என்பதே என் கருத்து.
மனித மனதின் ஒழுக்கம்,வேகம், புழுக்கம் இம்மூன்றையும் அதனதன் உச்சத்தில் வெளிப்படுத்த இந்த மஹா கலைஞனை விட்டால் ஆள் எது?
மேலும் என் நோக்கில் இந்தபடத்திற்கும் நம் "அவள் யார்?" படத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.உங்கள் கருத்துப்படி பார்த்தாலும் தலைவர் போடாத வழக்கறிஞர் வேடமா?
-
18th January 2013, 08:36 AM
#1398
Senior Member
Seasoned Hubber
மேலும் என் நோக்கில் இந்தபடத்திற்கும் நம் "அவள் யார்?" படத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.
அதைத் தான் நானும் கூறியுள்ளேன். இந்த மூன்று வேடங்கள் மட்டுமல்ல மற்ற பாத்திரங்களையும் அவரிடம் தந்தால் கூட ஊதித் தள்ளி விடுவார் என்பதில் சற்றும் ஐயமில்லை. நான் சொல்ல வந்தது, Indianised situation, Indianised characterisation என்பதைப் போன்று நம் ஊரில் இந்த வழக்குகள் நடந்தால் எப்படி செய்வார் என்பதையே. இதே நீதிபதி பாத்திரத்தை அவர் நீதிபதி படத்திலும் செய்திருப்பார். அங்கே அவர் முற்றிலும் வேறு. சூழ்நிலை வேறு, வழக்குகள் வேறு. சந்தர்ப்பங்கள் வேறு. ஆனால் ஏற்று நடிக்கும் நடிகர் மட்டும் ஒருவரே.
இதே JAN படத்தில் ந.தி. நடித்திருந்தால் என்பதைத் தான் தாங்கள் கற்பனை செய்து வைத்திருக்கிறீர்கள். இது போல் எண்ணற்ற படங்கள். இஸ்த்வான் ஜாபோ பட நாயகனை வடிவமைக்கும் போது நம்மால் ந.தி. யைக் கற்பனை செய்யாமல் இருக்க முடியாது. குறிப்பாக ஹங்கேரியன் ரப்சோடி படத்தில் சில காட்சிகளில் கண நேரமாவது நம் கண்முன் ந.தி. தோன்றி இதை இவர் செய்திருக்கலாமே என்கிற எண்ணம் வராமல் இருக்காது.
-
18th January 2013, 12:31 PM
#1399
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Vankv
அப்படியாவது எமக்கு ஒரு தீர்வு வந்திருக்கக்கூடாதா? .

Madam,
This is just touching some of your problems. Not with the intention of passing judgements or comments or solutions. But you didn't go deep into the jail scene and the final judgement scene which warrants your attention more than shallow fillers. This is to question the innocense claimed by most of the people in collective responsibility and not dwell too much into actual issue, in line with original works I mentioned. I was honest in writing this as such as I conceived this in 1990. If the same has been written in 2000/2010,it would have taken a totally different dimension.
I am sorry if it hurted any of your feelings.
Last edited by Gopal.s; 18th January 2013 at 01:03 PM.
-
18th January 2013, 11:39 PM
#1400
Junior Member
Devoted Hubber
Ref # 1497
மிக்க நன்றி அம்மணி..
அதேசமயம்..
//பொதுவாக நான் hollywood இன் B &W படங்களைப் பார்ப்பதில்லை.//
இது என்ன விசித்திர கொள்கை? கிட்டத்தட்ட 'கூடை வச்சிண்டு இருக்கிறவங்களுக்கு,
நான் பெட்ரோமாக்ஸ் லைட் கொடுப்பதில்லை' என்பது போல!
உலகின் உன்னத படங்கள் என நூறை பட்டியலிட்டால்,
அதில் சுமார் எழுபது B&W ஆகத்தான் இருக்கும்.
நீங்கள் முதலில் JAN பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
வேறு நல்ல B &W படங்களை நான் சொல்கிறேன்.
Last edited by Ganpat; 18th January 2013 at 11:43 PM.
Bookmarks