-
29th January 2013, 01:15 AM
#141
இராகவேந்திரரும் வாசுதேவரும் மாறிமாறி ஜுகல்பந்தி விருந்து பரிமாறப்.. பரிமாற..
விழிகளால் மீண்டும் மீண்டும் புசித்தும் பசியாறாமல் பசியேறிய காயசண்டிகையாய் நான்..
ஆபுத்திரன் நம் நடிகர்திலகம்.. அட்சயப்பாத்திரம் அவர் திருமுகம்..
கிரேக்கச்சிற்பங்களை விஞ்சும் உருவ இலக்கணம் பொருந்திய ஒளிமுகம்.. களைமுகம்..
நீதி படத்தில் நெற்றியில் காயமும்.. நெஞ்சில் உள்ள பச்சாதாபம் உணரப்படாத ஆற்றாமையுமாய்..
இருவரியில் பெருங்கருத்து குறள் என்றால்..
ஒரு பாவனையில் நெடுங்கவிதை நடிகர்திலகம் முகம்..
தொடரட்டும் இத்தலைவாழை விருந்து ..
பரிமாறும் இராகவேந்திரர் + வாசுதேவர் கரங்களுக்கு என் நெகிழ்நன்றிகள்..
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
29th January 2013 01:15 AM
# ADS
Circuit advertisement
-
29th January 2013, 06:07 AM
#142
Junior Member
Senior Hubber

Originally Posted by
kaveri kannan
இராகவேந்திரரும் வாசுதேவரும் மாறிமாறி ஜுகல்பந்தி விருந்து பரிமாறப்.. பரிமாற..
விழிகளால் மீண்டும் மீண்டும் புசித்தும் பசியாறாமல் பசியேறிய காயசண்டிகையாய் நான்..
ஆபுத்திரன் நம் நடிகர்திலகம்.. அட்சயப்பாத்திரம் அவர் திருமுகம்..
கிரேக்கச்சிற்பங்களை விஞ்சும் உருவ இலக்கணம் பொருந்திய ஒளிமுகம்.. களைமுகம்..
நீதி படத்தில் நெற்றியில் காயமும்.. நெஞ்சில் உள்ள பச்சாதாபம் உணரப்படாத ஆற்றாமையுமாய்..
இருவரியில் பெருங்கருத்து குறள் என்றால்..
ஒரு பாவனையில் நெடுங்கவிதை நடிகர்திலகம் முகம்..
தொடரட்டும் இத்தலைவாழை விருந்து ..
பரிமாறும் இராகவேந்திரர் + வாசுதேவர் கரங்களுக்கு என் நெகிழ்நன்றிகள்..
Pammalarum vandhu vittal MUKKANIYIN taste marupadium MANAKKUM.
kaveri mannan kavithai suvaiyaga ulladu.
raghavender the thread is gaining lot of momentum ALL THE BEST.
-
29th January 2013, 08:53 AM
#143
Senior Member
Diamond Hubber
Last edited by vasudevan31355; 29th January 2013 at 11:31 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
29th January 2013, 09:52 AM
#144
Senior Member
Seasoned Hubber
டியர் வாசு சார்,
சொர்க்கம் - ஜூலீயஸ் சீஸர் ஸ்டில்கள் வர்ணனைகள் ... ஆஹாஹா ... உங்கள் பதிவே சொர்க்கம் ... வேறென்ன சொல்ல...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
29th January 2013, 09:52 AM
#145
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
தங்களுக்காக மிக அபூர்வமான சிவகாமியின் செல்வன் ஸ்டில்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
29th January 2013, 05:26 PM
#146
Senior Member
Seasoned Hubber
விழியாலே காதல் மொழி பேசும் ... சிவகாமி ... அசோக் .... இனியவளே என்று பாடியவர் இனியவள் தான் என்று ஏன் ஆக மாட்டார் இந்தப் பார்வையினால் ...



சிவகாமியின் செல்வன் பற்றிய முரளி சாரின் அற்புதமான பதிவிற்காக அவருக்கு அர்ப்பணிக்கப் படுகிறது ...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
29th January 2013, 06:48 PM
#147
Junior Member
Seasoned Hubber
Nice photo's of Mr Anand and Julius Ceaser.
-
29th January 2013, 06:49 PM
#148
Junior Member
Seasoned Hubber
I wrongly mentioned as Mr Anand instead of Mr Ashok.
-
29th January 2013, 08:06 PM
#149
Senior Member
Seasoned Hubber
My Choice - என் விருப்பம்
ஒவ்வொரு ரசிகரும் நடிகர் திலகத்தின் எந்தப் பாடலானாலும் விரும்பிப் பார்ப்பார் இதில் ஐயமில்லை. இருந்தாலும் இதையெல்லாம் தாண்டி நமக்கென்று பல பாடல்கள் நம் நெஞ்சில் ஆழமாக பதிந்து இருக்கும். அதில் மறக்க முடியாத நினைவுகள் அனுபவங்கள் இருக்கலாம் அல்லது பாடலின் சிறப்பு காரணமாகவும் இருக்கலாம். அப்படி நமக்குள் என்றும் ஒரு ஓரத்தில் நிழலாடிக்கொண்டே இருக்கும் பாடலையும் அது தொடர்பான நினைவுகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூட மனதில் அவ்வப்போது தோன்றியிருக்க வாய்ப்புண்டு.
அப்படி நம் ஒவ்வொருவருக்குள்ளும் நிழலாடிக் கொண்டிருக்கும் நடிகர் திலகத்தின் படப் பாடலைப் பகிர்ந்து கொள்ளவே இப் பகுதி. இதில் பாடலைப் பற்றிய தங்கள் மனதில் உள்ள எண்ணங்களோடு அப்பாடலை குறிப்பிட்டு இங்கே பகிர்ந்து கொள்ளலாம். விவாதங்கள் என்ற அடிப்படையில் இல்லாமல், நினைவுகளின் பகிர்வு என்ற அடிப்படையில் இதனை கொண்டு செல்வோம்.
துவக்கமாக நம் அனைவர் நெஞ்சிலும் நீங்கா இடம் பெற்ற பாடலான அவன் ஒரு சரித்திரம் திரைப்படத்தில் இடம் பெற்ற வணக்கம் பல முறை சொன்னேன் பாடலை வழங்க விரும்புகிறேன். தமிழகமெங்கும் மட்டும் அல்லாது இலங்கை மலேசியா என அனைத்து இடங்களிலும் பிரபலமான பாடல். கவியரசரின் வரிகளில் மெல்லிசை மன்னரின் இசையில் டி.எம்.எஸ்., பி.சுசீலா குரலில் காலத்தால் அழியாத பாடல். முதல் நாள் முதல் காட்சியில் விண்ணதிரும் கரவொலியோடு பார்த்தது பசுமையாக நினைவில் உள்ளது. அன்று முதல் பல ஆண்டுகளாக மெல்லிசை மேடைகளில் தவறாமல் இடம் பெறும் பாடல்.
ஒரு மாவட்ட ஆட்சியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக அமைக்கப் பட்ட கதா பாத்திரம். அதற்கு உயிர் கொடுக்கும் வகையில் நடிகர் திலகம் வாழ்ந்து காட்டியிருப்பார். இப் பாடல் காட்சியில் நடிகர் திலகம், காஞ்சனா, மஞ்சுளா மூவருடன் தங்கவேலு, வி.கே .ராமசாமி, சோ உட்பட பலர் பங்கேற்றிருப்பர். கேட்ட முதல் முறையிலிருந்து இன்று வரை என் நெஞ்சில் தொடர்ந்து கொண்டே வரும் பாடல்.
நண்பர்கள் தங்கள் விருப்பப் பாடலைப் பகிர்ந்து கொள்ளும் போது இத்தலைப்பினையும் குறிப்பிட்டால் ஒரு தொடராக அமையும்.
Last edited by RAGHAVENDRA; 29th January 2013 at 08:13 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
29th January 2013, 08:30 PM
#150
Senior Member
Seasoned Hubber
மிக்க நன்றி சகோதரி. இப்பகுதிக்கு நம் அனைவருக்குமே பிடிக்கும் என்று நான் நினைத்திருந்தேன். அதே போன்று தாங்கள் மிகச் சிறந்த பாடலின் மூலம் அதனை வரவேற்றுள்ளீர்கள். மகிழ்ச்சியாக உள்ளது.
இந்தப் பாடலை நான் மிகவும் சிறிய வயதில் கேட்ட போதே நெஞ்சில் தங்கி விட்டது. இப்படத்தின் முதல் வெளியீட்டின் போது நான் பள்ளிச் சிறுவன். சுவர்களில் போஸ்டர்களில் இப்பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் அட்டகாசமான போஸ் இடம் பெற்றிருக்கும். நன்கு நினைவில் உள்ளது. வானொலி, மின்சாரம் இவை போன்ற எந்த வசதியும் இல்லாத கால கட்டத்தில் கடற்கரையில் மாலை வேளையில் ஒலிபரப்பப் படும் பாடல்களுக்காக அமர்ந்திருப்போம். பசுமையான நினைவுகள். பின்னர் 60களின் பிற்பகுதியில் திரையரங்கில் ஆரவாரங்களுடன் பார்க்கும் போது புதிய பரிமாணம் தென் பட்டது. அன்று தொடங்கி இன்று வரை ஒவ்வொரு முறையும் புதுப்புது கோணங்களில் நடிகர் திலகத்தின் ஸ்டைலும் நடிப்பும் நம்மை பரவசப் படுத்தி வருகின்றன.
வாய்ப்புக்கு நன்றி சகோதரி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks