-
1st February 2013, 11:19 AM
#1521
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Vankv
Sorry if I sounded too authoritative, Mr Gopal. I just like your interaction in this thread and it's amusing at times when you come across with some 'objections', but sometimes I am apprehensive and have fear of loosing nice friendships.
வனஜா மேடம்,
நீங்கள் தப்பு தப்பாகவே பிரச்சினையை புரிந்து கொண்டுள்ளீர்கள். முதல் கோணல்.முற்றிலும் கோணல். நான் ,யார் ரசனையையும் குறை சொன்னதில்லை. ஆனால் ,நான் இப்படி எழுத கூடாது, அப்படி எழுத கூடாது, உன் கருத்துகளை வெளியிட்டால் குதர்க்க வாதம் புரிவேன்.(இரும்பு திரை விமரிசனத்தில் சில வருடங்கள் மிக மிக சிறந்தவை, என்றதும் மற்றவை குப்பைகளா போன்ற குதர்க்கம். நான் நல்லவன் என்றால் அப்போது நான் கேட்டவளா என்று நீங்கள் கேட்பது போன்றது) .அவர் வழிக்கே போகாமல், இருந்த போது வலுவில் வந்து என்னை தாழ்த்தி காட்டி ,நான் ரசிகனே இல்லை,மாற்று முகாம் என்று நிறுவ முயன்று, இதை எப்படி பொறுப்பது? இப்போது, யாரிடமும் சொல்லாமல், மூன்றாவது திரி. எங்கு போய் முட்டி கொள்வது?(என் பதிவுகளை முழுவதும் படியுங்கள். )நான் யாரிடமும் விரோதம் பாராட்டும் குணம் கொண்டவனல்ல. infact ,seriousness என்னவென்றே அறியாத ஜாலி பேர்வழி.(வசந்த மாளிகை ஆனந்த் இடைவேளை வரை என்று வைத்து கொள்ளுங்கள்)
-
1st February 2013 11:19 AM
# ADS
Circuit advertisement
-
1st February 2013, 12:02 PM
#1522
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Vankv
ok, fine. I do not want to go through that 'you said this on ....such and such..' forget it. I am actually telling all these because I somehow judge you as a fun+friendly guy same as Ganpat and thought good to interact with you. But you seem so touchy on every thing I say. And, please do not call me Madam, it sound so ..ancient! or rather, I feel so old!
ஒகே வனஜா. done . back to fun . நான் தங்கள் விருப்பப் படி, இது வரை தொடாத படங்களின் விமரிசனத்தை தொடர்வேன். மார்ச் முதலாக.
-
1st February 2013, 12:03 PM
#1523
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Vankv
ok, fine. I do not want to go through that 'you said this on ....such and such..' forget it. I am actually telling all these because I somehow judge you as a fun+friendly guy same as Ganpat and thought good to interact with you. But you seem so touchy on every thing I say. And, please do not call me Madam, it sound so ..ancient! or rather, I feel so old!
ஒகே வனஜா. done . back to fun . நான் தங்கள்(உன் -ஒகே?) விருப்பப் படி, இது வரை தொடாத படங்களின் விமரிசனத்தை தொடர்வேன். மார்ச் முதலாக.
-
1st February 2013, 12:29 PM
#1524
Junior Member
Newbie Hubber
ராகவேந்தர் சார்,
முதல் படத்திலிருந்து ,ஒன்பதாவது படம்(மனிதனும் மிருகமும் ) வரை அற்புதமாக சென்று கொண்டிருக்கிறது http://www.mayyam.com/talk/showthrea...ews-and-Events. உங்கள் உழைப்பும், அர்பணிப்பும் மிக மிக மெச்ச தக்கது. எத்தனை தகவல்கள்!! அத்தனை ரசிகர்களும், பக்தர்களும், நடிகர்திலகத்தை பற்றி அறிய விரும்பும் நடுநிலையாளர்களும்(ஏன் ,எதிரணியினர் கூட)பார்த்தே தீர வேண்டிய திரி. அற்புதம். மிக மிக ரசித்தேன். உங்களுக்கு special நன்றிகள். 306 வரை தொடருங்கள்.
Last edited by Gopal.s; 1st February 2013 at 12:31 PM.
-
1st February 2013, 12:35 PM
#1525
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Vankv
Since I'm off today, I'm going to read all your (and others) previous articles!
அதுதான் அண்ணனை திருத்தி ,நல்வழிக்கு கொண்டு வந்தாயிற்றே? இனி நிம்மதியாய் ஓய்வெடுங்கள்.
-
1st February 2013, 01:05 PM
#1526
Senior Member
Diamond Hubber
பட்டையைக் கிளப்பும் பைத்தியக்கார ரோலில்
-
1st February 2013, 01:14 PM
#1527
Dear Chandrasekhar sir,
Your 'Sivaji Samooganala Peravi' acticities are very very excellent.
Real activities of spreading Shiavji's fame to everyone, by action sense.
Long live Samooganala Peravai Leader and its members.
-
1st February 2013, 02:01 PM
#1528
Dear Vasudevan sir (of Neyveli),
Very good coverage about 'Shivaji camp Heroine' Jamuna. (I also read that she has mentioned that with proud)
I always like her actions with calm and polite. No one can forget her family look and action in Nichaya Thamboolam, espacially in the song "Maalai soodum mananaal". OOh, what a song by KD, VR and PS.
In 'amudhai pozhiyum nilave' both happy and sad versions she is fine.
In Marudha naattu veeran both 'paruvam paarththu arugil' and 'vizhiayali mele' are excellent.
Also nice in Kuzhandhaiyum Dheivamum and later years in Thoongathe thambi (naanaaga naanillai thaaye)
She was the heroine with Gemini in Savithri's debut directed Tamil movie 'kuzhandhai ullam'.
(Vasu sir, I think you have started 'Nadigarthigathin Naayagigal' series in another thread, but now jumped here).
Nice analysis, continue...
-
1st February 2013, 02:18 PM
#1529
Junior Member
Newbie Hubber

Originally Posted by
vasudevan31355
பட்டையைக் கிளப்பும் பைத்தியக்கார ரோலில்

நீ வருவாய் என நான் காத்திருந்தேன்.
-
1st February 2013, 05:44 PM
#1530
Senior Member
Senior Hubber
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள் (தொடர்ச்சி...)
7. "எல்லோரும் கொண்டாடுவோம்" படம்:- பாவ மன்னிப்பு (1961); பாடியவர்கள்:- டி.எம்.சௌந்தரராஜன், நாகூர் ஹனீபா மற்றும் குழுவினர்; பாடல் ஆசிரியர்:- கவியரசு கண்ணதாசன்; இசை:- மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி; இயக்கம்:- ஏ.பீம்சிங்; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன்/சித்தூர் நாகையா மற்றும் குழுவினர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, என்னுடைய பாடல் ஆய்வினைத் தொடர சந்தர்ப்பம் அளித்த இறைவனுக்கு முதற்கண் நன்றி.
இந்தத் தொடர் நடிகர் திலகத்தின் புதிய வித்தியாசமான முன்னோடி முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை மறுபடியும் குறிப்பிடுகிறேன்.
சுற்றிப் பின்னப்பட்ட சதி வலையால், குழந்தையாய் இருக்கும்போது, ஒரு இஸ்லாமியப் பெரியவரிடம் வளர்ந்து வரும் ரஹீம் (நடிகர் திலகம்) வரும் அறிமுகக் காட்சி. ஒரு பாடலோடு நடிகர் திலகம் அறிமுகமாகும் இந்தக் காட்சியை ஒவ்வொரு முறை இந்தப் படத்தைப் பார்க்கும் போதும் தவற விட்டதில்லை. அந்த முதல் காட்சியிலேயே, ஒரு இஸ்லாமிய சகோதரர் எப்படி இருப்பார் என்ற இலக்கணத்தையும், ரசிகனின் கற்பனை மற்றும் எதிர்பார்ப்பினையும் நூறு சதவீதம் பூர்த்தி செய்திருப்பார். ஆக, தோற்றத்தின் மூலம் அந்தக் கதாபாத்திரத்துக்குள் முதலில் முழுமையாக நுழைந்து, பார்க்கும் ஒவ்வொருவரையும் அவருள் நுழைத்துக் கொண்டு விடும் (வழக்கம் போல்) நடிகர் திலகம், கையில் உள்ள மேளத்தை இலாகவமாகவும் தேர்ந்த கலைஞரைப் போலும் சர்வ சாதாரணமாக அதே நேரத்தில், உயிர்ப்புடனும் தட்டிக் கொண்டு துவங்கும் அழகு!
இந்தப் பாடலில் பொதிந்துள்ள அழகு வேறெந்தக் கலைஞருக்கும் கிட்டாதது.
இந்தப் பாடல் மற்றப் பாடல்களைப் போல வாயசைப்பு மற்றும் அதற்கேற்ற பாவனைகள் இல்லாமல், இசைக் கருவியையும் சேர்த்து இயக்கிக் கொண்டே பாட வேண்டிய கட்டாயம் கொண்ட பாடல்.
முதலில் வாயசைப்பு:-
“எல்லோரும் கொண்டாடுவோம்” என்று துவங்கி "அல்லாவின் பெயரைச் சொல்லி" எனும் போது கோரஸோடு பாடும் போது, சாதாரணமாக இருக்கும் அவரது வாயசைப்பு, க்ளோசப்பில், அவரை மட்டும் காண்பிக்கும் போது, தனியாக அவர் மட்டும் "அல்லாவின் பெயரைச்சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி" என்று முடிக்கும் போது மட்டும் இலேசாக வாயசைப்பில் ஒரு அழுத்தம் பெறும். அந்த இடத்தில் அழுத்தம், பாடியவர் கொடுத்ததால், அந்த வரிகளுக்குத் தேவைப் படுவதால். அதுவும் மிகச் சரியாக க்ளோசப்பில் அவரது முகம் வரும் போது இது இன்னும் கூடுதல் கவனம் பெறுகிறது. அதனால், அந்த வரிகளுக்கே ஒரு வசீகரம் வருகிறது. இப்போது முதல் சரணம், "கல்லாகப் படுத்திருந்து களித்தவர் யாருமில்லே... என்று கூறி “கல்லாகப் படுத்திருந்து” என்று அவர் நிறுத்த, "களித்தவர் யாருமில்லே" என்று கூட்டத்தில் ஒருவர் (நகைச்சுவை நடிகர் மற்றும் எழுத்தாளர் ஏ.வீரப்பன் அவர்கள்) சத்தமாக முடிப்பார். இப்படிப் போய் "இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்" என்று முடியும் போது, இந்த முதல் சரணத்தில் மட்டும் ஒரு நார்மலான வாயசைப்பு இருக்கும். இரண்டாவது சரணம். தொகையறாவில் தொடங்கும். "நூறு வகை பறவை வரும்... ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா ஆ..ஆ..ஆ" என்று முடிக்கும் போது ஒரு தேர்ந்த பாடகனுக்குரிய வாயசைப்பு. "முதலுக்கு தந்தை என்போம் முடிவுக்கு அன்னை என்போம்" எனும்போது அழுத்தம் தரும் வாயசைப்பு. மூன்றாவது சரணம். மறுபடியும் தொகையறாவில் தொடங்கும். "ஆடையின்றிப் பிறந்தோமே...ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ ஒ..ஒ..ஒ.." என்று மறுபடியும் தேர்ந்த பாடகருக்குரிய வாயசைப்பு. "எடுத்தவன் கொடுக்க வைப்போம் கொடுத்தவன் எடுக்க வைப்போம்" என்று முடிக்கும் போது அழுத்தம் கொடுக்கும் வாயசைப்பு.
அடுத்தது, முக பாவம்:-
பாடல் துவங்கும் போது, "எல்லோரும் கொண்டாடுவோம்" என்று கூட்டமாகச் சேர்ந்து வரும் போது தெரியும், ஒரு இலேசான குதூகலம். அப்படியே மேளத்தை இசைத்துக் கொண்டே, பாடிக் கொண்டே, தந்தையாரை பார்த்து பாவத்திலேயே acknowledge செய்யும் அழகு. முதல் சரணத்தில் அந்த வரிகளின் பொதுவான கருத்துகளுக்கேற்ப சாதாரணமான (normal) பாவம். “வந்ததை வரவில் வைப்போம் செய்ததை செலவில் வைப்போம்” எனும் போது கொடுக்கும் அழுத்தம். இரண்டாவது சரணம் – “நூறு வகை பறவை வரும்……… ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா" என்ற தொகையறாவில் கொடுக்கும் ஒரு விதமான தெய்வீக பாவம். மூன்றாவது சரணம். "ஆடையின்றிப் பிறந்தோமே" என்று துவங்கி, "ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ" எனும் தொகையறாவில் இலேசாக கண் கலங்கி கண்களில் கண்ணீரைத் தேக்கி வைத்துக் கொண்டே பாடும் போது, பார்க்கும், ஏன் பாடல் இயற்றியவனே கண் கலங்கியிருப்பானே! உடனே, “எடுத்தவன் கொடுக்க வைப்போம் கொடுத்தவன் எடுக்க வைப்போம்” எனும் போது சுதாரித்துக் கொண்டு, அந்த வரிகளுக்குத் தேவைப்படும் அந்த அழுத்தம் கலந்த சூளுரையைக் காண்பிக்கும் விதம்!
இப்போது, மேளம் தட்டும் அழகு.
பாடல் துவங்கி மேளம் அடிக்கத் துவங்கியவுடன், அவரது கைகள் மேளத்தில் நர்த்தனம் ஆடும் அழகு; லயம். அப்படியே போய், அந்தத் தாளம் முடிந்து, நாகைய்யாவைப் பார்த்துக் கொண்டே, அவரை acknowledge செய்து கொண்டே, தாளம் அழுத்தமாக முடியும் போது, அதே அழுத்தத்தைக் காட்டி முடித்து, "எல்லோரும் கொண்டாடுவோம்" என்று துவங்கும் அழகு. முதல் சரணம் துவங்குவதற்கு முன் வரும் இசை மற்றும் தாள கதிக்கேற்ப இவர் மேளத்தைத் தட்டி கொண்டே இருப்பார். இசையும் தாளமும் முடிந்து முதல் சரணம் துவங்கும் போது, மேளத்திலிருந்து கையை எடுத்து, "கல்லாகப் படுத்திருந்து" என்று துவங்கும் போது, சரியாக மறுபடியும் தாளத்துடன் பாடி/தட்டிக் கொண்டே துவங்குவார். பாடிக் கொண்டே, "இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்" என்று ஒவ்வொரு வார்த்தையின் அழுத்தமான தாளத்துடன் ஒன்றி மேளத்தை அழுத்தமாக அதே தாள கதியில் அடித்து/ பாடிக் கொண்டே முடித்து, மறுபடியும் அனு பல்லவி வேறொரு தாளத்தில் வலுவாகத் துவங்கும் போது, உடனே, அந்த தாள அழுத்தத்தை மேளத்தில் தட்டித் துவங்குவார். இந்த கையசைப்பை, ஒவ்வொரு முறை சரணம் முடிந்து அனு பல்லவி துவங்கும் போதும், சரியாகச் செய்திருப்பார். பாடல் நிறைவடையும் போது, கொஞ்சம் கொஞ்சமாக அந்தத் தாளம் அந்த வலுவைக் குறைத்துக் குறைத்து முடியும் அழகை, தன்னுடைய விரல்களில் மிகச் சரியாகக் காட்டிக் கொண்டே முடிப்பார்.
ஆக, ஒரு பாடலுக்கு ஒரு மிகச் சிறந்த நடிகன் காட்டும், இரண்டு பாவங்களையும் - அதாவது, வாயசைப்பு, பாடும் வரிகளுக்கேற்ப பாவத்தை முகத்தில் காண்பிப்பது. இவற்றைக்காட்டியாகி விட்டது. எப்பேர்ப்பட்ட நடிகனும் இரண்டு விஷயங்களைக் கஷ்டப்பட்டு செய்து விடுவான். ஆனால், மூன்றாவதாக, ஒரு கருவியை இசைத்துக் கொண்டே வாயசைப்பையும், வார்த்தைகளுக்கேற்ற பாவங்களையும் சுருதி கொஞ்சமும் பிசகாமல் செய்வது பிரம்ம பிரயத்தனம். இது கூட உலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய மிக மிகச் சிலரால் முடியும்.
ஆனால், மேற்கூறியவை மட்டுமல்லாமல் பாடல் நெடுக, நடிகர் திலகம் அவரது பிரத்தியேக ஸ்டைலில் தலையை ஒருவாறு மிதமாக ஆட்டிக் கொண்டே பாடுவதும், அவ்வப்போது தந்தையாரையையும் மற்றவரையும் acknowledge செய்யும் விதமும்! எப்படி இந்த மனிதர் ஒரே நேரத்தில், இத்தனை விஷயங்களை, ஒன்றோடொன்று அழகாக இணைத்து, காட்சியையும், பாடலையும், வேறொரு உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றார் என்பது இன்று வரை புரியாத புதிராகத் தான் இருக்கிறது.
இந்தப் பாடல் மற்றும் நடிகர் திலகத்தின் பல பாடல்கள் மற்றும் படங்கள்/காட்சிகளைப் பார்க்கும் போதெல்லாம் பல வருடங்களுக்கு முன்னர் திரு முக்தா சீனிவாசன் அவர்கள் கூறியது நினைவுக்கு வருகிறது. "சதை படர்ந்த அந்த முகத்தில் ஒவ்வொரு அணுவும் நடிக்கும், முகம் நடிக்கும்; முகத்தில் உள்ள முடியும் நடிக்கும்".
ஒரு படத்தில், பாடலில், எத்தனையோ நடிகர்கள் இசைக்கருவிகளை வாசித்துக் கொண்டே நடித்திருக்கிறார்கள். நான் மேற்கூறிய முதல் மூன்று பாவங்கள் - வாயசைப்பு, வார்த்தைகளின் அர்த்தங்களுக்கேற்ற பாவம், மற்றும் இசைக்கருவியையும் கூடவே பிசிறில்லாமல் வாசிக்க வேண்டிய கட்டாயம். இவைகளை கோர்வையாக, மிகச் சரியாக செய்தது மட்டுமல்லாமல், கூடவே ஒரு வித ஸ்டைலையும், சுற்றி இருப்பவர்களை கவனித்தல்/மற்றும் acknowledge செய்தல், இவைகளையும் கோர்வையாகச் செய்து, இந்தப் பாடலைக் காட்சிப்படுத்திய வகையில், இந்தப்பாடல் முன்னோடி மட்டுமல்ல. இனி வேறொருவரால் வெற்றிகரமாக செய்வதைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்றாகிறது.
இந்தப் பாடலின் வெற்றிக்கு அரும்பாடுபட்ட அத்தனை கலைஞர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு கோரஸ் பாடலில், கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் சரியாகப் பங்களித்து பாடலை மேலும் ரசிக்கும்படி செய்திருப்பார்கள். இந்தப் பாடலில் தான் படத்தில் வரும் பிரதான பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுவார்கள் (ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் தேவிகா).
தொடரும்,
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
Last edited by parthasarathy; 1st February 2013 at 06:15 PM.
Bookmarks