-
2nd February 2013, 08:45 AM
#1541
Senior Member
Diamond Hubber
நடிகர் திலகம் திரிகள் களைகட்ட ஆரம்பித்து விட்டன. அனைத்து உறுப்பினர்களும் பங்கு கொள்ளத் துவங்கி விட்டனர். ராகவேந்திரன் சாரின் அற்புதமான அரிய பதிவுகள், பார்த்தசாரதி சாரின் பாடல் ஆய்வு, சகோதரி வனஜா அவர்களின் அழகான பதிவுகள், காவேரி கண்ணன் சாரின் சொக்க வைக்கும் தமிழ் பதிவுகள், கோபால் சாரின் கோபப் பதிவுகள், ஆதிராம் சாரின் வருகை என்று வேகம் கூட ஆரம்பித்து விட்டது. இப்படியே தொடர்ந்தால் பாகம் பதினொன்றை விரைவில் காணலாம். அதற்கு அத்துணை பெரும் தத்தம் பங்களிப்பை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. வராத உறுப்பினர்களும் அவசியம் பங்கு பெற கோரிக்கை விடுக்கிறேன். அனைவருக்கும் நன்றி!
-
2nd February 2013 08:45 AM
# ADS
Circuit advertisement
-
2nd February 2013, 12:25 PM
#1542
Senior Member
Diamond Hubber
சிஸ்டர்,
வாசு, கோபால் நட்பு இவர்களைப் போன்றது. (கண்டிக்கும் தலைவர் நானாக்கும்! How is it?)
Last edited by vasudevan31355; 2nd February 2013 at 12:32 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
2nd February 2013, 12:31 PM
#1543
Senior Member
Diamond Hubber
சிஸ்டர்,
உங்களுக்கு மிக விரைவில் ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. இப்போது சொல்ல மாட்டேன். பாதுகாப்பு கட்டுரையை படித்து முடித்து விட்டீர்களா! நமது அருமை ஹப்பர் திரு.கார்த்திக் (எங்கே போனார்?!) அவர்களுக்கு மிகவும் பிடித்த கட்டுரை. பம்மலார் கூட அடிக்கடி என்னிடம், "எனக்கு பாதுகாப்பு அளித்த கட்டுரை" என ஜாலியாகச் சொல்வார். இன்னும் நிறைய எழுதலாம். ஆனால் நேரம்தான் இல்லை. ஆதிராம் சாரால்தான் நான் இழுக்கப்பட்டு இந்த திரிக்கு வந்தேன் என்றால் அதற்காக ஆதிராம் சாருக்கு என்னுடைய தேங்க்ஸ். உங்களுக்கும்தான். நன்றி அம்மா!
-
2nd February 2013, 12:35 PM
#1544
Senior Member
Diamond Hubber
இறைவன் உலகத்தைப் படைத்தானாம்....
இம்சையையும் அவன்தான் படைத்தானாம்...
எந்தா சாரே! வல்லிய பிசியோ.....
-
2nd February 2013, 12:52 PM
#1545
மிகப்புதியவன் என்றாலும் வனஜா அவர்களின் கோரிக்கைக்கு நானும் துணையாய் என் வேண்டுதலைப் பதிகிறேன்..
தேரிழுப்போர் கால் மிதிபட்டாற்போல் வலிகள் வந்தாலும்
உற்சவர் ஊர்வலமே உள்ளமுழுதும் என்பதால்
உற்சாக ஊற்றில் வலிகள் கரைந்தோடடும்..
அன்பர் வாசு கூற்றுப்படி...
அழகு ஊர்வலம் அடுத்த வீதி ( எண் 11) விரைந்து எட்டட்டும்!
பம்மலார், இராகவேந்திரர், முரளி சீனிவாஸ், ஜோ, பார்த்தசாரதி, சாரதா, வாசுதேவன், ஆதிராம், வனஜா உள்ளிட்ட
அனைத்துப் பக்த திலகங்களுக்கும் என் வந்தனங்கள்..
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
2nd February 2013, 02:53 PM
#1546
Originally Posted by
Vankv
என்னதான் சொல்லுங்கள் கோபக் கோபால் அண்ணா வந்தால் இந்த திரியே பரபரத்துக் களைகட்டுகிறது. ராகவேந்தர் அண்ணா அவரைக்கண்டதும் கோபாலண்ணா 'கடி' தாங்க முடியாமல் தனது திரி (வளை) க்குள் போய் ஒளிந்துவிடுவார். பின்னர் கோபாலண்ணா போனால் தான் இங்கே வருவார்.
Vanaja,
unga post padikkumpothellaam backgoundil 'narayana... narayana...' endru sound ketkirathe, why..?.
-
2nd February 2013, 04:26 PM
#1547
Senior Member
Senior Hubber
Originally Posted by
adiram
Vanaja,
unga post padikkumpothellaam backgoundil 'narayana... narayana...' endru sound ketkirathe, why..?.
சேச்சே எனக்கு சம்போ மகாதேவா-ன்னு தான் கேட்குது. (திருவிளையாடல்). சரஸ்வதி சபதம் பார்த்து நீண்ட நாட்களாகி விட்டன!!!
-
2nd February 2013, 07:34 PM
#1548
Senior Member
Diamond Hubber
Originally Posted by
Vankv
இம்சை அரசன் வருவார் உங்களுக்கெல்லாம் தரவேண்டியதைத் தருவார்
தோசை சுடுபவர் கையில் துப்பாக்கியைக் கொடுத்து விட்டீர்களே சோதரி! என்ன கொடுமை தங்கை இது!
-
3rd February 2013, 02:12 AM
#1549
Senior Member
Seasoned Hubber
A revolution betrayed
"Just because you came around chanting names and offered flowers to the stone, would it become a god,” the protagonist of the film Parasakthi asks, mocking the audiences in 1952."
http://www.thehindu.com/news/nationa...?homepage=true
-
3rd February 2013, 01:08 PM
#1550
Junior Member
Devoted Hubber
அன்புள்ள பார்த்தசாரதி ஸார்!
ஒரு பாடலுக்கு,இப்படி ஒரு dissection ஆ? பிரமிக்கிறேன்.வாழ்க.
ஒரு பாடலுக்கு வாயசைப்பது என்றால் என்ன என இலக்கணம் எழுதிய தொல்காப்பியர், நம் தலைவர் .
ஒரு பாடலை பாடும்போது கண்கள் அடிப்படை உணர்வை முதலிலிருந்து, முடிவு வரை பிரதிபலிக்கவேண்டும்.
உதடுகள் தேவையான அழுத்தத்தை தேவையான இடத்தில அளிக்கவேண்டும்.
வாய் திறக்கும் அளவு, கன்னத்தை அசைக்கும் அளவு இவைகளை கவனமாக கையாளவேண்டும்.
கண்களில் நீர் தேக்கி வைத்து அதை தேவையான உணர்வுடன்(ஆனந்தம்/சோகம்) சொட்டு சொட்டாக வெளியேற்றவேண்டும்.
இத்தனையும் தலைவர் செய்யக்காணலாம்.
இறைவன் அளித்த,
நவ பா(bhaa)வத்தை வெளிப்படுத்தும் நயனங்கள்,
ருமானி மாம்பழ கதுப்பு போன்ற கன்னங்கள்,
மூடினால் உயர்ந்த மனிதனையும்,பிரித்தால் உழைக்கும் மனிதனையும்,
கண் முன் கொண்டுவரும் உதடுகள்,
இப்படி ஒவ்வொரு அவயங்களும் gifted!
எல்லோரும் கொண்டாடுவோம் பாடல்..
பாடல் முழுவதும் கண்கள் சாந்தத்தை பிரதிபலிக்கும்.
மற்ற வரிகள் முழுதும் நீங்கள் விவரித்தது போல.
வந்த நாள் முதல் பாடல்..
பாடல் முழுவதும் கண்கள் கம்பீரத்தை பிரதிபலிக்கும்.
அப்படியே,அவர் கண்கள் பிரதிபலிப்பது,
ஏன் பிறந்தாய் மகனே ...இயலாமை கலந்த சோகம்.
பார் மகளே பார்...குற்ற உணர்வு கலந்த சோகம்.
போனால் போகட்டும் போடா..விரக்தி கலந்த சோகம்.
எங்கே நிம்மதி?..கோபம கலந்த சோகம்..
சோதனை மேல் சோதனை..கலப்படமற்ற 100% அக்மார்க் சோகம்..
அவர் இன்று நம்மிடையே இல்லை எனும் நினைக்கும் நமக்கோ,
இயலாமை,குற்ற உணர்வு,விரக்தி,கோபம்
கலந்த சோகம்
நன்றி.
Bookmarks