-
8th April 2013, 12:28 PM
#2531
Junior Member
Newbie Hubber
P _R ,
நான் Stanislavsky யின் An Actor prepares படித்துள்ளேன். படிக்க விரும்புபவை Building a Character ,Creating a Role both by Stanislavsky . Art of Acting by Stella Adler , To the Actor by Chekhov .
I hope you mean நான் இது வரை எழுதியதில் கடைசி பகுதிகள்???
-
8th April 2013 12:28 PM
# ADS
Circuit advertisement
-
8th April 2013, 02:05 PM
#2532
Moderator
Platinum Hubber
yep sorry. I meant 'thus far'.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
8th April 2013, 02:13 PM
#2533
Moderator
Platinum Hubber
Thank You vasudevan. இந்தப்படத்தை சிலாகிச்சு சலிக்காது. நலந்தானா-ல ஒரு சில படச்சட்டங்கள்ல (frame) குவிமைல (focus) இல்லாதபோது கூட சி.கே.சரஸ்வதி கடுகடு'ன்னு முகத்தை வச்சிருப்பாங்க.
மறைந்திருந்தே பார்க்கும்-மில், ராமன் செட்டியார் (யாரந்த நடிகர்?), தனக்கும் பரதேசிச்சாமி சஹஸ்ரநாமத்துக்கும் அருகில் நாகலிங்கம் (ஈ.வி.சஹாதேவன்) வந்து உட்காருவதை விரும்பாததை முகபாவத்தில் தெரிவிப்பார். ஒரு நொடி வரும் காடி, நம் கவனமெல்லாம் பத்மினி-சிவாஜி மீது. ஆனால் கணநேரத்தில் நாகலிங்கம் மோசமானவன் என்பது ஊரறிந்தது என்று பதிவு செய்துவிட்டு நகர்ந்துவிடுகிறார் ஏ.பி.என்.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
8th April 2013, 03:15 PM
#2534
Senior Member
Diamond Hubber
பிரபுராம் சார்,
அருமையான வித்தியாசமான கோணத்தில் அமைந்த தங்களின் 'தில்லானா' ஆய்வுக்கு எனது நன்றிகளும், பாராட்டுக்களும்.

Originally Posted by
P_R
மறைந்திருந்தே பார்க்கும்-மில், ராமன் செட்டியார் (யாரந்த நடிகர்?), தனக்கும் பரதேசிச்சாமி சஹஸ்ரநாமத்துக்கும் அருகில் நாகலிங்கம் (ஈ.வி.சஹாதேவன்) வந்து உட்காருவதை விரும்பாததை முகபாவத்தில் தெரிவிப்பார்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த நடிகரின் பெயர் குண்டு கருப்பையா என்று நினைவு. (நடிகர் திலகத்தின் பல படங்களில் இவரைக் காணலாம்) நாகலிங்கம் என்ற நாகப்பாம்பாக வருபவர் பழம்பெரும் நடிகர் திரு ஈ.ஆர்.சகாதேவன் அவர்கள்.
-
8th April 2013, 03:27 PM
#2535
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார்,
சீரும் சிறப்புமாக விழாவை இனிதே நடத்திக் காட்டி நிகழ்வுகளை இங்கே பதிந்தமைக்கு மிக்க நன்றி. விழா சிறக்க உறுதுணையாய் இருந்த அன்பு முரளி சாருக்கும், விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த நம்முடைய ஹப்பர்ஸ் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் உளமாந்த நன்றிகள். விழாவில் விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்ட நிழற்படங்கள் சூப்பர்.
-
8th April 2013, 04:11 PM
#2536
Senior Member
Diamond Hubber
சதீஷ் சார்,
பின்னணிப் பாடகி பாலசரஸ்வதி தேவி அவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றி அளித்த அபூர்வ பேட்டி சுட்டியை தந்ததற்கு மிக்க நன்றி!
-
8th April 2013, 04:18 PM
#2537
Senior Member
Diamond Hubber
திரியின் புதுவரவு சவுரிராஜன் சார் அவர்களே!
வாருங்கள்... வாருங்கள்.
வாருங்கள்... வாருங்கள்.
-
8th April 2013, 05:27 PM
#2538
Junior Member
Devoted Hubber
நான்கு நாட்களுக்கு முன்னமே நண்பர் முரளியிடமிருந்து அன்பான sms
சரி நிச்சயம் போக வேண்டியதுதான் என முடிவு செய்திருக்கையில்,
கடைசி நேர சில நிர்பந்தங்கள் அந்த தங்க வாய்ப்பை இழக்க வைத்தன.
சரி பார்க்க இழந்தது தலைவரை மட்டுமே என்று சற்றே சமாதானப்படுத்தி
கொண்டிருக்கையில்,நண்பர் ராகவேந்தரின் புகைப்படங்கள்,நண்பர் பிரபுராமின்
அற்புத தொகுப்பு,அனைத்தும் நான் இழந்தது much more எனஊர்ஜிதம் செய்தன.
நீங்கள் teetotaler ஆ என்ற கேள்விக்கு நான் விடையாக.
”ஆம்.,கல்கி,தேவன்,ஜெயகாந்தன்,சுஜாதா ஆகியோரின் எழுத்துக்களை படித்திருப்பதை தவிர்த்து நோக்கினால்!””என்று சொல்வதுண்டு.
இப்பொழுது அந்த வரிசையில் நண்பர் பிரபுராமை யும் சேர்த்துக்கொள வேண்டியதுதான்.
ஏதோ Blue label whiskey சாப்பிட்டால் போல ஒரு உணர்வு,அவர் எழுத்தை படிக்கும்போது!
சினிமாவை தியேட்டரில் படம் பார்ப்பது ஃபில்டர் டிகாக்ஷன் கலந்த டிக்ரி காபி சாப்பிடுவது போல என்றால்.. DVD யில் பார்ப்பது, Coffee Toffee chocolate சாப்பிடுவது போல.
சினிமாவிற்குள் சென்று சினிமா பார்ப்பது ஒரு பரவசம்.
வீடியோவில் பார்ப்பது பல(ர்)வசம்..
அப்பப்போ அடிக்கும் காலிங் பெல்,டெலிபோன் மணி,பார்க்கும் ஓவ்வொருவரின் விருப்பதிற்கேற்ப, இடைவேளை விடுதல்(கொஞ்சம் pause செய்.இப்போ வந்துடறேன்).
வராத விருந்தாளிகளின் திடீர் வருகை,அவர்கள் அடிக்கும் அதிகப்ப்ரசங்கித்தனமான comments,எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டாக வேண்டும்.
(ஆனா இப்போ தியேட்டரிலும் தொல்லை அதிகம்..சமீபத்தில் படம் ஆரம்பித்து இரண்டு நிமிடங்கள் கழித்து திருதிராஷ்டிரன் போல தட்டித்தடவி ,போய் D18,D19 அமர்ந்தால்,உடனே டெலிபோனின் உரத்த சிணுங்கல்.கூடவே "ஆமா தேவராஜ்தான் பேசுகிறேன் !” என்ற கட்டை குரல்..”என்னங்க! படத்தில் கமல் பேரு விசுவநாதன் இல்லையோ?” என்ற இல்லாளின் சந்தேகத்தை நிவர்த்திப்பதற்குள் அதே குரல் “நான் இப்போ தேவி தியேட்டரில் விஸ்வரூபம் பார்த்துக்கிட்டு இருக்கேன்.ஆங்..படம் ரொம்ப நல்லா இருக்கு..ம்ம்ம் அப்றம் பேசறேன்!” ன்னு ஒரு சுய வாக்குமூலம் கொடுத்து, காலை கட் செய்ய ஒரு பத்து பேர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.(இடைவேளை போதுதான் பார்த்தேன்.அந்த நபருக்கு பொன்னம்பலம் போல உடல்வாகு.)
இப்படி சினிமா, கச்சேரி நடுவே, போன் attend செய்து disturb செய்யாதே என சொல்வது
,”சுவற்றில் எழுதாதீர்” எனும் அறிவிப்பிற்கு கீழே “சரி” என்று எழுதுவதைப்போல ஆகும் எனபதே பலருக்கு தெரிய மாட்டேன் என்கிறது.
சரி இனி படம்...
தமிழில் வந்த மிக சிறந்த ஆறு படங்களை பட்டியலிட்டால் தில்லானா மோகனாம்பாள்(தி.மோ) மற்ற ஐந்திற்கும் மேலே இருக்கும்.
பூரணம், உன்னதம் எனும் இரு சொற்களுக்கான எடுத்துக்காட்டு தி.மோ.
இந்தப்படத்தின் உன்னதம் திரு ஏபிஎன். பிள்ளையார் சுழி போடும்போதே ஆரம்பமாகிறது..
விகடன் அதிபர் திரு வாசனை,ஏபிஎன் சந்தித்து தி.மோ படம் எடுக்க தான் விரும்புவதை சொல்லி ஆசி பெற்று கூடவே அதற்கான காப்புரிமையையும் சுமார் ரூ.ஐயாயிரம் கொடுத்து அவரிடமிருந்து பெறுகிறார்.
என்னதான் சட்டப்படி விகடன் நிறுவனத்திடமிருந்து உரிமையை பெற்றாலும் அதை ஆக்கியோன் எனும் விதத்தில் திரு கொத்தமங்கலம் சுப்புவிற்கும் மரியாதை செய்ய விரும்பி, அடுத்த நாள் அவர் இல்லம் சென்று விவரம் சொல்லி சில ஆயிரங்களையும் சன்மானமாக கொடுக்கிறார்,அதை பின்னவர் மறுத்து "நேற்றே திரு வாசன் என்னிடம் இதைக்கூறி நீங்கள் கொடுத்த பணத்தையும் தந்து சென்றார்" என சொல்கிறார்.....இது உன்னதம் # 1
மேதை கோபுலு எப்படி படம் வரைந்தாரோ அதை நிஜமாக்குவதைப்போல,
ஒவ்வொரு பாத்திரமும் பத்தாண்டுகள் கழித்து படத்தில் நடமாடினார்கள்.இது உன்னதம் #2
தலைவரை விடுங்கள்.அவர் கடவுள் !
ஒரு பாலய்யா,ராஜன்,ck சரஸ்வதி,??
ஒரு தங்கவேலு,ராமதாஸ்,பாலாஜி??
ஒரு நாகேஷ்,மனோரமா?
அச்சு அசலாக அப்படியே பாத்திரங்கள் வந்து இறங்கவில்லையா?இது உன்னதம் # 3
பிரபுராம் சவடால் வைத்தி பற்றி சொன்னார்.
என்ன ஒரு fluency ,timing and wit?
என்னப்பா சிக்கல்! எல்லாரும் அவாவா வாத்தியத்தை எடுத்துண்டு கிளம்புங்கோ!
மகராஜா எழுந்துகொள்ளும்பொது திருப்பள்ளி எழுச்சி வாசிக்கணும்.!!
“நாங்க கோவிலில் மட்டும் தான் திருப்பள்ளி எழுச்சி வாசிப்போம்”.
“அதுக்காக ராஜா கோவிலில் போயா படுத்துக்க முடியும்?”
இந்த timing, மவனே உலகத்தில் எவனுக்குயா வரும்?
ck சரஸ்வதியிடம்..”இவ்வளவு பெரிய கழுத்து!! எவ்வளவு காலியா இருக்கு?
ஒரு அட்டிகை போட்டா எவ்வளவு நன்னா இருக்கும்” என tempt செய்வதில் உள்ள wit
"யாரிந்த பொண்ணு? அரையும் குறையுமா?"
"shut up! she is the maharani of madanpur!"
“நினைச்சேன்! நினைச்சேன்!! இப்படி மகாலக்ஷ்மி மாதிரி ஒரு பெண்ணை
பார்க்கும்போதே நினைச்சேன்!” என்று சொல்வதிலுள்ள fluency
இந்த யானையை அடக்குவாரே நம் யானைப்பாகன்!
ஒரு பதரை பார்ப்பது போலல்லவா இவரைப் பார்ப்பார்!
இந்த பதர் எனும் சொல் இடம் பொருள்,ஏவலுகேற்ப மாறும்.
பின்னால் மோகனாம்பாள் ஒரு இடத்தில் ஷண்முகம் நடத்தைக்கண்டு கொதித்து,
அவரையும் ஒரு பதரைப்போலத்தான் பார்ப்பாள்.ஆனால் அது
காதல் கலந்த தற்காலிக கோபமான பார்வை! காதல் பதர் உடனே மறைந்து விடும்.
ஆனால் வைத்தியோ ஒரு நிரந்தர பதர்.
சரி! தலைவரின் நாதஸ்வர வாசிப்பு..??
அதில் ஒரு முக்கால் பங்கை, நாட்டில் உள்ள அத்தனை வித்வான்களும் கண்டு மகிழலாம்.மீதியை..??
அவர்கள் பாடமாக வைத்துக்கொண்டு அதன்படி தாங்களும் நடை உடை பாவனைகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.
இறைவனுக்கு நன்றி..
திரு.ஏ.பி.என் னை படைத்ததிற்கு
திரு.ஏ.பி.என் நிற்கு நன்றி தி.மோ.வை படைத்ததிற்கு
ஹிந்தி பட அதிபர்களுக்கு நன்றி..
இதை ஒரு ஷேனாய் வித்வான் படமாக ஹிந்தியில் எடுக்காததிற்கு.
தற்கால தமிழ் பட அதிபர்களுக்கும் நன்றி,
தி.மோ வை ரீமேக் செய்யாமல் இருப்பதற்கு.
நண்பர்கள் முரளி, கோபால்,ராகவேந்தர்,பிரபுராம்,வாசுதேவன் ஆகியோருக்கு என் அன்பு மற்றும் நன்றி,
for inspiring me to write..
(தொடரலாம்)
Last edited by Ganpat; 8th April 2013 at 05:56 PM.
-
8th April 2013, 06:04 PM
#2539
Junior Member
Devoted Hubber
>>சி.கே.சரஸ்வதி கடுகடு'ன்னு முகத்தை வச்சிருப்பாங்க.<<
டியர் பிரபு,
சி.கே.சரஸ்வதியின் முகம்,அவர் சிரிக்கும்போது கூட கடுகடு என்றுதான் இருக்கும்!
அது ஒரு brand.நீங்கள் அது இல்லாமல் அவர் முகத்தை பார்க்க விரும்பினால்,
இரு கோடுகள் படத்தில் அவர் வரும் ஒரு காட்சியின் ஒரு ஃபிரேமை (1/8 th of a sec) freeze செய்து பார்க்கலாம்
இது வாசு சார் மனது வைத்தால்(தான்) நடக்கும்.
-
8th April 2013, 06:30 PM
#2540
Junior Member
Devoted Hubber
post # 2523..
Very well written Gopal ji..
அதே சமயம் நாங்கள் ஏதோ ultra modern gadgets சகிதம் சென்னையில் அரச போக வாழ்க்கை வாழ்ந்ததாக எண்ண வேண்டாம்.
வீட்டை விட்டு வெளியில் இருக்கும் பாத்ரூம் (இடக்கர் அடக்கல்);அதில் ஒரு நாற்பது வாட் சட்டி பலப்.அதற்கு வீட்டினுள் ஒரு சுவிட்ச் (தற்கால inverter size ற்கு) அதைபோட்டு விட்டு சுமார் ஐம்பது அடி நடந்து போய் எரிகிறதா என பார்க்க வேண்டும் (loose contact)..முதல் முறையே எரிவது என்பது ck சரஸ்வதி சிரிப்பதை விட ஒரு அபூர்வ நிகழ்வு.இரண்டாம் முறை எரிந்தாலே ஏதோ தாமஸ் ஆல்வா எடிசன் அவர் கண்டுபிடித்த பலப் முதல் முறை எரியும்போது பெற்ற மகிழ்வை பெறுவோம்.இப்படி பலதடவை முயன்று வெற்றி பெற்று ஒரு வழியாக பாத்ரூமிற்குள்
நுழைந்தால் எதற்கு வந்தோம் என்பது மறந்து விடும்.
ஆனால் ஒரு அதிர்ஷடம என் பெற்றோர் ஒரு தடவை கூட நான் சினிமா போக அனுமதி கேட்டு மறுத்ததே இல்லை.
(ஒரு சமயம் சென்னையை ஒரு பயங்கர புயல் தாக்கிக்கொண்டிருந்தபோது,"இன்று போய்தான் ஆக வேண்டுமா,நாளை போகலாமே!" என அப்பா சொன்னதை தவிர்த்தால்)
Bookmarks