-
9th April 2013, 08:20 AM
#2551
Senior Member
Diamond Hubber
போறபோக்குல எப்போதாவது சிவாஜி திரிகளை எட்டிப்பார்த்துவிட்டு செல்லும் பழக்கமுடைய நான் தற்பொதைய நாட்களில் ஆர்வமாக எல்லோரின் பதிவுகளையும் வாசிக்கிறேன். தில்லானா மோகனாம்பாள் பற்றிய பீஆர், கண்பத் பதிவுகள் சிறப்பு. பலரும் சொல்வதுபோல, தி.மோ ஒரு முழுமையான, பூரணமான படம். (கவியரசர் கண்ணதாசனும் தனது ஆகச் சிறந்த படங்களிளுக்கான பட்டியலில் இதையே முன்னிலைப் படுத்தி சிலாகித்திருக்கிறார் எனப் படித்த ஞாபகம்) . படத்தின் குறைபாடுகளையெல்லாம் ஜீரணிக்க வைத்து சிறப்புக்களை மட்டுமே மனதோடு எடுத்துச் செல்ல வைக்கும் படைப்பு. கீற்றுக்கொட்டகை ஜில்லு நாடகத்தினை ஒட்டிய மோகனாவின் வருகை, சிக்கலாரின் கடு-கடுத்தனம், துண்டை உதறிவிட்டு நடந்து செல்லும் பாங்கு;ஊதித் தள்ளிவிடுவது போல வைத்தியை அணுகும் கோபம்.. அந்த அத்தியாயமே எனக்கு மிகவும் பிடித்தக் காட்சிகளில் ஒன்று..
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
9th April 2013 08:20 AM
# ADS
Circuit advertisement
-
9th April 2013, 08:53 AM
#2552
Junior Member
Newbie Hubber
வெங்கி ராம் சார்,
பதிவுகளை ரசிப்பதோடு நிறுத்த வேண்டாம். தங்கள் பதிவுகள் தேர்ந்த
ரசனையாளரை இனம் காட்டுகிறது. தாங்களும் பதிவுகள் போட்டு, எங்களுக்கும் ,ரசனை அனுபவத்தை வழங்கலாமே?
-
9th April 2013, 09:04 AM
#2553
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Gopal,S.
Our Ragavendar Sir looks like dignified chairman of the Board.
என் மீது இது வரை இருந்த கோபத்தையெல்லாம் இந்த பதிவிலேயே பாதியைத் தீர்த்து விட்டார் போல... இன்னும் மிச்சம் மீதி எப்போ காட்டப் போறாரோ தெரியலே...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
9th April 2013, 09:06 AM
#2554
Senior Member
Seasoned Hubber
வெங்கிராம் சார் ... கோபால் சார் சொன்னது போல் அவ்வப் போது எட்டிப் பார்த்து விட்டுப் போகாமல் தொடர்ந்து பங்கு கொள்ளுங்கள் ... தாங்கள் ரசித்த படங்களைத் தாங்கள் எழுதிப் பகிர்ந்து கொள்ளுங்கள் ... அதிகம் பேசப் படாத படங்களில் நடிகர் திலகத்தின் பங்கினைப் பற்றி எங்கள் சிற்றறிவிற்குத் தெரிந்த வரையில் நாங்கள் பகிரந்து கொள்கிறோம் ...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
9th April 2013, 09:09 AM
#2555
Senior Member
Diamond Hubber

Originally Posted by
RAGHAVENDRA
என் மீது இது வரை இருந்த கோபத்தையெல்லாம் இந்த பதிவிலேயே பாதியைத் தீர்த்து விட்டார் போல... இன்னும் மிச்சம் மீதி எப்போ காட்டப் போறாரோ தெரியலே...
ராகவேந்திரன் சார்,
காலை வணக்கங்கள். நிஜமாகவே நேற்று கோபால் எனக்கு போன் செய்யும் போது தங்களை மிகவும் பாராட்டிப் பேசினார். அதனால் உண்மை என்றே நம்புவோம்.
-
9th April 2013, 09:23 AM
#2556
Senior Member
Seasoned Hubber
காலை வணக்கங்கள் வாசு சார். தங்கள் உடல் நிலை எப்படி உள்ளது. நலம் தானா ...
என் மேல் கோபால் சார் வைத்துள்ள மதிப்பிற்கு மிக்க நன்றி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
9th April 2013, 09:41 AM
#2557
Junior Member
Devoted Hubber
தில்லானா மோகனாம்பாள் என்றவுடன் எனக்கு ஞாபகத்தில் வருவது 'கள்ளழகர்' கோயிலும் தான்.
கதை யின் படி 'மறைந்து நின்று' பாடல், அந்த கோயிலின் வாசல் முன் மண்டபத்தில் நடைபெறுகிறது. எங்கள் குடும்பம் முதன் முதலில் தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம் செய்தபோது அக்கோயிலுக்கு சென்றதும் தி.மோ நினைவுக்கு வந்து, excited ஆகி வாசலை போய் சுற்றிவரப் பார்வையிட்டோம். நாம் foreigners என்று அறிந்து கொண்ட ஒரு 'ad-hoc (!) tourist guide', அங்கு தான் அப்பாடல் காட்சி படமாக்கப் பட்டது என்று சொல்லி தொடர்ந்து அளந்து கொண்டே போனார். நான் நம்பவில்லை, மேலும் அக்கோயில் மண்டபம் சிறியதாகவும் தென்பட்டது. அதை நான் அவரிடம் கேட்க, அவரும், 'இல்லையில்லை அப்பாடல் காட்சி நிச்சயமாக இங்கே இந்த மேடையில் தான் எடுக்கப்பட்டது! பத்மினி அம்மா இங்கே தான் ஆடினாங்க' என்று சொல்லி கையை நீட்டி காட்டினார். அவர் காட்டிய திசையில் நாம் எல்லோரும் பார்க்க, அங்கே, அந்த மேடையில் சர்வ சாதாரணமாக ஒரு ஆடு நின்றுகொண்டிருந்தது! மே!.....
-
9th April 2013, 09:55 AM
#2558
Junior Member
Newbie Hubber
ஆஆ ஹ்......
கிள்ளி பார்த்து கொள்கிறேன். நிஜமாகவே வலிக்கிறது. வாங்க தங்கச்சி.
-
9th April 2013, 10:05 AM
#2559
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Gopal,S.
ஆஆ ஹ்......
கிள்ளி பார்த்து கொள்கிறேன். நிஜமாகவே வலிக்கிறது. வாங்க தங்கச்சி.
Thank you very much! 'long time no see!!!!'
-
9th April 2013, 10:18 AM
#2560

Originally Posted by
Vankv
தில்லானா மோகனாம்பாள் என்றவுடன் எனக்கு ஞாபகத்தில் வருவது 'கள்ளழகர்' கோயிலும் தான்.
கதை யின் படி 'மறைந்து நின்று' பாடல், அந்த கோயிலின் வாசல் முன் மண்டபத்தில் நடைபெறுகிறது. எங்கள் குடும்பம் முதன் முதலில் தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம் செய்தபோது அக்கோயிலுக்கு சென்றதும் தி.மோ நினைவுக்கு வந்து, excited ஆகி வாசலை போய் சுற்றிவரப் பார்வையிட்டோம். நாம் foreigners என்று அறிந்து கொண்ட ஒரு 'ad-hoc (!) tourist guide', அங்கு தான் அப்பாடல் காட்சி படமாக்கப் பட்டது என்று சொல்லி தொடர்ந்து அளந்து கொண்டே போனார். நான் நம்பவில்லை, மேலும் அக்கோயில் மண்டபம் சிறியதாகவும் தென்பட்டது. அதை நான் அவரிடம் கேட்க, அவரும், 'இல்லையில்லை அப்பாடல் காட்சி நிச்சயமாக இங்கே இந்த மேடையில் தான் எடுக்கப்பட்டது! பத்மினி அம்மா இங்கே தான் ஆடினாங்க' என்று சொல்லி கையை நீட்டி காட்டினார். அவர் காட்டிய திசையில் நாம் எல்லோரும் பார்க்க, அங்கே, அந்த மேடையில் சர்வ சாதாரணமாக ஒரு ஆடு நின்றுகொண்டிருந்தது! மே!.....
Guide nandraaga saradu vittirukkiraar.
Actually that shot was picturised in studio set (set arranged same like Azhagar Koil by art director Ganga).
Bookmarks