-
9th April 2013, 04:33 PM
#2581
Junior Member
Devoted Hubber
கலைஞர்கள் புரவலர்கள் பற்றிய கருத்து பரிமாற்றங்கள்..
19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து தோன்றி வரும் தலைமுறைகள் பட்ட /படும் அவதி மனித இனத்தில் வேறு எப்பொழுதும் நடந்திருக்க வாய்ப்பில்லை.
முதலில் கலாசார மாற்றம்
.பிறகு ஆட்சி முறை மாற்றம்.
பிறகு விஞ்ஞான மாற்றம்.
பிறகு தொழில் நுட்ப மாற்றம்
தற்பொழுது பொருளாதார மாற்றம் ..
இதனூடே பின்னிப்பிணைந்துள்ள கலாசார மாற்றம்.
என ஒரு நூற்றிருபது ஆண்டுகளுக்குள் சுனாமி போன்ற மாற்றங்கள்..
பல தலைமுறைகளாக கலைஞர்களை ஆதரிப்பது எனும் பெயரில் நாட்டிலுள்ள செல்வந்தர்கள் அவரவர் வசதிக்கேற்ப பெண்களை சீரழித்து வந்தனர்.இது ஒரு வடிகட்டிய அயோக்கியத்தனம்.இதற்கு தேவதாசி எனும் ஒரு இனிப்பு தடவிய பெயர் வேறு!!இது தேவரடியார்கள் என மருவி மேலும் என்னென்னவோ ஆகி, இவ்வினத்தவர் ஆண்களுக்கு இசைந்தால் இசைசொல்லாகவும்,மறுத்தால் வசை சொல்லாகவும் ஆகிப்போனது.1920 களில் இதை எதிர்த்து,ஒழிக்க கோரி சென்னை சட்ட சபையில் ஒரு சரித்திர புகழ் பெற்ற விவாதம்.Dr.Muthulakshmi Reddy அம்மையார் கடுங்கோபத்துடன் விவாதம் செய்ய காங் தலைவர் திரு சத்யமூர்த்தி அவர்கள் தேவதாசி முறை சமுதாய சுமுகமான போக்கிற்கு அத்தியாவசியமானது அதை நீக்குவது பேராபத்து என்றும் பேச,எழுந்தார் அம்மையார்.."மதிப்பிற்குரிய சத்யமூர்த்தி அவர்கள் தங்கள் குடுமபத்திலிருந்து ஒரு பெண்ணை இந்த நல்ல முறைக்கு நாட்டின் நன்மை கருதி அனுப்பி வைக்க இசைந்தால் இந்த மசோதாவை நான் வாபஸ் பெறுகிறேன் என கர்ஜிக்க முன்னவர் முகத்தில் ஈயாடவில்லை.அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு தேவதாசி முறையும் ஒழிந்தது.
சரி இனி மோகனாவின் கதை.
அவள் ஒரு குணவதி.தன் இனத் தொழிலை வெறுப்பவள்.சண்முகத்திடம் ஒரு நல்ல மனிதன் மற்றும் கலைஞனைக்கண்டு அவனை நேசிக்கிறாள்.அவனும் அப்பாவி.மோகனாவின் நிலை அறிந்து அவளை நேசிக்கிறான்.
ஆனால் இயல்பு காரணமாக அவ்வப்பொழுது சந்தேகம் தலை தூக்குகிறது.அதன் அடிப்படையில் அமைந்தது தான் இந்த திரைக்கதை.இதில் வடிவு எனும் பாத்திரம் மோகனாவை சண்முகத்திடமிருந்து தூர எடுத்து செல்லவும்,ஜில் ஜில்
எனும் பாத்திரம் மோகனாவை சண்முகத்தின் அருகே கொண்டு வரவும் மட்டுமே கதை மாந்தர்களாக தோன்றுகின்றனர்.
வடிவு தன மகளின் அழகையே மூலதனமாக பார்க்கிறாள்.அவள் கலையைப்பற்றி அவ்வளவு அக்கறையில்லை.ஆனால் மகளின் மனதை மாற்ற அவள் நேசிக்கும் கலையையே ஒரு tool ஆக பயன் படுத்தி அவளை வெற்றிகொள்ள பார்க்கிறாள் முடிவில் தோல்வி அடைகிறாள்.அவளுக்கு தன survival மட்டுமே top priority.
இதற்கு மாறாக ஜில் ஜில்..மிக நல்லவள்.கலையை நேசிப்பவள்..மோகனாவின் திறமையை புரிந்து கொண்டவள்.ஆனால் இவள் தன்னையும் ஒரு நடனமாது என நினைத்துகொண்டிருப்பது ஒரு நகை முரண்.(இதே தவற்றை சங்கமம் என்ற படத்தில் மணிவண்ணனும் செய்வார்..விஜயகுமாரிடம் மானபங்கம் செய்யப்படுவார்)
எனவே வடிவு எனும் பாத்திரம் ஒன்றும் போற்றத்தக்க ஒன்றல்ல.சுயநலம் மிகுந்து தன மகளின் வாழ்வும் தன் வாழ்வு போல ஆவதில் தவறில்லை என நினைக்கும் தாய்.இந்தப்போக்கை,சண்முகம் எனும் ஒரு அற்புத கலைஞனை ,சுந்தர புருஷனை பார்ப்பதற்கு முன் வேண்டுமெனில் ஓரளவு நியாயப்படுத்தலாம்.ஆனால் தன மகள் அவனுடன் மனைவி எனும் பெருமையுடன் இணைவதை விட ,ஒரு செல்வந்தனுடன் தாசி எனும் பட்டத்துடன் இணைவதே தனக்கு நல்லது எனும் கருத்தில் செயல்பட்ட அவள் ஒரு வில்லியே!
Last edited by Ganpat; 9th April 2013 at 05:07 PM.
-
9th April 2013 04:33 PM
# ADS
Circuit advertisement
-
9th April 2013, 04:41 PM
#2582
Ganpat sir,
If we go through all the 10 parts of Nadigarthilagam thread (and ofcourse also in the thread which is under lock now), we can find lots and lots of discussions about the great movie Thillana Mohanambal by various hubbers. It includes the reviews of movie, analysis of songs (especially Nalandhana - Parthasarathy sir) and excellent discussions about
Sikkal Shanmuga Sundaram,
Thangarathinam,
Mohana,
Jil Jil Ramamani,
Vaithi,
Vadivambal,
Mittathaar Nagalingam,
Singapuram Minor,
Madhanpur Maharaja,
Nattuvanaar Muthukumaraswamy,
Thavil Sakthivel,
Thavil Muththaraakku annan,
Raman Chettiar,
Kadambavanam,
Nurse Mary
(Here I want to CHALLENGE... In any other films, can anyone remember this much actors only with their charector names..?. Never, that is speciality of Thillana)
If a seprate thread opened for Thillana and all those discussions (only about TM) moved to thread, then it will bw complete dictionery for Thillana Mohanambal. No doubt it is great painful task.
-
9th April 2013, 04:57 PM
#2583
Junior Member
Newbie Hubber
எல்லாவற்றிலும் தனி தொகுதி மற்றும் reservation கேட்கிறாரப்பா!!!
-
9th April 2013, 05:40 PM
#2584
Junior Member
Newbie Hubber
-
9th April 2013, 06:06 PM
#2585

Originally Posted by
Gopal,S.
பாச மலர் எப்போ ரிலீஸ்?
Paasa Malar - 27.05.1961
-
9th April 2013, 06:12 PM
#2586

Originally Posted by
Gopal,S.
எல்லாவற்றிலும் தனி தொகுதி மற்றும் reservation கேட்கிறாரப்பா!!!
Not for all movies...
But Thillana Mohanambal is 'deserve' for a 'reserve'.
(konjam munnadidhaan TR programme paarththen. adhan effect)
-
9th April 2013, 06:27 PM
#2587
Junior Member
Devoted Hubber

Originally Posted by
adiram
Ganpat sir,
If a seprate thread opened for Thillana and all those discussions (only about TM) moved to thread, then it will bw complete dictionery for Thillana Mohanambal. No doubt it is great painful task.
ஆதிராம் சார்,
ஒரு படத்திற்கு தனியே ஒரு திரி என்பது கேட்க நன்றாக இருப்பினும்
அதை நடை முறைப்படுத்துவது சிறிது கடினம் என நினைக்கிறேன்.
நான் இங்கு பார்த்த வகையில்
1)அறிவிப்புகள்
2)புள்ளி விவரங்கள்
3)காணொளிகள்
4)தலைவர் சம்பந்தப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள்
a).அவர் திரைப்படங்கள் அடிப்படையில்
b)அவர் நடிப்பு பாணியின் அடிப்படையில்
என்று வேண்டுமானால் திரிகள் இருக்கலாம்.
ஒரு படைப்பாளி தன் ரசிகர்களை தன்னை விட உயர்வாக எண்ணி தன படைப்பை உருவாக்கும் போது ஒரு உன்னத படைப்பு உருவாகிறது.அதே போல அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்து தன படைப்பை உருவாக்கும் போது ஒரு சாதாரண படைப்பு உருவாகிறது.இந்த திரி ஒரு உன்னதத்தை நோக்கி போய் கொண்டிருப்பது மகிழ்வளிக்கிறது.இந்த வேள்வியில் நம் ஒவ்வொருவர் பங்கும் அவசியம்.
நன்றி.
-
9th April 2013, 06:51 PM
#2588
Junior Member
Devoted Hubber

Originally Posted by
adiram
Not for all movies...
But Thillana Mohanambal is 'deserve' for a 'reserve'.
(konjam munnadidhaan TR programme paarththen. adhan effect)
உங்கள் இந்த TR பாணி pun மிக ஹாஸ்யமாக உள்ளது.பொதுவாக இம்மாதிரியான நகைச்சுவை
மிக சிலருக்கே சாத்தியமாகும்.உங்களில் ஒரு TR ஒளிந்திருப்பது தெளிவு.
ஜெயா டிவி யில் தினந்தோறும் காலை வரும் ஒரு பக்தி பாடல் மெட்டில் நானும் ஒரு stanza TR போல எழுத முயன்று தோல்வியுற்றேன்.அது..
இந்தியாவின் நிலையைப்பார்த்தால் வந்திடுமே ஆத்(தி)ரம்
மு.க.மேல் ஜெயாவிற்கு என்னிக்குமே க்ஷாத்(தி)ரம்
புது டில்லியே திருடர் அனைவரின் க்ஷேத்திரம்
மொரார்ஜிதேசாய் .....
பி.கு.முதலில் முழுவதும் போட்டு,உடனே எடிட் செய்து கடைசி வரியின் மூன்று வார்த்தைகளை நீக்கி விட்டேன்.
Last edited by Ganpat; 9th April 2013 at 06:54 PM.
-
9th April 2013, 09:42 PM
#2589
Moderator
Platinum Hubber
Interesting series on the US trip Vasudevan. Look forward to next posts.
This is when he was made honorary mayor of Niagara city for a day and then he got to meet and interact with Brando, Lemmon and others - right. Would be interesting to read that.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
9th April 2013, 09:50 PM
#2590
Moderator
Platinum Hubber

Originally Posted by
RAGHAVENDRA
டியர் பிரபு சார்
ஒரு வேண்டுகோள், சாரெல்லாம் சொல்லாதீங்க சார். கூச்சமா இருக்கு 
இருபதுகளுக்கு ஒருவழியா குட்பை சொல்லப்போறேன்னாலும் இளையவன் என்ற சலுகைகளுக்கான நப்பாசை போனபாடில்லை.

Originally Posted by
RAGHAVENDRA
அவரவர் பார்வையில் என்ற கண்ணோட்டத்தில் மிகச் சிறப்பாக உள்ளது.
நன்றி.

Originally Posted by
RAGHAVENDRA
ஏனென்றால் அவருக்கு அந்த ஏக்கம் இருந்திருக்கிறது. தம்மால் முடிந்த வரையில் தமக்குத் தெரிந்த வழியில் நடனத்திற்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கில் தான் அவர் இந்தக் கதையைப் படைத்திருக்க வேண்டும். இந்த அடிப்படையில் கோவில்களின் மதிற்சுவர்கள், பிரபுக்களின் நான்கு சுவர்கள் இவற்றையெல்லாம் தாண்டி நாட்டியம் பரவ வேண்டும், அது தனக்குரிய அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்கிற கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் உள்ளக் கிடக்கையின் வெளிப்பாடே மோகனாம்பாள் பாத்திரம். கிட்டத் தட்ட இதே அணுகுமுறையும் ஆதங்கமும் அவருக்கு நாதஸ்வரக் கலையின் மீதும் இருந்திருக்க வேண்டும்.
இந்த அடிப்படையில் தான் தில்லானா மோகனாம்பாள் கதையை கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் படைத்திருப்பார் என நான் நினைக்கிறேன்.
நிச்சயமாக இருக்கலாம்.
நான் அவர் எழுத்துகளைப் படித்ததில்லை. அவரது தனிப்பட்ட ஆளுமையைப் பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது. அவரும் கேபிஎஸ்-ஸும் காந்திமேல் மிகுந்த அபிமானம் கொண்டவர்கள் என்று மட்டும் தெரியும். அதை வைத்துப் பார்த்தால் நீங்கள் சொல்வதுபோல இருக்கவே வாய்ப்புண்டு.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
Bookmarks