Page 260 of 401 FirstFirst ... 160210250258259260261262270310360 ... LastLast
Results 2,591 to 2,600 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #2591
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    Good and bad existed will exist in all times taking different shape and form, but told them not to fight Wind mills like Don quixote(cervantes).
    Haha. Yeah. We are all the products of our time, more than we like to believe. The terrorist that he is - Bertrand Russel - in one of his books argues that even the climate of a geographical area seems to influence its moral codes!


    Quote Originally Posted by Gopal,S. View Post
    Take writing as your full time one. ( I am passing my wish on you as wish fulfilment)
    Enjoying every bit of it.
    Thank You. எனது புரவலன் நானே - அதுனால இன்னொரு முப்பதே முப்பது வருஷம் வேலை பார்க்க வேண்டி இருக்கும்
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2592
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Thank You adiram.
    Quote Originally Posted by adiram View Post
    We can watch in the movie, APN didnot show father of Mohana, at the same time Vadivaambal is not a vidow. She is having big kungumappottu in her forehead. That means Mohana's father is "somebody" which cannot be eloborated.

    In the same way she want to lead her daughter. Thatswhy too much 'pal iliching' for Mittathaar Nagalingam's 'mookkuththi' and Singapuram Minor's 'vaira attigai' and Madhanpoor Maharaja's 'aranmanai vaasam'.
    Exactly. Her behaviour is indeed despicable - and meant to be portrayed that way.
    I didn't mean to totally exonerate her - but just wanted to contextualize her. She is the product of her times and is cannot but think that that is the fate of dancers - and the best they can aspire for. Even if Mohana were to live with Shanmugam - in her opinion - he is also an artist who is dependent on patrons (quite simply what would have happened to him without Singapuram Minor Chelladurai's change of heart). And he also seems like an impractical madcap fellow - how could she entrust her daughter's wellbeing to such a person.

    Though her behaviour is unconscionable to us, we should also consider these IMO.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  4. #2593
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Quote Originally Posted by Ganpat View Post
    இதற்கு மாறாக ஜில் ஜில்..மிக நல்லவள்.கலையை நேசிப்பவள்..மோகனாவின் திறமையை புரிந்து கொண்டவள்.ஆனால் இவள் தன்னையும் ஒரு நடனமாது என நினைத்துகொண்டிருப்பது ஒரு நகை முரண்.(இதே தவற்றை சங்கமம் என்ற படத்தில் மணிவண்ணனும் செய்வார்..விஜயகுமாரிடம் மானபங்கம் செய்யப்படுவார்)
    ரமாமணியாரின் சுய-அபிப்ராயத்தில் தவறென்ன கண்டீர்?
    கலையில் மேல்-கீழ், உயர்ந்தது/தாழ்ந்தது என்ற தீர்மானங்கள் எங்கிருந்து வருகின்றன?

    கர்நாடக சங்கீதத்தோடும், பரநாட்டியத்தோடும் ஒன்றி ரசிக்க முடியாதவர்களுக்கு ஒரு உலகமே இருந்தது என்று ஏபிஎன் சிறப்பாக பதிவு செய்கிறார். குதிர குதிர பாய்ச்சலு...இங்கே கொட்டாயில கூச்சலு

    அவளை ரசிக்க சனம் உண்டு: அவுஹ ஆடுனாத்தான் பாப்பாஹளா, நான் ஆடுனா கண்ணை மூடிக்குவாஹளா

    படாடோபம் மிக்க உயர்குடிகள் அங்கு வருவதே இழிவாக நினைக்கிறார்கள். மாமனார் கடம்பவனம் மருமகன் 'ஏன் அங்கே வந்திருக்கிறான்' என்பதை அங்கு வரும்வரை முழுவதுமாக அறியவில்லை என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டியது. கோச்சுவண்டி அங்கு வந்து நிற்பதே, சிங்கபுரம் மைனர் கூத்தாடும் இடத்துக்கு வந்ததே அவருக்கு அசூயை ஏற்படுத்துகிறது!

    "வருசாவருசம் இங்கன நான்தான் ஆடிக்கிட்டு கிடந்தேன்...இந்த வருசம் என்ன நினைச்சாரோ செட்டியாரு திருவாரூர்லேர்ந்து புதுசா ஒரு செட்டைக் கொண்டுவந்து இறக்கிட்டார்..ஏஏன்" என்று வெகுளியாக இழுத்துக் கேட்கிறாள்

    "அந்த மோகனாங்கி என்னமாத்தான் ஆடுறாஹன்னு பார்த்துட்டு வாரேன்" என்று வீம்பாக சொல்லிச் செல்கிறாள்

    I find it moving. நினைத்துப் பாருங்கள்: மோகனாவுக்கும் பலகண்ணாடி அலங்கார முதல் ஃப்ரேம்...ரமாமணி'க்கும் அலங்காரம் செய்துகொண்டு தயாராகும் முதல் ஃப்ரேம்! மேடையில் ஆட ஆயத்தமாக இருக்கும் அலங்காரங்களுடன் சென்றவள்- கசப்பின் சுவடே தெரியாமல் பூரணமாக ரசிக்கத் துவங்கிவிடுகிறாள்!

    என்ன ஒரு உயர்ந்த ஜீவன்!
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  5. #2594
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    ரொம்ப நாளா ஒடிக்கொண்டிருக்கும் எண்ணங்கள் சில..

    விமானப் பிரயாணங்களில் கவனித்தது.. சென்னையில் இருந்து புறப்படும் நிறைய விமானப் போக்குவரத்துக்களில் கூட இந்திய பழைய மற்றும் கிளாசிக் திரைப்பாடல்கள் / திரைப்படங்கள் தொகுப்புக்களில் கூட சிவாஜி பாடல்கள் / படங்கள் இருப்பதில்லை. திலிப் உட்பட்ட ஏனைய பாலிவுட் நாயகர்களின் படங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. சிவாஜி நடித்த சிறந்த படங்கள் குறைந்தது பத்து எப்போதுமே விமானங்களில் எல்லா பிரயாண காலத்திலும் இருக்க வழிவகை செய்யணும். சிவாஜி மன்றத்தினர் இதற்கான முயற்சிகள் எடுக்கணும். இந்தியா மற்றும் உலக விமானப் போக்குவரத்துக்களை அணுகனும்.

    இன்னொன்று.. Netflix போன்ற வீடியோ லைப்ரெரிகள். அங்கேயும் சிவாஜி என்ற தேடலுக்கு நிறைய வந்து கொட்டணும். IMDB போன்ற இணையத் தளங்களில் சிறந்த விமர்சனங்களை பதிவேற்றனும் .. விக்கியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் அரிய பல தகவல்களை சேர்க்கணும்.

    இதை நான் கமல் திரியில் பதிவு செய்யலாம் என இருந்தேன். ஆனால் சிவாஜியிடமிருந்தே ஆரம்பித்தால் மட்டுமே இப்பணி முழுமையானதாக இருக்கும்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  6. #2595
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by P_R View Post
    என்ன ஒரு உயர்ந்த ஜீவன்!
    தொடருங்கள்.. தி.மோகனாம்பாள் காவியத்தின் மீதான சிறப்பான பார்வைகள் இயக்குனரை உயர்ந்த இடத்தில் தூக்கி நிறுத்துகிறது
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  7. #2596
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    ரொம்ப நாளா ஒடிக்கொண்டிருக்கும் எண்ணங்கள் சில..

    விமானப் பிரயாணங்களில் கவனித்தது.. சென்னையில் இருந்து புறப்படும் நிறைய விமானப் போக்குவரத்துக்களில் கூட இந்திய பழைய மற்றும் கிளாசிக் திரைப்பாடல்கள் / திரைப்படங்கள் தொகுப்புக்களில் கூட சிவாஜி பாடல்கள் / படங்கள் இருப்பதில்லை. திலிப் உட்பட்ட ஏனைய பாலிவுட் நாயகர்களின் படங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. சிவாஜி நடித்த சிறந்த படங்கள் குறைந்தது பத்து எப்போதுமே விமானங்களில் எல்லா பிரயாண காலத்திலும் இருக்க வழிவகை செய்யணும். சிவாஜி மன்றத்தினர் இதற்கான முயற்சிகள் எடுக்கணும். இந்தியா மற்றும் உலக விமானப் போக்குவரத்துக்களை அணுகனும்.

    இன்னொன்று.. Netflix போன்ற வீடியோ லைப்ரெரிகள். அங்கேயும் சிவாஜி என்ற தேடலுக்கு நிறைய வந்து கொட்டணும். IMDB போன்ற இணையத் தளங்களில் சிறந்த விமர்சனங்களை பதிவேற்றனும் .. விக்கியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் அரிய பல தகவல்களை சேர்க்கணும்.

    இதை நான் கமல் திரியில் பதிவு செய்யலாம் என இருந்தேன். ஆனால் சிவாஜியிடமிருந்தே ஆரம்பித்தால் மட்டுமே இப்பணி முழுமையானதாக இருக்கும்.
    வெங்கி ராம் சார்,
    wiki ,IMDB எல்லாம் பார்க்கும் போது வயிரெரியும். சரியான தகவல் இல்லாததோடு ,பிழையான தகவல்கள் வேறு. கலைமாமணி பட்டம் அவருக்கு 1962 வில் வழங்க பட்டது. wiki யில் 1996 என்று தவறான தகவல். அவர் cult movies பற்றி மொக்கையான தகவல்கள். நான் எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ,Singapore Airlines ,Air India என்று எல்லாவற்றிலும் எழுதியே கொடுத்துள்ளேன். சில ஐந்து நட்சத்திர hotel களில் எனது நண்பர்களுடன் பேசி சமீபத்தில் ஏற்பாடு செய்தேன். பெரும் போராட்டம், நமது behind woods ,sify ,oneindia இணைய தளங்களோடு. நீங்கள் சொன்ன குறை எனக்கும் உண்டு. ஆனால் நான் 20 வருடங்களாக வெளி நாட்டில் வாழ்வதால் ரொம்ப போராட முடிவதில்லை.
    சரியான நேரத்தில் ,சரியான பிரச்சினையை கையிலெடுத்தீர்கள்.
    Last edited by Gopal.s; 10th April 2013 at 12:10 PM.

  8. #2597
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சரியான பார்வை P_ R . பரத நாட்டியம், கர்நாடக இசையின் உயர்வு பற்றி எனக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால், சராசரி மக்களின் வாழ்வையொட்டிய கலை வடிவங்களை அழகுணர்ச்சி என்ற போலியாக வடிவமைக்க பட்ட பார்வையில் அணுகுவது யார் ஆரம்பித்த தவறு? சதிர் என்ற பெயரில் , கீழ் நிலையில் வைத்து பார்க்க பட்ட ஒரு கலை வடிவமே, பரத நாட்டியமாக நாம காரணம் சூட்ட பட்டு உயர் மக்களால் ச்வீகாரம் செய்து கபளீகரிக்க பட்டது.
    நாட்டு புற பாடல்களில் உள்ள ஆழமோ ,அழுத்தமோ,வாழ்வியல் முறைகளோ,nerrative nuiances எதுவுமே, எந்த கீர்த்தனைகளிலும் இல்லை. (நான் வந்தேன்,போனேன்,தொழுதேன்,அருள் புரி, என்ற ஆழமற்ற lyrics .ஆனாலும் ஒஸ்தி!!!)
    ஜில் ஜில் பற்றி உன்னுடையது சரியான புரிதல் கொண்ட பார்வை.

  9. #2598
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வெங்கிராம் / கோபால்
    விமானப் பயணத்தைப் பற்றி தங்களுக்குத் தெரிந்த வரையில் தங்கள் உள்ளத்திலுள்ள ஆதங்கத்தை பகிரந்து கொண்டிருக்கிறீர்கள். கோபால் அதற்கான முயற்சியினையும் எடுத்துள்ளார்.
    விக்கிபீடியாவை பொறுத்த மட்டில் யார் வேண்டுமானாலும் எடிட் செய்யும் வகையில் உள்ளதால் நாம் சரி செய்தால் அதனை மீண்டும் யாராவது வந்து தவறான தகவல்களையே மீண்டும் பதிகிறார்கள். 1997ல் முதன் முதலில் இணைய தளங்களைப் பார்வையிடும் வசதி கிடைத்த போது நான் தேடியது முதலில் நடிகர் திலகம் படங்களைப் பற்றிய தகவல்களைத் தான். அப்போது பல தகவல்கள் சரியாக இல்லாமல் இருந்தன. அப்போது தான் நாம் நடிகர் திலகத்திற்கென இணையங்களில் சரியான தகவல்களைத் தருவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தால் என்ன எனத் தோன்றியது. கிட்டத்தட்ட அதற்காக நான் காத்திருந்த காலம் 10 ஆண்டுகள். மிகவும் பொறுமையாக இருந்து 2007ல் தான் அதற்கான சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. அப்போது தான் நமது நடிகர் திலகம் இணைய தளத்தினைத் துவக்கினேன். இன்னும் சில நாட்களில் 6 ஆண்டுகள் முடிந்து 7வது ஆண்டு துவங்க உள்ள நிலையில் தங்களுடைய பதிவின் மூலம் அடியேனுடைய முயற்சிகளைக் கூற ஒரு வாய்ப்பு கிடைத்தது. விக்கிபீடியா இணைய தளத்தின் தகவல்களை முழுமையாக நம்ப முடியாமல் இருப்பதற்கு ஒரு காரணம் அதனை யார் வேண்டுமானாலும் எடிட் செய்யலாம் என்கிற வசதி உள்ளதே ஆகும். ஓரளவிற்கு நமது நடிகர் திலகம் இணைய தளம் இந்தக் குறையைப் போக்கும் என நம்புகிறேன். அதனைத் தான் இதனுடைய நோக்கமாகவும் கொண்டிருக்கிறேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #2599
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    ரொம்ப நாளா ஒடிக்கொண்டிருக்கும் எண்ணங்கள் சில..

    விமானப் பிரயாணங்களில் கவனித்தது.. சென்னையில் இருந்து புறப்படும் நிறைய விமானப் போக்குவரத்துக்களில் கூட இந்திய பழைய மற்றும் கிளாசிக் திரைப்பாடல்கள் / திரைப்படங்கள் தொகுப்புக்களில் கூட சிவாஜி பாடல்கள் / படங்கள் இருப்பதில்லை. திலிப் உட்பட்ட ஏனைய பாலிவுட் நாயகர்களின் படங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. சிவாஜி நடித்த சிறந்த படங்கள் குறைந்தது பத்து எப்போதுமே விமானங்களில் எல்லா பிரயாண காலத்திலும் இருக்க வழிவகை செய்யணும். சிவாஜி மன்றத்தினர் இதற்கான முயற்சிகள் எடுக்கணும். இந்தியா மற்றும் உலக விமானப் போக்குவரத்துக்களை அணுகனும்.

    இன்னொன்று.. Netflix போன்ற வீடியோ லைப்ரெரிகள். அங்கேயும் சிவாஜி என்ற தேடலுக்கு நிறைய வந்து கொட்டணும். IMDB போன்ற இணையத் தளங்களில் சிறந்த விமர்சனங்களை பதிவேற்றனும் .. விக்கியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் அரிய பல தகவல்களை சேர்க்கணும்.

    இதை நான் கமல் திரியில் பதிவு செய்யலாம் என இருந்தேன். ஆனால் சிவாஜியிடமிருந்தே ஆரம்பித்தால் மட்டுமே இப்பணி முழுமையானதாக இருக்கும்.
    Thank you Venkkiram, you have raised on right time. I also had same feeling like not to able to watch or listen our NT movies on the journey. Very rarely I have listened few NT songs in Singapore airlines. Let me write to have NT movies collections to few air lines in the suggestion sections. Good initiative Venkkiram.

    Cheers,
    Sathish

  11. #2600
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by gopal,s. View Post
    சரியான பார்வை p_ r . பரத நாட்டியம், கர்நாடக இசையின் உயர்வு பற்றி எனக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால், சராசரி மக்களின் வாழ்வையொட்டிய கலை வடிவங்களை அழகுணர்ச்சி என்ற போலியாக வடிவமைக்க பட்ட பார்வையில் அணுகுவது யார் ஆரம்பித்த தவறு? சதிர் என்ற பெயரில் , கீழ் நிலையில் வைத்து பார்க்க பட்ட ஒரு கலை வடிவமே, பரத நாட்டியமாக நாம காரணம் சூட்ட பட்டு உயர் மக்களால் ச்வீகாரம் செய்து கபளீகரிக்க பட்டது.
    நாட்டு புற பாடல்களில் உள்ள ஆழமோ ,அழுத்தமோ,வாழ்வியல் முறைகளோ,nerrative nuiances எதுவுமே, எந்த கீர்த்தனைகளிலும் இல்லை. (நான் வந்தேன்,போனேன்,தொழுதேன்,அருள் புரி, என்ற ஆழமற்ற lyrics .ஆனாலும் ஒஸ்தி!!!)
    ஜில் ஜில் பற்றி உன்னுடையது சரியான புரிதல் கொண்ட பார்வை.
    டியர் கோபால் சார்,
    தங்களுடைய பார்வையில் கர்நாடக சங்கீதத்தினைப் பற்றிய பதிவில் தங்களுடைய கோபமும் ஆதங்கமும் தெரிகிறது. இதற்குக் காரணம் அந்தக் கலைகளல்ல, அவற்றை கையாண்டவர்கள் தான். சங்கீத மும்மூர்த்திகள் முழுமையான இறை பக்தியுடன் தான் இவற்றையெல்லாம் படைத்தார்கள். எனக்கு கர்நாடக சங்கீதத்தைப் பற்றி எதுவும் தெரியாது என்றாலும் கூட அதில் உள்ள தூய்மையினைப் புரிந்து கொள்ள முடியும். கிட்டத் தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை அதனுடைய மேன்மை தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. அதற்கும் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது நமது நாட்டுப்புற இசை. அதன் அடிப்படையில் தான் ராகங்களும் தாளங்களும் உருவாக்கப் பட்டதாகவும் ஒரு கருத்து உள்ளது. உள்ளன்போடும் முழு ஈடுபாட்டோடும் இசைப்பதற்காகவே உருவாக்கப் பட்டவை கீர்த்தனைகள். இதில் உள்ள சில விஷயங்கள் இவற்றை சராசரி மனிதரிடமிருந்து வெகு தூரம் விலக்கி விட்டன. காலப் போக்கில் அவற்றில் ஏற்பட்ட அல்லது ஏற்படுத்தப் பட்ட மாற்றங்கலே அவை அந்நியமாகத் தெரிவதற்கு மூல காரணம்.

    மனோதர்மம் என்பது கர்நாடக சங்கீதத்தில் மிக முக்கியமானது. அவரவர்களுடைய சங்கீதப் புலமை, பாடும் போது அவர்களுக்குள் ஆலாபனை செய்யும் வல்லமையை உண்டாக்கும். அப்போது extempore ஆக பாடிக் கொண்டே இருப்பார்கள்.

    இவற்றை சராசரி மனிதர்களால் புரிந்து கொள்வது சற்றுக் கடினம். அதனால் அவர்கள் அந்நியப் பட்டுப் போவார்கள். ஆனால் இந்த சங்கீதத்தைக் கேட்கும் போது தங்களையும் அறியாமல் இறைவனை உணர்பவர்கள் உண்டு.

    இது சற்று பெரிய நீண்ட விவாதத்திற்குரிய விஷயம். இதே அணுகுமுறை தான் நாட்டியத்திலும் தொடர்ந்து வந்துள்ளது.

    இதனை மாற்றி சராசரி மனிதருக்கும் கர்நாடக சங்கீதத்திற்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கப் பெரிதும் உதவியவை திரைப்படப் பாடல்கள்.

    என்றாலும் தங்கள் கருத்து பல ஆண்டுகாலமாக நிலவி வரும் சூழ்நிலையைப் பிரதிபலிக்கும் கருத்தாகவே உள்ளது. இதில் தவறு காண ஏதும் இல்லை.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •