-
12th May 2013, 03:02 PM
#3481
Junior Member
Regular Hubber

Originally Posted by
RAGHAVENDRA
தற்போது திரைப்படப் பட்டியல் திரியில் இடம் பெற்றிருக்கும் பதி பக்தி திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல் இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் பாடல். இன்றைய தேதியில் இப்படம் திரையிட்டால் இந்தப் பாடலுக்காகவே மீண்டும் 100 நாட்கள் ஓடும் இப்படம். குறிப்பாக Time Code 2.52 ல் கவனியுங்கள். இரு கைகளையும் மிக ஸ்டைலாக சுழற்றும் நடிகர் திலகத்திடம் இருந்து தான் ஸ்டைலே அர்த்தம் கொள்கிறது என்பது புலனாகும். ஒரு நொடியில் அவர் சுழற்றும் லாவகம் ...
தியேட்டராக இருந்தால் கற்பூரம் தான்... ஆரவாரம் தான் ... ஆர்ப்பாட்டம் தான் ....
தலைவா நீ மட்டும் இன்னும் ஒரு பத்து மசாலா படங்களைப் பண்ணியிருந்தா ....
எத்தனை பேர் காணாமல் போயிருப்பார்கள் என்பது அந்த கடவுளுக்கே தெரியாது...
திரு.ராகவேந்தர் சார்,
உண்மையிலயே நல்ல கருத்தாழம் மிக்க பாடல்..! குறிப்பாக....கடவுள் இருபது..இல்லை என்ற உபயோகமற்ற பேச்சை விட்டு இன்றைக்கு கஞ்சிக்கு என்ன வழி என்பதை சிந்தியுங்கள் என்று அருமையான கருத்தை பாடலாசிரியர் எழுதியுள்ளார். !
அந்தளவிற்கு தமிழக மக்களிடம் ஒரு உள்ளதை உண்மையாக சிந்தித்து செயல் படும் மூளை இருந்திருந்தால்...தமிழகத்தை சின்னாபின்ன படித்தி வைத்துள்ள திராவிட கட்சிகள் என்றோ மூட்டையை கட்டிக்கொண்டு குப்பை போருக்க போயிருப்பார்கள்.
தமிழகத்தின் சீர்குலைவிற்கு காரணம் இந்த திராவிட கட்சிகள் தான் !
-
12th May 2013 03:02 PM
# ADS
Circuit advertisement
-
12th May 2013, 03:49 PM
#3482
Junior Member
Regular Hubber
மக்கள் திலகம் திரி நண்பர் திரு.சைலேஷ் பாபு அவர்கள் போட்ட செய்தி.. திரு.சௌந்தரராஜன் அவர்கள் எல்லா நலமும் பெற்று விரைவில் வீடு திரும்ப நம்முடைய பிரார்த்தனைகள் !
திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் (91) உடல்நலக் குறைவால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனையில் டி.எம். சௌந்தரராஜன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த வாரம் சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் கீழே தவறி விழுந்தார். இதனால் பின் தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை முடிந்து, கடந்த இரு நாள்களுக்கு முன்புதான் வீட்டிற்கு வந்தார்.
இதையடுத்து, சனிக்கிழமை காலை அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சௌந்தரராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மகன்கள் பால்ராஜ், செல்வக்குமார் ஆகியோர் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.
Everyone please pray for TMS. - நன்றி திரு சைலேஷ் பாபு அவர்களே
-
12th May 2013, 04:01 PM
#3483
Junior Member
Regular Hubber
நம்மை பெற்ற அன்னையின் சிறப்பை வெளிப்படுத்தும் பாடல் - நடிகர் திலகத்தின் உன்னதமான நடிப்பில் மற்றும் இன்று உயிருக்கு போரடிகொண்டிருக்கும் தெய்வ பாடகர் திரு.சௌந்தரராஜன் குரலில் !
-
12th May 2013, 04:03 PM
#3484
Senior Member
Seasoned Hubber
இறைவனின் அருளுடன் டி.எம்.எஸ். அவர்கள் நலமுடன் வீடு திரும்ப வேண்டுகிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th May 2013, 05:50 PM
#3485
Junior Member
Newbie Hubber
வீட்டுக்கு ஒரு எஸ்.பீ.பீ,தெருவுக்கு ஒரு கிஷோர் ,ஊருக்கு ஒரு rafi , மாவட்டத்துக்கொரு பீ.பீ.எஸ் வந்துள்ளார்கள். ஆனால் இன்னொரு டி.எம்.எஸ். தோன்றவே இல்லை. அந்த கம்பீரம்,அந்த பாவம், அந்த உச்சரிப்பு , base மற்றும் mid octave இல் இவர் பாடும் போது தேவ கானமே. இவர் இசை நின்றால் அடங்கும் உலகே. அன்னார் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
பிரம்மா ஒரு கோடி வருட தவத்தில் நடிகர்திலகத்தை படைத்து, அவருக்காக டி.எம்.எஸ் ஐ படைத்து அவருடனே அனுப்பி, அவரை வைத்தே break கிடைக்கவும் செய்தான்.(தூக்கு தூக்கி)
-
12th May 2013, 08:32 PM
#3486
Junior Member
Regular Hubber
இன்று SUNLIFE தொலைகாட்சியில் திரை உலகின் சித்தர் நடிகர் திலகம் அவர்களின் நடிப்பில் வெளிவந்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற படிக்காத மேதை திரைப்படம் ஒளிபரப்பில் இப்போது !
மசாலா திரைப்படங்களில் பொதுவாக மக்கள் பெரிதும் விரும்புவது சண்டைகாட்சிகளை மற்றும் காதிர்கினிய பாடல்களை. ஒரு நிமிடம் நாம் அந்த வெற்றிகரமாக ஓடியிருக்கும் மசாலா படங்களிலிருந்து அந்த சண்டைகாட்சிகலையோ அல்லது பாடல்களையோ நீக்கி விட்டு அந்த மசாலா படத்தில் அந்த படத்தின் நாயகனே நடித்திரிந்தாலும் அதன் நிலை என்ன என்று சிந்தித்துபார்தொமே ஆனால் அனைவரும் படம் பப்படம் ஆகிவிடும் என்று ஒத்துகொள்வார்கள். .
காரணம் சண்டைகாட்சிகளை மற்றும் பாடல்காட்சிகளை பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் எல்லா மசாலா படங்களுக்கும் கணிசமான அளவில் வரும். ஏனென்றால் அவர்களுக்கு Entertainment மட்டுமே குறிகோளாக கொண்டு வருவதுதான் !
ஆனால் நம் நடிகர் திலகம் நடித்து மாபெரும் வெற்றி அடைந்த பெரும்பான்மையான படங்களில், நடிகர் திலகத்தின் கதாபாத்திரத்தில் நடிகர் திலகம் நடிக்கவில்லை என்று வைத்துகொள்ம் பட்சத்தில் அந்த திரைப்படம் ஓடி வெற்றி பெற்று இருக்குமா என்று நினைத்துபார்த்தல் சந்தேகம் இல்லாமல் ஒடீருகாது என்பது திண்ணம். That's Precisely why Nadigar Thilagam was / is the biggest differentiator and was mostly, THE ONLY CHOICE OF DIRECTOR/ PRODUCER / DISTRIBUTOR in those films even though there were Good performers during his days.
இப்படிப்பட்ட ஒருவரை பற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள் எப்போதும் இருந்தன, இருந்துவருகின்றன, இருந்துவரும் ! அவை என்னவென்றால்
அவர் படம் அழுவாச்சி படம், மிகையான நடிப்பு, இயற்க்கை நடிப்பு இல்லை, நடனம் ஆட தெரியாது, சண்டை போட வராது, கட்டுடல் இல்லை, ஜனரஞ்சகம் இல்லை மற்றும் என்னவெல்லாம் சொல்லமுடியுமோ அவை எல்லாம் கர்ணனின் வில்லிலிருந்து புறப்பட்ட நாகஸ்திரம் போல அவரை நோக்கி பாய்ந்தன, பாய்ந்துகொண்டிருகிறது, பாயும் ! .
இப்படி என்னதான் நடிகர் திலகத்தை பற்றி நிறைய தாழ்புனற்சியுடன் தமிழ் திரை உலகில் ஒருபிரிவினர் பிரிவினையை உண்டாக்கினாலும் கூறினாலும்...
இவை எல்லாம் ஒரு வாதத்துக்கு ஒத்துகொள்கிறோம் என்று வைத்தால் கூட...
இப்படி ஒன்றும் இல்லாமலயே மாபெரும் வெற்றி பல பெற்று,
நடிக்க வந்த ஏழே ஆண்டில், ஆசியா-ஆப்ரிக்க கண்டதிலயே சிறந்த நடிகர் என்று இந்தியாவின் முதல் வெளிநாட்டில் சிறந்த நடிகர் பட்டம் பெற்ற தமிழ் நடிகர் என்ற பெருமையை தமிழகத்திற்கு சேர்த்த நடிகர் திலகம் எங்கே !
மற்றும் 1962 அமெரிக்க நாட்டில் ஒரு நகரத்தின் ஒரு நாள் மேயர் பதவி பெற்று இன்று வரை இரண்டு இந்தியர்கள் மட்டுமே அந்த பெருமையை அதுவும் திரை துறையில் ஒருவர் மட்டும் அது நம் நடிகர் திலகம் மட்டும் இன்னொருவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகும்.
அது மட்டுமா....அமெரிக்க ஜனாதிபதி John F Kennedy இந்திய அமெரிக்க கலாசார தூதுவராக நம் நடிகர் திலகத்தின் புகழை கேட்டு இந்திய அரசாங்கத்திற்கு நடிகர் திலகத்தை அமெரிக்காவிற்கு அனுப்பிவைக்குமாறு அழைபிதழ் அனுப்பியதோடு இல்லாமல் அந்த காலத்தில் அவர் அங்கு செலவு செய்ய ஒரு நாளைக்கு 500 அமெரிக்க டாலரும் அல்லவே கொடுத்து கௌரவித்தார் !
அப்போதும் இங்கு தாழ்புணர்ச்சி கொண்ட திராவிட கட்சி கனவான்கள் மற்றும் சில எட்டப்பன்கள் நடிகர் திலகம் அங்கு கான்பிபதர்காக கொண்டு சென்ற 4 தொகுப்புகளை கொண்ட Video cassettil இங்கு விமான நிலையத்திலயே எங்கே இவர் புகழ் அங்கு அபரிதமாக பரவிவிடுமோ என்ற தாழ்புனர்சியில் திருடவும் அல்லவே செய்தார்கள் ? நல்லவேளை, இரண்டு தொகுப்புகள் தன்னுடைய கைப்பையில் இருந்ததால் அவை மட்டும் தப்பித்தன...இல்லை என்றால் அதையும் அல்லவே இந்த திராவிட பெருச்சாளிகள் திருடி இருப்பார்கள் !
இந்திய திரையுலகிலிருந்து OSCAR என்ற உயரிய விருதிற்கு செல்வாக்கும் சொல்வாக்கும் மிகுந்த வடகிந்திய திரை உலக ஜாம்பவான்கள் கனவு மட்டுமே கண்டபொழுது சர்வ சாதாரணமாக அதை உன் நடிப்பு என்ற ஒரு சிறு ஆயுதம் கொண்டு தகர்த்து பரிந்துரைக்கப்பட்ட முதல் திரைப்படம் உன்னுடைய தெய்வமகன் அல்லவா !
இப்படி பல தாழ்புணர்ச்சி திமிங்கலங்களின் மத்தியில் பலமுறை சிகண்டியை போல அந்த திமிங்கலங்கள் குள்ளனரிகலாகவும் பல விதங்களிலும் பல நேரத்திலும் நடிகர் திலகத்தை முதுகில் குத்தினாலும் மீண்டும் மீண்டும் உய்ரித்தேழும் Phoenix பறவையாக அல்லவ நம் நடிகர் திலகம் உயிர்த்தெழுந்தார் !
திரை உலகின் சித்தரே ! நீ செய்த ஒரே தவறு இந்த திராவிட கொள்ளை கூடமாம் தமிழ்நாட்டில் பிறந்ததுதானோ ?
Last edited by Sowrirajann Sri; 12th May 2013 at 09:06 PM.
-
13th May 2013, 12:00 AM
#3487
Senior Member
Senior Hubber
காப்பி அடிச்சுட்டாங்கய்யா, காப்பி அடிச்சுட்டாங்க. ஒரு இந்தி-தமிழ் டப்பிங் படத்துக்கு நடிகர் திலகத்தின் அம்பிகாபதி பட தலைப்பை காப்பி அடிச்சுட்டாங்க. தலைப்பே காப்பி ...
http://tamil.oneindia.in/movies/news...hy-175103.html
-
13th May 2013, 01:03 AM
#3488
Senior Member
Seasoned Hubber
எல்லாம் ராசி காரணம்... தனுஷ் படத்திற்கு நடிகர் திலகத்தின் படப் பெயரை வைத்தால் வெற்றி மேல் வெற்றி பெறுகிறது. யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் இப்படி அவர் படங்களையோ அல்லது பாடல் வரிகளையோ படப் பெயராய் வைத்தால் நன்றாக ஓடுகிறது என்ற ஒரு சென்டிமென்ட் காரணமாக இருக்கும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
13th May 2013, 01:04 AM
#3489
Senior Member
Seasoned Hubber
தொலைக்காட்சிகளில் நடிகர் திலகத்தின் படங்கள்
13.05.13 – 19.05.2013
வசந்த் டி.வி. – 19.05.2013 – 2.00 மணி – சபாஷ் மீனா
ராஜ் டி.வி. 19.05.2013 – இரவு 10.30 மணி – ரத்த திலகம்
ராஜ் டிஜிட்டல்
15.05.2013 – காலை 10 மணி – எழுதாத சட்டங்கள்
13.05.2013 – பகல் 1 மணி – படித்தால் மட்டும் போதுமா
18.05.2013 – இரவு 8 மணி – தாம்பத்யம்
முரசு
15.05.2013 – இரவு 7.30 மணி – நல்லதொரு குடும்பம்
18.05.2013 – இரவு 7.30 மணி – ரத்த திலகம்
மெகா டி.வி.
13.05.2013 – பகல் 12.00 மணி – எங்கிருந்தோ வந்தாள்
17.05.2013 – பகல் 12.00 மணி – கந்தன் கருணை
ஜெயா டி.வி.
13.05.2013 – காலை 10 மணி – விடுதலை
17.05.2013 – காலை 10 மணி – ஆண்டவன் கட்டளை
ஜே மூவீஸ்
16.05.2013 – அதிகாலை 1.00 மணி – மன்னவரு சின்னவரு
15.05.2013 – காலை 6 மணி – வம்ச விளக்கு
13.05.2013 – பிற்பகல் 1.00 மணி – தங்க சுரங்கம்
14.05.2013 – பிற்பகல் 1.00 மணி – தேனும் பாலும்
15.05.2013 – பிற்பகல் 1.00 மணி – குலமகள் ராதை
16.05.2013 – பிற்பகல் 1.00 மணி – தியாகம்
17.05.2013 – பிற்பகல் 1.00 மணி – கௌரவம்
18.05.2013 – பிற்பகல் 1.00 மணி – திருப்பம்
13,.05.2013 – இரவு 9 மணி – தங்க பதக்கம்
18.05.2013 – இரவு 9 மணி – விடுதலை
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
13th May 2013, 09:29 AM
#3490
Senior Member
Diamond Hubber
மிக அரிய புகைப்படம்.
நடிகர் திலகம் சர்வ துறைகளிலும் தலை சிறந்த மேதை என்பதற்கு இன்னொரு உதாரணம். நம் தலைவர் 'சித்ரவீணா' வை எவ்வளவு அழகாக வாசிக்கிறார் பாருங்கள்! இது சினிமாவுக்காகவோ, வேறு விளம்பரத்திற்காகவோ எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல. இசையின் மேல் நம் தலைவருக்கு உள்ள ஆர்வம்தான் இது.
ஒருமுறை நடிகர் திலகம் பெங்களூரு சென்றிருந்தபோது புகழ் பெற்ற வீணை கலைஞர் திரு N.நரசிம்மன் அவர்களை தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு வரவழைத்து வீணை வாசிப்பின் நுணுக்கங்களைக் கேட்டு அறிந்து கொண்டாராம். அதுமட்டுமல்லாமல் ஒரு கைதேர்ந்த வீணை வித்வான் போல அவ்வளவு அழகாக வீணை மீட்டிக் காண்பித்தாராம்.
'பாலும் பழமும் கைகளை ஏந்தி' பாடலையும் அருமையாக இசைத்துக் காண்பித்தாராம். பின் ஒருநாள் வித்வானுடன் முழுக்கத் தங்கியிருந்து வீணை வாசிப்பை நன்கு practice செய்து கொண்டாராம்.
சகல கலைகளிலும் கைதேர்ந்த செம்மல், அடக்கமே உருவாய் இருந்த பெருமையை என்னவென்று சொல்வது!
ஆதாரம்: 'தி ஹிந்து' நாளிதழ் December 15, 2012.
தலைவருக்கு இடது புறம் இருப்பவர் 'சித்ரவீணா' திரு N.நரசிம்மன் அவர்கள். வலது புறம் இருப்பவர் திரு N.நரசிம்மன் அவர்களின் சகோதரர் திரு.ராமரத்தினம் அவர்கள்.
Last edited by vasudevan31355; 13th May 2013 at 09:51 AM.
நடிகர் திலகமே தெய்வம்
Bookmarks