-
18th May 2013, 10:29 AM
#3731
Senior Member
Diamond Hubber
ஓகே!ஓகே! ரிலாக்ஸ்! நடிப்பைப் பற்றி நம் கடவுளுக்குத் தெரியாதா?
உன்னைப் பற்றி எனக்குத் தெ(புரியாதா)...
நான்கைந்து தடவை நன்றாக மூச்சை இழுத்து விடு. தொடரின் அடுத்த பகுதி உனக்கு வேலைப்பளுவில்லையென்றால் இன்றே இங்கு வரவேண்டும். இது என் கட்டளை. ('அன்பு' அல்ல) உன் வேலையைக் கெடுக்க விரும்பவில்லை. ஈவ்னிங் பேசலாம்.
-
18th May 2013 10:29 AM
# ADS
Circuit advertisement
-
18th May 2013, 12:07 PM
#3732
Senior Member
Diamond Hubber
-
18th May 2013, 12:09 PM
#3733
Junior Member
Newbie Hubber

Originally Posted by
vasudevan31355
ஓகே!ஓகே! ரிலாக்ஸ்! நடிப்பைப் பற்றி நம் கடவுளுக்குத் தெரியாதா?
உன்னைப் பற்றி எனக்குத் தெ(புரியாதா)...
நான்கைந்து தடவை நன்றாக மூச்சை இழுத்து விடு. தொடரின் அடுத்த பகுதி உனக்கு வேலைப்பளுவில்லையென்றால் இன்றே இங்கு வரவேண்டும். இது என் கட்டளை. ('அன்பு' அல்ல) உன் வேலையைக் கெடுக்க விரும்பவில்லை. ஈவ்னிங் பேசலாம்.
நண்பரே ,
நான் எழுத இருந்தது, ஸ்டெல்லா ஆட்லர் சம்பத்த பட்ட larger than life பாத்திரம்.ஆனால் நான் விரும்பியோ விரும்பாமலோ ராஜ ராஜ சோழன் புகுந்தாயிற்று. நான் விரும்புவது எல்லோராலும் விரும்ப பட்ட படங்கள் ,ஆய்வுக்கு பிறகு வித்யாசமான பார்வையில் பார்க்க படுவதை. நிராகரிக்க பட்ட விஷயங்களையும் merit அடிப்படையில் மறு ஆய்வு செய்யலாம்.ஆனால் ராஜ ராஜ சோழனும்,வம்ச விளக்கும் கோலோச்சும் போது ஒதுங்கி நின்று ரசிப்பதே எனக்கு மரியாதை.பொறுமையின் பெருமை.ஷண்முக சுந்தரம் வாசிப்பிற்கு வேட்டு மரியாதை கிடைத்தாயிற்று.
வாழ்த்துக்கள்.
-
18th May 2013, 12:15 PM
#3734
Junior Member
Newbie Hubber

Originally Posted by
vasudevan31355
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)
one movie wonder ரகம்.ஜோடி நல்லாயிருக்கும். கானா இன்பம் கனிநததேனோ என் favourite .
Filmo graphy இல் இதை பற்றி பேசலாம்.நன்றி வாசு சார்.இதை தொடருங்கள்.எனக்கு மிக மிக பிடித்த ஒன்று.
-
18th May 2013, 12:23 PM
#3735
Junior Member
Newbie Hubber
இருவர் உள்ளம்- 1963 -பகுதி-1
நடிகர்திலகத்தின் மீண்டும் அவருடைய தெய்வ பிறவி,இரும்புத்திரை பாணி,இயல்பு method acting நடிப்பில் அடக்கி வாசித்த படம் இருவர் உள்ளம். சிவாஜியின் குரு எல்.வீ.பிரசாத் இயக்கி தயாரித்து, கருணாநிதி மீண்டும் நடிகர்திலகத்துடன் இணைந்தார் குறவஞ்சிக்கு பிறகு மூன்று வருட இடை வெளியில். எழுத்தாளர் லட்சுமியின் புகழ் பெற்ற பெண் மனம் (ஆனந்த விகடனில் வெளியான தொடர்) என்ற நெடுங்கதையை தழுவி ,கருணாநிதி அவர்களால் திரைக்கதை அமைக்க பெற்றது.மூல கதையில் இருந்த பிராமண குடும்ப கதையை(ஜகன்னாதன்-சந்திரா) பிராமணம் அல்லாததாக (செல்வம்-சாந்தா) செய்து, அருமையாய் திரைக்கதை அமைத்திருந்தார்.
சிவாஜி ,எப்பவுமே, கதாநாயகியை மையமாய் கொண்ட கதா பாத்திரங்களிலும் நடிக்க தயங்காதவர்.(ஆனாலும் முதல் பரிசை தட்டி சென்று விடுவார்)
மங்கையர் திலகம்,பெண்ணின் பெருமை ,கை கொடுத்த தெய்வம், நீல வானம்,சிவகாமியின் செல்வன்,வாணி-ராணி உதாரணங்கள். இந்த வரிசையில் நாயகியை மைய படுத்தினாலும்,கதையின் நாயகனுக்கும் நிறைய scope கொடுத்த மிக சிறந்த படம் இருவர் உள்ளம்.
இருவர் உள்ளத்தின் கதை-
மிக பெரிய செல்வந்தர் வீட்டு இளைய மகன் செல்வம் டாக்டருக்கு படிக்கிறேன் என்ற பெயரில் பெண்களுடனும்,தவறான நண்பர்களுடனும் சீரழிந்து கொண்டிருப்பவன். செல்வத்தின் தந்தை பெரிய வக்கீல். மூத்த அண்ணன் ,வக்கீலுக்கு படித்திருந்தாலும்,தொழிலில் திறமையின்றி ,நிறைய பிள்ளை குட்டிகளோடு, கூட்டு குடும்ப நிழலில் வாழ்பவன்.செல்வத்திற்கு ஒரு தங்கை.செல்வத்தின் நடவடிக்கை பிடிக்காமல் ,படிப்பை பாதியில் நிறுத்தி ஊருக்கே வர வழித்து விடுகிறார் தந்தை. செல்வம் ஊரில் வந்தும் திருந்தாமல்,இஷ்டப்படி வாழ்கிறான்.
ஒரு நாள், காரில் தன பெண் நண்பி ஒருத்தியுடன் திமிராக சென்று, சாந்தா என்ற ஏழை டீச்சர் பெண்ணை, இடிப்பது போல் நிறுத்தி tease செய்கிறான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ,அவள் மேல் காதலில் விழுந்து அவளை பின் தொடர்கிறான். சாந்தா காதலுக்கு பச்சை கொடி காட்ட மறுக்கிறாள்.அவளை அடையும் ஆசையில் செல்வம் ஒரு முறை, அவளை யாருமில்லா நேரம் ,தன வீட்டுக்கு தந்திரமாக வர வழைத்து அவள் காதலை வேண்டுகிறான். ஆனால் சாந்தா மறுத்து விட்டு செல்லும் போது,தவறுதலாய் பார்த்தவர்கள் ,ஊரில் தவறாக பேச,ஏழை சாந்தா விருப்பமின்றி ,செல்வத்தை மணமுடிக்கிறாள்.
மணமுடித்த நாளில் இருந்து, செல்வத்தை வெறுக்கும் சாந்தா தாம்பத்ய உறவில் விருப்பமின்றி இனங்குவதால்,செல்வம் , அவள் தன்னை விரும்பி ஏற்கும் வரை,கணவன் என்ற உரிமையை எடுக்க மாட்டேன் என்று சத்யம் செய்கிறான். குடும்பத்தினர் அனைவருமே,செல்வம் திருந்தி வாழ நினைப்பதை அறியாமல், செல்வத்தையே குற்றம் சொல்கின்றனர். ஒரு சமயம் ,நெருங்கி வரும் சந்தர்ப்பத்தில்,செல்வத்தில் பழைய பெண் நண்பியின் குறுக்கீட்டால் திரும்ப பிளவு அதிகமாகிறது. சந்தர்ப்ப சூழ்நிலை சதி செய்ய,செல்வம் ,சாந்தா நெருங்கவே முடியாமல் இருக்கும் தருணம்,சாந்தா செல்வம் திருந்தி விட்டதை உணர்ந்து அவனிடம் தன்னை ஒப்படைக்க முயலும் தருணத்தில், செல்வத்தின் பழைய நண்பியை கொன்ற பழி(செய்தது அவளின் புது நண்பன்) விழ, தந்தை செல்வத்திற்கு எதிராகவும்,அண்ணன் செல்வத்திற்காகவும் வாதாடி, செல்வம் விடுதலையாகி ,சாந்தாவுடன் சேர்கிறான்.
(தொடரும்)
-
18th May 2013, 12:26 PM
#3736
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
நண்பரே ,
நான் எழுத இருந்தது, ஸ்டெல்லா ஆட்லர் சம்பத்த பட்ட larger than life பாத்திரம்.ஆனால் நான் விரும்பியோ விரும்பாமலோ ராஜ ராஜ சோழன் புகுந்தாயிற்று. நான் விரும்புவது எல்லோராலும் விரும்ப பட்ட படங்கள் ,ஆய்வுக்கு பிறகு வித்யாசமான பார்வையில் பார்க்க படுவதை. நிராகரிக்க பட்ட விஷயங்களையும் merit அடிப்படையில் மறு ஆய்வு செய்யலாம்.ஆனால் ராஜ ராஜ சோழனும்,வம்ச விளக்கும் கோலோச்சும் போது ஒதுங்கி நின்று ரசிப்பதே எனக்கு மரியாதை.பொறுமையின் பெருமை.ஷண்முக சுந்தரம் வாசிப்பிற்கு வேட்டு மரியாதை கிடைத்தாயிற்று.
வாழ்த்துக்கள்.
'வம்ச விளக்கு' எங்கே கோலோச்சியது? வம்ச விளக்கைப் பற்றிப் பதிவுகள் ஏதேனும் உங்கள் கண்களுக்கு ஸ்பெஷலாகத் தெரிகிறதா? ஒன்றிரண்டு ஸ்டில்களைத் தவிர. 'வம்ச விளக்கு' படத்தைப் பற்றிய எந்தவொரு விவரமும் இதுவரை இணையத்தில் இல்லை. அப்படத்தின் சம்பந்தமான dvd,cd க்கள் இல்லை. அது சம்பந்தமான தகவல்கள் வந்தாலென்ன? இலையில் வெறும் பாயாசம் மட்டுமே போட வேண்டும்... கறிகாய் கூடாது.... ஊறுகாய் கூடாது.... ரசம் கூடாது... மோர் கூடாது.... என்றால் எப்படி? உங்களுக்காக, உங்கள் தவத்திற்காக நாங்கள் அனைவரும் ஒத்துழைக்கவில்லை என்று நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்.
ஏன் இப்படி அடிக்கடி முருங்கை மரம் ஏறுகிறீர்கள்?
சரி! வெயில் ஜாஸ்தி என்று மனதை தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.
-
18th May 2013, 12:27 PM
#3737
Junior Member
Newbie Hubber
இருவர் உள்ளம்-1963 - பகுதி-2
முதல் காட்சியிலேயே களை கட்டி விடும் இருவர் உள்ளம். நடிகர் திலகம் அழகென்றால் அவ்வளவு அழகாக ,ஸ்டைல் ஆக தொப்பியுடன் ,காரில் பறவைகள் பலவிதம் பாட ஆரம்பிப்பார். பல பெண்களுடன் ,நடிகர்திலகத்தின் அத்தனை பாடல்,நடன காட்சிகளும் பிரமாதமாய் வந்திருக்கும்.(யாரடி நீ மோகினி,பறவைகள் பலவிதம்,காதல் மலர் கூட்டம் ஒன்று,ஏன் ஏன் ஏன்,ராஜா யுவ ராஜா,கண்ணா லீலாவிநோதம்,என் ராஜாத்தி வாருங்கடி).கே.வீ.எம்.மாமாவின் பாடலுடன் ,மன்மதனின் ஆடல் (ஜெயந்தி முதல் பத்மினி பிரியதர்ஷினி வரை இந்த பாட்டில்) கேட்க வேண்டுமா குதூகலத்தை?
அடுத்தடுத்த காட்சிகளில் காமெடியில் தூள் பரத்துவார். பல பெண்கள் ஒன்றாக வந்து விட ஒருத்திக்கு தெரியாமல் இன்னொருத்தியை சமாளிக்கும் அழகு. தன்னை நோட்டம் பார்க்க வந்த மாமாவிடம் கையும் களவுமாக மாட்டி கொண்டு முழிப்பது,மாட்டுவது, முதல் காட்சியிலேயே சரோஜா தேவியை டீஸ் பண்ணி விட்டு பிறகு இம்ப்ரெஸ் ஆவது, பிறகு தங்கைக்காக சாந்தா டீச்சரை சிபாரிசு செய்து மாட்ட பார்ப்பது,டீச்சர் தங்கைக்கு டியூஷன் எடுக்கும் போது வழிவது, கீசகன் கதையை சொல்லும் சாக்கில் தன்னை கன்னா பின்னாவென்று திட்டும் சரோஜாதேவியுடன் இனிமே எதுவும் சொல்ல தேவையில்லை அவன் போறான் என்று வாபஸ் வாங்குவது, திருட்டு தனமாக டிரைவர் வேடத்தில் சரோஜா தேவியை வீட்டுக்கு வர வழைத்து விளையாட்டாய் முதலில் பேசி பிறகு தன் காதலை வெளியிட்டு கெஞ்சுவது, தன்னை புரிந்து கொள்ளாத மனைவியிடம் முதலிரவில் விட்டு கொடுப்பது, இதய வீணை பாட்டில் சரோஜா தேவி தன் துயரத்தை அப்படியே வெளியிட,நண்பர்களின் கேலி கண்டு, கூனி குறுகி, நாணி குமுறுவது,குடும்பத்தினரும் தன்னை புரிந்து கொள்ளாதது கண்டு மௌனமாய் உருகுவது , ஒவ்வொரு முறையும் மனைவியுடன் நெருங்கும் சந்தர்ப்பத்திலும் பழைய நண்பர்களாலும்,நண்பிகளாலும் கெடும் போது பதைத்து, பதறுவது, மனைவியிடம் தன் நிலையை சொல்லி வருந்துவது என்று நடிகர்திலகம் ஒவ்வொரு பிரேமிலும் பிரமாத படுத்துவார்.
சரோஜாதேவிக்கு நடிக்கும் வாய்ப்பே நடிகர்திலகத்துடன் இணையும் போதுதான்.(பாக பிரிவினை,பாலும் பழமும்,புதிய பறவை,தேனும் பாலும்)என்னும் போது தோதாக இப்படி ஒரு பாத்திரம். விடுவாரா? ஆரம்ப காட்சியில் தன்னை சீண்டிய பெரிய இடத்து வாலிபனிடம் வெறுப்பை உமிழ்வதில் துவங்கி,அவனின் காதலை சொல்லும் அனைத்து முயற்சிகளையும் முறித்து போடுவது, அவமான படுத்த பட்டு கல்யாணத்திற்கு கட்டாய படுத்த படுவது, கணவனுடன் ஒட்டாத வாழ்க்கை,நெருங்க விரும்பும் நேரத்தில் கணவனின் பழைய வாழ்க்கையின் நிழல் துரத்தி அவமான பட நேரும் தருணங்கள்,பிறகு அவனின் நல்ல மனத்தை அறிந்து சேர வரும் போது,மிக பெரிய பிரச்சினையை எதிர் கொள்ள நேருவது என்ற தருணங்களில் பாத்திரத்தின் தன்மையுணர்ந்து நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுப்பார்.
ரங்கா ராவ், எம்.ஆர்.ராதா,சந்தியா, ராமா ராவ்,கருணாநிதி,முத்து லட்சுமி,பத்மினி பிரிய தர்சினி,ராமச்சந்திரன் அனைவருமே அவரவர் பங்கை சிறப்பாக செய்திருப்பார்.
(தொடரும்)
இருவர் உள்ளம்-1963 -பகுதி-3
சிவாஜி-கருணாநிதி இணைவில் வந்த அத்தனை சமூக படங்களுமே magic தான். பராசக்தி,திரும்பிப்பார்,ராஜாராணி,புதையல்,இருவ ர் உள்ளம் எல்லாமே அருமை. (மனோஹரா ஒரு சரித்திர பட சாதனை அதிசயம்) திரைக்கதை அமைப்பில் மு.க ஒரு மேதை. மூலக்கதை சிதையாமல்,பாத்திர வார்ப்பு கெடாமல், படிக்கும் கதை வேறு பார்க்கும் படம் வேறு என்பதை தெளிந்து திரைக்கதை அமைத்த இரண்டே மேதைகள் மு.கவும்,ஏ.பீ.என். மட்டுமே. மு.க தன திரைக்கதையால் படத்தை மிக மிக சுவாரஸ்யமாக்கி பாத்திரங்களுடன் ஒன்ற வைப்பார்.வசனங்களும் அவ்வளவு அருமையாய்,காலத்தை ஒட்டியதாய் அமைத்து படத்தை மெருகேற்றும். காமெடி, பஞ்ச் வசனங்கள் என்று கலக்கியிருப்பார்.(குடுக்கும் போது வாட்ச் பண்றதாலேதான் வாட்ச்னு பெயர் வச்சாங்களா)
பிரசாத் என்ற அற்புதமான இயக்குனர் ,தயாரிப்பாளராகவும் அமைந்து விட்டால்? கேட்கவா வேண்டும்? எல்லா technical அம்சங்களும் நன்கு கவனிப்பு பெற்றிருக்கும்.(கேமரா,எடிட்டிங்) சிவாஜியும் இவரை தன் குருவாக மதித்ததால் ,இவர் சொன்னதை உள்வாங்கி மிதமாய் நடித்ததை சிவாஜியே குறிப்பிட்டுள்ளார்.அற்புதமான இயக்கம்.
கே.வீ.மகாதேவன் ,சிவாஜியுடன் இணைந்ததில் மறக்க முடியாத சமூக படங்களில் ஒன்று.(மற்றவை- பாவை விளக்கு,குலமகள் ராதை,குங்குமம்,ரத்த திலகம்,அன்னை இல்லம்,செல்வம்,பேசும் தெய்வம்,வியட்நாம் வீடு,வசந்த மாளிகை).பறவைகள் பலவிதம், புத்தி சிகாமணி, கண்ணெதிரே தோன்றினால், இதய வீணை தூங்கும் போது, நதி எங்கே போகிறது, ஏனழுதாய், கண்ணே கண்ணே உறங்காதே, அழகு சிரிக்கிறது போன்ற படத்தோடு ஒட்டிய சூப்பர்-ஹிட் பாடல்கள் கே.வீ.எம்-கண்ணதாசன் இணைப்பில். இந்த படத்தின் மிக மிக சிறப்பான அம்சங்களில் ஒன்று ரி-ரெகார்டிங் எனப்படும் பின்னணி இசை சேர்ப்பு. பின்னாளில் பெரிதாக பேச பட்ட கேரக்டர் based மூட் மியூசிக் ,எனக்கு தெரிந்து இந்த படத்தில்தான் அறிமுகமானது.(சிவாஜி,சரோஜாதேவியை பின் தொடரும் இடங்கள்).இதைதான் இளைய ராஜா தன் பதினாறு வயதினிலே,முள்ளும் மலரும் போன்ற படங்களில் தொடர்ந்து பெயரெடுத்தார்.
பெண்ணின் மனதை விலை கொடுத்து வாங்க முடியாது, அப்படி வாங்கினாலும் உடலன்றி உள்ளம் உன்னை சேராது, மனதை அடையும் ஒரே வழி தூய நல்லிதயத்தின் அன்பு ஒன்றுதான் என்ற கான்செப்ட் ,அனைவரின் கூட்டு முயற்சியால் ,பிரம்மாண்ட வெற்றி படமாகி, இன்றளவும் ரசிகர்களை மட்டற்ற குதூகலத்தில் ஆழ்த்தும் அற்புத படமாகவே,காலத்தை கடந்து ஒளி வீசி கொண்டிருக்கிறது.
(முற்றும்)
-
18th May 2013, 12:28 PM
#3738
Senior Member
Diamond Hubber
என் கட்டளைக்கு அடி பணிந்ததற்கு நன்றி! அற்புதமான இருவர் உள்ளத்தின் துவக்கத்திற்கும் நன்றி!
-
18th May 2013, 12:38 PM
#3739
Junior Member
Newbie Hubber
இருவர் உள்ளத்தின் அற்புதமான print .நாளை பார்த்து சுவைக்க அனைத்து நடிகர்திலகம் பக்தர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.இதை கோயம்புத்தூர் திரையரங்கு ஒன்றில் கல்யாணமான புதிதி ல் 1985 இல் 15 அவது முறை பார்த்த பிறகு படமோ,வீடியோ,VCD ,DVD கிடைக்காமல் 1996 இல் இருந்து ஏங்கி , 2005 வாக்கில் சிங்கப்பூர் சிரங்கூன் தெருவின் ஒரு தெரிந்த கடையில் காத்திருந்து (1 மணிநேரம்) சுமாரான VCD அவர் வீடியோ டே ப்பில் இருந்து பண்ணி கொடுத்தார்.இருபது copy எடுத்து உறவினர் ,நண்பர் எல்லோருக்கும் வழங்கினேன்.2008 இல் பாரத் கலாச்சார் நிகழ்ச்சியில்,award வாங்கிய சரோஜா தேவி சம்பத்த
பட்ட காட்சியை போட இயலாமல் VCD கிடைப்பதேயில்லை என்று வருந்திய போது எழுந்து நின்று volunteer பண்ணி ,வியட்நாம் வீடு நாடகம் சம்பத்த பட்ட நிகழ்ச்சியில் பார்த்து VCD கொடுத்த நிகழ்ச்சி பசுமை.
-
18th May 2013, 12:48 PM
#3740
Junior Member
Newbie Hubber

Originally Posted by
vasudevan31355
என் கட்டளைக்கு அடி பணிந்ததற்கு நன்றி! அற்புதமான இருவர் உள்ளத்தின் துவக்கத்திற்கும் நன்றி!
இது தொடரின் தொடரல்ல.என்னுடைய பழைய விமரிசனம்.நாளை இப்படம் கலைஞர் TV யில் ஒளி பரப்ப படுவதால் இனிய prelude .
Bookmarks