Page 16 of 399 FirstFirst ... 614151617182666116 ... LastLast
Results 151 to 160 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #151
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பம்மலார் ,
    தங்களின் வீச்சு, தங்களுக்கு உள்ள ரசிகர் படை எல்லையில்லாதது. அவர்களுக்கு உங்கள் பொன்னான நேரத்தில் lunch ,dinner முடியாவிட்டாலும் snacks ஆவது படையுங்கள். உங்களின் இதயம் எங்களுக்கும், நடிகர்திலகத்துக்கும் மட்டுமே சொந்தமானது என்பதால் இந்த அன்பு வேண்டுகோள்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #152
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    தங்கப் பதக்கம் (நினைவலைகள்) 01.06.1974



    இன்னொரு வைடூரியம்

    காவல் துறையின் கண்ணியத்தை நம் துரை கட்டிக் காத்த படம்.

    ஒரு காக்கி உடுப்பு, ஒரு வீடு, முக்கியமாக நான்கைந்து கேரக்டர்கள். அவ்வளவுதான். அதுவரை வசூலில் பிரளயம் செய்த அத்தனை படங்களும் அடிபணிந்தன.

    உடுப்பின் மிடுக்கு ஒன்றிலேயே உலகத்தை வென்றவர் எஸ்.பி.

    கல்கி எழுதியது போல் மீசை நடித்தது....மீசையின் ஒவ்வொரு முடியும் நடித்தது... புருவம் நடித்தது... லத்தி நடித்தது.

    அழகான சின்ன திரைக்கதை... அளவே இட முடியாத, எவரும் தொட முடியாத நடிப்பு முத்திரைகள்.

    பூவோடு சேர்ந்த நார்களும் அருமையாக மணம் வீசின.

    மகனைத் தாலாட்டும் போது நெஞ்சை என்னென்னவோ செய்யும் அந்தப் பின்னணி இசை...

    ஒவ்வொரு காவல்துறை அதிகாரியும் கண்ணாடி முன் நின்று தன்னை சௌத்ரியாய் கற்பனை பண்ணிக் கொள்ளவில்லை என்று சொல்லட்டும் பார்க்கலாம்...

    மாயாண்டியை அடக்க முதல் காட்சியில் விரைந்து வரும் போலீஸ் ஜீப்பிலிருந்து (MSY 9545) இறங்கி சிங்கம் கால்களை விரைப்புடன் வைத்தவாறே விரைத்த போலீஸ் trouser உடன் நிற்கும் கம்பீர அறிமுகம்.

    ஸ்டேஷன் முடிந்து வீடு வந்ததும் மனைவியிடம் சீண்டல்... (மனைவி: இவரு பெரிய மன்மதன். இவர்: எல்லார்கிட்டேயும் கேளு)...உறங்கும் மழலையிடம் உன்னத பாசம்

    தீபாவளிக்கு வரும் விருந்தாளி நண்பனை பொய்யான உபசரணையோடு வரவேற்று பின் கால்களால் உதைத்து சிநேகித உரிமை கொண்டாடும் சிகர நட்பு.

    சிறுவயது மகன் தவறுகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அடித்தளம் அமைக்கும் போது ஏற்படும் மனக்குமுறல். அவன் குட்டிச்சுவராக ஆகி விடக் கூடாதே என்ற கரெக்டான கவலை.

    அங்கவஸ்திரத்தைக் கொடுக்க சொல்லி அதனாலேயே மனோகர் கைகளைக் கட்டி இழுத்துச் செல்லும் அனுபவம் தோய்ந்த மூத்த அதிகாரியின் அலட்சிய தோரணை... (ரொம்ப கஷ்டம்...இந்தியாவிலேயே பேர் போன குடும்பம் என் குடும்பம்தான்)

    மகன் பெரியவனாகி வீட்டுக்கு வேண்டாவெறுப்பாக திரும்பியவுடன் பாசத்தை பரிவுடன் காட்டும் பாங்கு. மகனின் அலட்சிய பேச்சுக்கு மனைவி பதில் அளிக்கையில் கைகளை பின்கட்டியவாறே அமைதியாக நின்று ஊமையாய் உணர்வுகளை உள்ளடக்கும் உன்னதம்.

    மகன் தன்னிச்சையாக ஒருவளைக் காதலித்து வீட்டுக்கு வந்து இவள்தான் மனைவி என்று அறிமுகப்படுத்தியவுடன் போடும் உண்மையான ஆனால் செல்லமான கண்டிப்புகள்.

    மகனுக்கு அரேஞ்ச் செய்த முதல் இரவு கொண்டாட்ட அலங்காரங்களை சந்தர்ப்ப சூழ்நிலைகளை முன்னிட்டு தனக்கு சாதகமாகிக் கொண்டு மனைவியிடம் களி விளையாட்டுக்கள் ஆரம்பிப்பது. எப்போதோ மனைவி சொன்னதை ஞாபகம் வைத்து அதை இப்போது சொல்லச் சொல்லி கேட்கும் கெ(கொ)ஞ்சல். (ஆமாம்! அந்த deputy சம்சாரம் ஏதோ சொன்னாங்கன்னு சொன்னியே என்னது? )... பேசிக் கொண்டே படுக்கையில் கிடக்கும் பூக்களில் ஒரு பூவை எடுத்து படுத்திருக்கும் மனைவி மீது செல்ல வீசல் வேறு.

    தன் சம்பந்தி மாயாண்டி தன மகள் எஸ்.பி. யின் மருமகளாகி விட்டாள் என்று பதறி வீட்டுக்கு ஓடிவரும்போது சாப்பிட்டுவிட்டு துண்டைக் கைகளால் துடைத்தபடியே நாக்கால் உதடுகளின் ஓரங்களின் உள்ளே துழாவிக்கொண்டே (உணவுத்துகள்கள் ஏதாவது பல்லிடுக்குகளில் மாட்டிக் கொண்டிருக்கிறதா என்று தேடுகிறாரா?) தூள்பரத்தும் அற்புதம்.(அதுவரை திரையுலகம் கண்டிராத ஏன் இதுவரையும் கண்டிராத, இனிமேலும் காணமுடியாத நொடிப்பொழுது உலக அதிசயம்)

    மகன் வேறு வீடு பார்த்து தனிக் குடித்தனம் போவதாக சொல்லும் போது பெல்ட்டைக் கழற்றி விட்டபடி ,காக்கி ஷர்ட்டை வெளியே எடுத்து விட்டபடி படிக்கட்டுகளில் நடந்த படியே பேசிச் செல்லும் இயல்பு. (மத்தவங்களை என் பக்கம் திருப்பித்தாம்ப்பா பழக்கம்...நான் மத்தவங்க பக்கம் திரும்பி பழக்கமில்லே)

    ஸ்ரீ ஷண்முகா சிட்பண்டில் 2 லட்ச ரூபாய் திருட்டுப் போய்விட அங்கு வேலை செய்யும் தன் மகனிடமே படு கண்டிப்பாக விசாரிக்கும் அந்த விசாரணைக் காட்சி.

    ஒரே அதகளம்.

    (இப்ப இங்க நடந்த திருட்டுக் கூட யாரோ ஒருத்தருடைய சொந்த உழைப்புத்தான்னு நான் நெனைக்கிறேன்... நீங்க என்ன நினைக்கீறீங்க?

    அதைப் பத்தி நான் எப்படி சார் அபிப்பிராயம் சொல்ல முடியும்?)

    இந்த வசனக் காட்சி வரைக்கும் ஓ.கே. இதற்கு அடுத்து வரும் அந்த

    "ஏன்யா?"

    என்று உச்சரிக்கும் தொனி.

    பலமுறை என் தூக்கத்தைக் கெடுத்த அந்த உச்சரிப்பு.

    காரணம்...

    தெரியவில்லை.

    அந்த "ஏன்யா?" வில் பொதிந்து கிடக்கும் அர்த்தங்கள்.... அந்த காந்தக் கண்கள்... அந்த சிமிட்டல்...அந்த வாய் சற்றே திறந்து.... ஆச்சரியங்கள் காட்டும் முகரேகைகள்.... அதிர்வுகளைக் காட்டும் அதிசயங்கள்...

    திலகமே!

    ஏன்யா? ஏன்யா பொறந்தே?... ஏன் இப்படி எங்க உயிரை வாங்குற? உன் ஒவ்வொரு அசைவையும் வர்ணிக்க வார்த்தை ஏதுய்யா? திருப்தியே வரமாட்டேங்குதே. நீ பாட்டுக்கு சர்வ சாதாரணமா எல்லாத்தையும் பண்ணிட்டுப் போயிட்டே...எடுத்துச் சொல்ல திராணி இல்லாம போராடுறோம்யா. கண்ணுல கண்ணீரை எப்பவும் எங்களுக்கு கசிய விட்டுட்டு ஏன்யா பட்ட மரமா எங்கள தவிக்க விட்டுட்டுப் போனே? நாங்க உனக்கு செய்யிறத எல்லாம் இருந்து எங்க கூடவே இருந்து பார்த்திருக்கலாமில்லே!

    இதுக்கு மேல முடியலைய்யா!
    Last edited by vasudevan31355; 2nd June 2013 at 01:35 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #153
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    தங்கப் பதக்கம் (நினைவலைகள்) 01.06.1974



    இன்னொரு வைடூரியம்

    காவல் துறையின் கண்ணியத்தை நம் துரை கட்டிக் காத்த படம்.

    ஒரு காக்கி உடுப்பு, ஒரு வீடு, முக்கியமாக நான்கைந்து கேரக்டர்கள். அவ்வளவுதான். அதுவரை வசூலில் பிரளயம் செய்த அத்தனை படங்களும் அடிபணிந்தன.

    உடுப்பின் மிடுக்கு ஒன்றிலேயே உலகத்தை வென்றவர் எஸ்.பி.

    கல்கி எழுதியது போல் மீசை நடித்தது....மீசையின் ஒவ்வொரு முடியும் நடித்தது... புருவம் நடித்தது... லத்தி நடித்தது.

    அழகான சின்ன திரைக்கதை... அளவே இட முடியாத, எவரும் தொட முடியாத நடிப்பு முத்திரைகள்.

    பூவோடு சேர்ந்த நார்களும் அருமையாக மணம் வீசின.

    மகனைத் தாலாட்டும் போது நெஞ்சை என்னென்னவோ செய்யும் அந்தப் பின்னணி இசை...

    ஒவ்வொரு காவல்துறை அதிகாரியும் கண்ணாடி முன் நின்று தன்னை சௌத்ரியாய் கற்பனை பண்ணிக் கொள்ளவில்லை என்று சொல்லட்டும் பார்க்கலாம்...

    மாயாண்டியை அடக்க முதல் காட்சியில் விரைந்து வரும் போலீஸ் ஜீப்பிலிருந்து (MSY 9545) இறங்கி சிங்கம் கால்களை விரைப்புடன் வைத்தவாறே விரைத்த போலீஸ் trouser உடன் நிற்கும் கம்பீர அறிமுகம்.

    ஸ்டேஷன் முடிந்து வீடு வந்ததும் மனைவியிடம் சீண்டல்... (மனைவி: இவரு பெரிய மன்மதன். இவர்: எல்லார்கிட்டேயும் கேளு)...உறங்கும் மழலையிடம் உன்னத பாசம்

    தீபாவளிக்கு வரும் விருந்தாளி நண்பனை பொய்யான உபசரணையோடு வரவேற்று பின் கால்களால் உதைத்து சிநேகித உரிமை கொண்டாடும் சிகர நட்பு.

    சிறுவயது மகன் தவறுகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அடித்தளம் அமைக்கும் போது ஏற்படும் மனக்குமுறல். அவன் குட்டிச்சுவராக ஆகி விடக் கூடாதே என்ற கரெக்டான கவலை.

    அங்கவஸ்திரத்தைக் கொடுக்க சொல்லி அதனாலேயே மனோகர் கைகளைக் கட்டி இழுத்துச் செல்லும் அனுபவம் தோய்ந்த மூத்த அதிகாரியின் அலட்சிய தோரணை... (ரொம்ப கஷ்டம்...இந்தியாவிலேயே பேர் போன குடும்பம் என் குடும்பம்தான்)

    மகன் பெரியவனாகி வீட்டுக்கு வேண்டாவெறுப்பாக திரும்பியவுடன் பாசத்தை பரிவுடன் காட்டும் பாங்கு. மகனின் அலட்சிய பேச்சுக்கு மனைவி பதில் அளிக்கையில் கைகளை பின்கட்டியவாறே அமைதியாக நின்று ஊமையாய் உணர்வுகளை உள்ளடக்கும் உன்னதம்.

    மகன் தன்னிச்சையாக ஒருவளைக் காதலித்து வீட்டுக்கு வந்து இவள்தான் மனைவி என்று அறிமுகப்படுத்தியவுடன் போடும் உண்மையான ஆனால் செல்லமான கண்டிப்புகள்.

    மகனுக்கு அரேஞ்ச் செய்த முதல் இரவு கொண்டாட்ட அலங்காரங்களை சந்தர்ப்ப சூழ்நிலைகளை முன்னிட்டு தனக்கு சாதகமாகிக் கொண்டு மனைவியிடம் களி விளையாட்டுக்கள் ஆரம்பிப்பது. எப்போதோ மனைவி சொன்னதை ஞாபகம் வைத்து அதை இப்போது சொல்லச் சொல்லி கேட்கும் கெ(கொ)ஞ்சல். (ஆமாம்! அந்த deputy சம்சாரம் ஏதோ சொன்னாங்கன்னு சொன்னியே என்னது? )... பேசிக் கொண்டே படுக்கையில் கிடக்கும் பூக்களில் ஒரு பூவை எடுத்து படுத்திருக்கும் மனைவி மீது செல்ல வீசல் வேறு.

    தன் சம்பந்தி மாயாண்டி தன மகள் எஸ்.பி. யின் மருமகளாகி விட்டாள் என்று பதறி வீட்டுக்கு ஓடிவரும்போது சாப்பிட்டுவிட்டு துண்டைக் கைகளால் துடைத்தபடியே நாக்கால் உதடுகளின் ஓரங்களின் உள்ளே துழாவிக்கொண்டே (உணவுத்துகள்கள் ஏதாவது பல்லிடுக்குகளில் மாட்டிக் கொண்டிருக்கிறதா என்று தேடுகிறாரா?) தூள்பரத்தும் அற்புதம்.(அதுவரை திரையுலகம் கண்டிராத ஏன் இதுவரையும் கண்டிராத, இனிமேலும் காணமுடியாத நொடிப்பொழுது உலக அதிசயம்)

    மகன் வேறு வீடு பார்த்து தனிக் குடித்தனம் போவதாக சொல்லும் போது பெல்ட்டைக் கழற்றி விட்டபடி ,காக்கி ஷர்ட்டை வெளியே எடுத்து விட்டபடி படிக்கட்டுகளில் நடந்த படியே பேசிச் செல்லும் இயல்பு. (மத்தவங்களை என் பக்கம் திருப்பித்தாம்ப்பா பழக்கம்...நான் மத்தவங்க பக்கம் திரும்பி பழக்கமில்லே)

    ஸ்ரீ ஷண்முகா சிட்பண்டில் 2 லட்ச ரூபாய் திருட்டுப் போய்விட அங்கு வேலை செய்யும் தன் மகனிடமே படு கண்டிப்பாக விசாரிக்கும் அந்த விசாரணைக் காட்சி.

    ஒரே அதகளம்.

    (இப்ப இங்க நடந்த திருட்டுக் கூட யாரோ ஒருத்தருடைய சொந்த உழைப்புத்தான்னு நான் நெனைக்கிறேன்... நீங்க என்ன நினைக்கீறீங்க?

    அதைப் பத்தி நான் எப்படி சார் அபிப்பிராயம் சொல்ல முடியும்?)

    இந்த வசனக் காட்சி வரைக்கும் ஓ.கே. இதற்கு அடுத்து வரும் அந்த

    "ஏன்யா?"

    என்று உச்சரிக்கும் தொனி.

    பலமுறை என் தூக்கத்தைக் கெடுத்த அந்த உச்சரிப்பு.

    காரணம்...

    தெரியவில்லை.

    அந்த "ஏன்யா?" வில் பொதிந்து கிடக்கும் அர்த்தங்கள்.... அந்த காந்தக் கண்கள்... அந்த சிமிட்டல்...அந்த வாய் சற்றே திறந்து.... ஆச்சரியங்கள் காட்டும் முகரேகைகள்.... அதிர்வுகளைக் காட்டும் அதிசயங்கள்...

    திலகமே!

    ஏன்யா? ஏன்யா பொறந்தே?... ஏன் இப்படி எங்க உயிரை வாங்குற? உன் ஒவ்வொரு அசைவையும் வர்ணிக்க வார்த்தை ஏதுய்யா? திருப்தியே வரமாட்டேங்குதே. நீ பாட்டுக்கு சர்வ சாதாரணமா எல்லாத்தையும் பண்ணிட்டுப் போயிட்டே...எடுத்துச் சொல்ல திராணி இல்லமா போராடுறோம்யா. கண்ணுல கண்ணீரை எப்பவும் எங்களுக்கு கசிய விட்டுட்டு ஏன்யா பட்ட மரமா எங்கள தவிக்க விட்டுட்டுப் போனே? நாங்க உனக்கு செய்யிறத எல்லாம் இருந்து எங்க கூடவே இருந்து பார்த்திருக்கலாமில்லே!

    இதுக்கு மேல முடியலைய்யா!
    Proper NINAIVANJALI FOR THANGAPADKKAAM AND NT ON JUNE FIRST
    VASU SIR Your write-up SUPERB==SUPERB you deserve a thangapadakkam for this,

  5. #154
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மகேந்திரன் துக்ளக் விமர்சகராக இருந்த போது செந்தாமரைக்காக எழுதிய நாடகம் இரண்டில் ஒன்று. இதை பார்த்த சிவாஜி, இந்த நாடகத்தை உடனே நிறுத்து என்று சொன்னாராம். shock ஆனவர்கள் என்ன தவறு என்று யோசிக்கும் போது ,இதை நான் எடுத்து பண்ண போகிறேன். முதலில் அந்த ராஸ்கல் சாகடிக்க பட வேண்டும் என்றாராம் மகன் பாத்திரத்தை.

    இனி மகேந்திரன்(என் மிக நெருங்கிய நண்பர்.) வார்த்தைகளில்.
    "வசனத்தை கண்ணை மூடி உட்கார்ந்து கொண்டு ஒரு முறை படித்து காட்ட சொன்னார். மாலையில் அவர் சௌத்ரி ஆக மாறிய அதிசயம் நடந்தது. அவருக்கு வசனமே அவசியமில்லை என்பதை மாயாண்டி தன் மருமகனை காப்பாற்ற பொய் சொல்லும் போது ,மாயாண்டி என்று சொல்லி ஒரு மாதிரி சிரிப்பாரே ,ஆஹா அது போதுமே?
    மனைவி செத்த காட்சிக்கு மாதவன் ரொம்ப எதிர்பார்ப்பதாக சொல்லியிருந்தார். மறுநாள் நான் எழுதி கொண்டு போனதை பார்த்த அவருக்கு கோபம்.ஆனால் உதவியாளர் தேவராஜ் மோகன் ,இது கிடக்குது, அவர் கிட்டே போங்க என்றார்கள. நடிகர்திலகம், இந்த காட்சியை கேட்டுவிட்டு,ஒரு spark இருப்பதை உணர்ந்து, மாதவன் இதை மாதிரி எடுக்கலாம்,சரி வரலேன்னா அப்புறம் பார்க்கலாமே என்று ஊக்குவித்தார்."

    மகேந்திரன் நிறைகுடம்,தங்க பதக்கம், ஹிட்லர் உமாநாத்,ரிஷிமூலம்,நாங்கள் முதலிய படங்களில் சிவாஜியோடு சம்பத்த பட்டிருந்தாலும் ,NT வைத்து ஒரு படம் கூட இயக்கவில்லை என்ற பெரும் மனக்குறை அவருக்கு உண்டு.

    தங்க பதக்கம் ,ஒரு குடும்ப படமானாலும், விறுவிறுப்பான action படத்தின் வேகம்,logic ஆன sharp வசனங்கள் கொண்ட படம்.மற்றும் நம் சௌத்ரியின் விஸ்வரூபம்.

    குடந்தை கற்பகம் தியேட்டரில் opening show பார்த்தேன்.. நூறாவது நாள் கொண்டாடிய போது ,அந்த theatre அதிபரின் மகன் சுப்பு என்னுடைய P .U .C classmate bishop Heber கல்லூரி, திருச்சியில்.என்னை கூப்பிட்டும் போக முடியாத நிலை.
    Last edited by Gopal.s; 3rd June 2013 at 05:31 AM.

  6. #155
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #156
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2005
    Location
    A, A
    Posts
    204
    Post Thanks / Like
    உணர்ச்சி பூர்வமான வர்ணனைகள்
    தங்க பதக்கம் கலை உலகை நிமிர்ந்து பார்க்க
    வைத்த படங்களில் ஒன்று

    என் குழந்தை இரவு தூங்க வைக்க, கதை ரெடி
    Vazga Sivaji pugaz

  8. #157
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு உறுப்பினர்களுக்கு,

    தற்சமயம் 'வீரபாண்டியக் கட்டபொம்மனை'ப் பற்றி அதியற்புதமாக கோபால் அவர்கள் எழுதத் தொடங்கியுள்ளார். பல அரிய தகவல்கள் கோபால் மூலமாகத் தெரிய வருகின்றன. அவசியம் படித்துப் பயனுற வேண்டுகிறேன். தங்களுடைய கருத்துக்களையும் அங்கு பதிந்தால் கோபால் அவர்களிடமிருந்து இன்னும் ஏராளமான விஷயங்களைப் பெற முடியும். அவ்வளவு அற்புதமான தொடர் அது.

    கோபால் அவர்களின் 'இந்தியாவின் ஒரே உலக அதிசயம்' தொடரின் 32,33,34 ஆவது பாகங்கள் படித்துப் பயன்பெற

    http://www.mayyam.com/talk/showthrea...f-Acting/page2
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #158
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு பம்மலார் சார்,

    சௌத்ரியின் கம்பீரம் அற்புதம். நேராக நோக்குவது போன்ற உணர்வைத் தருகிறது. நல்ல புகைப்படத்திற்கு நன்றிகள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #159
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Nadigar Thilagam's films in tv channels next week


    J MOVIES
    03.06.2013 – 1.00 pm - NEEDHIYIN NIZHAL
    06.06.2013 – 1.00 pm – THIRUDAN
    08.06.2013 – 1.00 PM – NENJANGAL
    04.06.2013 – 5.00 PM – NEEDHI
    07.06.2013 – 5.00 PM – NEEDHIPADHI (TO CHECK OUT OLD OR NT’S)
    03.06.2013 – 9.00 PM – MUDHAL MARIYADHAI

    MEGA 24

    07.06.2013 – 8.30 AM – ANBULLA APPA
    06.06.2013 – 1.00 PM – UTHAMA PUTHIRAN

    MEGA TV
    06.06.2013 – 1.30 PM – NEEDHI

    MURASU TV
    04.06.2013 – 7.30 PM – NEEDHI
    08.06.2013 – 7.30 PM - EN MAGAN

    RAJ TV
    06.06.2013 – 2.00 PM – PAAR MAGALE PAAR

    VASANTH TV
    04.06.2013 – 2.00 PM – THEERPPU
    06.06.2013 – THYAAGAM
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #160
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    ஜாதி இல்லை மத பேதம் இல்லையே
    ஏதும் கவலை இல்லையே
    தாரணி மீதினிலே
    எனக்காரும் நிகரில்லையே...
    என்ன தீர்க்க தரிசனமான வரிகள் .... தஞ்சை ராமையா தாஸ் அவர்களின் இந்த வரிகள் எப்பேர்ப்பட்ட காவிய நாயகனை முன் கூட்டியே கணித்து விட்டன.

    அடுத்து நம் திரைப்பட்டியலில் இடம் பெறப் போகும் காத்தவராயன் திரைப்படத்தில் நடிகர் திலகம் அறிமுகமாகும் காட்சியில் ஒலிக்கும் வரிகள் இவை. இது நடிகர் திலகத்திற்கு மட்டுமின்றி அதைப் பாடிய டி.எம்.எஸ். அவர்களுக்கும் அல்லவா பொருந்தி விட்டது.

    காத்தவராயன் .... நடிகர் திலகத்தின் புகழ்க் கிரீடத்தில் மற்றொரு வைரம். ஒவ்வொரு காட்சியும் அணு அணுவாய் ரசித்து ஆய்வெழுத வேண்டிய அளவிற்கு நடிப்பினை வாரி வாரி வழங்கியிருப்பார். உலகத்தில் உள்ள அத்தனை நடிப்புப் பள்ளிகளையும் காத்தவராயனில் பார்க்கலாம். Larger than life, multi deimensional, fictional, fantasy, என்று பல்வேறு Genreகளில் தன் முத்திரையைப் பதித்திருப்பார் இப்படத்தில்.

    வாங்க நிறைய பேசலாம்... காத்தவராயன் மகிமையை... அடுத்து நம் திரைப்படப் பட்டியலில்...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •