-
7th June 2013, 11:45 AM
#281
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார்,
ஒரு சின்ன க்ளூ. நம்மிடம் இந்தப் படம் இல்லை.
-
7th June 2013 11:45 AM
# ADS
Circuit advertisement
-
7th June 2013, 11:49 AM
#282
Junior Member
Newbie Hubber
-
7th June 2013, 11:57 AM
#283
Senior Member
Diamond Hubber
-
7th June 2013, 12:02 PM
#284
Junior Member
Newbie Hubber
பரிசு எதுவும் வேணாம். ரவி திரிக்கு வா.
-
7th June 2013, 12:08 PM
#285
Senior Member
Diamond Hubber
பிரபுராம் சார்,
தங்களின் அற்புத எழுத்துக்களில் உருவான (19th June 2009) 'காத்தவராயன்' பட ஆய்வை ரசிகவேந்தர் Filmography திரியில் மறுபதிவாக அளித்திருந்தார். நிஜமாகவே சுருக்கமாக சுவை குன்றாமல் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட ஆய்வு. என் நெஞ்சம் கவர்ந்த படத்தின் நெஞ்சைக் கொள்ளை கொண்ட ஆய்வு. மிக மிக ரசித்துப் படித்தேன். என் மனமுவந்த பாராட்டுக்கள்.
-
7th June 2013, 12:11 PM
#286
Junior Member
Newbie Hubber

Originally Posted by
vasudevan31355
பிரபுராம் சார்,
தங்களின் அற்புத எழுத்துக்களில் உருவான (19th June 2009) 'காத்தவராயன்' பட ஆய்வை ரசிகவேந்தர் Filmography திரியில் மறுபதிவாக அளித்திருந்தார். நிஜமாகவே சுருக்கமாக சுவை குன்றாமல் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட ஆய்வு. என் நெஞ்சம் கவர்ந்த படத்தின் நெஞ்சைக் கொள்ளை கொண்ட ஆய்வு. மிக மிக ரசித்துப் படித்தேன். என் மனமுவந்த பாராட்டுக்கள்.
நான் திரும்பி பார்த்து மறு பரிசீலனை செய்தே ஆக வேண்டும். ரெண்டு பெரிய இடத்து recommendation . ஆனாலும் என்னோடு ஒட்டி பிறந்தது சோடை போகுமா?நான் பிறந்த தினம் ,வருடத்தில் வெளியான படத்திற்கு ,என் மனைவி பிறந்த தினத்தில் (வருடமல்ல!!!) P_ R விமரிசனம் ??? ஆச்சரியம்.காத்து விற்கும் எனக்கும் ஏதொ தெய்வீக தொடர்பு.
Last edited by Gopal.s; 7th June 2013 at 12:28 PM.
-
7th June 2013, 12:22 PM
#287
Senior Member
Senior Hubber
அன்புள்ள திரு. கோபால் அவர்களே,
ஆயிரம் பதிவுகள் கடந்த உங்களுக்கு ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள். தாங்கள் மேலும் ஆயிரக் கணக்கில் பதிவுகள் இட்டு எல்லோரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திட வேண்டுகிறேன்!
தங்கள் "வீரபாண்டிய கட்டபொம்மன்" பதிவு மிகவும் நுணுக்கமாக உள்ளது.
எண்பதுகளின் இறுதியில், இப்படம் சென்னையில் பெரிய அளவில் மறு வெளியீடு கண்டு "ஸ்டார்" தியேட்டரில் ஐம்பது நாட்களைக் கடந்து பின் சென்னை முழுவதும் (நாட்கள் நினைவில் இல்லை) ஓடிக் கொண்டே இருந்தது. அப்போது தான் கட்டபொம்மனை முதலில் பார்த்தேன் - அதுவும் என் பெற்றோர்கள், மனைவி, குழந்தை மற்றும் அத்தை மகன் ஆகியோருடன் - கமலா தியேட்டரில். அங்கு மட்டும் கிட்டத்தட்ட மூன்று அல்லது நான்கு வாரங்கள் வரை ஓடியது.
எனக்குத் தெரிந்து, இந்த ஒரு படத்திற்கு படம் நெடுகிலும் அரங்கத்தில் கிடைத்த வரவேற்பும், கரவொலியும் "தெய்வ மகன்" தவிர வேறு எந்தப் படத்திற்கும் தற்போது மறு வெளியீடு கண்ட "கர்ணன்" வரை கிட்டியதில்லை. தெய்வ மகன் கூட அத்தனை தரப்பட்ட பொது மக்கள் வரவேற்பைப் பெற்றதா என்று சொல்ல முடியாது. ஆனால், "கட்டபொம்மன்" அனுபவம் வேறு மாதிரியானது. படம் நெடுகிலும், பல சிறிய காட்சிகளுக்குக் கூட ஒட்டு மொத்த அரங்கும் அதிர்ந்தது என்பது தான் உண்மை - ஒரு கட்டத்தில், ஒரு தாய் (எஸ்.என். பார்வதி?) அவரது மகனை போரில் இழந்து அவரைப் பார்க்க வரும் போது நடிகர் திலகம் காட்டும் ரியாக்ஷன், "இன்பம் பொங்கும் வெண்ணிலா" பாடலின் முடிவில், ஜெமினி/பத்மினிக்கு மேல் தொங்கும் மலைப்பாம்பை சுட்டிக் காட்டி அவர்களைத் தப்புவிக்க வைத்து சொல்லும் ஒரு வித ஏளனம் கலந்த வசனம் மற்றும் நடிப்பு, இப்படி பல இடங்களின் அரங்கம் ஆர்ப்பரித்தது.
படம் துவங்கி, முடியும் வரை, ஒரு நடிகன் அவனது நடிப்பினால் மட்டுமே ஒட்டு மொத்த அரங்கத்தையும் ஒரு வித அதீத ஜுரம் மற்றும் ரத்தக் கொதிப்பு நிலையில் வைத்திருந்ததை அன்று தான் முதலில் கண்டேன்.
படம் முடிந்து வெளியில் வரும் போது படம் பார்த்த ஒவ்வொருவரும் அந்த ஜுரத்தோடேயே வெளியில் வந்தனர். அந்த நேரத்தில், யாராவது ஒருவர் ஒரு வெள்ளைக் காரரை வெளியில் பார்த்திருந்தால், அவரை அங்கேயே கொன்றிருப்பர். அந்த அளவிற்கு தாக்கத்தை மக்கள் மனதில் ஏற்படுத்திய ஒரு நடிப்பை இவ்வுலகம் கண்டிருக்குமா?
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
7th June 2013, 12:30 PM
#288
Junior Member
Newbie Hubber
சாரதி சார்,
ரொம்ப நாள் நீங்கள் வராமல் சோர்ந்து கிடந்தோம் புத்தெழுச்சி தந்தீர்கள். நன்றி. தொடருங்கள்.
-
7th June 2013, 12:30 PM
#289
Senior Member
Senior Hubber
அன்புள்ள திரு. ராகவேந்திரன் அவர்களே,
பல அறிய ஆவணங்களைப் பதிந்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துகிறீர்கள்.
தொடர்ந்து களிப்புற வையுங்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,
அந்த ஸ்டில் கிட்டத்தட்ட மோட்டார் சுந்தரம் பிள்ளை போல் இருந்தாலும், எனக்கு ஒரு சிறிய சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது - ஏனென்றால், அதில், நெற்றியில் முடி சுருண்டு விழும் (பிளாஷ் பேக்கில்). வேறெந்தப் படத்திலும் பார்த்திராதது. ஞாயிறும் திங்களும் என்று எழுதலாம் என்றிருந்தேன் - நீங்கள் ஒரு க்ளூ கொடுப்பதற்கு முன்னேயே. கட்டபோம்மனுக்காக ஒரு பதிவைப் பதிந்து விட்டுப் பார்த்தால், கோபால் முந்திக் கொண்டு விட்டார்.
அருதமான அறிய ஸ்டில்லைப் பதிவு செய்ததற்கு நன்றி.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
அன்புள்ள திரு. பிரபுராம் அவர்களே,
காத்தவராயன் - வழக்கம் போல நுணுக்கமான ஆய்வு. (குறிப்பாக, திருவிளையாடல் பாடல் காட்சியில் கொன்னக் கோல் பாடத் துவங்கும் நடிகர் திலகம் அவரது முறை வருவதற்கு சற்று முன் தொண்டையை செருமி ஆயத்தமாவது ...).
ரசிக்கத்தக்க பதிவு.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
7th June 2013, 12:31 PM
#290
Junior Member
Newbie Hubber
சாரதி சார்,
ரொம்ப நாள் நீங்கள் வராமல் சோர்ந்து கிடந்தோம் புத்தெழுச்சி தந்தீர்கள். நன்றி. தொடருங்கள்.
Bookmarks