-
11th June 2013, 12:18 AM
#381
ஜோ,
நன்றி. நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.படத்திற்காக முதலில் எழுதப்பட்ட திரைக்கதையில் திலகன் தோன்றிய அந்தக் காட்சி இடம் பெறவில்லை. திலகன் வி.பி.கே.மேனன் மற்றும் இயக்குனர் பிரதாப் போத்தனிடம் நான் இந்த படத்தில் நடிப்பேன்.எனக்கு ஒரு காட்சியாவது வைக்க வேண்டும் என்று உரிமையுடன் கேட்டு வாங்கி நடித்தார். அவருக்காகவே நடிகர் திலகம் நடித்த contractor-ஐ மிரட்டி ஊரை விட்டு போக சொல்லும் அந்த காட்சியை உருவாக்கி ஆனால் நடிகர் திலகத்தை பார்த்தவுடன் அவர் சிறு வயதில் தனக்கு உதவிய அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து நடிகர் திலகத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு பழைய உதவிக்கு நன்றி சொல்லும் காட்சியாக அது உருப்பெற்றது. இதன் மூலம் தன வாழ்நாள் லட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டதாக திலகன் பலமுறை பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.அவர் மட்டுமல்ல, அந்த படத்தில் பங்கு கொண்ட நெடுமுடி வேணு, சோமன், ஜகதீஷ், மணியம்பிள்ளை ராஜு போன்றவர்களும் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்த அந்த வாய்ப்பை தங்களின் வாழ்நாளில் கிடைதற்கரிய பேறாக கருதினார்கள்.
மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான திக்குரிசி,சத்யன், நசீர், மது, சோமன், மோகன்லால்,வேணு, திலகன் என்று அனைவரோடும் இனைந்து நடித்த நடிகர் திலகத்தை மிஸ் செய்தவர் மம்மூட்டி மட்டுமே. இந்த இணையும் இரண்டு முறை ஒன்று சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வந்தும் தவறி போனது. ஒரு முறை கோவை செழியன் தயாரிப்பில் ஜோஷி இயக்கத்தில் தந்தையாகவும் மகனாகவும் நடிக்க இருந்தார்கள். மற்றொரு முறை சுஹாசினி இயக்கத்தில் நடிகர் திலகமும் மம்மூட்டியும் இணையும் படம் ஒன்று [தமிழன் என்று பெயர் சூடியதாக் நினைவு]. இரண்டுமே நடிகர் திலகத்தின் உடல் நிலையால் அறிவிப்போடு நின்று போனது. இதை தவிர மலையாள சினிமாவின் magnum opus என்று சொல்லகூடிய மகாபாரதத்தை அடிப்படையாக கொண்ட ஒரு இதிகாச காவியத்தை மலையாள இலக்கிய சிற்பி எம்.டி அவர்களும் [M.T.வாசுதேவன் நாயர்] இயக்குனர் ஹரிஹரன் அவர்களும் உருவாக்கும் முயற்சியின் ஆரம்ப கட்ட ஆலோசனைகள் நடைபெற்றன. [இந்த கதாசிரியர் -இயக்குனர் கூட்டணிதான் மலையாள சினிமாவின் மறக்க முடியாத காவியங்களான ஒரு வடக்கன் வீர காத மற்றும் பழசி ராஜா போன்ற படங்களை தந்தவர்கள்]. இந்த இதிகாச படத்தில் நடிகர் திலகம் பீஷ்மாச்சாரியாராக வேடம் புனைய இருப்பதாகவும், அதே படத்தில் மம்மூட்டி மோகன்லால் போன்றவர்களும் நடிக்க இருப்பதாகவும் பத்திரிக்கைகளில் செய்தி வந்தது. ஆனால் மலையாள சினிமாவால் தாங்க முடியாத பட்ஜெட் என்பதால் அந்த project தொடர முடியாமல் பொய் விட்டது.
நடிகர் திலகமும் மம்மூட்டியும் இணைய முடியாமல் போனதில் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப் பெரிய வருத்தம்.
அன்புடன்
-
11th June 2013 12:18 AM
# ADS
Circuit advertisement
-
11th June 2013, 12:21 AM
#382
ராகுல்,
கோவை ராயல் திரையரங்கில் ராஜா வசூல் சக்ரவர்த்தியாக கோலோச்சுவதை எளிய நடையில் தந்த உங்களுக்கு நன்றி.
ராகவேந்தர் சாரும் தன பங்கிற்கு Facebook-ல் நமது நண்பர் மற்றும் ஹப்பர் செந்தில்வேல் [சிவஜிசெந்தில்] தரவேற்றிய புகைப்படங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டார்.
Facebook-ல் நண்பர் செந்தில் வேறு ஒரு நோட்டீஸ்-ஐயும் upload செய்திருக்கிறார். கோவை மாநகரிலேயே அதிகமான 100 நாட்கள் ஓடிய படங்களை கொடுத்தவர் நடிகர் திலகம் என்பதை லிஸ்ட் போட்டு [படங்கள், தியேட்டர், தேதி, ஓடிய நாட்கள் என] ஆதாரத்துடன் சொல்லும் நோட்டீஸ். நேற்று ராயல் திரையரங்கில் ரசிகர்களால் விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது.
கோவை மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் அதிக 100 நாட்கள் ஓடிய படங்கள் நமது படங்கள்தானே!
அன்புடன்
-
11th June 2013, 07:11 AM
#383
Junior Member
Newbie Hubber
முரளி அண்ணாச்சி,
மம்முட்டி யின் மிக பெரிய ரசிகனான எனக்கும் இந்த சிவாஜி-மம்முட்டி இணைவில் படங்கள் வராதது வருத்தமே. மம்முட்டியும்,கோபியும் (சிதம்பரம் )கூட நடிகர்திலகத்தின் ரசிகர்கள்.
-
11th June 2013, 11:05 AM
#384
Senior Member
Diamond Hubber
இன்றைய அரிய நிழற்படம்.
'வீரபாண்டியக் கட்டபொம்மன்' தெலுங்கு மொழியில் 'வீரபாண்டியக் கட்டபிராமணா' (1959)என்று மொழி மாற்றம் செய்யப்பட்டது. அதன் அரிய நிழற்படத்தைதான் காண்கிறீர்கள்.

pdf download from sakhyiaa.com
-
11th June 2013, 11:09 AM
#385
Junior Member
Newbie Hubber
கட்ட பொம்மு வா, கட்ட பொம்முலு வா , கட்ட பொம்முடு வா? எது சரி?(மாறு வேடத்தில் உலா வரும் கொல்டிகள் இந்த அரவத்திற்கு விளக்குவார்களா?)கட்ட பொம்மன் எப்போ பிராமணன் ஆனான்?ஜக்கய்யா குரலா? ஜக்கம்மாவிற்கு சரியான ஜோடி.
Last edited by Gopal.s; 11th June 2013 at 11:26 AM.
-
11th June 2013, 11:44 AM
#386
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Murali Srinivas
ராகுல்,
கோவை ராயல் திரையரங்கில் ராஜா வசூல் சக்ரவர்த்தியாக கோலோச்சுவதை எளிய நடையில் தந்த உங்களுக்கு நன்றி.
ராகவேந்தர் சாரும் தன பங்கிற்கு Facebook-ல் நமது நண்பர் மற்றும் ஹப்பர் செந்தில்வேல் [சிவஜிசெந்தில்] தரவேற்றிய புகைப்படங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டார்.
Facebook-ல் நண்பர் செந்தில் வேறு ஒரு நோட்டீஸ்-ஐயும் upload செய்திருக்கிறார். கோவை மாநகரிலேயே அதிகமான 100 நாட்கள் ஓடிய படங்களை கொடுத்தவர் நடிகர் திலகம் என்பதை லிஸ்ட் போட்டு [படங்கள், தியேட்டர், தேதி, ஓடிய நாட்கள் என] ஆதாரத்துடன் சொல்லும் நோட்டீஸ். நேற்று ராயல் திரையரங்கில் ரசிகர்களால் விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது.
கோவை மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் அதிக 100 நாட்கள் ஓடிய படங்கள் நமது படங்கள்தானே!
அன்புடன்
Dear Murali Sir. The credit goes to some other Senthil sir and not me since I did not upload any such items.
-
11th June 2013, 01:02 PM
#387
Senior Member
Diamond Hubber
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)
(தொடர்-13)
நடிகர் திலகத்தின் நாயகிகள் (13) 'S.வரலக்ஷ்மி'
'ஜக்கம்மா'வின் 'ஜம்'மென்ற தோற்றம்

நம் ஜக்கம்மா S.வரலக்ஷ்மி 1927-இல் பிறந்தவர். வெரைட்டி வரலக்ஷ்மி என்றே இவர் அழைக்கலாம். அவ்வளவு பாத்திரங்களையும் அனாயாசமாய் செய்யக்கூடிய திறமைசாலி. குடும்பப் பாங்கான முக லட்சணம் கொண்ட நடிகை. அதுமட்டுமல்ல மிகத் திறமையான இனிய குரல் வளம் கொண்ட நடிகையும் கூட. வேம்ப், வில்லி, கதாநாயகி, அம்மா என்று பலகாலம் தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகை ஆக்கிரமித்தவர். 1938 இல் தெலுங்கிலும் மற்றும் தமிழிலும் வெளிவந்த 'பாலயோகினி' யில் இளவயது நட்சத்திரமாக அறிமுகமானார். (அடேயப்பா! தலைவர் பீல்டில் நுழைவதற்கு 14 வருடங்களுக்கு முன்பே!) பழம்பெரும் இயக்குனர் K.சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த 'சேவாசதானம்' படத்தில் திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் தோழியாக நடித்தார். பின் 1940இல் டி ஆர்.மகாலிங்கத்துடன் இணைந்து பரசுராமன் (1940) நடித்தார்.

பின் ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, போஜன், நவஜீவனம், மச்சரேகை, மோகனசுந்தரம் என்று வரிசையாகப் படங்கள்.

பி.யூ.சின்னப்பா, நாகையா, NTR, நாகேஸ்வரராவ், ரங்காராவ், எம்ஜியார், டி .ஆர்.மகாலிங்கம் ரஞ்சன், ஜெமினி என்று அத்துணை நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தார்.

ஆனால் நடிகர் திலகத்துடன் இவர் ஜோடி சேர்ந்த 'வீரபாண்டியக் கட்டபொம்மன்' இவருக்கு அழியாப் புகழைப் பெற்றுத் தந்து விட்டது. தலைவரின் ஆண்மையான ஆஜானுபாகுவான, கம்பீரத் தோற்றத்திற்கு வரலக்ஷமி அவர்களின் உருவ அமைப்பு தோதாக,கனகச்சித்தமாகப் பொருந்தி கட்டபொம்மனுக்கேற்ற ஜக்கம்மாவாக ஜோடி சேர்ந்து வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றுவிட்டது.
'ஜக்கம்மா' என்ற தனது தனித்துவமான கம்பீரக் குரலாலே நடிகர் திலகம் இவரை அழைப்பதைக் கேட்கும்போதெல்லாம் வரலக்ஷ்மிதானே ஞாபகத்திற்கு வருவார்! தன்னுடன் நடிக்கும் ஹீரோயின்களை எல்லாம் கூட நமது கவனத்துக்கு கொண்டு வருவதில் நடிகர் திலகத்திற்கு ஈடுஇணை எது?
கட்டபொம்மனில் அதிக ஸ்கோர் இவருக்கு இல்லையென்றால் கூட போருக்கு விடை கொடுத்து அனுப்பும் அந்த அற்புதக் காட்சியில் அருமையாக செய்திருப்பார்.

"ஆம்! என் கணவர் எத்தனை சிரம் கொணர்ந்தார் என்று எண்ணி எண்ணி எண்ண மாளாது அது ஒரு கோடி இருக்கும் போ...
கொண்டு போய்க் கொல்லைக் காட்டிலே கொட்டு... அங்கு எருக்கு முளைத்து அதை எருவாக்கி செந்நெல் விளைத்து நாட்டை செழிப்பாக்கு என்று நான் சொல்லி சிறக்கவேண்டும்"
என்று இவர் உணர்வுபூர்வமாக தலைவரிடம் பேசும் அந்த குறிப்பிட்ட வசனத்தை மறந்துவிட முடியுமா!"
"வெற்றிவடிவேலனே" முடிந்ததும் அமைதியாய் மனம் வருடும் "மனம் கனிந்தருள் வேல்முருகா!" என்ற தேன் சொட்டும் குரலின் இனிமையைத் தான் மறக்க முடியுமா?
அருமையான குரல்வளம். 'டக்குன்னு டக்குன்னு அடிக்கடி துடிக்கும்', 'சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே' என்று இனிமை பரப்பும் பாடல்கள் இவர் குரல் வளத்தில்.
நடிகர் திலகத்துடன் டூயட் பாடாத அபூர்வ கதாநாயகி. ஒரு படம் ஜோடி என்றாலும் உலகப் புகழ் பெற்ற காவியத்தில் தலைவரின் ஜோடி என்ற மகா பெருமையைத் தட்டி சென்றவர். பம்பர் பரிசு அடித்த அதிர்ஷ்டசாலி இந்த அக்கையார்.
இவர் நடிப்பில் ஜொலித்த பிற முக்கியமான படங்கள்.
தங்கச் சுரங்கம்
ராஜ ராஜ சோழன்
தாய்
பணமா பாசமா
உயிரா மானமா
பூவா தலையா
ஆதிபராசக்தி
குணா
கட்டபொம்மனில் நடிகர் திலகம், எஸ்.வரலக்ஷ்மி இரு ஒப்பற்ற கலைஞர்கள் நடிப்பில் நம்மைக் கட்டிப் போட்ட காட்சி
"சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே"
"டக்கு டக்குன்னு அடிக்கடி"
வயதான பின்
.jpg)
1.10.2007 அன்று நடிகர் திலகத்தின் 79 ஆவது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற விழவில் நடிகை எஸ்.வரலக்ஷ்மி அவர்களுக்கு டாக்டர் சிவாஜி கணேசன் மெமோரியல் அவர்ட் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. அந்த நிழற்படம் இங்கே.

நமது அன்பு முரளி சார் 2.10.2007 அன்று நடிகர் திலகம் பாகம் 8 இல் பதிவிட்ட நடிகர் திலகத்தின் 79 ஆவது பிறந்தநாள் விழாவினைப் பற்றிய பதிவிலிருந்து ஒரு பகுதி.
நன்றி முரளி சார்.
Cho started in his usual style. “ Ram Sivaji-yai patri pesa thaguthi illai endrar. Sivaji nadippai vimarsikka thaguthi paartha indha ulagathile orutharalum mudiyathu. Ini oruthan pirandhudhan varanum. Naan-ellam thaguthi paartha vimarsanam panren. Appadi paartha naan endha vishyathai patriyum comment adikka mudiyathu.” He said that deserving yesteryear artists are being honoured. About Varalakshmi ”avanga paadi nadikka koodiyavanga. Indha kaalathile heroine pesuvathe periya saadhanai”.
Last edited by vasudevan31355; 29th June 2013 at 10:12 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
11th June 2013, 01:25 PM
#388
Junior Member
Newbie Hubber
ஜக்கம்மா வேறில்லை திக்கம்மா (ஓடி போக)
-
11th June 2013, 01:58 PM
#389
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gopal,s.
ஜக்கம்மா வேறில்லை திக்கம்மா (ஓடி போக)
எனக்குப் புரியும்...எல்லோருக்கும் புரியுமா?
-
11th June 2013, 02:03 PM
#390
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
ஜக்கம்மா வேறில்லை திக்கம்மா (ஓடி போக)
இனிமே உன் பதிவுக்கு என்னுடைய feedback ம் ஒரே ஒரு லைன் தான்.
Bookmarks