-
23rd June 2013, 02:58 PM
#721
Junior Member
Newbie Hubber
kARTHIK Sir,
What you pointed in thread is 100% true and perfect .Every fan of our acting god is always worry about the point you mentioned in thread.
The opponent side they are creating the publicity and picturised publickly. But we are not do like that.Even the Annai Illam great personilities didnot take any positive action in this matter sofar. Respectful Ramkumarji has himself admitted the idea of publicity thought has overcome as like divya film making degitilized the great karnan. I admit your feelings and participate your sincere and dedication affection on Nadigarthilagam.
-
23rd June 2013 02:58 PM
# ADS
Circuit advertisement
-
23rd June 2013, 04:48 PM
#722
Junior Member
Newbie Hubber
கார்த்திக் சார்,
நடிகர்திலகத்துக்கு மணிமண்டபம், நினைவு இல்லம் அமைய வேண்டும் என்ற ஆசை ,ஒவ்வொரு உண்மையான மானமுள்ள தமிழர்களின் நியாயமான ஆசை. அவர் ஓயாமல் உழைத்தது அனைத்து தமிழர்களுக்காகவும் தானே? நாமெல்லோருமே அவருக்கு கடன் பட்ட நெஞ்சங்கள்தானே? அரசாங்கம்தான்,ஒவ்வொரு தமிழன் சார்பிலும் இதை நிறைவேற்ற வேண்டும்.
-
23rd June 2013, 06:15 PM
#723
Junior Member
Platinum Hubber
thanks savuri sir
-
23rd June 2013, 06:29 PM
#724
Senior Member
Veteran Hubber
அன்புள்ள ரமேஷ் நாராயணன் சார்,
தங்கள் அன்பான பதிவுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. தங்களைப்போன்றவர்களின் விருப்பங்களும் கோரிக்கைகளும் எட்ட வேண்டியவர்களுக்கு எட்ட வேண்டும் என்பதே நமது ஆவல்.
தொடர்ந்து பதிவுகளை பங்களியுங்கள்.
-
23rd June 2013, 06:48 PM
#725
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
கார்த்திக் சார்,
நடிகர்திலகத்துக்கு மணிமண்டபம், நினைவு இல்லம் அமைய வேண்டும் என்ற ஆசை ,ஒவ்வொரு உண்மையான மானமுள்ள தமிழர்களின் நியாயமான ஆசை. அவர் ஓயாமல் உழைத்தது அனைத்து தமிழர்களுக்காகவும் தானே? நாமெல்லோருமே அவருக்கு கடன் பட்ட நெஞ்சங்கள்தானே? அரசாங்கம்தான்,ஒவ்வொரு தமிழன் சார்பிலும் இதை நிறைவேற்ற வேண்டும்.
அன்புள்ள கோபால் சார்,
அரசின் சார்பில் அமையவுள்ளது மணிமண்டபமா, அல்லது நினைவு இல்லமா?. மணிமண்டபம் எனில் நமது விருப்பங்கள் நிறைவேற வழியில்லை. விசேஷ நாட்கள்தவிர மற்ற நாட்களில் அது வௌவால்கள் அடையும் / சோம்பேறிகள் துங்கும் மண்டபமாகவே அமைந்து விடும். (தஞ்சாவூரில் உலகத் தமிழ் மாநாட்டின்போது அமைக்கப்பட்ட இரு மணிமண்டபங்கள் சான்று)
எதுவாயினும் கடந்த 12 ஆண்டுகளாக அரசின் சார்பில் ஒரு துரும்பும் அசைக்கப்படவில்லை. அரசுக்குச் சொந்தமான எத்தனையோ நல்ல இடங்கள் இருந்தும் வில்லங்கமான இடத்தை ஒதுக்கியதே இந்த பணி நடைபெறாமல் தடுக்கத்தான்.
இதுவே வெளிநாடாக இருந்திருந்தால் இவர் பெயரில் ஒரு ஊரையே உருவாக்கி இருப்பான். என்ன பாவம் செய்தாரோ தமிழ்நாட்டில் பிறந்து தொலைத்து விட்டார்.
பாகிஸ்தான் எல்லைப்பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினை, இலங்கைத் தமிழர்க்கு தனிநாடு, காவிரி நீர்ப்பங்கீடு இவற்றோடு நடிகர்திலகம் நினைவு இல்லம் விஷயத்தையும் நமது பேரன் பேத்திகள் பேசிக்கொண்டேயிருக்க வைத்து விட்டுப்போவோம்...
-
23rd June 2013, 07:56 PM
#726
Junior Member
Seasoned Hubber
Dear Karthik Sir,
Your views are 100 % true, not even a single word aiming a bad remark, its nothing but truth infact a very good idea from your side, But really can't figure out when it can be materialsed , but hoping our NT's soul will guide to it
Kudos Karthik sir
-
23rd June 2013, 07:57 PM
#727
Junior Member
Devoted Hubber
sun life தொலைகாட்சியில் இன்று திரை உலகின் சித்தர் சிவாஜி கணேசன் அவர்கள் மூன்று வேடங்கள் பூண்ட
தமிழ் திரை உலகில் முதல் முதலில் oscar விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் " தெய்வ மகன் "
[SIZE=3]தெய்வ மகனுக்கு முன்னும் சரி பின்னும் சரி பல படங்கள் தகுதியுடயவயாக இருந்தாலும் ஏன் அவைகள் பரிந்துரைக்கப்படவில்லை என்று என்னுடைய கேள்வி திரு.முக்தா ஸ்ரீனிவாசன் மற்றும் திரு.வியெட்னாம் வீடு சுந்தரம் அவர்களிடம் நான் சமீபத்தில் சந்தித்தபோது கேட்டேன்.
அப்போது அவர்கள் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் பொதுவாக எல்லா வருடமும் ஏதாவது ஒரு படம் டெல்லி வரை நடிப்பிற்காகவும், சிறந்த திரைபடத்திர்காகவும் சென்றுள்ளதாகவும் பல அரசியல் தாழ்புணர்ச்சி காரணமாக அவைகள் ஏதாவது ஒரு காரணம் சொல்லி விருதுக்கு பரிந்துரை மறுக்கபட்டதேன்று கூறினார்கள்.
அந்த கட்சி..இந்த கட்சியா என்று நான் கேட்டபோது ...அது எந்தக்கட்சி என்று எல்லாருக்கும் தெரியும் இவ்வளவு ஏன் சிவாஜிக்கே தெரியும். ஆனா அவர் இத பத்தி எல்லாம் கவலைப்படவே மாட்டார், அவர் பாட்டுக்கு நடிப்பு, நடிப்பு, நடிப்பு...ஆபீஸ் போயிட்டு வர்ற மாதிரிதான்.....morning 7 to midnight 2 வரைக்கும் 3 schedule ...என்று சிரிப்புடன் நிறுத்திகொண்டார்கள்.
1980 களில் இருந்து மீடியாவின் கை பலமானதை தொடர்ந்து அரசியல் நேரிடையாக விளையாடவில்லை ஆனால் லோப்ப்யிங் (Lobbying) கலாசாரம் நிறைய பின்பற்றப்பட்டது என்றும் கூறினார்கள்.[/SIZE=3]
Last edited by NTthreesixty Degree; 23rd June 2013 at 10:30 PM.
Reason: mistake of mentioning India.
-
23rd June 2013, 08:50 PM
#728
Junior Member
Senior Hubber

Originally Posted by
mr_karthik
அன்புள்ள சௌரி சார்,
என்னுடைய பதிவின் நியாயத்தை புரிந்து கொண்டதற்கும், அதற்கு நீங்கள் அளித்திருக்கும் 100 சதம் ஆதரவுக்கும் மிக்க நன்றி. நடிகர்திலகத்தின் சிலை திறப்பு விழாக்களின்போது அவரது வாரிசுகளின் பங்களிப்பை சிறப்பாக உணர்த்தியமைக்கு நன்றி. அதுபோல ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளன்று கலைத்துறை வித்தகர்களுக்கு விருதும் பணமுடிப்பும் வழங்கும் சேவையையும் கையாண்டு வருகின்றனர் என்பதும் உண்மை. இவைகளின் உச்சமாக 'நினைவு இல்லத்தையும்' நிறுவி நடிகர்திலகத்துக்கு நிரந்தரப் புகழையும், ரசிகர்களின் கனவையும் ஒருசேர நிறைவேற்றிட வேண்டும் என்பதே நமது கோரிக்கை.
நாம் வேறெதையும் கேட்கப்போவதில்லை...
Krtik sir. your brief is certainly very correct and also a good reminder to the concerned people in ANNAIILLAM and also to the state GOVT. concerned. Unfortunately nobody is not taking any steps\nor interested in the matter even after 12 years of NT'S DEMISE.
SOMETHING EITHER NINAIVU MANDAPAM OR MANIMANDAPAM HAS TO BE CREATED OTHERWISE PEOPLE WILL FORGET NT VERY SOON.
WE NEED MORE COORDINATORS TO TAKE UP THE ISSUES PROPERLY.
-
23rd June 2013, 09:12 PM
#729
Junior Member
Devoted Hubber
1972, தமிழ் திரைஉலகில் உள்ள அனைவரும் ஒரு நடிகனின் வெற்றியை பார்த்து இதைவிட உச்ச வெற்றி எவராலும் தொடமுடியாது என்று முடிவுக்கு வந்த வருடம் - ராஜா - Deviparadise திரை அரங்கில் வசூலில் புதிய புயலை உருவாகிய திரைக்காவியம்.
வெளிவந்த 50 நாட்களுக்குள் அத்தனை முந்தைய சாதனைகளையும் முறியடித்து தொடர்ந்து 107 housefull காட்சிகள் மற்றும் DEVIPARADISE அரங்கில் 50 நாள் வசூல் மட்டும் ருபாய் 4,64,457.80 பை முந்தைய அனைத்து சாதனைகளும் முறியடிக்கப்பட்டன !
தேவிபாரடீஸ் 50 நாள் வசூல் = ருபாய் 4,64,457.80 அகஸ்தியா 50 நாள் வசூல் = ருபாய் 2,00,912.21 மற்றும் ராக்சி 50 நாள் வசூல் = ருபாய் 2,00,469.45 ஆக மொத்தம் 50 நாட்களில் ருபாய் 8,66,839.46 வசூல் பிரளயத்தில் சென்னை நகரமே மூழ்கடிக்கப்பட்டது .
அந்த ராஜா திரைபடத்திலிருந்து நமது சித்தர் மிகுந்த இளமை பொலிவுடன் பெரும்அழகனாக, மிகவும் ஸ்டைல் ஆகவும் நம்முடைய வாசுதேவன் சார் தொகுக்கும் அருமையான ஆடை அலங்காரத்துடன் தோன்றும் காட்சி.
-
23rd June 2013, 11:02 PM
#730
Junior Member
Devoted Hubber
நடிப்பிற்கும் வயதிற்கும் சம்பந்தம் இல்லை என்பதை உணர்த்தும் நம் சித்தர் !
எத்தனை இளைய தலைமுறை நடிகர்கள் புது புது டெக்னிகுடன் வந்தாலும் எவ்வளவு ஆங்கிலபாணியை பின்பற்றினாலும் கண நேரத்தில் தவிடு பொடியாக்கி காட்சியை நடிப்பால் கவர்ந்து சென்றுவிடும் திறம்படைத்த சித்தர் நம் நடிகர் திலகம். அப்படி ஒரு உதாரணகாட்சி தேவர் மகன் திரைப்படத்திலிருந்து....இதன் ஹிந்தி மற்றும் கன்னட வடிவை பார்பவர்களுக்கு நான் உரைப்பது விளங்கும் !
அந்த தேவருக்கு உரித்தான கம்பீரம்..மற்றும் Body language...Body language Modulation...என்று நேற்று வந்தவர்களெல்லாம் வீம்பளக்கும் வேளையில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் , ஒரு வினாடியில் ஆத்திரம் முற்றி தனது மகனின் சட்டையை பிடித்து கோவம் கொப்பளித்து முறைத்து பின்பு ஒரு வினாடியில் தன் சுய நிலைக்கு வந்து மகன் தோள் அளவு வளர்ந்தவன் என்பதை உணர்ந்தவர் போல தூசு தட்டுவதுபோல சட்டையை சரி செய்யும் பாங்கு....இதனை மிஞ்சும் Body Language, Modulation எந்த நடிகரிடமாவது உண்டோ ?
Bookmarks