Page 97 of 399 FirstFirst ... 47879596979899107147197 ... LastLast
Results 961 to 970 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #961
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kaatu_poochi View Post
    அடடா! காணொளியின் விருந்தே படைத்து விட்டீர்களே!! நன்றி த்ரீசிக்ஸ்டி சார்.
    Dear KP sir,
    Thanks for your compliments and as i said, it is all becos of the motivation given by all of you and most importantly, Mr.Neyveliyaar, Mr.Raghavender, Mr.Gopal etc., am able to do it..

    After all, it is this motivation, that keeps us moving ahead of everyone !

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #962
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் சவுரி சார்

    கவுண்டமணி - வடிவேலு நகைச்சுவை காட்சிகளை நீங்கள் கண்டு ஆனந்தம் அடைந்திருப்பீர்கள் .அதே போல் சபாபதி - புலிகேசி வீடியோ பதிவும் அருமை . ரசித்தேன் .உங்களின் கடுமையான ஆராய்ச்சி தொடருக்கு வாழ்த்துக்கள் .
    பல வண்ண எழுத்துக்களுடன் தூய தமிழில் ஆராதனையும் அர்ச்சனைகளும் கலந்து உங்கள் பக்தியினை நீங்கள் பொறுமையுடன் அதிக நேரம் செலவழித்து எல்லோருக்கும் புரியும் வண்ணம் பதிவிடுவது பாரட்டுக்குரியது .

  4. #963
    Junior Member Newbie Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Sowri Sir,

    What a fantastic narration you have done . Sir, you are one among the top stars of our nadigarthilagam thread after Gopal Sir, Raghavendran Sir, Vasudevan Sir,evergreen pommalar sir we are very proud on reading your excellent write up

  5. #964
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Indonesia
    Posts
    0
    Post Thanks / Like

  6. #965
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by NTthreesixty Degree View Post

    திரை உலக சித்தர் சிவாஜி


    ஒரு நடிகன் என்பவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை மக்கள் முன் அந்த கதாபாத்திரமாகவே தன்னை மாற்றிக்கொள்ளும் திறம் படைத்தவனாக இருந்தால் தான் மக்கள் அதை ஏற்றுக்கொண்டு "இவரைப்போல நடிக்க இனி ஒருவர் பிறந்தால் கூட முடியாது என்று மனதார வாழ்திகூறுவர். அப்படி மக்களுடைய ஒருமித்த குரலில் வாழ்த்து பெற்று இவரை நடிப்பில் மிஞ்ச இனி ஒருவரும் வரமுடியாது என்று அகில உலகமும் ஏகமனதாக ஒத்துகொண்ட நடிகர் தான் "நடிகர் திலகம்". ][/B]
    Dear Sowri sir,

    Excellent
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  7. #966
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சவுரி,
    சமீபத்தில் திரி சுறுசுறுப்பாக இயங்குவதில் உன் பதிவுகளே பிரதானமாக உள்ளது . வாழ்த்துக்கள்.

  8. #967
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    .....
    Last edited by NTthreesixty Degree; 6th July 2013 at 09:14 AM.

  9. #968
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by NTthreesixty Degree View Post
    மக்களுக்கு தார்மீக ஆத்மார்த்த அடிப்படையில் அவர்களுக்கு நம்மால் இயன்ற நல்ல விஷயங்களை கொண்டுசெல்ல வேண்டும் என்று உண்மையான நோக்கத்தோடு

    தமிழறிஞர்கள்,
    தேசத்தலைவர்கள்,
    விடுதலைக்கு வித்திட்ட வீரர்கள்,
    விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்கள்,
    வரலாறு மற்றும் இதிகாச நாயகர்கள்,
    கலை விற்பன்னர்கள்,
    புராண நாயகர்கள்,
    சமுதாய சீர்திருத்தவாதிகள்

    என பல கதாபாத்திரங்களை, நல்லவர்களை அவர்கள் ஆற்றிய அரும்பணிகளை மக்கள் முன் தன் திரைப்படம் வாயிலாக கொண்டுசென்றவர் நடிகர் திலகம் ஒருவர் தான் !

    இந்த கால தலைமுறையினர், பொய்களை, போலிகளை, பித்தலாட்டங்களை அடையாளம் கண்டுகொண்டு, உண்மையான விஷயங்களை ஆதாரங்களோடு பார்த்து, படித்து நமது நடிகர் திலகம் என்ற உன்னத கலைஞனை, அவரின் அரும்பணியினை அவருக்கு சமுதாயத்தின் மேல் மற்ற எந்த நடிகரையும் விட ஒருபடி மேல் அக்கறை உள்ளது என்ற உண்மையை உணரும் விதமாக இந்த கட்டுரை புதிய மற்றும் இளைய தலைமுறயினர்களுக்கு, தமிழர்களுக்கு நடிகர் திலகம் ஆற்றிய தொண்டினை புரிந்துகொள்வதற்கு ஒரு அஸ்திவாரமாய் விளங்கும் என்று நினைகிறேன் :


    தமிழ்த்தாய் தன்னுடைய மகன் இவன் ஒருவன்தான் என்றல்லவா தன்னுடைய ஆசிகளை பராசக்தியின் மாபெரும் வெற்றியையும், ஒரே இரவில் தமிழ் திரைஉலகின் நிரந்தர உச்ச நட்சத்திரம் என்ற அழியா நிலையையும் வழங்கினாள் !

    அனைவரிலும் பெரியவராக தமிழ்த்தாய் விளங்குவதால் முதல் பெரியவர் வணக்கத்திற்கு உரிய தமிழ் தாய் பற்றிய கட்டுரை நிறைவு......

    இதை எழுதும்போது என்னுடைய மெய்சிலிர்கிறது..ஏனெனில் ...

    தொடரும் ....
    தொடர்கிறது ......

    என் பூர்விகம் கேரளா ...தாய்மொழி மலையாளம் !

    என்னை இந்த நிலையிலாவது தமிழை சுமாராக பேசவும் எழுதவும் படிக்கவும் ஊக்கப்படுத்தியது,உந்துதலாக இருந்ததும் (ஆம் ...தமிழை சுமாராவாவது பேசுகிறோமே எழுதுகிறோமே என்ற சிறிது கர்வம் எனக்கு உண்டு..இதை மறுப்பதற்கும் மறைப்பதற்கும் ஒன்றும் இல்லை. ) நடிகர் திலகமும் அவருடைய நடிப்பின் வீச்சும், திறனும் அழகும் ஒரே சேர கலந்த வசனம் பேசும் பாங்கும் என்பதை உணர்ந்துகொண்டதன் காரணம் !



    நமக்கு பல விஷயங்களில் முன்னோடியாக, வாழும் முறையை கற்றுகொடுத்த பெரியவர்களை அவர்களின் அரும்பணிகளை நாம் மறக்காமல் நம்மால் முடிந்தவரை அவர்கள் புகழை குறைந்தது நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கு உரைத்திடல் வேண்டும். இல்லையேல், காலபோக்கில் அவர்களை பற்றிய உண்மைகளும், அவர்களுடைய தொண்டும், புகழும், ஆற்றிய அரும்பணிகள் யாரும் அறியாவண்ணம் இருக்கும்.

    வெறும் ஒரு சிலையை, கல்வெட்டை பார்ப்பது போல தான் பார்பார்கள்.

    அந்த பெரியவர்களின் மகத்துவங்களை, திரை மூலமாக அடித்தட்டு மக்கள் மீண்டும் நினைத்துபார்க்கும் வண்ணம் அவர்களிடத்தில் கொண்டு சென்ற பெருமை, அந்த திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்று முடிவெடுத்த தயாரிப்பாளரையும் சாரும்.

    அந்த தயாரிப்பாளர், தன மனதில் இது போல ஆசை வளர்ந்தால் அதை திரைப்படமாகும் முயற்சியில் எப்போது ஈடுபடுவார்?

    அந்த கதாபாத்திரதுக்கான, அந்த கதாபாத்திரத்தை மிக சிறந்த முறையில் கையாளக்கூடிய கை தேர்ந்த நடிகர் இருந்தால் மட்டுமே அந்த தயாரிப்பாளரின் கனவு நனவாகும்
    .

    அதுமட்டும் அல்ல ! இவர் எந்த நடிகர் அதை செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைகிறாரோ, அந்த திரைப்படத்தை வாங்கி திரையிடும் விநியோகஸ்தர்கள், திரை அரங்கு முதலாளிகள் இவர்கள் அனைவரும் அந்த நடிகர் செய்தால் மிக சிறப்பாக இருக்கும் என்றும் ஒருமித்த கருத்து அவர் மூவருக்கும் இருக்கவேண்டும்...

    அதைவிட முக்கியம் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க, அதை சிறப்பாக கையாண்டு மக்களிடத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த அந்த கதாநாயகனுக்கு தைரியமும், தன் திறமை மீதும் அபார நம்பிக்கை வேண்டும் !

    அப்படி உள்ள ஒரு நடிகனால் மட்டுமே இதிகாச, சரித்திர, தெய்வாம்சம்கொண்ட கதாபாத்திரங்களை கையாள முடியும்....இதில் ஒன்று குறைந்தாலும், பலரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி அந்த கதாபாதிரதுக்கே பங்கம் ஏற்படும் !


    அப்படி இந்த ராஜ ராஜ சோழன் வரலாற்றில் ஒரு சில விஷயங்களை திரைப்படமாக திரு. உமாபதி ஆனந்த் Pictures முடிவெடுத்தபோது அதுவும் அகன்ற திரையில் ஒரு மாபெரும் சோழ மன்னனை காண்பிக்க வேண்டும் என்று முடிவுசெய்தபோது ....தமிழ் திரை உலகில் பல திறமையாளர்கள் இருந்தாலும் , அவர்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கி வருகின்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் சோழனாக சித்தரிக்கபட்டால், அது மிக சிறப்பாக அமையும் என்று ஏகோபித்த ஒப்புதலை விநியோகஸ்தர்கள், திரையிடும் திரை அரங்கு உரிமையாளர்கள் கொடுத்ததால் நடிகர் திலகம் ராஜ ராஜ சோழனாகவும், திரு.சிவகுமார் ராஜராஜன் மகன் ராஜேந்திர சோழனாகவும், திருமதி. லக்ஷ்மி அவர்கள் ராஜராஜன் மகள் குந்தவயாகவும், திரு.முத்துராமன் அவர்கள் சாளுக்ய விமலாதித்யனாகவும் நடிக்க வைக்க முடிவெடுத்து தமிழின் முதல் Cinemascope வண்ணப்படமாக ராஜ ராஜ சோழன் 1973இல் வெளிவந்தது.

    ராஜராஜ சோழன் வரலாற்றில் நடிக்க ஏன் நடிகர் திலகம் ஒத்துகொண்டார் ? அதற்க்கு அவர் கூறும் காரணம் என்ன ?

    "நாம் மக்களால் தான் அவர்கள் கொடுக்கும் பணத்தால் தான் உயர்ந்த ஒரு நிலையை அடையமுடிந்தது..ஆகவே அவர்களுக்கு அந்த நன்றியை செலுத்தவேண்டும் என்ற காரணத்தாலும், சமுதாயத்தில் நம்முடைய கடமை என்று உள்ளதாலும் , நம்மால் முடிந்தவரை தொண்டு செய்த நல்லவர்களையும் அறிஞர்கள் அவர்கள் உழைப்பு தியாகம் இவற்றை மக்கள் முன் கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கத்தால் விளைந்தது - என்று குறிப்பிடுகிறார்".

    இலங்கை வானொலியில் அப்துல் ஹமீது அவர்களுடன் உரையாடல் பதிவு இது..!



    Last edited by NTthreesixty Degree; 6th July 2013 at 09:21 AM.

  10. #969
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தால் நினைவுபடுத்தப்பட்ட பெரியவர்கள் வரிசையில் அடுத்து இடம்பெறுவது :


    மாடுகட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்த சோழ நாட்டின் பெருமையை இவ்வையகம் உள்ளவரை நிலைத்திருக்க செய்த

    ஏடு தந்தானடி தில்லையிலே....








    ராஜ ராஜ சோழனை பற்றி அறிவதற்கு முன்னர் சோழர் பரம்பரையை பற்றி அறிதல் நலம் - உங்கள் அனைவர்காகவும் -


    சோழர் பரம்பரையின் ஆட்சி மன்னன் விசயாலயன் 846 முதல் 871 வரையிலும்
    அவருக்கு பிறகு அவரது மகன் ஆதித்யன் 871 முதல் 907 வரையிலும்,
    பிறகு இவர் மகன் பராந்தகன் 907 முதல் 955 வரையிலும்,
    பராந்தகனின் மூன்று மகன்கள் ராஜாதித்யன், கண்டராதித்த்யன், அரிஞ்சயன் மூவருமாக
    பின்பு கண்டராதித்த்யன் மகன் மதுராந்தக உத்தம சோழன் , அரிஞ்சயன் மகன் சுந்தர சோழனும் 985 வரை ஆண்டனர்.
    அதற்க்கு பிறகு சுந்தர சோழனின் இரு மகன்களான கரிகாலனும், பின்னர் ராஜ ராஜ சோழனும் (985-1016) ஆண்டார்கள்,
    பின்னர் அவருடைய மகன் ராஜேந்திரன் 1012-1044 ராஜேந்திரன் 1 இக்கு பிறகு,
    அவர் மகன்கள் ராஜாதிராஜன், ராஜேந்திரன் 2 , வீர ராஜேந்திரன் இவர்களில், ராஜேந்திரன் 2 மன்னராக ஆண்டார். அவர்க்கு ஆண் வாரிசு கிடையாது . மதுராந்தகி என்ற பெண் குழந்தை மட்டுமே... ஆகையால் வீர ராஜேந்திரனின் மகன் அதி ராஜேந்திரன் ஆண்டான். இவர்களில் கரிகாலன் சோழ மரபினர் என்றும் மற்றவர் இடைகால சோழர்கள் என்றும் அழைக்க பட்டனர்.

    ராஜ ராஜ சோழனின் மகள் குந்தவை சாளுக்ய வம்சாவழி விமலாதித்யனை மணந்து அதன் மூலம் ராஜராஜன் நரேந்திரன் என்ற குழந்தையை ஈன்றெடுத்தாள்.

    இவனும் சாளுக்ய வம்சவழியே. ராஜராஜன் நரேந்திரன் ராஜேந்திர சோழன்-1 மகள் அம்மன்கதேவியை மனமுடித்ததில் குலோத்துங்கன் -1 ஜனனம் .
    குலோத்துங்கன் 1 வளர்ந்து ராஜேந்திரன் 2 மகள் மதுராந்தகியை மணமுடித்து அவர்களுக்கு நான்கு மகன்கள் பிறகின்றனர். அவர்கள் சாளுக்ய சோழர் என்று அழைக்கபடுகின்றனர்.

    மேற்கூறியவை சுருக்கமாக சொன்ன சோழர் வழி, சாளுக்ய வழி, சோழ மரபு வம்சத்தின் தகவல்களாகும்.

    பழங்கால ஏடுகளில் ராஜராஜசோழனை பற்றியுள்ள உவமை குறிப்புகள் :


    ராஜராஜன் யானை மீது அமர்ந்து வரும்போது எதிரே கூட்டமாக கேசரி (சிங்கம்) வந்தாலும் ஒருகணம் திகைத்து, சிதறி நாலு பக்கம் தலை தெறிக்க ஓடும் என்று கூறுகிறது..!

    அரசவையில் ராஜ ராஜன் வருகையில் நேர்கொண்ட பார்வை, நிமிர்ந்த நன்னடை, வலக்கரம் சென்கோலிலும் இடக்கரம் சிம்ஹாசனபிடியிலும் வைத்து கோரிக்கையை கேட்டு, தீர்ப்பு சொல்லும்பாங்கு இவை மாநிலத்து மக்களெல்லாம் இமைகொட்டமால் இறைவனை பக்தியுடன் காண்கின்ற பாங்கினை அரசவையில் தோற்றுவித்தன..!

    பெரும் குற்றும் செய்தவன் கூட கொற்றவனின் பார்வை ஒருமுறை பார்க்கும் பாந்தத்தில் பனி போல நெஞ்சுருகி மனிப்பு கோருவான் ..

    போர்க்களத்தில் ராஜராஜன் வாள் சுழலும் வேகம் சக்ராயுதம் போல பல திசையிலும் தலைகளை கொய்யும் பூஜ வலிமை கொண்டது என்றும் அகன்ற மார்பில் அந்த கவசம் அமர என்னபாக்கியம் செய்ததோ..என்றும் குறிபிட்டுள்ளது

    இனி நமது நிலைக்கு வருவோம் -


    ராஜராஜ சோழனை பற்றி வரலாற்றில் குறிப்பிட்டிருப்பதை போல நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, தந்தையின் கனிவு கொண்ட கண்கள், அதே நேரம் அரசவையில் கம்பீர தோற்றம், தவறு செய்பவர்களை பார்வையால் தண்டிக்கும் பாங்கு...இப்படி போகிறது ராஜராஜனை பற்றிய வர்ணனை.

    தமிழ் ஆர்வம் பெருகிவரும் காட்டாற்று வெள்ளம் போல, வார்த்தை ஜாலங்கள் அர்ஜுனன் வில்லிலிருந்து விடுபட்ட அம்புகள் போல் ...திறமையில் முதன் முதல் திறமை..பலகுரலில் பேச பழகி தேர்ச்சிபெற்ற வேந்தன்...இப்படி சொல்லிகொண்டே போகலாம்...!

    ராஜராஜனின் இவ்வளவு மிடுக்கும், ஆண்மையும், கம்பீரமும், தோற்றப்பொலிவும், பேசும் திறமும், ஒருங்கே பெற்ற ஒரு நடிகன் தமிழ் திரை உலகில் யார் என்ற கேள்வி எழும்போதெல்லாம் எந்த சந்தேகங்களுக்கும் இடம் கொடுக்காமல் அனைவரும் ஒருமித்த குரலில் தஞ்சை பெரியகோவிலிலுள்ள மணியின் " நங் " என்ற ரீங்காரமிடும் நாதம் போல உரைப்பது திரை உலக சித்தர் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தான் என்பதை வீடறியும், நாடறியும், தமிழர்கள் உள்ள புவி அறியும்...அதனுடன் நாமும் அறிவோம்..!

    ஒரு மன்னனுக்குரிய அனைத்து லக்ஷணங்களும் ஒருங்கே பெற்ற நடிகர் திலகம்...தஞ்சை பெரியகோயில் நந்திக்கு, கோவில் கும்பாபிஷேக பூஜை செய்யவரும் காட்சியை பாருங்கள்....!


    http://www.youtube.com/watch?feature...&v=5DhrsSQ-2aY
    Last edited by NTthreesixty Degree; 6th July 2013 at 09:44 AM.

  11. #970
    Junior Member Newbie Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Sowri Sir,

    No words found to appriciate your writeup. You are one among the sidpurusar on writing on our acting god like super writers Gopal,Vasudevan,Raghavendran Sir.
    Keep it up.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •