Page 107 of 399 FirstFirst ... 75797105106107108109117157207 ... LastLast
Results 1,061 to 1,070 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #1061
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Last edited by joe; 11th July 2013 at 10:42 PM.
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1062
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மூன்றெழுத்துக்களில் மூவுலகையும் முழுதாய் அறிந்த
    மூ நாயகனின்
    மூச்சுக்கு மூச்சுக்கு மூச்சாய் நின்ற
    எங்கள் விநாயகனைப் பற்றிய
    நெஞ்சைத் தொடும் நெகிழ் காணல் ....
    மிக்க நன்றி ஜோ சார்...



    மீனைத் தருவதைக் காட்டிலும் அதற்குத் தூண்டில் போடக் கற்றுக் கொடுப்பதே சிறந்தது ... என்ற
    தங்களின் கருத்தைத் தான் நடிகர் திலகம் தன் வாழ்நாள் முழுதும் கூறி வந்தார்,
    அதைப் பேணி வந்தார்...
    கொடையும் அது தான் என்றார்..

    ஒரு மனிதனுக்கு முக்கியம் Exit
    அதைச் சரியாய் செய்து சிறப்படைந்தவர்
    நடிகர் திலகம்
    என்ற தங்கள் கூற்று
    உண்மையிலேயே நம்
    அனைவர் நெஞ்சிலும்
    உருக்கத்தைத் தந்து விட்டது.

    நடிகர் திலகம் தன் நாற்காலியை
    சும்மா விட்டுச் செல்லவில்லை...
    தங்களைச் சுட்டி விட்டுத் தான்
    சென்றிருக்கிறார்...
    அமருங்கள்...
    அது உங்களுக்குத் தான்...
    Last edited by RAGHAVENDRA; 11th July 2013 at 10:53 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #1063
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    மதுரை மாநகரில் மட்டுமல்ல, மதுரை மாவட்டத்தில் பல இடங்களிலும் கர்ணன் திருவிழா நாளை முதல் மீண்டும் அரேங்கேறுகிறது.மதுரையில் அண்ணாமலை திரையரங்கிலும் திண்டுக்கல் நாகா திரையரங்கிலும்,சிவகாசி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய ஊர்களிலும் நாளை 14ந் தேதி வெள்ளி முதல் திரையிடப்படுகிறது கர்ணன். ஆயிரம் கரங்கள் நீட்டி ஆதவன் மகனை அரவணைக்க கூடல் மாநகரம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

    அன்புடன்

  5. #1064
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    ராகவேந்தர் சார் இங்கே குறிப்பிட்டுள்ளது போல் காலத்தை வென்ற காவியம் பாச மலர் அடுத்த மாதம் முதல் [ஆகஸ்ட் மாதம்] திரையரங்குகளில் வெற்றி பவனி வர இருக்கிறது. சத்யம் திரையரங்க வளாகத்தில் கர்ணன் படம் போலவே இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடக்க இருப்பதாக தெரிகிறது. ஆனால் ஜூலை 20 ந் தேதி சனிக்கிழமை அன்று ட்ரைலர் வெளியீட்டு விழா இருக்குமா என்பது பற்றி ஒரு ஆலோசனை கூட்டம் நாளை நடக்க இருப்பதாக செய்தி.

    ஒன்று மட்டும் உறுதி. இன்று மாலை முதல் சென்னை முதல் குமரி வரை இந்த செய்தி தீயாக பரவி நடிகர் திலகத்தின் ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியிருக்கிறது.

    அன்புடன்

  6. #1065
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் இறுதி ஊர்வலம் போக் ரோடிலிருந்து புறப்பட்டு பெசன்ட் நகர் மைதானத்தை அடையும் வரை அதன் முன்னாள் நடந்து சென்றவர் நமது ஹப்பர் கம் நடிகர் மோகன்ராம் அவர்கள். அந்த ஊர்வலத்தில் அவர் கண்ட காட்சிகளை என்னிடம் பலமுறை விவரித்துக் கூறியிருக்கிறார். அவற்றில் ஒன்றுதான் ஒரு பழுத்த பழம் போன்றிருந்த ஒரு அந்தணர் கைகூப்பி வணங்கி கூறிய "பத்மநாபா போயிட்டியா?" என்ற வார்த்தைகள்.அதை கமல் தன பாணியில் பேட்டியில் சொன்ன விதம் அந்த காட்சியை மீண்டும் ஒரு முறை மனக் கண்ணில் காண முடிந்தது.

    அது போன்றே சமூகத்தின் அடித்தட்டில் விளிம்பு நிலை மனிதர்களாக வாழ்பவர் முதல் சமூகத்தின் மிக உன்னத நிலையில் வாழ்க்கை அமையப் பெற்றவர்கள் வரை அந்த வழியனுப்பு விழாவில் அந்த மனிதனோடு தங்களுக்கு இருந்த தொடர்பை வெளிப்படுத்திய விதங்கள் குறித்தும் மோகன்ராம் பகிர்ந்துக் கொண்டிருக்கிறார். வண்டி பின்னாலேயே ஓடி வந்த தினசரி பூ விற்று வயிற்றை கழுவும் பெண் முதல் [சரஸ்வதி சபதம் நினைவுக்கு வந்தது என்ற கமலின் கமன்ட்] மலேஷியா மந்திரி வரை தங்கள் சொந்த மனிதன் என்ற உணர்வில் வந்ததை சிவாஜியின் வாழ்க்கை தடங்கள் என்று அழகான பெயரிட்டு வாழ்க்கையின் exit இப்படி இருக்க வேண்டும் என்று சொல்லிய கமலுக்கு சிரந்தாழ்ந்த நன்றி.

    இந்த காணொளியை இங்கு பதிவு செய்த ஜோ அவர்களுக்கு மனங்கனிந்த நன்றி.

    அன்புடன்

  7. #1066
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நடிகர் திலகம்- பீம்சிங் கூட்டணியில் வெளி வந்த பா வரிசைப் படங்கள் ஒவ்வொன்றும் ஒரு ரத்தினம். உலக வாழ்க்கையில் பல்வேறு வகைப்பட்ட மனிதர்களையும் வெவ்வேறு குணாதிசயங்களை கொண்டவர்களையும் நாம் சந்திக்கிறோம். அப்பேற்பட்ட மனிதர்களின் குடும்ப வாழ்க்கையில் அவர்களின் ஒரு சில குணத்தினால் ஏற்படும் பிரச்சனைகளையும் அவற்றின் தீர்வுகளை சொல்லும் படங்களாகவே சிவாஜி பீம்சிங் கூட்டணி படங்கள் அமைந்தன. மாபெரும் வெற்றியும் அடைந்தன.

    அப்படி திமிர் அல்லது பணம் கொண்டவனின் அகங்காரம் அந்த ஈகோவினால் ஏற்படும் கோபதாபங்கள் அதன் மூலம் அந்தக் குடும்பத்தில் ஏற்பட்ட சூறாவளி என்ற கதையை உயிரோட்டமுள்ள சித்திரமாக மாறியது. அதுதான் நடிகர் திலகம் சிவலிங்கம் என்ற பணக்கார திமிர் கொண்ட குடும்பத் தலைவனாக வான்புகழ் கொண்ட பார் மகளே பார் திரைக் காவியம். நடிகர் திலகமே இந்தப் படத்தை பற்றி குறிப்பிடும் போது "ஹாலிவுட் இயக்குனர் டேவிட் லீன் இந்தப் படத்தை பார்த்து விட்டு என் வீட்டிற்கு வந்து பாராட்டி விட்டுப் போனார்" என்று சொல்லியிருப்பார்.

    அந்த காவியத்தின் பொன் விழா ஆண்டு நிறைவு நாளை வருகிறது.ஆம் 1963 ஜூலை 12ந் தேதி வெளியான பார் மகளே பார் 50 பொன் விழா வருடங்களை நிறைவு செய்கிறது. இந்த சிறப்பான நிகழ்வை முன்னிட்டு நமது NT FAnS அமைப்பின் சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை [ஜூலை 14] அன்று மாலை பாரத் கலாச்சார் அமைப்போடு சேர்ந்து தி.நகரில் அமைந்துள்ள Y G P அரங்கத்தில் பார் மகளே பார் திரையிடப்படுகிறது.

    அனைவரும் வருக!

    அன்புடன்

  8. #1067
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி joe ,முரளி,ராகவேந்தர் சார்.

  9. #1068
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Zambia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    மூன்றெழுத்துக்களில் மூவுலகையும் முழுதாய் அறிந்த
    மூ நாயகனின்
    மூச்சுக்கு மூச்சுக்கு மூச்சாய் நின்ற
    எங்கள் விநாயகனைப் பற்றிய
    நெஞ்சைத் தொடும் நெகிழ் காணல் ....
    மிக்க நன்றி ஜோ சார்...



    மீனைத் தருவதைக் காட்டிலும் அதற்குத் தூண்டில் போடக் கற்றுக் கொடுப்பதே சிறந்தது ... என்ற
    தங்களின் கருத்தைத் தான் நடிகர் திலகம் தன் வாழ்நாள் முழுதும் கூறி வந்தார்,
    அதைப் பேணி வந்தார்...
    கொடையும் அது தான் என்றார்..

    ஒரு மனிதனுக்கு முக்கியம் Exit
    அதைச் சரியாய் செய்து சிறப்படைந்தவர்
    நடிகர் திலகம்
    என்ற தங்கள் கூற்று
    உண்மையிலேயே நம்
    அனைவர் நெஞ்சிலும்
    உருக்கத்தைத் தந்து விட்டது.

    நடிகர் திலகம் தன் நாற்காலியை
    சும்மா விட்டுச் செல்லவில்லை...
    தங்களைச் சுட்டி விட்டுத் தான்
    சென்றிருக்கிறார்...
    அமருங்கள்...
    அது உங்களுக்குத் தான்...
    நடிகர் திலகம் குறித்த கமலின் கருத்து மிகவும் டச்சிங்..
    அதற்கு உங்கள் பதிவு அருமை..ராகவேந்திரா சார்.

    விடியோ லிங்க் தந்த ஜோ அவர்களுக்கும் நன்றி.
    Last edited by ganse; 12th July 2013 at 06:13 AM.

  10. #1069
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Nigeria
    Posts
    0
    Post Thanks / Like
    Superb..

  11. #1070
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    ராகவேந்தர் சார் இங்கே குறிப்பிட்டுள்ளது போல் காலத்தை வென்ற காவியம் பாச மலர் அடுத்த மாதம் முதல் [ஆகஸ்ட் மாதம்] திரையரங்குகளில் வெற்றி பவனி வர இருக்கிறது. சத்யம் திரையரங்க வளாகத்தில் கர்ணன் படம் போலவே இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடக்க இருப்பதாக தெரிகிறது. ஆனால் ஜூலை 20 ந் தேதி சனிக்கிழமை அன்று ட்ரைலர் வெளியீட்டு விழா இருக்குமா என்பது பற்றி ஒரு ஆலோசனை கூட்டம் நாளை நடக்க இருப்பதாக செய்தி.

    ஒன்று மட்டும் உறுதி. இன்று மாலை முதல் சென்னை முதல் குமரி வரை இந்த செய்தி தீயாக பரவி நடிகர் திலகத்தின் ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியிருக்கிறது.

    அன்புடன்
    திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு

    கர்ணனின் வெற்றிபவனி தொடர்கிறது என்று சொல்லுங்கள். இதே போல தமிழகத்தின் பல இடங்களிலும் நம்முடைய சித்தரின் திரைப்படம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது...நமக்குதான் அந்த தகவல் கிடைப்பதில்லை என்று கருதுகிறேன். நம்முடைய நெட்வொர்க்கை இன்னும் சிறிது பலப்டுத்தினால் பல உண்மைகள் வெளியாகலாம்..வசூல் சாதனைகள் உட்பட ...!!!


    பாசமலர் செய்தியை பார்த்ததும்...மிகுந்த சந்தோஷம் !

    அதுவும் Trailor நிகழ்ச்சியை பற்றி குறிப்பிடும்போது...இப்போதே எனது காதுகளுக்கு ஒரு சாரர் " ஆமாண்டா...ஆனா ஊனா உடனயே சத்யம்ல trailor விழானு போட்ருவாங்களே " என்ற குரல் ஒலிக்கிறது கேட்கிறது !

    1954 முதல் கேட்கின்ற தாழ்புனர்சியின் ஓலம் அல்லவா ...! அதனை ஒதுக்கி ஓரம் தள்ளிவிட்டு முன்பு செல்லவேண்டியதுதான்.

    பாசமலர் வெற்றியடைய நம் அனைவரின் வாழ்த்துக்கள். நம் திரை உலக சித்தரின் ஆசிகள் எப்போதுமே உண்டு.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •