-
1st September 2013, 11:20 PM
#171
Senior Member
Diamond Hubber
'வெண்ணிற ஆடை' படத்தில் வரும் "ஒருவன் காதலன்... ஒருத்தி காதலி".... பாடல் எனக்கு மிக மிக பிடித்த பாடலாகும். எப்போதும் என் வாய் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் பாடல் அது.
அந்த
"உறவு ஓஹோஹோ என்றது" அட்டகாசத்திலும் அட்டகாசம். அதைத் தொடர்ந்து வரும் "என்றதோ" தொடர்ச்சி இன்னும் பிரமாதம். ஸ்ரீனிவாசும், சுசீலாவும் பின்னி எடுத்திருப்பார்கள். ஸ்ரீகாந்திடம் அநியாத்திற்கு கூச்சம் தெரியும். வெண்ணிற ஆடை நிர்மலா அழகு. என் மனதை கொள்ளை கொண்ட அருமையான பாடல். பாருங்களேன்.
-
1st September 2013 11:20 PM
# ADS
Circuit advertisement
-
2nd September 2013, 04:48 AM
#172
Junior Member
Newbie Hubber
என் அபிமான பாடகி சுசிலா ஜாலம் புரிவார். என்றது என்பதில் கிக் ஆன கொக்கி போட்டு வா வா என்று அழைத்து மூன்றாவது என்றது என்று emphatic tone .
ஒஹொஹொஹொஹொஹொ என்ற அருமையான ஹம்மிங். சுசிலா பாட்டிற்கு ஏற்ற pitch ,tone எடுக்கும் அழகே அழகு. சில எல்.ஆர்.ஈஸ்வரி பாட வேண்டிய பாடல்கள் இவருக்கு வந்து விடும். அதையும் இவர் பாடும் அழகே அழகு. PBS ,மேடம் ஸ்கோர் பண்ண விட்டு விட்டு தோதாய் தொடர்வார் பாருங்கள் ,அடடா!!!
இது அற்புதமான பாடல். இதை விட்டு ஒரு சோதா பாடல் சித்திரமே ஹிட் அடித்தது எனக்கு வருத்தமே.
அதே போல பார் மகளே பார் படத்தில் என்னை தொட்டு சென்றன தென்றல்.பாட்டில் வாவென்று நீ சொல்ல மாற்றம் கண்டேன் பாட்டில் வா சொல்லும் அழகு, கலை கோவில் படத்தில் நான் உன்னை சேர்ந்த செல்வம் பாட்டில் வாட்டும் என்ற சொல்லில் வாட்டுவார் இந்தியாவின் மிக சிறந்த versatile பாடகி.
ஒருவன் காதலி பாடலை "நெஞ்சிருக்கும் வரை" டீசிங் செய்யும் இடத்தில் உபயோகிப்பார் ஸ்ரீதர்.
-
2nd September 2013, 11:37 AM
#173
Senior Member
Veteran Hubber
அன்புள்ள கோபால் சார்,
'திக்கற்ற பார்வதி' பற்றிய தங்கள் பதிவுகளுக்கு நன்றி. தங்கள் மற்றும் ராகவேந்தர் பதிவுகள் படத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகின்றன. 1976-ல் ஸ்ரீகாந்த் விட்ட அறிக்கைகள் பேட்டிகள் பற்றி நீங்கள் கூறியுள்ளது சரியே. அதன் காரணமாக நடிகர்திலகத்தின் அன்பையும், ரசிகர்களின் அபிமானத்தையும் இழந்தார் என்பது உண்மை. அந்த இடத்தை பின்னர் ஜெய்கணேஷ் பிடித்தார்.
பின்னர் தவறான சமயத்தில் (1988) நடிகர்திலகம் தனிக்கட்சி துவங்கியபோது, 1976-ல் ஸ்ரீகாந்த் தனது பேட்டியில் சொன்னது போல "இந்திரா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததற்கு மாறாக, பெருந்தலைவர் விட்டுச்சென்ற ஸ்தாபன காங்கிரசை நடிகர்திலகம் தலைமையேற்று நடத்தி இருக்கலாம்" என்று சொன்னது சரியோ என்று தோன்றியது. (பெருந்தலைவர் மறைவுக்கு பின்னர் மிகப்பெரிய தொண்டர்கள் பலம் கொண்ட ஸ்தாபன காங்கிரஸ் சரியான தலைமையின்றி தவித்தது உண்மையே).
-
2nd September 2013, 11:40 AM
#174
Senior Member
Veteran Hubber
அன்புள்ள ராகவேந்தர் சார்,
திக்கற்ற பார்வதி பற்றிய தங்கள் மேலதிக தகவல்களுக்கு மிக்க நன்றி. இவை யாவும் நான் உட்பட பெரும்பாலோர் அறிந்திராதவை. சுவையான தகவல்களுக்கும் அதற்கு வலு சேர்க்கும் அறிய ஆவணங்களுக்கும் மிக்க நன்றி. தங்கள் இருவரின் பங்களிப்பால் தற்போது திக்கற்ற பார்வதி சற்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது...
-
2nd September 2013, 12:07 PM
#175
Senior Member
Veteran Hubber
Dear Vasudevan sir,
Your postings on 'Vennira Aadai' still are very superb. (Dont mistake me, my Tamil font always doing 'kirukkuththanam' when typing, and giving lot of trouble for me, thatswhy English).
The stills you have posted are giving more glorious to the thread. Thanks for your efforts.
Your narration about the song "oruvan kaadhalan, oruththi kaadhali" also very nice.
Thanks a lot for your postings.
-
2nd September 2013, 04:47 PM
#176
திக்கற்ற பார்வதி
திக்கற்ற பார்வதி பற்றிய ராகவேந்திர சார் குறிப்புகள் சூப்பர்
அந்த படத்தில் வாணி குரலில் "ஆகாயம் மழை பொழிஞ்ச பூமி க்கு கொண்டாட்டம் " என்ற பாடல் ஒன்று மிக பிரமாதமாக இருக்கும்
என் உடைய வேண்டுகோள் ஏற்று திரியை உயிர்ப்பித்த அணைத்து சகோதர்களுக்கும் நன்றி
நான் ஏற்கனவே ஸ்ரீகாந்த் பற்றிய குறிப்பில் கூறி இருந்தேன் ஜெய் கணேஷ் மற்றும் விஜயகுமார் அவர்களுக்கு சிவாஜி சார் கொடுத்த வாய்ப்புகளில் பாதி ஸ்ரீகாந்த் பெற்று இருந்தால் மிக பெரிய அளவில் வந்து இருப்பார் ஆனால் அவரும் வாயால் கட்டார் போக் ரோடு நம்பி நான் இல்லை என்று அறிக்கை வேறு .
-
2nd September 2013, 04:59 PM
#177
கோபால் சார்
ஜெய் கணேஷ் விட ஸ்ரீகாந்த் பெட்டெர் சார் சதுரங்கம் (பழைய),பைரவி,அன்னக்கிளி, நீதிக்கு முன் நீயா நானா,இதயதில் ஒரு இடம்,வாழ்ந்து கட்டுகிறேன்,அன்னபூரணி,உண்மையே உன் விலை என்ன,யாருக்கும் வெட்கமில்லை,திருமாங்கல்யம்,பயணம்,அச்சாணி,வட்டத்திற ்குள் சதுரம், ஒரு வீடு இரு உலகம் போன்ற படங்களில் சற்று மாறுபட்ட நடிப்பை வெளி படுத்தி இருப்பார் அதிலும் நீதிக்கு முன் நீயா நானா நம்ம கோமதி சங்கர் பிலிம்ஸ் (பொன்னுஞ்சல் அவன் ஒரு சரித்தரம்,ஒருக்கு ஒரு பிள்ளை ) விஜயகுமார் மற்றும் லதா நடித்த படம் அந்த படத்தில் இறுதியில் தான் ஸ்ரீகாந்த் வருவர் .படம்
பெரிய போர் ஸ்ரீகாந்த் வந்தவுடன் எழுந்த கைத்தட்டு (நெல்லை ரத்னாவில் ) இன்னும் என் நினைவில் உள்ளது
-
17th August 2014, 04:41 PM
#178
Senior Member
Veteran Hubber
எங்கள் முரளி சார் அவர்கள் 'காதலிக்க நேரமில்லை' திரைக் காவியத்தின் பொன்விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்ததை படித்தபோது, ரசிகர்களின் எண்ணங்களை அறிந்த ஆர்வலர் திரு ஒய்.ஜி.மகேந்திரன் அவர்களுக்கு இன்னொரு கோரிக்கை வைக்கலாம் என்று தோன்றுகிறது.
1965-ம் ஆண்டு வெளியான 'வெண்ணிற ஆடை' படம் அடுத்த ஆண்டு பொன்விழா நிறைவைக் காண்கிறது. அதற்கும் அவர் விழா எடுத்து கௌரவிக்க வேண்டும். காதலிக்க நேரமில்லை படத்தின் அனைத்து கலைஞர்களும் பங்கேற்றதுபோல
எங்கள் முரட்டு ஆணழகன், தென்னகத்து ஓமர்ஷெரீப், தென்னாட்டு சத்ருகன் 'ஸ்ரீகாந்த்', வெண்ணிறகொடியிடை நிர்மலா, நகைச்சுவை தென்றல் மூர்த்தி, ஆஷா உள்பட அனைத்து கலைஞர்களும் பங்கேற்று கௌரவிக்கப்பட வேண்டும். ('மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள்' வரமாட்டார். தனக்கு இவ்வளவு பெரிய வாழ்வை அளித்துவிட்டு சென்ற தன் தலைவரின் ஆயிரத்தில் ஒருவன் விழாவுக்கே அவர் வரவில்லை).
நடக்கும் என நம்புவோம், இறைவன் அருளால்....
-
18th August 2014, 05:21 PM
#179
உங்கள் கருத்தை வழி மொழிகிறேன் dear kaarthik sir
-
25th August 2014, 01:45 PM
#180
Junior Member
Platinum Hubber
Last edited by esvee; 25th August 2014 at 02:03 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks