-
9th September 2013, 09:55 PM
#1821
சில நாட்கள் இடைவெளிக்கு பின் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
புதிய பறவை கோபால் ஞான ஒளி ஆண்டனி ஆகிய இருவரையும் ஒப்பிட்டு வாசு அவர்கள் எழுதிய comparative study மிக மிக சுவையாக அந்த இரண்டு பாத்திரங்களையும் மீண்டும் கண் முன் கொண்டு வருவதாக அமைந்திருந்தது. வாழ்த்துகள் வாசு.
நண்பர் கார்த்திக் அடிக்கடி விஷயம் ஒன்றை குறிப்பிடுவார். என்னவென்றால் சென்னை, மதுரை போன்ற நகரங்களில் பழைய நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்வது போல் திருச்சி மாநகரில் நடிகர் திலகத்தின் பொற்கால சாதனை நாட்களை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள யாரேனும் இருந்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று குறிப்பிடுவார். அந்த குறை போக்கும் வண்ணம் அங்கத்தினராக வந்து திருச்சி மாநகரில் மறு வெளியீடுகளில் நடிகர் திலகத்தின் படங்கள் சாதனை புரிந்த வரலாற்றை இங்கே பகிர்ந்துக் கொண்ட நண்பர் ராமச்சந்திரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
புதிய வரவாக வருகை தந்திருக்கும் முசிறியின் மைந்தன் பொன்.ரவிச்சந்திரன் அவர்களுக்கு எப்போதும் புதியவர்களை வாழ்த்துவது போல் நல்ல இடம் நீங்கள் வந்த இடம் என கூறி வரவேற்கிறேன். நடிகர் திலகத்தின் பல்வேறு பரிமாணங்களை நீங்கள் ரசித்த விதம் மற்றும் திருச்சியிலும் சுற்று வட்டாரங்களிலும் நடிகர் திலகத்தின் படங்கள் செய்த சாதனைகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நடிகர் திலகத்தின் முதல் படத்தையே 245 நாள் படமாக்கிய மாநகர் அல்லவா! வாழ்த்துகள்.
அன்புடன்
-
9th September 2013 09:55 PM
# ADS
Circuit advertisement
-
9th September 2013, 10:13 PM
#1822
Senior Member
Devoted Hubber
70 வதுகளில் எனக்கு தழிழ்நாட்டை சேர்ந்த
இல .நல்லதம்பி (திண்டுகல்)
எஸ் .செல்வராஜ் (நாகர்கோவில்)
டீ .எத்திராஜூலு (சென்னை)
ஆர் .ராஜ்குமார் (போவி தெரு; பெங்கழூர்)
அனந்தராஜ் (அருப்புகோட்டை)
ஆகிய நண்பர்களுடன் கடிதத்தொடர்பாடல் மூலம் நடிகர்கள்கள்திலகத்தின் பட விபரங்கள் பத்திரிகைகள்
நோட்டீஸ் மலர்கள் முதலியனவற்றை பரிமாறிக்கொண்டேன்.காலப் போக்கில் பல நண்பர்களுடன் தொடர்பு அற்றுப்போய் கடைசியாக
அருப்புக் கோட்டை நண்பர் ஆனந்தராஜ் அவர்களுடன் தொடர்பு இருந்ததுநாட்டப்பிரச்சினையில் அதுவும் அற்றுப்போய்விட்டது.
(மேலே குறிப்பிட்டுள்ள நண்பர்கள் எவரையேனும் திரு செல்வராஜ் தவிர hub நண்பர்களுக்கு தெரியுமாயின் அறியத்தாருங்கள்)
அண்மையில் இந்தியா வந்திருந்த பொழுது திரு செல்வராஜ் அவர்களை கன்னியாகுமரியில் சந்தித்தேன் .
மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவெனில்தொலைபேசி தொடர்பில் இருந்த hub நண்பர்களான திரு ராகவேந்திரா சார் திரு முரளி சார் ஆகியோரை சந்திக்க முடியாமல் போனதுதான்.அதற்காக இருவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன்.இதுவிடயமாக திரு ராகவேச்திரா சாருடன் தொடர்பு கொண்டு விபரம் கூறியிருந்தேன். திரு முரளி அவர்களுக்குகோல் எடுத்திருந்தேன் ஆனால் தொடர்புகொள்ளமுடியவில்லை
-
10th September 2013, 06:26 AM
#1823
Senior Member
Diamond Hubber
பொற்கால நாயகரின் புகழை இங்கு பாட வந்த திரு. பொன்.ரவிச்சந்திரன் அவர்களே! தங்களை வரவேற்பதில் மிக்க உவகை அடைகிறேன். வருக! வருக!
-
10th September 2013, 06:48 AM
#1824
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு சிவா
பெங்களுர் அலசூர் போவி தெருவில் இருந்தவர் திரு ஜெயகுமார் - நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர் .
[ராஜ்குமார் அல்ல ].எங்களின் நண்பரும் கூட . 1971-2000 வரை நன்கு அறிமுகமானவர் .
1971களில் தமிழ்நாடு - இலங்கை பகுதிகளில் வசித்த முக்கியமான மக்கள் திலகம் - நடிகர் திலகம்
மன்ற நிர்வாகிகள் அடிக்கடி கடித போக்கு வரத்து மூலம் நட்பு வட்டம் பெருகியது .
குறிப்பாக சென்னை - மதுரை - திருச்சி - சேலம் - கோவை - நெல்லை - யாழ்ப்பாணம் - கொழும்பு
நாகர்கோயில் - வேலூர் - போன்ற நகரங்களில் இருந்து வாரத்திற்கு 10 கடிதங்கள் போக்கு வரத்து
இருக்கும் . அதில் முக்கியமான தகவல்கள் என்ன வென்றால்
படம் ஓடும் விபரம்
விளம்பரங்கள்
நோட்டீஸ்
சாதனை தகவல்கள்
ஒப்பீடு நிலவரம்
வர இருக்கும் படங்கள் பற்றிய நிலவரம்
புள்ளி விபரம்
கருத்து பரிமாற்றம்
என்று கடித போக்கு வரத்து இருந்தது . நட்பு ரீதியில் நாங்கள் எங்களுக்கு கிடைத்த தகவல் வைத்து நேருக்கு நேர் சந்தித்து விவாதம் நடத்திய அந்த இனிமையான நாட்கள் மறக்க முடியாத ஒன்றாகும் .
திரு ஜெயகுமார் - நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர் 1973ல் ''நீதி சிவாஜிகணேசன் கலைக்குழு '' என்ற
மன்றத்தினை துவக்கி சிறப்பாக செயலாற்றி வந்தார் . பின்னர் உடல் நலம் பாதிக்கபட்டு 2001ல்
காலமானார் . என்னுடைய நண்பர் என்ற முறையில் [உங்களுக்கும் ] இந்த தகவல் தெரிவிக்கிறேன் .
-
10th September 2013, 07:53 AM
#1825
Junior Member
Senior Hubber

Originally Posted by
sivaa
70 வதுகளில் எனக்கு தழிழ்நாட்டை சேர்ந்த
இல .நல்லதம்பி (திண்டுகல்)
எஸ் .செல்வராஜ் (நாகர்கோவில்)
டீ .எத்திராஜூலு (சென்னை)
ஆர் .ராஜ்குமார் (போவி தெரு; பெங்கழூர்)
அனந்தராஜ் (அருப்புகோட்டை)
ஆகிய நண்பர்களுடன் கடிதத்தொடர்பாடல் மூலம் நடிகர்கள்கள்திலகத்தின் பட விபரங்கள் பத்திரிகைகள்
நோட்டீஸ் மலர்கள் முதலியனவற்றை பரிமாறிக்கொண்டேன்.காலப் போக்கில் பல நண்பர்களுடன் தொடர்பு அற்றுப்போய் கடைசியாக
அருப்புக் கோட்டை நண்பர் ஆனந்தராஜ் அவர்களுடன் தொடர்பு இருந்ததுநாட்டப்பிரச்சினையில் அதுவும் அற்றுப்போய்விட்டது.
(மேலே குறிப்பிட்டுள்ள நண்பர்கள் எவரையேனும் திரு செல்வராஜ் தவிர hub நண்பர்களுக்கு தெரியுமாயின் அறியத்தாருங்கள்)
அண்மையில் இந்தியா வந்திருந்த பொழுது திரு செல்வராஜ் அவர்களை கன்னியாகுமரியில் சந்தித்தேன் .
மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவெனில்தொலைபேசி தொடர்பில் இருந்த hub நண்பர்களான திரு ராகவேந்திரா சார் திரு முரளி சார் ஆகியோரை சந்திக்க முடியாமல் போனதுதான்.அதற்காக இருவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன்.இதுவிடயமாக திரு ராகவேச்திரா சாருடன் தொடர்பு கொண்டு விபரம் கூறியிருந்தேன். திரு முரளி அவர்களுக்குகோல் எடுத்திருந்தேன் ஆனால் தொடர்புகொள்ளமுடியவில்லை
On looking at this mail, my meories goes back to 68- 76 years, when I was on contact with two of my coimbatore friends namely mr
radhakrshnan and umamaheswaran very strong followers of NT.radhakrishnan native of madurai settled in cbe.
we used to echange papercuttings of NT news materials of coimbatore and madras vice versa.
suddely the links broken and we could not establish contacts.
nanbargal engirundalum valga. they were employed in LMW cbe at that time. very great penfriends of yesteryears.
Last edited by Subramaniam Ramajayam; 10th September 2013 at 07:56 AM.
-
10th September 2013, 07:56 AM
#1826
Senior Member
Seasoned Hubber
வினோத் சார்
தாங்கள் கூறியது போல் அல்சூர் போவி தெருவில் நீதி சிவாஜி கணேசன் ரசிகர் கலைக்குழு ஜெயக்குமாரை மறக்க முடியாது. மிகவும் இனிய நண்பர். நடிகர் திலகத்தின் அதி தீவிர ரசிகர். எந்த ஒரு படத்தையும் விடமாட்டார். அனைத்திற்கும் மலர் வெளியிடுவார். நாங்கள் தென்னக சிவாஜி கொள்கை பரப்பும் குழு என்று அமைப்பில் இருந்தோம். அதில் பல ஊர்களிலிருந்தும் ரசிகர்கள் பங்கு கொண்டு நடிகர் திலகத்தின் பட வெளியீட்டு விவரங்கள், விளம்பரங்கள், வசூல் விவரங்கள் போன்றவற்றை கடிதங்கள் மூலம் பகிரந்து கொள்வோம். இதை நான் முன்பே கூறியுள்ளேன். அப்போதெல்லாம் தொலைபேசிக்குக் கூட வாயப்ப்பிருக்காது. போஸ்ட் கார்டும் இன்லேண்ட் லெட்டரும் தான். ஜெயகுமார் அவர்களின் கையெழுத்து மிகவும் அழகாக இருக்கும். இருந்தாலும் தகவல்களை டைப் செய்து அனுப்புவார். கும்பகோணம், பொள்ளாச்சி, கோவில்பட்டி, குவைத், கண்டி, மலேசியா, சிங்கப்பூர் என பரந்து விரிந்தது எங்கள் குழு. 1970களின் மத்தியில் ஜெயகுமார் நடிகர் திலகத்திற்கு ஆற்றிய பங்கு 2000 வரை தொடர்ந்தது. மறக்க முடியாத நண்பர். அவர் இப்போது இல்லை என்று நினைப்பதற்கே கஷ்டமாயிருக்கிறது. நடிகர் திலகத்தின் செல்லப் பிள்ளைகளில் ஜெயகுமாரும் ஒருவர். அன்னை இல்லத்தில் சென்று விட்டால் அது அவர் வீடு தான். ஜெயகுமாரை நடிகர் திலகம் செல்லமாய்க் கடிந்து கொள்வதைப் பார்ப்பதே தனி அழகு.
ஜெயகுமாரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
10th September 2013, 08:00 AM
#1827
Senior Member
Seasoned Hubber
சிவா சார்
தங்களுடன் தொலைபேசியில் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது மிகவும் சந்தோஷமாயிருந்தது. இலங்கையிலிருந்து நடிகர் திலகத்தின் புகழ் பாடும் ரசிகர்கள் ஏராளமானவர்கள் அப்போது ஓரளவு எனக்கு பரிச்சயம். உத்தமன் பட வசூல் விவரங்கள் அவ்வபோது எனக்கு கண்டியிலிருந்து கதிர் காமர் என்ற நண்பர் அனுப்புவார். அவரைத் தங்களுக்குத் தெரிந்திருக்குமா எனத் தெரியவில்லை. சில சமயம் அவசரம் என்றால் ஏர் மெயிலில் அனுப்புவார், அதற்குக் கட்டணம் சற்று கூடுதல் என்றாலும் கவலைப் படமாட்டார். அதே போல் எங்கள் குழுவிலிருந்தும் நாங்களும் அனுப்புவோம்.
இப்போதைய வசதிகள் அப்போது கிடைத்திருந்தால் எவ்வளவு பயனுள்ளதாய் இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
10th September 2013, 08:17 AM
#1828
Junior Member
Newbie Hubber
பொன்னை வேண்டாதவர்கள் யார்? எங்களுக்கு ஒரு பொன் கிடைத்தால் போதாது. பல நூறு பொன் கிடைக்க வேண்டும்.வருக.வருக.
சிவா சார், மீள்வருகைக்கு நன்றி. கலக்குங்கள்.
சௌத்ரி சார், தகவல்கள் அருமை.
வாசு, நான் சமீபத்தில் மிக மிக ரசித்த பதிவு கோபால்-அந்தோணி. Very creative .
வினோத், தங்கள் பங்களிப்புக்கு நன்றி. நடுநிலை மனிதர் என்ற வகையில் தாங்கள் இரு திரியிலும் பங்களித்தல் நலம்.
-
10th September 2013, 08:37 AM
#1829
Junior Member
Newbie Hubber
நான் நன்கு பாடுவேன் என்ற வகையில் சிவாஜி ரசிகர் மன்றத்தினருக்கு அறிமுகம் ஆனவன். என் சகோதரர்கள் படித்து வந்த நெய்வேலி ஜவகர் பள்ளியின் அருகில் ,நெய்வேலி அமராவதி திரையரங்கு செல்லும் சாலையில் இருந்த மன்றத்துக்கு நான் செல்ல பிள்ளை.(வட்டம்-17)
நிறைய மாலைகளில், புது நாடகத்தில்,யாரை நம்பி,இசை கேட்டால் போன்ற பாடல்கள் ஒரு தபேலா,ஒரு மிருதங்கம் வாசிப்போரின் துணையுடன் நடந்தேறும். என் பேச்சுக்கு, பாட்டுக்கு சோழ நாடே அடிமை பட்டு கிடந்த காலம்.(பின்னே பத்து வயது prodigy என்றால் சும்மாவா).
காங்கிரஸ் மேல் ஒரே பிடிப்பு நடிகர்திலகத்தை முன்னிட்டே. (உண்மையில் பிடித்த தலைவர்கள் பெரியார்,அண்ணா,கலைஞர்) அதனால் காங்கிரஸ் மேடைகளில் முழக்கமிடுவேன். பெருந்தலைவர்கள் வந்து சேரும் வரை நேரத்தை ஒப்பேற்றுவோம். ஒரு முறை நிஜமாகவே பாதி பேச்சில் பெருந்தலைவர் வந்து விட்டார். என்னை பிடித்து இழுத்து போதும் என்று சொன்ன நிர்வாகியை கண்டித்து பேசட்டும் சொன்ன பெருந்தலைவரின் பெருந்தன்மை பசுமையாய்.ஒரு முறை கண்ணதாசன் பங்கு பெற்ற மேடையில் காந்தி,நேரு,காமராஜ் பற்றி கவிதையெழுதி படித்த ஞாபகம்.
குறிப்பிட வேண்டியது ,எனக்கு அன்னை மட்டுமின்றி ஆசிரியை ஆகவும் இருந்த என்னை பெற்றவளின் vision .(1970 வாக்கில்). என்னை பற்றி நிறைய நலம் விரும்பிகள் கெட்டு போகிறேன் என்று கோள் சொன்ன போது ,என்னை நாடகம்,public speaking இவற்றில் பங்கு கொள்வதில் தவறில்லை என்று சொல்லி ஊக்குவித்த என் அன்னைக்கு என்றுமே எனது சிரம் தாழ்ந்த நன்றிகள். எங்களை உண்மையிலேயே செதுக்கியவர் அவர்தான்.
இப்போது நான் கேட்க வந்தது என் சென்னை நண்பர் ஒருவர் பற்றி. அவர் பெயர் சிவாஜி .மு.ராமசாமி. அவரை பற்றி 70 களின் சென்னை நண்பர்களுக்கு தெரிந்தால், அவரை இந்த நண்பன் தேடுவதை தெரிய படுத்தவும்.
Last edited by Gopal.s; 10th September 2013 at 08:43 AM.
-
10th September 2013, 09:09 AM
#1830
Junior Member
Newbie Hubber
நடுநிலை நண்பர் சுகாராம் காண்பதே இல்லையே?
Bookmarks