-
17th September 2013, 12:54 PM
#2101
Senior Member
Diamond Hubber
சக்திப்ரபா அவர்களே!
தங்கள் மறு வருகைக்கு நன்றி! ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரியில் சங்கமிக்க வந்துள்ளீர்கள். என் மனம் நிறைந்த நல் வருகையினைத் தெரிவிக்கிறேன். தங்களின் அன்பான பாராட்டிற்கும் மிக்க நன்றி! தொடர்ந்து தங்கள் பங்களிப்பை எதிர்நோக்கும்
நெய்வேலி வாசுதேவன்.
-
17th September 2013 12:54 PM
# ADS
Circuit advertisement
-
17th September 2013, 12:58 PM
#2102
Senior Member
Diamond Hubber
ராஜா பதிவுகளைப் பாராட்டிய ராகவேந்திரன் சார்,கோபால் சார், சந்திரசேகரன் சார், வாசுதேவன் சார், தம்பி ராகுல்ராம், ராமஜெயம் சார், கிருஷ்ணா சார், கை பேசியில் பாராட்டு தெரிவித்த அன்பு பம்மலார் சார், வினோத் சார், ஏனைய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!
Last edited by vasudevan31355; 17th September 2013 at 01:11 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
17th September 2013, 01:02 PM
#2103
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார்,
ராஜாவின் பின்னணி இசையை தங்கள் அபார உழைப்பின் மூலம் ஆனந்தமாகக் கேட்டபடி இருக்கிறேன். மிக வித்தியாசமான முயற்சி. தவிரவும் தரமும் மிக நன்றாக உள்ளது. இதிலுள்ள பின்னணியின் கஷ்டம் எனக்கு புரியும். மேலும் அருமையான பல ராஜா ரிங் டோன்கள் எனக்கு தங்களால் கிடைத்துள்ளது. நன்றி!
-
17th September 2013, 01:06 PM
#2104
Senior Member
Veteran Hubber
டியர் வாசுதேவன் சார்,
என்னுடைய பதிவுகளுக்கு தாங்கள் மனமுவந்து அளித்திருக்கும் விரிவான பாராட்டுக்கு நன்றி. பாராட்டும்போது தாராவின் நிழற்படங்கள் சிலவற்றைப் பதிப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன் (எதிர்பார்க்கிறேன்).
'ராஜா' திரைக் காவியம் கடலூரில் வெளியானபோது தாங்கள் முதல் நாள் காலைக்காட்சி பார்த்த இனிய அனுபவங்களையும் அப்போது அங்கு நிகழ்ந்த அதிரடியான சம்பவங்களையும் தங்களுக்கே உரித்தான சுவையான நடையுடன் பதித்துள்ளீர்கள். தங்களுடைய பதிவு கோபால் அவர்களையும், கல்நாயக் அவர்களையும் கடலூருடன் சொந்தம் கொண்டாட வைத்து அவர்களின் மலரும் நினைவுகளையும் தட்டி எழுப்பி பதிவிட வைத்து விட்டது.
'ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர்' தொடரில் காணக்கிடைக்காத துளி விஷம் பட ஆடை அணிவகுப்பைத் தந்து அசர வைத்து விட்டீர்கள். தாங்கள் உழைப்பும் தேடலும் அசாத்தியமானது. சண்டைக்காட்சிகள் தொடரும், நாயகியர் தொடரும் கூட மீண்டும் விறுவிறுப்பாக தொடர்வது மகிழ்ச்சியளிக்கிறது.
என்னுடையது எல்லாம் வெறும் எழுத்துக்கள் மட்டுமே. ஆனால் தங்களுடையது தேடல், தொகுத்தல், பதித்தல் என பல நிலைகளை உள்ளடக்கியது. இருப்பினும் சளைக்காமல் தொடர்வது, நடிகர்திலகத்தின் மீது தாங்கள் கொண்டிருக்கும் அளவற்ற பற்றினை வெளிக்கொணர்கிறது.
தாங்கள் பதிவுகள் யாவற்றுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்....
-
17th September 2013, 01:08 PM
#2105
Junior Member
Newbie Hubber
ராகவேந்தர் சார்,
தொடருங்கள் .தங்கள் இசைவான இசை பதிவுகளை துளி துளியாக பருகி மகிழ்கிறேன். இடையில் வந்த தொந்தரவுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்.(வேறு வழி?சுப்புவுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாதே?)
-
17th September 2013, 01:25 PM
#2106
Senior Member
Diamond Hubber
டியர் கல்நாயாக் சார்,
வெகு நாட்கள் ஆனது போல் உள்ளது தங்கள் பதிவைப் பார்த்து. நலம்தானே! நீங்கள் எங்கள் ஊர்க்காரர் ஆயிற்றே! புதுப்பாளையத்தில் எந்தத் தெருவில் தாங்கள் இருந்தீர்கள்? நிச்சயமாக நாம் சந்தித்திருக்கும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கும். ஏனென்றால் தலைவர் படங்கள் நடக்கும் தியேட்டர்களைத் தவிர வேறு கதி என்று எங்களுக்கு எதுவும் இல்லை. நீங்களும் நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் அனைத்து படங்களுக்கும் வந்துள்ளீர்கள். அதனால் கண்டிப்பாக தங்களை எனக்குத் தெரியாமல் போக வாய்ப்பில்லை. தாங்களும் நியூசினிமா திரையரங்கைப் பற்றி அழகாக எழுதியுள்ளீர்கள். எனவே எனக்கு மிக க்ளோஸ் ஆகி விட்டீர்கள். (முக்கியமாக அந்த கும்மிருட்டு தரை டிக்கெட் கவுண்ட்டர் வளைவுகள். ரசித்துச் சிரித்தேன்.) காலம் வரும் போது நாம் நிச்சயம் சந்தித்து மகிழலாம். பாடலியில் 'வெற்றிக்கு ஒருவன்' ரசிகர் காட்சிக்கு வந்திருந்தீர்களேயானால் மிகப் பெரிய அமர்க்களத்தை கண்டு களித்திருப்பீர்கள். இன்னும் நிறைய கடலூர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ஏற்கனவே 'சந்திப்பு' முத்தையா அரங்கு அனுபவங்களை தாங்கள் மகிழ்வுடன் இங்கே பகிர்ந்து கொண்டது நன்கு நினைவிருக்கிறது.
தங்களுடைய மேலான பாராட்டுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
-
17th September 2013, 02:08 PM
#2107
Senior Member
Diamond Hubber
-
17th September 2013, 02:25 PM
#2108
Junior Member
Newbie Hubber
அப்படியே என் ஆசை கிளி சினேகலதாவையும் போட்டால் என்னவாம்?
-
17th September 2013, 02:28 PM
#2109
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Gopal,S.
சுப்பு,
எதனோடும் ஒட்டாமல் சம்மந்தா சம்மந்தமில்லாமல் பதிவு போடுவதை நிறுத்துங்கள்.உங்கள் மூர்க்க பதிவுகளால் ராகவேந்தர் சாரின் அற்புதமான பதிவுகளுக்கு இடைஞ்சல் உண்டாகி விட்டது. ஏன் இப்படி ஊரோடு ஒட்டாமல் எரிச்சல் உண்டாக்குகிறீர்கள்?
ஒருவர் நிழலை இன்னொரு சாதியினர் நிழல் கூட தீண்ட கூடாது என்று அழிச்சாட்டியம் செய்வது எவ்வளவு பெரிய அநீதி? ஏன் வெட்கமில்லாமல் வக்காலத்து வாங்குகிறீர்கள்?
Dear Sir
First of all ..you cut your crap...when everybody was writing about films, who asked to write about Pagutharivu thandhai and other mannankatti? Don't push your thoughts into others and you have that silly habit of doing that very very regularly and comfortably write as if you are a better Judge..! Everybody knows about you and me..!
When you are writing about Raja and other films, you should have continued writing about it without putting up articles of pagutharivu and pagukkaadha arivu and who asked to write about ideologies of Periyaar ? You guys can write anything and everything as per your whims and fancy and you just want everybody to accept your views as universal truth is it? And, you will claim that am distracting !
Am sorry...! You have your views and so is mine !
If you guys want to operate as a Group yourselves...please go ahead and do it...I care a damn for that. Am aware of the interests and am above your intentions !
If you guys have answer for my question, please answer else choose to keep quiet and praise yourselves for your writings ! If any one can answer properly let them answer else let them not SAMAALICHUFY by putting up some rolling cartoons. Putting up Lols...Rolling cartoons...are equivalent to VAADHAADA VAKKILAADHA VAAYIDHA VAANGUM VAKIL"e
I Never advocated...I said the same treatment had they had guts, they should have extended to other communities who do the same even worse than that, till now...! This is not advocating Gopal Sir.
Regards
Last edited by NTthreesixty Degree; 17th September 2013 at 02:37 PM.
-
17th September 2013, 02:40 PM
#2110
Junior Member
Newbie Hubber
சுப்பு சார்,
இன்று பெரியாரின் பிறந்த தினம். நாம் நடிகர்திலகத்தின் வாழ்க்கையில் அவரோடு பயணித்த மனிதர்களை நினைவு கூறும் மரபை கடை பிடிப்பதால் நானும் ஜோவும் இதனை பதித்தோம். அத்துடன் விட்டு விட்டு ,ராகவேந்தரை ரசிக்க ஆரம்பித்த போது தான்....
சரி.இத்துடன் விடுங்கள். நாம் தொடரலாம்.
Bookmarks