-
20th September 2013, 05:12 PM
#11
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
எனக்கு ஒரு குறை நார்மல் சிவாஜிக்கும் ,ஜெயகுமாரி க்கும் ஒரு டூயட் கொடுத்து சிறிது நகைச்சுவை கலந்து காதல் காட்சியை நகர்த்தி வில்லன், ஒரே பாடலில் முடித்து ஒரு 20 நிமிடங்கள் பிரமாத படுத்தி இருக்கலாம்.(பாலாஜி விட மாட்டார்.ஈயடிச்சான் காபி கேட்பார்)
பின் குறிப்பு.-- பாலைய்யா பாணியில் படிக்கவும்.
அது சரி நாலு பொண்ணுங்கன்னு எதோ சொன்னியே.....
டியர் கோபால் சார்,
தங்கள் சிறந்த, மனம் திறந்த பாராட்டுக்கு மிக்க நன்றி.
தங்கள் முதல் பாராவுக்கு பதில்...... உண்மைதான். பாலாஜி ஈயடிச்சான் காப்பிதான் எப்போதும் (ஹிந்திப்படத்தில் சிவப்புக்கலர் டெலிபோன் இருந்தால் தன் படத்திலும் சிவப்புக்கலர் டெலிபோனே வைக்கவேண்டும் என்று அடம்பிடிக்கும் அளவுக்கு).
பாலையாவுக்கு பதில்:
ஜெய்குமாரி தற்போது நான்கு பெண்குழந்தைகளின் தாய். கணவர் இறந்து விட்டார். ஆண்மக்கள் இல்லாததால் கஷ்ட ஜீவனம். இப்போதுதான் முதல் மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்திருக்கிறார். ஜெய்குமாரி தற்போது ஸ்பென்சர் பிளாசா கட்டிடத்தில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்துவருகிறார். (நடிகை லட்சுமி நடத்திய 'கதையல்ல நிஜம்' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜெய்குமாரியே சொன்ன தகவல்கள் இவை) நலிந்த கலைஞர்களை காப்பாற்ற உருவாக்கப்பட்ட நடிகர் சங்கத்தினர் தங்களை வளப்படுத்திக்கொள்வதை விட இதுபோன்ற வறுமையில் வாடும் கலைஞர்களை வளப்படுத்த வேண்டும். (எங்கே செய்யப்போறாங்க)...
-
20th September 2013 05:12 PM
# ADS
Circuit advertisement
Bookmarks