-
29th September 2013, 01:38 PM
#2631
Senior Member
Seasoned Hubber
இம்மாத இதயக்கனி சினிமா ஸ்பெஷல், நடிகர் திலகம் பிறந்த நாள் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. நடிகர் திலகத்தின் அட்டகாசமான திருவருட் செல்வர் நிழற்படம் முகப்பை அலங்கரிக்க, பம்மலாரின் ஆல்பம் தகவல் பின் அட்டையை முழுமையாக்கியுள்ளது. நம் பார்வைக்கு ..

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
29th September 2013 01:38 PM
# ADS
Circuit advertisement
-
29th September 2013, 01:40 PM
#2632
Junior Member
Senior Hubber
Dear Ragavendran Sir
I already phoned to Dinamalar office and they told that only in chennai edition the same was published. Rest of tamil nadu no NT news published and Nambiar photo only published
C.Ramachandran
-
29th September 2013, 01:47 PM
#2633
Junior Member
Devoted Hubber

Originally Posted by
mr_karthik
Dear Ganpat sir,
You are right. Thatswhy I mentioned that, the mistake they did was multi colour applied for the statue. If they applied elephant black or golden colour for the full statue, it will not be that much horrible.
another mistake is, instead of taking his normal photo as model, they took some movie still as model for statue.
But we should appreciate their affection on THALAIVAR to erect a statue.
(For your information, even the Mahathma Gandhi statue in Chennai Marina beach is not looks like Gandhi we are seeing in photos, but looks like Vallabhai Patel).
Thank you very much Mr.Karthik sir for the nice rejoinder.
I fully agree with you on your views..But we should appreciate their affection on THALAIVAR to erect a statue.
Though the statute doesn't look good when we see only the statue,it becomes beautiful when we also see the love and regards behind it.
-
29th September 2013, 02:07 PM
#2634
Senior Member
Veteran Hubber

Originally Posted by
SPCHOWTHRYRAM
I already phoned to Dinamalar office and they told that only in chennai edition the same was published. Rest of tamil nadu no NT news published and Nambiar photo only published
C.Ramachandran
இங்கேயும் / இதிலேயும் நம்பியார்தான் வில்லனா..?.
-
29th September 2013, 09:06 PM
#2635
Junior Member
Newbie Hubber
பட்டிக்காடா பட்டணமா-1972
கீழ்கண்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடையளிப்போருக்கு சிவாஜி பல்கலை கழகத்தின் சார்பில்,B .Sivaji arts பட்டம் வழங்க படும்.(விடைகளை கடைசியில் சரி பார்த்து கொள்ளலாம்.)
1)அம்பிகையே ஈஸ்வரியே பாடலில் பந்தாவோடு மூக்கையானாக அறிமுகம் ஆகும் சிவாஜியை பார்த்து ரசிகர்கள் துள்ளி குதிக்கும் உயரம்
அ)ஆறடி ஆ) பத்தடி இ) தியேட்டர் கூரை வரை.
2)மூக்கையன் சிகை அலங்காரம்,ஒப்பனை,உடை,get up நடிகர்திலகத்துக்கு
அ)பொருத்தம் ஆ)படு பொருத்தம் இ)கிராமிய ஆணழகோடு படு படு அட்டகாசமான பொருத்தம்.
3)ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை திரைக்கதை அமைப்பு
அ)சுவாரஸ்யம். ஆ)படு சுவாரஸ்யம் இ)ஜெட் வேகத்தில் தொய்வே இல்லாத படு சுவாரஸ்யம்.
4)வசனங்களும், அதற்கு உயிர் கொடுக்கும் சிவாஜியின் அட்டகாசமான நடிப்பும்
அ)இயல்பு ஆ)படு இயல்பு இ)ஈர்ப்பு கலந்த கிராமத்து இயல்பான அழகியல் கலந்தது.
5)இந்த படத்தில் முக்கிய அம்சமாக ரசிகர்களை கவர்ந்தது
அ)குடும்ப கதை அமைப்பு ஆ)பொழுது போக்கு அம்சங்கள் நிரம்பிய கதையமைப்பு இ)குடும்பம்,பொழுது போக்கு என்று அத்தனை அம்சங்களும் கொண்ட ஜாலி கலவை.
6)நடிகர்திலகம் அட்டகாசமான ஸ்டைல் உடன் போடும் விறு விருப்பான சிலம்ப சண்டை
அ)ரசிகர்களுக்கு கொண்டாட்டம் ஆ)அனைவரும் விரும்பிய ஒன்று இ)ரங்கராஜன் நம்பிக்கும் பிடிக்கும்.
7)எம்.எஸ்.வீ அவர்களின் அற்புதமான பாடல்கள் மற்றும் பின்னணி இசை
அ) சிறந்தவை ஆ)அட்டகாசம் இ)காலத்தை வென்று நிற்கும் தனி சிறப்பு மிக்கவை
8)பாடல் காட்சிகளில் நடிகர்திலகத்தின் சுறுசுறுப்பு ,கடின ஸ்டெப்ஸ்,கிராமிய grace ,coordination
அ)வழக்கம் போல தூள் ஆ)வழக்கத்தை விடவே ஸ்பெஷல் இ)perfect example of excellent choreography and graceful performance by an artist .
9)அவர் நடன step களில் சிறந்தது என்று தேர்வு செய்வது
அ)அம்பிகையே பாடலில் தீச்சட்டியுடன் பர பர ஒட்டமான நடை ஸ்டெப் ஆ)கேட்டுக்கோடி பாடலில் உட்கார்ந்த முட்டி மடக்கிய ஸ்டெப் இ)இந்த இரண்டு மட்டுமா இன்னும் ஒரு பத்தாவது பிரமாதமாயிற்றே .
10)தன்னுடைய மாமன் மகள் தன்னிடம் இருந்தும் அவளை கல்யாணத்துக்கு வற்புறுத்தாத மூக்கையனின் கண்ணியம்
அ)தரமானது ஆ)மண்ணின் மாண்பு இ)பெருந்தன்மை கலந்த கிராமிய பண்பாடு.
11)மனைவியின் சிறு சிறு ஆசைகளை மதித்து அவளை மனம் கோணாமல் நடத்துவது
அ)ரசிக்க வேண்டியது ஆ)அனுபவிக்க வேண்டியது இ)இன்றைய தலைமுறைக்கு பாடம்.
12)அளவுக்கு மீறி மனைவி நடக்கும் போது மூக்கையனின் ஆத்திரம் (பிறந்த நாள்)
அ)சரியானதே ஆ)போதவே போதாது இ)நாம் செய்ய நினைத்ததை சரியாக செய்வார்.
13)வக்கீல் நோட்டிசை கிழித்தெறிந்து மாமியாரிடம் சவால் விடும் கட்டம்
அ)அடுத்து என்ன என்னும் கேள்வி ஆ)இப்போ போய் ஏன் இடைவேளை என்னும் கோபம் இ)இதை விட சுவாரஸ்யம் இருக்கு டோய் என்னும் ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு
14)மூக்கையன் ,முகேஷ் ஆக ஹிப்பி ஸ்டைல் உடன் தோன்றும் காட்சியில் ரசிகர்களின் மனநிலை
அ)ஆனந்தம் ஆ)பேரானந்தம் இ)போதை கலந்த வெறியான ஆனந்தம்.
15)மனைவியின் படுக்கையறையில் முகேஷ் ஆக மூக்கையனின் அதகளம்(தொடரும் வீ.கே.ஆரின் மாப்பிள்ளை வந்தார்)
அ)சுவாரஸ்யம். ஆ)கிளுகிளுப்பு இ)கிளுகிளுப்பு ,கிண்டல் ,நகைச்சுவை கலந்த கதையை ஒட்டிய சுவாரஸ்யம்.
16)தன்னை கடத்தி தாக்கும் கும்பலிடம் சாந்தி தியேட்டரை எனக்கே காட்டுறியா என அவர் மோதும் காட்சி
அ)எதிர்பார்ப்புக்கு தீனி ஆ)எதிர்பாராத குஷியான கலாட்டா இ)எல்லாவற்றையும் நொறுக்கி போட்டு தியேட்டரை அதிர வைக்கும்.
17)அதெப்படி புருஷன் ரெண்டு வருஷமா லண்டனில் ,இவங்க கர்ப்பம் காட்சி
அ)கதையோடு ஒட்டியது ஆ)கலகலப்பு இ)கதையோடு ஒட்டிய சுவையான கலகலப்பு
18)பஞ்சாயத்து காட்சியில் நடிகர்திலகத்தின் தன்னிரக்கம் கலந்த அவமானம்
அ)மனதை தொடும் ஆ)நாமே உணர்வோம் இ)பின்னாளில் வந்த அத்தனை கனம் மிகுந்த பஞ்சாயத்து காட்சிகளுக்கும் சிறப்பான முன்னோடி.
19)குழந்தை செண்டிமெண்ட்,மூக்கையன் கல்யாண suspense கொண்ட பரபரப்பான இறுதி காட்சி
அ)அருமை ஆ)எதிர்பாராதது இ)படத்தின் கதை போக்கு கெடாமல் வந்த சுவாரஸ்ய திருப்பம்.
20)கலைச்செல்வி,வீ.கே .ஆர்,சுகுமாரி,சுபா (அறிமுகம்),வாசு,மனோரமா, பங்களிப்பு
அ)சரியானது ஆ)திருப்தியானது இ)படத்தை தூக்கி நிறுத்தும் பங்களிப்பு .
21)இந்த படத்தின் நகைச்சுவை காட்சிகள்
அ)ரசிக்கும் படி ஆ)ஜாலியான ஒன்று இ)படத்தின் ஓட்டத்தை தடுக்காத ஜாலி.
22)இசை ,நடனம்,சண்டை காட்சி,உடைகள்,படபிடிப்பு,படத்தொகுப்பு,இயக்கம் அனைத்திற்கும் மதிப்பெண்
அ)60க்கு மேல் ஆ)75 க்கு மேல் இ)தொண்ணூறுக்கும் மேல்
23)தமிழில் வெளி வந்து வெள்ளி விழா கண்ட கருப்பு வெள்ளை படங்களில் கோடிக்கும் மேல் வசூலித்த முதல் தமிழ் படம் என்று இந்த திரியில் ஆதாரத்துடன் பதிவு செய்தவர்
அ)ராகவேந்தர் ஆ)வாசு தேவன் இ)பம்மலார்
24)இந்த படத்தினை examiner முதலில் ரிலீஸ் தேதியன்றே கண்டு ரசித்த ஊர்
அ)நெய்வேலி ஆ)கும்பகோணம் இ)மதுரை
25)படத்தை இன்று பார்த்தாலும் ரசிகர்கள் அடைவது
அ)நிறைவு ஆ)மகிழ்ச்சி இ)கொண்டாட்டம் கலந்த போதை
விடைகள்- சந்தேகம் வேறா.? எல்லா கேள்விகளுக்குமே விடை (இ)தான்.
இதை முழுமையாய் படித்த அனைவரும் சரியான விடை அளித்திருப்பது சர்வ நிச்சயம்.அதனால் படித்து முடித்த அனைவருக்குமே B .sivaji Arts பட்டம் வழங்கி சிறப்பிக்கிறோம்.
Last edited by Gopal.s; 30th September 2013 at 03:22 PM.
-
29th September 2013, 11:12 PM
#2636
Junior Member
Seasoned Hubber
Excellent Gopal sir
Once again a great articulated write up from you - Kudos to you Gopal sir
Ravi
-
29th September 2013, 11:16 PM
#2637
Junior Member
Seasoned Hubber
This is my first attempt to give my thoughts in Tamil - please bear with me for any translation errors
என்டிய கர்ணனாகவே பார்க்கும் பல ரசிகற்குள் நானும் ஒருவன் . எத்தனை ஒற்றுமைகள் , எத்தனை அவமானங்கள் - எல்லாவற்றையம் மீறிய வெற்றிகள் , காலத்தால் அழிக்கமுடியாத வெற்றி சுவடுகள் - அன்பை கொட்டும் ரசிகர்கள் , அரவணைக்கும் பக்தர்கள் , மகாபாரதத்தில் எப்படி கர்ணனை மறக்க முடியாதோ , சிவாஜி யின் சாதனையை மறக்கவும் முடியாது , மறுக்குவும் முடியாது - மறந்தவர்கள் நல்ல நடிப்பை உணர தெரியாதவர்கள் , மறுப்பவர்கள் இந்த நாட்டின் அசல் வித்தாக இல்லாதவர்கள்.....
இதோ என்னுடிய ஒப்புமை :
Sr No |
Karnan |
NT |
1 |
கர்ணன் கொடுபதர்க்காகவே பிறந்தவன் - தன்னை பற்றி என்றுமே
கவலை பட்டதில்லை |
சிவாஜி நடிப்பை கொடுபதர்க்காகவே பிறந்தவன் - தன்னை பற்றி என்றுமே கவலை பட்டதில்லை - நடிப்புடன் பணத்தையும் அள்ளிகொடுத்தவன் , இன்னும் கொடுத்துக்கொண்டு இருப்பவன் ஆனால் விளம்பரம் தேடவில்லை. |
|
இகழ்தவர்கள் பலர் - இருந்தும் மகாபாரதத்தில் பொன்னேடால் பதிக்கபட்டவன் - அர்ஜுனனை மறக்கலாம் ஆனால் கர்ணனை மறக்க முடியாது - அப்படி ஒரு பாதிப்பை உருவாக்கினவன்.
|
சிவாஜி யின் மதிப்பு அறியாமல் இகழ்பவர் பலர் ஆனால் அவனது வெற்றி பயணத்தை , அவனது முத்திரையை இன்றலளுவும் உலகம் வியர்ந்து பார்கிறது - 100 ஆண்டுகள் ஆனால் என்ன ? ஆதவன் ஒளியை பத்து லக்ஷம் கைகளால் மூட முடியுமா ?
|
|
சேர்த்த இடம் சரியல்லை - உறவுகள் விஷ பாம்பினை போல் ஊடற்வி அவன் உயுறுக்கே உலை வைத்தன - அவனை பகடை காய் போல் உபயோகித்தான் துரியோதனன்
|
காங்கிரஸ் கட்சியில் சேரபட்டான் - காங்கிரஸ் காக எல்லாம் செய்தான் - தெய்வம் அந்தபக்கதில் இருந்துகொண்டு இவனுக்காக வருத்தப்பட்டது
|
|
நன்றியை மறக்க தெரியவில்லை - நண்பர்களை கைவிட தெரியவில்லை - தாயின் இரண்டு வரங்கள் அவன் உயிரை குடித்தன |
நன்றியை மறக்க தெரியவில்லை - நண்பர்களை கைவிட தெரியவில்லை - அவன் கொடுத்த வரங்கள் ஏராளம் - அவனால் பலன் அடைந்தவர்கள் எண்ணிக்கையில் அடங்கமுடியாது - தமிழ் நாடில் பிறந்ததுதான் அவன் செய்த பெரும் பாவம் - தமிழை அழகாக உச்சரித்தானே , அவன் செய்த இரண்டாவது பாவம் - இந்த தேசத்துக்காக போராடியவர்களை நம் முன்னே கொண்டுவந்து தேசிய உணர்வை தட்டி எழுப்பினானே அது அவன் செய்த மூணாவது பாவம் . |
|
காலங்கள் மாறலாம் ஆனால் கர்ணன் வாழ்வான் |
காலங்கள் மாறலாம் ஆனால் சிவாஜிக்கு மரணம் ஏது ? தூத்துபவர்கள் ஒருநாள் வணங்கத்தான் போகிறாகள் - அந்த காலம் வெகுதொலைவில் இல்லை. |
Ravi -Hyderabad
-
29th September 2013, 11:24 PM
#2638
Junior Member
Seasoned Hubber
-
29th September 2013, 11:57 PM
#2639
Senior Member
Seasoned Hubber
நண்பர்களே
பட்டிக்காடா பட்டணமா படத்தைப் பற்றிய கோபாலின் கேள்வி பதில் ஆராய்ச்சியை
அ. சிலர் மட்டும் பாராட்டுவர். ஆ. சிலர் மட்டும் வெறுப்பர். இ. அனைவருமே பாராட்டுவர். ஈ. அனைவருமே வெறுப்பர்
....
சிரிக்காதீர்கள்.. சிரித்தால் இதில் நீங்கள் எந்தப் பிரிவு என்பதை இ... என்று உங்கள் முகமே இளிப்பில் காட்டி விடும்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
29th September 2013, 11:58 PM
#2640
Senior Member
Seasoned Hubber
இன்றைய மாலைப் பொழுது .... இரண்டு முக்கியமான நிகழ்ச்சிகள்... எது போவதென்று மனம் அல்லாடல் .. ஒன்று .. மஹாலட்சுமி திரையரங்கில் நீண்ட நாட்களுக்குப் பின் நான் வாழ வைப்பேன் திரைப்படம், ஞாயிறு மாலைக் காட்சி ரசிகர்களின் அளப்பரையுடன் பார்க்கும் வாய்ப்பு.. இரண்டாவது இதழொலி வாயிலாக நடிகர் திலகத்திற்கு ட்ரிப்யூட்... இரண்டாவதே முதலிடம் பிடித்தது.
வாய்ப்புக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட இதழொலிக் கலைஞர்கள் நடிகர் திலகத்தின் திரைப்படப் பாடல்களைப் பாடினார்கள். ஆம்... இதழொலி மூலமாக இசைத்தார்கள். ஒவ்வொரு பாட்டுமே மிகவும் சிறப்பாக ஸ்ருதி சுத்தமாக அமைந்தது பாராட்டத் தக்கது, ஓரிரு பாடல்கள் மட்டும் அதுவும் ஓரிரு இடங்களில் மட்டும் ஸ்ருதி சற்றே பிசகியது. என்றாலும் அது ஒரு குறையில்லை.
ஆனால் மூன்று பாடல்கள் கலைத் தாயின் தலைமகனுக்கு உச்ச அஞ்சலி செலுத்தின. அந்த சிறுமி ஸ்வேதா, திருவிளையாடல் பாடலை இதழொலியில் இசைத்த போது அனைவரும் மெய்சிலிர்த்துப் போயினர். மிக அற்புதமான இசை. இதற்குச் சற்றும் சளைக்காத வகையில் குங்குமம் திரைப்படத்தின் சின்னஞ்சிறிய வண்ணப் பறவை. குறிப்பாக இப்பாடலுக்கு ஒவ்வொருவரும் கரஒலியுடன் தாளமிசைத்தது எந்த அளவிற்கு ஈடுபாட்டுடன் அவர்கள் ரசித்திருந்தனர் என்பதை விளக்கியது.
நடுவில் ஒரு சிறிய விழா. விழாவிற்கு வருகை தந்த கலைஞர்கள் வியட்நாம் வீடு சுந்தரம், வெண்ணிற ஆடை ஸ்ரீகாந்த், மோஹன் சர்மா, பிறைசூடன், டாக்ட்ர் சொக்கலிங்கம் ஆகியோர் பேசினார்கள்.
விழா இந்திய நாடு என் வீடு பாடலுடன் நிறைவு பெற்றது, இப்பாடலின் மூலம் வந்திருந்தோர் மனதும் நிறைவு பெற்றது.
விழாவில் மனதை லேசாக பாதித்த சில விஷயங்கள்.. இது குற்றங் காண்பதற்காக அல்ல, அடுத்த முறை சரி செய்து கொள்வதற்குத் தான்
1. விசில் என்கிற இதழொலியைப் பற்றி மேலோட்டமாக விளக்கினாலும் இன்னும் ஆழமாக விளக்கியிருக்கலாம். அதன் நுணுக்கங்களை சொன்னால் பாடுபவரின் முழு கஷ்டமும் பார்வையாளர்களுக்குத் தெரிய வரும்.
2. திரைப்படப் பாடல்களில் இதழொலியின் முக்கியத்துவம், படத்தில் அதற்குக் கிடைக்கும் முக்கியத்துவம் போன்றவற்றைப் பற்றி ஆராய்ந்து தகவல்களைப் பகிர்ந்து கொண்டால் பார்வையாளர்களுக்கு அதனுடைய மகத்துவம் முழுமையாகத் தெரிய வரும்.
3. இந்த நிகழ்ச்சி நடிகர் திலகத்தைப் பற்றிய அஞ்சலி என்றாலும் அவருக்கும் திரையிசையில் இதழொலிக்கு நடிப்பதற்கும் இருந்த புரிந்துணர்வு, மேதைமை, போன்றவற்றை விரிவாக விளக்கியிருக்கலாம். [நானும் இதைப் பற்றி சொல்லலாம் என ஆவலுடன் இருந்தேன், வாய்ப்புக் கிடைத்திருந்தால், அறிமுகச் சீட்டு கொடுத்தும் அனுப்பப் பட்டது, நேரமின்மை காரணமோ என்னவோ தெரியவில்லை. ]
4. தமிழ்த்திரையுலக இசையில் இதழொலியின் மேன்மையை முழுமையாக அறிந்து பயன்படுத்தியவர் மெல்லிசை மன்னர். அவர் இதழொலியை பயன் படுத்திய விதத்தைப் பற்றிக் கூறியிருக்கலாம். [வாய்ப்புக் கிடைத்திருந்தால் இதனையும் என் உரையில் சேர்த்திருப்பேன். ]
மேடையில் ஒரு நண்பர் மிகவும் எச்சரிக்கையாக தப்பித் தவறிக் கூட நடிகர் திலகத்தின் பெயரை உச்சரிக்கக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்து வெற்றி பெற்றார். ஆஹா... என்னே ஒரு நல்ல எண்ணம்.
இவையெல்லாம் தாண்டி ஒவ்வொரு கலைஞருக்கும் நம்முடைய பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த அருமையான நிகழ்ச்சியினை உருவாக்கிய இந்திய இதழொலியாளர் அமைப்பிற்கு என் உளமார்ந்த நன்றி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks