Page 275 of 399 FirstFirst ... 175225265273274275276277285325375 ... LastLast
Results 2,741 to 2,750 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #2741
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    நடிகர் திலகத்தின் 85-வது பிறந்த நாள் விழா - 01.10.2013

    கோபால், ஒரு முக்கியமான செய்தி. உங்கள் கோரிக்கை அன்னை இல்லத்திற்கு கேட்டு விட்டது. அது நிறைவேறவும் போகிறது. ஆம், அடுத்த ஆண்டு முதல் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவில் ஒன்றோ அல்லது இரண்டு ரசிகர்களையும் மேடையேற்றி கௌரவிக்கப் போகிறார்கள். இதை மேடையிலே பிரபு அறிவித்தார்.
    Thank you Murali sir for complete coverage of NT's 85th birthday function.

    Any discussion about "Mani Mandabam". We should start work from today to achieve the "Mani Mandabam" by NT's 86th birth day 01-10-2014.

    Please advise how to proceed with this achievement. We would like to accompany every one Annai Illam, Government, Nadigar Sangam and each and every one like NT and let us start and discuss positive thing to achieve this in a year time and also we can neglect and avoid blaming any one for past.

    Our only goal is "Mani Mandabam".

    My sincere request to our senior hubbers to consider my request and I will be first one in the queue if money is the issue.

    Long live NT fame.

    Cheers,
    Sathish

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2742
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    இன்று பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள். உன்னுடைய இறுதி நிகழ்ச்சியாக நடிகர் திலகத்தின் பிறந்த நாளில் அவரை வீடு தேடி சென்று வாழ்த்தியதே, இறைவன் எங்களுக்கு உணர்த்தியது, காமராஜருக்குப் பின் சிவாஜி மட்டுமே என்கிற உண்மை தான்.



    நேற்றைய கூட்டம் அதை ஆணித்தரமாக நிரூபித்து விட்டது.

    உங்கள் நினைவு நாளில் எங்களால் ஒன்றை உறுதியாகக் கூறி அஞ்சலி செலுத்த முடியும்.

    தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் ஆளுமை முடியும் நேரம் விரைவில் வர இருக்கிறது.

    அதை முடித்து வைக்கக் கூடிய ஒரே சக்தி....



    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்கிற ஈடு இணையில்லா சக்தி மட்டும் தான்....

    நீ மறைந்த காலத்தில் நடிகர் திலகத்தை கேலி, கிண்டல், கண்டனம் செய்தவர்கள் அனைவரும் எங்குள்ளார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் நடிகர் திலகம் என்கிற சக்தி மட்டும் மாறாமல் மறையாமல் அப்படியே உள்ளது.

    நேற்று ஒரு நண்பர் குறிப்பிட்டார். ஒரு பிரபல எழுத்தாளர் அவருடைய புத்தகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதினாராம்.

    திராவிட இயக்கங்களின் தாக்கம் முடிந்து அவர்களுடைய காலம் முடிவடையும், அதனை சிவாஜி என்கிற மாபெரும் சக்தி மட்டுமே செய்து முடிக்கும் என்று.

    அது நடக்கும் காலம் கனியத் தொடங்கியுள்ளது. இதனை அப்படியே ஒருங்கிணைத்து, தமிழகத்தை திராவிட இயக்கங்களின் பிடியில் இருந்து விடுவிப்பதே தங்களுக்கு சிறந்த அஞ்சலியாகும்.
    Last edited by RAGHAVENDRA; 2nd October 2013 at 06:49 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #2743
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    திராவிட இயக்கங்களின் தாக்கம் முடிந்து அவர்களுடைய காலம் முடிவடையும், அதனை சிவாஜி என்கிற மாபெரும் சக்தி மட்டுமே செய்து முடிக்கும் என்று.
    திரு ராகவேந்திரா,
    என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் உங்களின் மேற்கண்ட பதிவு தேவையில்லாத ஒன்று என நினைக்கிறேன்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  5. #2744
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    திரு ராகவேந்திரா,
    என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் உங்களின் மேற்கண்ட பதிவு தேவையில்லாத ஒன்று என நினைக்கிறேன்.
    அபத்தமாக உளறி எல்லோரையும் கொதிப்படைய செய்வது அவர் பிறப்புரிமை என்று எண்ணுகிறார். தனிப்பட்ட முறையில் நண்பர்களுடன் அடிக்க வேண்டிய ஜம்பங்களை இங்கு வந்து சொல்வது மகா அபத்தம். அதுவும் அத்தைக்கு மீசை முளைச்சா ரீதியில்....

    இந்த திரியில் தேவையில்லாதது.

    அவருடன் தொடர்பு கொண்டவர்களை நினைவு நாட்களில் நினைவு கூர்ந்து ஒன்றிரண்டு வரிகள் எழுதுவதுடன் நமக்கு அரசியல் போதுமானது.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. #2745
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    அபத்தமாக உளறி எல்லோரையும் கொதிப்படைய செய்வது அவர் பிறப்புரிமை என்று எண்ணுகிறார். தனிப்பட்ட முறையில் நண்பர்களுடன் அடிக்க வேண்டிய ஜம்பங்களை இங்கு வந்து சொல்வது மகா அபத்தம். அதுவும் அத்தைக்கு மீசை முளைச்சா ரீதியில்....

    இந்த திரியில் தேவையில்லாதது.

    அவருடன் தொடர்பு கொண்டவர்களை நினைவு நாட்களில் நினைவு கூர்ந்து ஒன்றிரண்டு வரிகள் எழுதுவதுடன் நமக்கு அரசியல் போதுமானது.
    இந்தத் திரியில் எது தேவை, எது தேவையில்லாதது என்று ஒரு வரையறை அமைத்து சொல்லுங்கள் நான் பின் பற்றுகிறேன். உளறுவதையே கொள்கையாகக் கொண்டவர்களுக்குத் தான் மற்றவர்கள் எது சொன்னாலும் உளறுவதாகத் தெரியும்.

    காமராஜரின் ஆட்சி பொற்கால ஆட்சி, அதற்குப் பின் அதனை நினைவில் மட்டுமே மக்களால் உணர முடிகிறது என்பது தான் யதார்த்தம். இதனை எதிர்பார்ப்பதில் என்ன அரசியல் இருக்கப் போகிறது. திராவிட இயக்கங்களைக் குறை கூறினாலே சீறிக் கொண்டு வருவதும் கொதிப்படைவதும் எப்படித் தேவையாகுமோ அதே போல் தான் என்னுடைய கருத்தும் தேவையானதாகும்.
    Last edited by RAGHAVENDRA; 2nd October 2013 at 07:22 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #2746
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராகவேந்திரா சார்,
    உங்களுக்கு குணசித்திர பாத்திரம் கொடுத்துள்ளோம். நீங்கள் காமெடியன் ரோலேதான் வேண்டுமென்று அடம் பிடிக்கிறீர்கள்.ஓகே.எடுத்து கொள்ளுங்கள்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. #2747
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ராகவேந்திரா சார்,
    உங்களுக்கு குணசித்திர பாத்திரம் கொடுத்துள்ளோம். நீங்கள் காமெடியன் ரோலேதான் வேண்டுமென்று அடம் பிடிக்கிறீர்கள்.ஓகே.எடுத்து கொள்ளுங்கள்.
    ஓஹோ.. இங்கு எல்லாமே நீர் தானோ....
    Last edited by RAGHAVENDRA; 2nd October 2013 at 07:27 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #2748
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி என்ற உலக மகா கலைஞனின் புகழை கிரகணம் போல மறைத்ததே இந்த பாழாய் போன அரசியல்தானே? ஒன்று அரசியலில் வெற்றி பெற வேண்டும் அல்லது விட்டொழித்து நடுநிலை காக்க வேண்டும். இப்படி இருந்த சராசரி கலைஞர்கள் கூட போற்ற பட்டு கொண்டிருப்பதை பார்க்கிறீர்களே?

    காமராஜரை சார்ந்து இருந்ததால் தேவர் இன மக்களிடம் அந்நிய பட்டார். அவ்ரங்கசீப் காமராஜுக்கோ,(அண்ணாவுக்கு தெரிந்த அளவு )சிவாஜியின் அருமை பெருமை,உயரம்,செல்வாக்கு இவை தெரியவில்லை(அவரை இனம் காட்டாமல் ஊறுகாயாகவே பயன் படுத்தினார்.). பழைய,புதிய,நடு காங்கிரஸ் ஆயிரம் இருந்தும் அவருக்கு என்ன கிழித்தன? என்ன மரியாதை கொடுத்தனர்? வளர்த்து விட்ட கடா மூப்பனார் முட்ட வந்தார். காமராஜ் பற்றிய படத்தில் சிவாஜி காட்ட படவே இல்லை. ராணுவ மரியாதையுடன் அடக்கம் கண்டது அம்மாவின் ஆட்சியில். சிலை வைத்தது கலைஞர் ஆட்சியில் .காந்தி பிறந்த நாளும் ,காமராஜ் நினைவு நாளும் அதுவுமாக வயிற்றெரிச்சலை கொட்டி கொள்ளாதீர்கள்.

    நடிகர்திலகமும் அப்பாவி தனமாக உங்கள் மாதிரி ஆட்களின் பேச்சை கேட்டே தப்பும் தவறுமாக அரசியல் பாதையை தீர்மானித்து ,பின்னால் வருந்தினார்.
    Last edited by Gopal.s; 2nd October 2013 at 10:22 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. #2749
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாழாய்ப் போன அரசியல் என்று ஒப்புக் கொள்கிறீர்கள். ஆனால் அதை சரி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் ஏன் வர மாட்டேன் என்கிறது. அரசியலுக்கு நேர்மையாளர்கள் வரக் கூடாது, அவர்களுக்கு அது ஒத்து வராது என்றால் யார் வர வேண்டும் என்கிறீர்கள்.

    வாதம் என்று வைத்தால் என்னாலும் பல வாதங்களை வைக்க முடியும். தங்கள் கருத்து சரி என்று தங்களுக்கு படும் போது என்னுடைய கருத்து எனக்கு சரி என்று தான் படும். ஒரு மிகப் பெரிய மக்கள் சக்தி, அதுவும் ஒரு நேர்மையாளரின் பின்னால் அணிவகுத்து நிற்கும், உண்மையான, நேர்மையான மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாக வைத்து ஆளக் கூடியவன் வேண்டும் என்கிற எதிர்பார்ப்போடு நடிகர் திலகத்தின் சக்தியாய் உருவெடுத்து நிற்கும் மக்களை, வீணாக்குவது தான் ஒரு தேச பக்தரின் விருப்பமாக இருக்க முடியுமா.

    என்னுடைய பதிவில் நான் குறிப்பிட்டிருப்பது சிறந்த முதல்வராக பொற்கால ஆட்சியைத் தந்த காமராஜர் ஆட்சியை மக்கள் மீண்டும் எதிர்பார்க்கிறார்கள் என்பதே. காமராஜரின் ஆட்சி தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

    இதற்கு மேல் இதனை விவரிக்க வேண்டிய தேவையில்லை என்பதே என் கருத்து.

    நடிகர் திலகத்தின் அரசியலில் பாதையும் தவறில்லை. பயணமும் தவறில்லை. இரண்டுமே நல்ல பாதை, நல்ல பயணம். நேரான பாதை. சீரான பயணம். அந்த பாதையில் அவரைப் பின் தொடராததும் அவருடன் பயணிக்காமல் வேறு பாதையில் சென்று பயணத்தில் கஷ்டங்களை சந்தித்ததும் பயணிகளின் தவறே அன்றி வழிகாட்டியின் குற்றமல்ல, அந்தத் தலைவனின் குற்றமல்ல.
    Last edited by RAGHAVENDRA; 2nd October 2013 at 08:04 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #2750
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவைப் பற்றி இன்றைய ஹிந்து நாளிதழின் தமிழ்ப் பதிப்பில் வெளிவந்துள்ள செய்தியின் நிழற்படம்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •