-
3rd October 2013, 06:12 AM
#2801
Senior Member
Seasoned Hubber
Vikram Prabhu about his Grandfather's Birth Day
reproduced from: http://newindianexpress.com/entertai...cle1813710.ece
It has been 85 years since Sivaji Ganesan was born and his grandson Vikram Prabhu recalls memories of the birthday celebrations that would mark the legend’s birthday and what the day means to him, the family and fans.
Birthday with the big man: The celebrations would begin from 5.30 am when we all woke up. The entire family would gather in his room and would shower him with gifts. Then we would all pray at the family temple adjacent to our compound wall. Fans would have already gathered. Thatha would stop at our portico and meet them and spend time with them. Then, a huge feast would follow at lunch time. During the day, his friends and industry well-wishers would keep pouring in to wish him. They would stay on for lunch, which always had our family’s special biriyani.
Times haven’t changed: Today he’s no longer with us, but the celebrations are the still the same. In fact, earlier, our road would be blocked because of the traffic and a stage would be erected and fans would perform and act out his songs. But now, due to traffic restrictions, that has been stopped. For us, grandfather’s birthday has always been an Open day, when the public pours in all through the day. It’s the same even today. As during his time, the fans gather from early morning and we all wish each other with the greeting ‘Nadigar Dina Vazhthugal’. The family members, including appa and myself, meet the fans. In fact, they come right into the house and take photos with his giant portrait in our hall. We all share memories and talk about him.
Blooming memories: If he had been alive, he would have been 85 today. He would have been happy to see me as an actor. The day is special for me and I always spend it with the family, from morning till night. I feel that as an actor and a professional, he would have preferred me to be on the sets, acting, even on this day. But I avoid shooting as I feel it’s my duty to be at home instead, and share this day and some special memories, with my family.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
3rd October 2013 06:12 AM
# ADS
Circuit advertisement
-
3rd October 2013, 06:14 AM
#2802
Senior Member
Seasoned Hubber
திரைப்படப் பட்டியல் திரியிலிருந்து மீள் பதிவு...
பாவ மன்னிப்பு ,,,, நிறைவு செய்யும் முன் ..
இது வரை இணையத்தில் அதிகம் தென்பட்டிராத தகவல் மற்றும் நிழற்படம்
இப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை உருவாக்க மெல்லிசை மன்னருக்குத் தேவைப்பட்ட காலம் ஆறு ஆண்டுகளும் 15 நாட்களும் ...
என்ன வியப்பாக உள்ளதா...
இப்படித் தான் மெல்லிசை மன்னர் கேட்கிறார்..
பாவ மன்னிப்பு பாடல் பதிவிற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன் ஒரு பாடலை கண்ணதாசன் எம்.எஸ்.வி.யிடம் தந்து ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பயன் படுத்திக் கொள்ள சொல்கிறார். அதை அப்படியே செய்வதாக சொல்லியிருந்தார் மெல்லிசை மன்னர். பாவ மன்னிப்பு படத்தில் ஒரு பாடலுக்கு வெகு நேரமாக யோசித்தும் மெட்டு புலப்படவில்லை. ஹார்மோனியத்தில் கண் வைத்தவாறு யோசனை செய்கிறார் மெல்லிசை மன்னர். கண்ணதாசன் ஆறு ஆண்டுகளுக்கு முன் தந்த பாடல் நினைவுக்கு வருகிறது. அப்பாடலை எடுத்து பார்க்கிறார். சிந்திக்கிறார்.
இரவு நேரங்களில் சாந்தோம் கடற்கரையிலிருந்து மீனவர்கள் முன்னிரவு நேரத்தில் ஏதோ ஒரு பாடலை பாடிய படி பொழுதைக் கழிக்கின்றனர். நெஞ்சை வருடிச் செல்லும் அந்த இனிய பாடல் அவருக்கு நினைவுக்கு வருகிறது. அதனை எண்ணிய படியே அப்போதைக்கு பாடல் பதிவு ஒத்திவைக்கப் படுகிறது. பிறகு மெல்லிசை மன்னர்கள் இருவரும் ஒரு ஆங்கிலப் படத்திற்கு செல்கின்றனர். திரைப்படம் துவங்கும் முன் ஆங்கிலப் பாடல் அல்லது இசை ஒலிக்கும். அன்று ஒலித்த அந்த இசையைக் கேட்டு அவர்கள் வியப்புறுகின்றனர். அந்த செம்படவர் பாடிய அதே மெட்டில் இந்த ஆங்கிலப் பாடல்... பொறி தட்டுகிறது...
மீண்டும் கவியரசரை அழைக்கிறார்கள். அமர்கிறார்கள். அந்த இரு ட்யூனின் அடிப்படை இனிமையினையும் மென்மையினையும் மட்டும் எடுத்துக் கொண்டு புதியதாக ஒரு மெட்டை உருவாக்குகிறார்கள். கவியரசர் பாடல் வரிகளை சொல்லச் சொல்ல எண்ணி 15வது நிமிடத்தில் பாடல் உருவாக்கம் முடிந்து விட்டது.
ஆறு ஆண்டுகள் 15 நிமிடங்கள் எடுத்துக் கொண்ட அப்பாடல் எது ... தெரியுமா...
விடையைச் சொல்ல முயலுங்கள். அது வரை இந்த அபூர்வமான நிழற்படத்தைப் பார்த்துக் கொண்டிருங்கள்.
விடை தெரிந்தால் அத்திரியில் சொல்லுங்கள்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
3rd October 2013, 07:05 AM
#2803
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Murali Srinivas
நடிகர் திலகத்தின் 85-வது பிறந்த நாள் விழா - 01.10.2013
கோபால், ஒரு முக்கியமான செய்தி. உங்கள் கோரிக்கை அன்னை இல்லத்திற்கு கேட்டு விட்டது. அது நிறைவேறவும் போகிறது. ஆம், அடுத்த ஆண்டு முதல் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவில் ஒன்றோ அல்லது இரண்டு ரசிகர்களையும் மேடையேற்றி கௌரவிக்கப் போகிறார்கள். இதை மேடையிலே பிரபு அறிவித்தார்.
முரளி சார்,
என் எழுத்துக்கு இவ்வளவு வலிமையா? சரி.நேரத்தை வீணாக்காமல் அந்த இரண்டு முதல் அதிர்ஷ்டசாலி ரசிகர்களை நேர்மையான ஜனநாயக முறையில் இந்த திரி ரசிகர்களை கொண்டு தேர்வு செய்து விடலாம். நான் இரண்டிரண்டு பெயர்களாக தேர்வு செய்து option கொடுக்கிறேன். 1,2,3,4,5..... இப்படி. ஓட்டளிப்பவர்கள் தங்கள் விருப்பத்தை (ஒன்றே ஒன்றுதான் பிடித்த ஒரு நம்பர்)குறித்தால் ,அதிக ஓட்டுக்கள் பெற்று கௌரவிக்க படும் அந்த எண்ணில் உள்ள இருவருக்கும் வாழ்த்துக்கள்.
1)பம்மலார்-கோபால்
2)ராகவேந்தர்-கோபால்
3)வாசுதேவன்-கோபால்
4)முரளி- கோபால்
5)கார்த்திக்-கோபால்
6)சாரதா- கோபால்
7)சந்திரசேகர்- கோபால்.
வாசகர்கள் சுதந்திரமாக ஒரு நம்பர் தேர்வு செய்யலாம்.
(இது சம்பந்தமாக PM பண்ணுவதோ,நண்பர்களுக்கு போன் செய்து campaign பண்ணுவதோ,தவிர்க்க பட வேண்டும்)
Last edited by Gopal.s; 3rd October 2013 at 07:13 AM.
-
3rd October 2013, 07:42 AM
#2804
Senior Member
Seasoned Hubber
மன்னிக்க வேண்டும் யுவர் ஆனர்,
என்னைக் கேட்காமல் என் பெயரைச் சேர்க்காதீர்கள். என் பெயர் வேண்டாம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
3rd October 2013, 07:54 AM
#2805
Junior Member
Newbie Hubber

Originally Posted by
RAGHAVENDRA
மன்னிக்க வேண்டும் யுவர் ஆனர்,
என்னைக் கேட்காமல் என் பெயரைச் சேர்க்காதீர்கள். என் பெயர் வேண்டாம்.
கோழியின் சம்மதம் கேட்டா மஞ்சளும் ,மசாலாவும் அரைப்பார்கள்?(சேச்சே ,அழகான கோர்ட் உரையாடலுக்கு கசாப்பு பாணியில் பதில் சொல்லி விட்டேனே?)
-
3rd October 2013, 07:54 AM
#2806
Senior Member
Diamond Hubber
-
3rd October 2013, 08:05 AM
#2807
Senior Member
Seasoned Hubber
கோழியின் சம்மதம் கேட்டா மஞ்சளும் ,மசாலாவும் அரைப்பார்கள்?(சேச்சே ,அழகான கோர்ட் உரையாடலுக்கு கசாப்பு பாணியில் பதில் சொல்லி விட்டேனே?)
இது வேகமாவும் நீண்ட தூரமும் பறக்கும் சக்தி அதிகம் உள்ளதாக்கும். உங்கள் கையில் சிக்காது...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
3rd October 2013, 08:09 AM
#2808
Senior Member
Seasoned Hubber
கோபால், ஒரு முக்கியமான செய்தி. உங்கள் கோரிக்கை அன்னை இல்லத்திற்கு கேட்டு விட்டது. அது நிறைவேறவும் போகிறது. ஆம், அடுத்த ஆண்டு முதல் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவில் ஒன்றோ அல்லது இரண்டு ரசிகர்களையும் மேடையேற்றி கௌரவிக்கப் போகிறார்கள். இதை மேடையிலே பிரபு அறிவித்தார்.
கோபால் பாரத விலாஸில் சொன்னதை ... வியட்நாமில் குண்டு வெடித்தால் விருது நகரில் வலி எடுக்கிறதே ... என்று சொன்னதை புதல்வர்கள் மறக்கவில்லை. வியட்நாமிலிருந்து கோபால் 2013ல் சொல்வார் என்பதை அந்த கோபால் 1973லியே சொன்னதும் இல்லாமல், அது வரை வேறு யார் சொன்னாலும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் கட்டளை இட்டு விட்டாரோ என்னவோ...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
3rd October 2013, 09:00 AM
#2809
Senior Member
Diamond Hubber
கோபால் அண்ணாச்சி
இன்னா பேராசை கண்ணு உனக்கு. வந்து ஒரு வருஷம் கூட முடியல்ல. ஏதோ ஒரே ஒரு கட்டுரை தொடர் போட்டுட்டு அதுக்குள்ளே மேடையேறி மரியாதை வாங்கிக்கணுமா?
இன்னா கண்ணு அநியாயமா இருக்கு. நமக்கு மேலே எவ்வளவோ பெரியவங்களெல்லாம் இருக்காங்க தெரியுமில்லே. கர்ணன் படத்துக்கு இதுவரை வந்த அனைத்து விஷயங்களையும் கிரிஜா மேடம் ஒரு பெரிய தனி ஆல்பமா போட்டு அசத்தியிருக்காங்க. அவுங்களை பட்டியல்ல சேர்த்துக்கோ. ரசிக வேந்தர்,பம்மலார், முரளி சார், சந்திரசேகரன் சார், கார்த்திக் சாரெல்லாம் சரியான தேர்வு. ஆனா உன் பேரையும், என் பேரையும் போட்டு சொதப்பிட்ட. நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கு கண்ணு.
யோசி ராஜா யோசி.
-
3rd October 2013, 09:20 AM
#2810
Senior Member
Diamond Hubber
விரைவில் சென்னையில் தங்கச்சுரங்கம் ராஜன் துப்பறிய வருகிறார். ராஜன் பளபளவென இருப்பதாகக் கேள்வி. பிரிண்ட் நன்றாக உள்ளதாம். வைரநெஞ்சமும் வந்து கலக்க இருக்கிறதாம்.

Last edited by vasudevan31355; 3rd October 2013 at 09:36 AM.
நடிகர் திலகமே தெய்வம்
Bookmarks