-
3rd October 2013, 11:37 PM
#2841
பாச மலர் டிஜிட்டல் பிரிண்ட் வெளியீடு - Part II
இனி இரண்டாம் பகுதியாக பாச மலர் படம் எப்படி உருவாக்கப்பட்டிருகின்றது என்பதை காண்போம்.
பாச மலர் என்று சொன்னால் அனைவரும் அறிவர் அது சகோதர பாசத்தை முன்னிறுத்திய குடும்ப சூழலில் நடைபெறும் கதை. கருப்பு வெள்ளையில் தீட்டப்பட்ட காவியம். அன்றைய நாளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஓடக்கூடிய படம்.
இன்று வரை அதன் நெகடிவ் நல்ல முறையில் நல்ல condition-ல் பராமரிக்கப்பட்டு வருகிறது என்பதே மகிழ்வுக்குரிய செய்தி. படத்தை அதன் தரம் குறையாமல், வீரியம் கெடாமல் ஸ்கோப் format -ல் மாற்றியிருக்கிறார்கள். திருவிளையாடலை தவிர்த்து விட்டு பார்த்தால் பாச மலர்தான் அடுத்த இடத்தை பிடிக்கும். யார் யார் யார் அவள் யாரோ பாடலில் ஒரு சில நொடிகள் வந்து போகும் இரண்டு ஷாட்களை தவிர வேறு எந்த frame-ம் conversion-ல் அடிபடவில்லை.
கருப்பு வெள்ளை படங்களுக்கே ஒரு depth உண்டு. அது இந்த format-ல் சரியாக அமைந்திருக்கிறது. படத்தின் நீளம் தற்கால தேவைக்கேற்ப குறைக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற trimming செய்யும் போது பொதுவாக ஹீரோவின் ஸின்களில் கத்திரி வைக்க மாட்டார்கள். ஆனால் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் அல்லவா நமது நடிகர் திலகம். அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளின் நீளமும் trim செய்யப்பட்டிருக்கிறது. பாட்டொன்று கேட்டேன் பாடலில் ஓரு சில ஷாட்கள் பாடலின் அனுபல்லவி repeat ஆகும் இடங்கள், நடிகர் திலகம் நம்பியாரிடம் கோவப்பட்டு பேசிய காட்சிக்கு அடுத்து நம்பியார் தன சொத்தையெல்லாம் தங்கை ராஜத்தின் பெயருக்கு மாற்றி கொண்டு கொடுக்கும் காட்சியின் தொடக்கம் மற்றும் அதன் தொடர்ச்சியாக வரும் இரண்டு மூன்று ஷாட்கள் நீக்கப்பட்டு நம்பியார் எம்.என்.ராஜத்திற்கு வெளிநாட்டில் போய் படிக்கும் வாய்ப்பு வந்திருக்கும் லெட்டரை கொடுக்கும் காட்சிக்கு நேராக சென்று விடுவது போல் எடிட் செய்யப்பட்டிருகிறது.
படத்தின் பாடல்கள் மற்றும் ரீ ரெகார்டிங் போன்ற முக்கியமான விஷயங்களில் கை வைக்கவில்லை எனபது பெரும் மகிழ்வுக்கு உரிய விஷயம். அதில் கை வைக்க வேண்டிய தேவையே ஏற்படவில்லை, ஏற்பட அந்த நாட்களிலேயே மெல்லிசை மன்னர்கள் விடவில்லை என்பதுதான் உண்மை. படத்தின் முக்கியமான பாடல்கள் குறிப்பாக மலர்ந்தும் மலராத, மயங்குகிறாள் ஒரு மாது, பாட்டொன்று கேட்டேன் போன்ற பாடல்கள் அகண்ட திரையில் ஓடும் படத்தோடு கச்சிதமாக பொருந்தி கேட்ட இனிமை இருக்கிறதே. அனுபவித்தவர்களுக்கே அது புரியும். அதிலும் குறிப்பாக இசையரசியின் குரல் தேனாக வந்து காதில் ஒலிக்கின்றது.
அன்றைய நாளில் படத்திற்கு தேவையாக இருந்தது தங்கவேலு எம்.சரோஜா நகைசுவை காட்சிகள். இன்றைய நாட்களில் அந்த காட்சிகள் எங்கெல்லாம் சற்று தொய்வை ஏற்படுத்துமோ அந்த இடங்களிலெல்லாம் நீளத்தை சற்றே குறைத்து ட்ரிம் செய்திருக்கிறார்கள்.
இதுவரையில் 35 mm-ல் மட்டுமே பார்த்திருந்த இந்த படத்தை சினிமாஸ்கோப் வடிவில் பார்த்தபோதும் வசனங்களையும் பாடல்களையும் stereo sound-ல் கேட்கும்போது அற்புதமாக இருந்தது. குறிப்பாக திலகம் மற்றும் ஜெமினி இடையில் தொழிற்சாலையில் வைத்து நடைபெறும் வாக்குவாத காட்சி, தோட்டத்தில் ஜெமினியும் சாவித்திரியும் பேசிக் கொண்டிருக்க நடிகர் திலகம் ஆத்திரத்துடன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வந்து விட்டு தங்கையின் பேச்சை கேட்டு மனம் மாறும் காட்சி, சாவித்திரியின் பிறந்த நாள் காட்சியில் வரும் சில காமிரா கோணங்கள், மலர்ந்தும் மலராத பாடல் காட்சி இவை அனைத்தும் ஒரு புதிய அனுபவமாக அமைந்தது.
ஆக scope format, கருப்பு வெள்ளையின் depth, தேவையான trimming ஆனால் படத்தின் மெயின் கதைக்கோ காட்சிகளுக்கோ பங்கம் வராமல், சேதமில்லாமல் செய்யப்பட்ட மெருகேற்றல் என்று அனைத்து அம்சங்களும் நிறைவாக அமைந்திருக்கின்றன. பாசமலர் படத்திற்கு ஸ்கோப் தேவையா என்று தொடுக்கப்பட்ட கேள்விக்கு கூட பதில் என்னவென்றால் இது போன்ற கருப்பு வெள்ளை காவியங்களுக்கும் கூட மெருகேற்றல் நடந்தால் அது அடுத்து வரும் தலைமுறைகளிடம் பத்திரமாக சரியான முறையில் போய் சேரும் எனபதுதான்.
(தொடரும்)
அன்புடன்
-
3rd October 2013 11:37 PM
# ADS
Circuit advertisement
-
3rd October 2013, 11:45 PM
#2842
பாச மலர் டிஜிட்டல் பிரிண்ட் வெளியீடு - Part III
பாச மலர் வெளியீட்டு சூழலும் அதன் பின் நடந்த நிகழ்வுகளும்
ஒரு பழைய படத்தை restore செய்து வெளியிடுவது என்பது ஒரு புதிய படத்தை தயாரித்து வெளியிடுவதற்கு சமம். இன்றைய சூழலில் செய்ய வேண்டியவன என்ன என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தின் அனைத்து ஏரியாக்களின் உரிமையை வாங்குதல்
நெகடிவ் உரிமை கிடைப்பின் அதை வாங்குதல்.
நெகடிவ் உரிமை கிடைக்காத பட்சத்தில் நெகடிவிலிருந்து நல்ல பிரதி ஒன்றை எடுத்தல்
நல்ல தொழில் நுட்ப வசதியுள்ள ஒரு லாபில் வல்லுனர்களை கொண்டு புதிதாய் போடப்பட்ட பிரிண்டை பயன்படுத்தி படத்தின் restoration வேலையை திறம்பட செய்தல்
ஒரு தேர்ந்த அனுபவ ஞானம் உள்ள எடிட்டர் ஒருவரை நியமித்து தற்காலத்திற்கேற்ப படத்தின் நீளத்தை trim செய்தல்
தேவையென்றால் படத்தின் ஒரிஜினல் இசைக் கோர்ப்பு சேதமடைந்திருக்கும் பட்சத்தில் அதை நெகடிவிலிருந்து பிரித்து தகுதியான நபர்களை கொண்டு பின்னணி இசையை மீண்டும் அமைத்து சேர்த்தல்.[இந்த வகை பின்னணி சேர்ப்பு தவிர்க்க முடியாத சூழலிலே மட்டுமே செய்ய வேண்டும்]
பட வெளியீட்டுக்கு முன் ட்ரைலர் வெள்யீட்டு விழாவை நடத்துதல்
அனைத்து ஊர்களிலும் நல்ல திரையரங்குகளில் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்தல்
படம் வெளியாகும் திரையரங்குகளில் அந்த ட்ரைலர் காண்பித்தல்
படம் வெளியாகும் தேதி பற்றிய விவரங்களை விளம்பரங்கள் மூலமாக மக்களிடையே கொண்டு செல்லுதல்
நாளிதழ்களில் விளம்பரம் எனும் போது ஆங்கில தின இதழ்களிலும் குறிப்பாக ஹிந்துவில் விளம்பரம் செய்தல்
படத்தை Qube format-ல் மாற்றி அமைத்தல்.
படத்திற்கு ஒரு பத்திரிக்கையாளர் preview காட்சிக்கு ஏற்பாடு செய்தல்
படம் வெளியாகும் நேரத்திலும் அதன் பின்னரும் படத்தின் விளமபரங்களை மக்களிடையே சென்று சேர்த்தல்
இப்படி பல விஷயங்களை உள்ளடக்கியது ஒரு பழைய படத்தின் restoration மற்றும் ரிலீஸ் வேலைகள்
இவை பாச மலருக்கு எப்படி நடந்தன?
ட்ரைலர் வெளியீட்டு விழா வரை சரியான பாதையில் பயணித்து கொண்டிருந்தது பாச மலர்.
படத்தை விநியோகம் செய்யும் உரிமைக்கும் போட்டி இருந்தது. இன்றைய சூழலில் விநியோக துறையில் அனுபவம் உள்ளவர்கள் இதை ஏற்று செய்தாலே சரியாக இருக்கும் என ஒரு முடிவெடுத்து அதன்படி சென்னை நகருக்கு பூமிநாதனே பொறுப்பு எடுத்துக் கொள்வது, NSC ஏரியா திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இவை தவிர்த்து தமிழகத்தின் அனைத்து ஏரியாக்களையும் தான் எடுத்துக் கொண்டு விநியோகம் செய்வதாக தேனாண்டாள் பிலிம்ஸ் அதிபரும் திரைப்பட இயக்குனருமான ராம.நாராயணன் கேட்டுக் கொள்ள அது அப்படியே அவருக்கு வழங்கப்பட்டது.
ரிலீஸ் தேதி முடிவு எடுக்கும் நேரத்தில்தான் சிக்கல்கள் தொடங்கின. படத்தை ஆகஸ்ட் 15 அன்று திரைக்கு கொண்டு வரலாம் என்று ஆலோசனை சொல்லப்பட்டது.
படத்தை restoration செய்து வெளியிட்ட பூமிநாதனுக்கு ஒரு தயக்கம். காரணம் என்னவென்றால் ஆகஸ்ட் 9 அன்று தலைவா படம் வெளியாவதாக அறிவிப்பு வந்திருந்தது. அப்போது வெளியிட்டால் பாச மலர் படத்திற்கு தேவையான அரங்குகள் கிடைக்குமா என்ற யோசனை. ஆலோசனை சொன்னவர்கள் அதற்கு சொன்ன பதில், இப்போது தலைவா வருகிறது. சரி அதற்காக நாம் ரிலீஸ் தேதியை மாற்றி அமைக்கிறோம். அடுத்த மாதம் அஜித் படம் வருகிறது, கார்த்தி படம் வருகிறது, ஆர்யா மற்றும் விஷால் படங்கள் வருகிறது, பிறகு கமல் படம் வரும். இன்னும் சொல்லப் போனால் இன்றைய சூழலில் ஒவ்வொரு வாரமும் சின்னதும் பெரிதுமாக 3,4 படங்கள் வெளியாகி கொண்டேயிருக்கின்றன. அதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் நாம் பாச மலர் படத்தை திரையிடவே முடியாது என்று சொல்லப்பட்டது. ஆகவே 100 திரையரங்குகளில் திரையிட்டால்தான் ஆயிற்று என்ற நிலைப்பாட்டை எடுக்காமல் 40-50 அரங்குகளில் ரீலீஸ் செய்தால் போதும். பிறகு நாம் அரங்குகளின் எண்ணிக்கையை கூட்டி கொள்ளலாம் என்றும் சொல்லப்பட்டது. இந்த வாதம் லாஜிக்கின் அடிப்படையில் அமைந்திருந்ததால் ஏற்றுக் கொள்ளபப்ட்டு படத்தை ஆகஸ்ட் 15 அன்று திரைக்கு கொண்டு வரும் முயற்சிகள் துவங்கின. இந்த செயல் திட்டம் வெற்றி அடைந்திருக்கும், தலைவா முதலில் அறிவித்தப்படி ஆகஸ்ட் 9 அன்று வெளியாகியிருந்தால். ஆனால் அப்போதுதான் யாரும் எதிர்பார்க்காத அந்த twist நிகழ்ந்தது.
தலைவா ஆகஸ்ட் 9 அன்று வெளியாக வேண்டிய சூழலில் திடீரென்று முதல் நாளன்று படம் வெளிவராது என்று செய்தி. எப்போதும் வருவது போல் வதந்தி என்று பார்த்தால் படம் வெளிவரவில்லை. என்ன சிக்கல் என்று யாருக்கும் தெரியவில்லை இன்று வரை. மறு நாள் வெளியாகி விடும், அடுத்த நாள் வெளியாகி விடும் என்றெல்லாம் தகவல்கள் கசிந்தனவேயன்றி படம் வெளிவந்த பாடில்லை. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது பாச மலர் படம்தான். தலைவா சொன்னபடி வெளியாகியிருந்தால் படத்தின் ரிப்போர்ட் வந்திருக்கும், அதற்கேற்ப பாச மலர் படத்திற்கு அரங்குகள் கிடைப்பது உறுதிப்பட்டிருக்கும். ஆனால் படம் வெளியாகும் தேதி தெரியாததால் அரங்க உரிமையாளர்கள் பாச மலர் படத்திறகு தியேட்டர் கமிட் செய்ய தயங்கினார்கள். அதிலும் குறிப்பாக ஆகஸ்ட் 15 அன்று தலைவா எப்படியும் வெளி வந்து விடும் என்று வேறு யூகங்கள் வந்து கொண்டிருந்தன. இந்த பாதிப்பு சென்னை நகரத்தை விட அதிகமாக வெளிப்பட்டது மற்ற ஊர்களில்தான்.
கோவை தவிர ஏனைய நகரங்களில் நல்ல திரையரங்குகள் கிடைப்பதே அரிதாகி விட்டது. ராம.நாராயணன் பெரிய தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர், அவர் நல்ல திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வார் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருக்க அவரால் நியமிக்கப்பட்ட ஆட்கள் அது போன்ற எந்த முன்னேற்பாடுகளும் செய்யாமல் ஆகாத போகாத அரங்குகளையெல்லாம் ஒப்பந்தம் செய்தார்கள். குறிப்பாக திருச்சியில் பாலஸ் மற்றும் மதுரையில் அலங்கார் அரங்குகளை சொல்ல வேண்டும்.
ரசிகர்கள்களை மிகவும் கோவப்பட வைத்ததும் வேதனையில் ஆழ்த்தியதுமான சம்பவங்கள் இவை.படம் வெளியாகும் அன்று வேறு நல்ல அரங்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் தலைவா வெளியீடு மீண்டும் கேள்விகுறி ஆனதால் பாச மலர் ரிலீஸ் தியேட்டர்கள் எண்ணிக்கையும் கேள்விகுறி ஆனது. சொல்லப் போனால் பாச மலர் வெளியான ஒரு சில அரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டதே படம் வெளியாவதற்கு முந்தின இரவுதான்.
இப்படி அரங்குகள் கிடைக்காமல் திணறிக் கொண்டிருந்ததால் படத்தின் ட்ரைலர் எங்கும் திரையிடப்படவேயில்லை. பத்திரிக்கை விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்களும் மிக குறைவு. தந்தியில் மட்டுமே விளம்பரம் வந்ததால் ஆங்கில பத்திரிக்கைகளான ஹிந்து மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா மற்றுமே வாங்கும் சந்தாதாரர்களுக்கு படத்தின் ரிலீஸ் பற்றிய செய்திகள் சென்று சேரவேயில்லை. மற்றொரு பெரிய மைனஸ் பாயிண்ட் நிகில் முருகன் போன்ற ஒரு PRO அமையாமல் போனதுதான். இப்படிப்பட்ட சிக்கல்களையெல்லாம் தாண்டி படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியானது. சுமார் 45 முதல் 50 அரங்குகளில் வெளியானது. ஆனால் பிரச்னை என்னவென்றால் முதல் நாள் இரவுதான் கணிசமான அரங்குகள் முடிவானதால் பத்திரிக்கையில் வந்த இன்று முதல் விளம்பரத்தில் அரங்குகள் பெயர்களை சேர்க்க முடியவில்லை. இதனால் அந்தந்த ஊர்களில் எந்த அரங்கில் படம் வெளியாகிறது என்பது பற்றி அந்த ஊர்காரகளுக்கே தெரியவில்லை.
முதல் நாள் படம் பார்த்த அனைவரும் படத்தின் quality பார்த்து அசந்து விட்டனர். ஒரு கருப்பு வெள்ளை படத்தை இத்துணை அழகுற சினிமாஸ்கோப் format-ல் பார்த்ததே இல்லை என்பதால் பிரமிப்பு கூடுதலாகவே இருந்தது.முதல் நாள் reception நன்றாகவே இருந்தது.
இரண்டாம் நாள் ஆகஸ்ட் 16 வெள்ளி. வேலை நாள்.அன்று கடைசி ஆடி வெள்ளி. வரலட்சுமி விரதம். இதெல்லாம் போதாதென்று ஜெயா டிவியில் அன்று பாச மலர் படம் ஒளிபரப்பானது. இத்தகைய காரணங்களால் அன்றைய தினம் பாச மலர் படத்திற்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டது.
அடுத்த நாள் சனி அதற்கு அடுத்த நாள் ஞாயிறு இந்த இரண்டு நாட்களிலும் படம் மீண்டும் pick up ஆகி கூட்டம் வர ஆரம்பித்து விட்டது. சென்னை மட்டுமல்ல middle மற்றும் பெரிய நகரங்களிலும் இந்த நிலைமை இருந்தது, இந்த நேரத்தில்தான் பிரச்சனைகள் தீர்ந்து விட்டன தலைவா ஆகஸ்ட் 20 அன்று வெளியாகிறது என்ற செய்தி வருகிறது.
அந்த படம் வெளியாகிறது என்றவுடன் அரங்க உரிமையாளர்கள் அனைவரும் தலைவா படத்தை வெளியிட மும்முரம் காட்டினார்கள். நன்றாக ஓடிக் கொண்டிருந்த அரங்குகளிளிருந்தும் பாச மலர் மாற்றப்பட்டது. இதற்கு ஒரு சில உதாரணங்களை பார்க்கலாம்.
சென்னை சத்யம் அரங்கில் 3 நாட்கள் ஹவுஸ் புல். ஒரு நாள் 90% occupancy, ஒரு நாள் 60% occupancy. Inox அரங்கத்தை எடுத்துக் கொண்டால் மூன்று நாட்கள் 75 to 90% occupancy. PVR அரங்கிலும் இதே நிலை. சாந்தியில் ஞாயிறு மாலை ஹவுஸ் புல். ஆனாலும் சத்யம், Inox மற்றும் PVR போன்ற அரங்குகளில் படம் மாற்றப்பட்டது. இதில் வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றால் ஏன் படத்தை எடுத்தீர்கள் என்று கூட இந்த அரங்க உரிமையாளர்களை கேட்க முடியாது.காரணம் இன்றைய சூழலில் திரையரங்குகள் கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கும் நிலையில் இவர்களை கேள்வி கேட்கவோ வாதம் செய்யவோ எந்த விநியோகஸ்தரும் தயாராக இல்லை என்பதே உண்மை. இந்த அரங்குகள் ஒவ்வொன்றிலும் 5க்கும் மேற்பட்ட ஸ்க்ரீன்கள் இருக்கின்ற நிலையில் நிச்சயமாக இந்தப் படத்தை அவர்கள் தொடர்ந்திருக்கலாம்.
மதுரையில் அலங்காரில் திரையிடப்பட்ட பாச மலர் படத்திற்கு நல்ல reception, அதாவது அலங்கார் என்ற திரையரங்கில் மூன்று வருடங்களாக எந்தப் படமும் பெறாத வரவேற்பை இந்தப் படம் பெற்றது. பாச மலர் வருவதற்கு 3 வாரங்களுக்கு முன்பு இதே அலங்காரில் வெளியான வசந்த மாளிகை பெரிய வரவேற்பை பெற்றது. அதையும் தாண்டியது பாச மலர். முதல் வாரத்தில் வசூல் கிட்டத்தட்ட ரூபாய் 90 ஆயிரத்தை எட்டியது. இப்படி இருந்தும் ராம.நாராயணனின் ஆட்கள் அதை முன்னெடுத்து செல்ல எந்த துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. ராஜபாளையம் நகரிலும் படம் நன்றாகவே ஒரு வாரம் போனது
சேலத்தில் இரண்டு அரங்கங்கள், ஆத்தூர் கிருஷ்ணகிரி நாமக்கல் போன்ற இடங்களிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு. இங்கேயும் விநியோகஸ்தர் interest எடுக்கவில்லை. கோவை மாவட்டத்திலும் இதே நிலைதான். திருப்பூர் நகரில் இரண்டு அரங்குகளில் வெளியாகி இரண்டிலும் ஒரு வாரம் ஓடிய நிலைமை. நாகர்கோவிலில் எப்போதும் போல வரவேற்பு. இங்கேயும் படம் மாற்றப்பட்டு புதிய படம் வெளியானது. ஆனால் பாசமலர் பெற்ற வசூலை விட குறைவு.
இத்தனை இடர்பாடுகள். இவற்றை சரி செய்ய படத்தை வெளியிட்டவர்கள் ஏதேனும் முயற்சி எடுத்தார்களா என்றால் பதில் இல்லை என்றே சொல்ல வேண்டும். நான் முன்னரே சொன்ன மாதிரி ட்ரைலர் வெளியீட்டு விழா வரை சரியான பாதையில் சென்றவர்கள் அதன் பிறகு படத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில், இப்படி ஒரு படம் இங்கே ஓடிக் கொண்டிருக்கிறது என்ற தகவல்களை கூட சரியான முறையில் விளம்பரப்படுத்தவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. படம் வெளியான பிறகும் விளம்பரங்கள் செய்ய வேண்டும், போஸ்டர்கள் ஓட்டப்பட வேண்டும் திரையரங்குகளுக்கு Qube முறையில் படத்தை திரையிட வாரந்தோறும் வாடகை கட்ட வேண்டும் போன்ற விஷயங்களை கூட அவர்கள் யோசித்து பார்த்தார்களா என்பதே பெரிய கேள்விகுறி. படம் வெளியான ஊர்களில் இருந்து வரும் feedback என்ன அவற்றில் ஏதேனும் குறைகள் இருப்பின் அதை நீக்கி ஒரு solution தேடினார்களா என்றால் இல்லை. அப்படி செய்திருந்தால் திருச்சி போன்ற ஊர்களில் ரசிகர்களின் மனக்குமுறலை அவர்கள் அறிந்திருப்பார்கள். திருச்சி நகரில் பாழடைந்த நிலையில் இருக்கும் பாலஸ் அரங்கில் வெளியிட வேண்டாம் என்று சொன்னதை கேட்டிருப்பார்கள். படம் வெளியான பிறகு கூட ஏதேனும் நல்ல அரங்கில் படத்தை வெளியிட செய்யுங்கள் நிச்சயமாக படம் நன்றாக போகும் என்று சொன்னதை யாரும் காதில் வாங்கவேயில்லை. சென்னை NSC தவிர்த்து அனைத்து ஏரியாக்களையும் வாங்கிய ராம.நாராயணன் பெரிதாக ஏதோ செய்யப் போகிறார் என்று பார்த்தால் அவரும் அவர் பிரதிநிதிகளும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர் எடுத்துக் கொண்டிருந்த சொந்தப் படத்தைதான் அவர் பார்த்தார். [ஆனால் poetic justice போல அந்த படம் தியேட்டரில் குப்புற கவிழ்ந்தது].
விளம்பரங்களைப் பற்றி சொல்லும்போது ஒரு விஷயம் இகே குறிப்பிட வேண்டும். ராஜ் டிவி நிறுவனத்தினர் 1979-ல் வெளியான நினைத்தாலே இனிக்கும் படத்தை மீண்டும் restoration முறையில் திரையிடுகிறார்கள். அக்டோபர் 4 முதல் என்று இப்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருகின்ற இந்த படத்திற்கு ஜூலை 15 முதல் தினசரி தந்தியில் விளம்பரம் கொடுத்தார்கள், கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு புதிய படத்திற்கு கூட இல்லாத வகையில் தொடர்ந்து 70 நாட்களுக்கும் மேலாக இவர்கள் கொடுத்த விளம்பரங்களுக்கு ஆன செலவு மட்டும் ருபாய் 10 லட்சம் என்று சொல்கிறாகள். இது சற்றே அதிகம் என்றாலும் கூட விளம்பரம் எத்துனை முக்கியம் என்பதை சுட்டிக்காட்டவே இதை குறிப்பிட்டேன்.
சுருக்கமாக சொன்னால் பாச மலர் படத்திற்கு நேர்ந்தது பல்வேறு முனை தாக்குதல்கள் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள். படத்தை ஆகஸ்ட் 15 அன்று வெளியிடாமல் சற்று பொறுத்து வெளியிட்டுருந்தால் படம் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கும். இந்த சிந்தனை hindsight-ல் தோன்றும் ஒன்று என்று சொன்னால் கூட அதன் பிறகு நடந்த நிகழ்வுகளை கோர்வைப்படுத்தி பார்த்தால் அது சரி என்றே தோன்றுகிறது.எந்தெந்த புதிய படங்களெல்லாம் செப் மற்றும் அக்டோபர் மாதங்களில் வரும் என்று நினைத்து பாச மலரை ஆகஸ்ட் 15 அன்று ரிலீஸ் செய்ய சொன்னார்களோ அந்த படங்களெல்லாம் வெளியீட்டு தேதி மாறி தீபாவளி ரிலீஸ் படங்களாக போனதை இங்கே குறிப்பிட வேண்டும்.
இனி முதல் பதிவில் சொன்னபடி இந்த படம் restoration முறையில் ரிலீஸ் செய்திருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு வருவோம். கேள்வி எழுப்பியவர்கள் சொல்லும் காரணங்கள் படம் சோகப் படம், பாசத்தை மட்டுமே பேசும் படம் black and white படம் என்பதால் மக்களுக்கு ஒரு தயக்கம் இருக்கும் என்று.ஆனால் மேற் சொன்ன காரணங்களினால்தான் படம் சற்று பின்னடைவை சந்தித்ததா என்றால் அப்படி இல்லை என்றே தோன்றுகிறது. சோகமான Black & White படம் இளைய தலைமுறையிடம் பெரிய வரவேற்ப்பை பெறாமல் இருக்கலாம். ஆனால் இந்த படத்தின் target audience அவர்கள் இல்லை. நடுத்தர வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் தான் இந்தப் படத்தின் இலக்கு. ஆனால் அவர்கள் படம் வெளியான உடன் வர மாட்டார்கள்.சற்றே தாமதித்தே அவர்கள் திரையரங்கு பக்கம் வருவார்கள். எனவே அப்படிப்பட்ட ஆட்களிடம் படம் எந்த அரங்கில் எந்த காட்சிகளில் ஓடுகிறது என்பது பற்றிய விவரங்கள் சரியாக சென்று சேர்த்திருந்தால் அவர்கள் நிச்சயமாக வந்திருந்து படத்தை ரசித்திருப்பார்கள்.
இன்றைய சூழலிலும் கூட ஒன்றும் மோசம் போய் விடவில்லை. படத்தை எடுத்தவர்களுக்கு அவர்கள் செய்த பண முதலீட்டில் 50% திரும்பி வந்து விட்டது. இனியும் 5 வருடங்களுக்கு அவர்களுக்கு திரையிடும் உரிமை இருக்கிறது. சொந்தமாகவே qube format-ல் மாற்றி அமைக்கப்பட்ட பிரிண்ட்கள் இருக்கின்றன. எப்போதெல்லாம் திரையரங்குகளில் gap கிடைக்கிறதோ அப்போதெல்லாம் திரையிடலாம். அவர்கள் முதலீட்டிற்கு மேல் லாபம் கிடைப்பது நிச்சயம். அதற்கு எடுத்துக்காட்டாக சென்ற வாரத்தில் செங்கோட்டை ஆனந்த் அரங்கிலும் மதுரை ஷா அரங்கிலும் வெளியிடப்பட்டு ஓடியிருக்கிறது. இந்த சூழல் தொடரும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
படம் wrong choice அல்ல. இன்றைய காலகட்டத்தில் உறவு முறைகளில் பாசமும் நேசமும் அன்பும் அருகி வரும் சூழலில் அதிலும் nuclear family என்று அறியப்படும் one child family-யில் பெரியப்பா சித்தப்பா அத்தை மாமன் என்ற நெருங்கிய உறவு முறைகள் பற்றி கூட தெரியாமல் வளர்ந்து வரும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு சகோதர பாசத்தின் பெருமையை சொல்லும் இந்த மாதிரி படங்கள் கண்டிப்பாக தேவை எனபதே யதார்த்தம். அந்த வகையில் இபப்டிப்பட்ட சோக ரசம் சற்றே அதிகமாக இருந்தாலும் tragedy ending ஆக இருந்தாலும் அதையும் தாண்டி இப்படிப்பட்ட ஒரு Black & White காவியத்தை restoration முறையில் கொண்டு வர வேண்டும் என்று முயற்சி எடுத்து அதை சிறப்பாக செய்துக் காட்டிய பூமிநாதன் பாராட்டுக்குரியவர்.
ஒரு பக்கம் சமுதாயத்திற்கு நல்ல கருத்துகளை சொல்ல வேண்டும் அதை சொல்வதற்கு ஆளே இல்லை என்றெல்லாம் சொல்லிக் கொண்டே மறு பக்கத்தில் தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் நல்ல கருத்துள்ள இந்த படம் சரியாக போகவில்லை என்று கொண்டாடி மகிழ்கிறார்கள் சிலர் என்பதுதான் மிகவும் வேதனையான செய்தி. இதை பார்க்கும் போது படத்தில் வரும் பாடல் வரிகள்தான் நினைவிற்கு வருகிறது.
நெஞ்சில் ஒரு களங்கமில்லை
சொல்லில் ஒரு பொய்யுமில்லை
வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை.தோல்வியுமில்லை
என்று பாடியதோடு மட்டுமல்லாமல் அதன்படி வாழ்ந்தும் காட்டிய அந்த மாமனிதனின் ஆசிகள் இந்த முயற்சியையும் வெற்றி பெற வைத்து இந்த தயாரிப்பாளரையும் வாழ வைக்கும்.
இதை வாசித்த அனைவருக்கும் நன்றி.
அன்புடன்
-
4th October 2013, 05:31 AM
#2843
Junior Member
Senior Hubber
MURALI SIR,
THANKS FOR your detailed writeups about thiruvilaiyadal-vmaligai-and pasamalar.
many facts known for limited circles only were highlighted and well informed to all sections of society thereby eliminating the .mistalks about these films to a larger extent.
we hope that these films will get a fresh openings sooner or later.
you have done a commandable job this way by removing \ falsepropagandas about nonperformances of these movies by some vested interests of the society.
nadigarthilagam always a SUPERSTAR WHETHER SOME PEOPLE I MEAN ONLY SOMEPEOPLE ACCEPT OR NOT.
Last edited by Subramaniam Ramajayam; 4th October 2013 at 06:36 AM.
-
4th October 2013, 06:43 AM
#2844
Senior Member
Diamond Hubber
அருமை முரளி சார். வெளியுலகிற்குத் தெரியாத பல உண்மைகள், அவ்வளவு ஏன் எங்களுக்கே தெரியாத பல நிகழ்வுகள் தங்கள் பதிவின் மூலம் அனைவருக்கும் விளக்கமாகத் தெரிய வந்துள்ளன. நீங்கள் குறிப்பிட்டது போல திருவிளையாடல், வசந்த மாளிகை, பாசமலர் போன்ற படங்களுக்கு சொல்லி வைத்தார் போல துரதிர்ஷ்டவசமான பின்னணிகள், அறியாமையினால் ஏற்பட்ட தவறுகள், விநியோகச் சிக்கல்கள் என்று ஏகப்பட்ட சிரமங்கள். இனிமேலாவது இது போன்ற சிக்கல்கள் முன் கூட்டியே ஆராயப்பட்டு தீர்க்கப்பட வேண்டும் என்பதே நமது ஆசை.
இப்போது கூடப் பாருங்கள். சமீபத்தில் சென்னை மகாலக்ஷ்மியில் வெளியான நீதி, நான் வாழ வைப்பேன் இரண்டு படங்களும் சக்கை போடு போட்டுள்ளன. இதற்கே நடிகர் திலகத்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களில் நமது ரசிகர்கள் மூழ்கிப் போன அந்த சூழ்நிலையிலும் நான் வாழ வைப்பேன் வசூலில் பின்னியுள்ளது. ரசிகர்கள் வரவு கம்மிதான் என்று தியேட்டர் நிர்வாகமே கூறியுள்ளது. ஆனால் பொது மக்கள் அமோக ஆதரவு அளித்து படத்தை எங்கோ தூக்கி நிறுத்தி விட்டார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? பொது மக்களின் ஏகோபித்த வசூல் சக்கரவர்த்தி நடிகர் திலகம் என்ற உண்மை மீண்டும் நிரூபணமாயிற்று என்றுதானே அர்த்தம்!
ஒரு நடிகர் திலகத்தின் படத்தை அதே தரத்தில் மீண்டும் ஒரு புதிய பிரிண்ட் போட்டு ரூபாய் ஐம்பதாயிரத்திலிருந்து அறுபதாயிரம் வரையில் ஆகலாம்).ஒரு பத்து தியேட்டர்களில் நல்ல விளம்பரம் செய்து வெளியிட்டாலே போதும். டிஜிட்டல், ரெஸ்டோர், கியூப் என்பதெலாம் இல்லாமல் அதே 35 mm இல் வெளியிட்டாலே போதுமானது என்பது என் தாழ்மையான கருத்து.
முரளி சார்,
மிக அபூர்வமான விஷயங்களை எங்களுக்காக சிரமப்பட்டு விசாரித்து இங்கே அழகாக, அருமையாகத் தொகுத்து வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசுவோரை மீண்டும் மறு சிந்தனை செய்ய வைத்துள்ளீர்கள். பல அரிய உண்மைகள் இப்போது தங்களால் தெரிய வந்துள்ளன.
விவரமான. வெகு நேர்த்தியான, உண்மையான, ஆதாரபூர்வமான, உணர்வுபூர்வமான தங்கள் இந்த தெளிய வைக்கும் கட்டுரைகளுக்கு எனது மனமார்ந்த ஆயிரமாயிரம் நன்றிகள்.
-
4th October 2013, 06:57 AM
#2845
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Gopal,S.
நடிகர்திலகத்தின் மேதைமையை எவ்வளவோ விவரித்தாயிற்று. ஆனாலும் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக....... அவர் மேதைமை புலப்படும்.
லட்ச கணக்கில் இருக்கே கோபால் சார்!
ரங்கன் தயங்கித் தயங்கி அந்த வீட்டினுள் நுழைகிறான்.
சில மாதங்களுக்கு முன்தான் அவன் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருப்பான்.
அந்த வீட்டின் எஜமானன் அவனுக்கு தந்தை; எஜமானியம்மாள் தாய்.
ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் /சதிகள் அவனை அந்த நல்லவர்களிடமிருந்து பிரித்து விடும்
வீட்டில் நுழையும் அவனுக்கு அங்குள்ள ஒரு அமானுஷ்ய அமைதி கலக்கத்தை கொடுக்க,
கண்கள் பயத்துடன் நாலாபுறமும் சுழலும்.அதோ அங்கே அவன் தந்தையின் படம்..
ஆனால்,ஆனால்..... அதற்கு மாலை அணிவிக்கப்பட்டுள்ளதே!
அந்த அதிர்ச்சி தாக்க, அப்படியே திரும்பும் அவன், அங்கு கீழே அமர்ந்திருக்கும் தாயைக் காண்கிறான்....
விதவைகோலத்தில்..
அப்படியே மனம் உடைந்து, இடி தாக்கியது போல “ஐயோ” என அலறிக்கொண்டு, கதறிக்கொண்டு,
வேரற்ற மரம் போல அவள் கால்களில் விழுகிறான்.
சில விநாடிகள்தான்!
பிறகு அந்த அழுகை போன இடம் தெரியவில்லை.
கண்களில் ஒரு வெற்றுப்பார்வை.
ஒரு காலியிடத்தை (vacuum)உருவாக்குவார் பாருங்கள்.!!
அனுபவித்தவர்களுக்கே தெரியும், ஒரு மாபெரும் சோகத்தை தொடர்வது இயலாமையின் பிரதிபலிப்பு..
இனி அழுது என்ன ஆகபோகிறது எனும் ஒரு விரக்தி கலந்த மனக்கசப்பு.
இப்படி ஒரு ஜீவனுள்ள, நம் கலாச்சாரம் கலந்த, ஆண்மகனின் உண்மையான சோகத்தை,
எந்த ஒரு நடிகனாலும் காட்ட முடியாது.பார்வையாளனை அப்படியே உலுக்கும் அந்த காட்சியில்
சோகத்திற்கு ஒரு இலக்கணமே படைக்கப்பட்டிருக்கும்.
இந்த spontaneity க்கு மறுபக்கம் செளத்திரியின் சோகம்.
காதல் மனைவியின் உடல் முன் அழக்கூடாது எனும் உறுதியுடன் வரும் போலீஸ் உயர் அதிகாரி
சிறிது சிறிதாக சிதைந்து கதறும் அந்த அற்புத காட்சி.
முந்தையது emotional fission என்றால் இரண்டாவது emotional fusion.
நடத்துபவரோ....
திரையுலகின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்..
நாம் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள்தான்!
Last edited by Ganpat; 4th October 2013 at 07:00 AM.
-
4th October 2013, 07:16 AM
#2846
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Murali Srinivas
பாச மலர் டிஜிட்டல் பிரிண்ட் வெளியீடு - Part III
பாச மலர் வெளியீட்டு சூழலும் அதன் பின் நடந்த நிகழ்வுகளும்
அன்புடன்
Dear முரளி சார்,
ஒரு கைதேர்ந்த, திறமைசாலியான வழக்கறிஞரால் கூட தன் தரப்பு வாதங்களை இவ்வளவு தெளிவாக ஆழமாக எடுத்துரைக்க இயலுமா என்பது சந்தேகமே.
Simply Awesome and Brilliant.மனமார்ந்த நன்றி.
அன்புடன்,
Ganpat
-
4th October 2013, 07:29 AM
#2847
Junior Member
Newbie Hubber
முரளி,
அற்புதம் என்ற சொல்லை தவிர வேறு ஏதும் அகப்படவில்லை.(தங்களிடம் கடன் வாங்கியது)
இப்படி ஒரு மூளைகளை திரியில் கொண்டிருக்கிறோம்.என்ன ஒரு in -depth analysis !!!என்ன இருந்தாலும் பன்னாட்டு வங்கியின் அதிகாரியின் மூளை என்றால் சும்மாவா?
மிக மிக அர்த்தமுள்ள ,அற்புதமான,கேள்விகளுக்கு இடமே வைக்காமல், எல்லா தரப்பினரையும் சரியாக உணர செய்த பதிவுகள்.
ஆனால் மனமுதிற்சியற்று ,என்றோ தவறான பிரசாரங்களால் brainwash செய்ய பட்ட சிலர் ,பெருமைக்கும்,போற்றுதலுக்கும் உரிய அந்த தமிழனை, இன்னும் எதிரியாகவே கருதி கொண்டிருக்கும் கேவலம்???இந்த communication & information யுகத்தில் கூடவா? வக்கிரம் சுமந்த தீவிரவாதிகள் மதத்தில் மட்டுமல்ல,நம் இனத்திலும் இருப்பதுடன் ,அதை பெருமையாக வேறு கருதுகிறார்கள்.
Last edited by Gopal.s; 4th October 2013 at 07:38 AM.
-
4th October 2013, 07:44 AM
#2848
Senior Member
Seasoned Hubber
டியர் முரளி சார்
திருவிளையாடல், வசந்த மாளிகை, பாச மலர் மூன்று திரைக்காவியங்களின் வெளியீடு நவீன மயமாக்கல் உள்பட அனைத்து விஷயங்களையும் Logical analysis மட்டுமின்றி நடைமுறையில் அவை சந்தித்த சோதனைகளையும் மிகவும் சிறப்பாக சொல்லி விட்டீர்கள். உலக மகா தமிழ்க் கலைஞனான நடிகர் திலகம் என்றைக்குமே வெற்றிகளை, சோதனைகளையும் சிரமங்களையும் சந்தித்தே பெற்றுள்ளார் என்பதற்கு நிகழ்கால சான்றாக இவை விளங்குகின்றன. ஒரு கலைஞன் அதுவும் நடிகர் திலகம் போன்ற சாதனையாளர் படம் என்றால் அதற்கு அத்துறையைச் சார்ந்தவர்களுக்கு இடையே வர்த்தக ரீதியாக போட்டி நிலவுகிறது என்பதே அவருடைய வெற்றித் தன்மைக்கு சான்றாக அமைந்து விடுகிறது. அப்படிப்பட்ட யுக கலைஞருக்கு ஓர் அஞ்சலியாக நினைத்து இத்தொழில் முனைவோர் இவ்வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பார்களேயானால் இவ்வித சிக்கல்கள் அதிகம் தோன்றாமல் இருந்திருக்கும். அதை இக்காலத்தில் எதிர்பார்ப்பது சரியில்லை என்றே என் சிற்றறிவுக்குத் தோன்றுகிறது.
பாச மலர் திரைப்படத்தைப் பொறுத்த வரை, தாங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல், அது பொன் முட்டையிடும் வாத்து எனலாம். உரிமையாளரிடம் இருக்கும் உயர்தரமுள்ள பொருள், என்றைக்கு இருந்தாலும் விலை போகக் கூடியது. மீண்டும் ஒரு முறை குறைந்தது 25 லிருந்து 30 திரையரங்குகள் வரை திரையிட்டாலும் வசூலை வாரிக் கொடுத்து பொருளாதார நிலையை மேலும் உயர்த்தக் கூடிய வலிமை வாய்ந்தது.
இனி நம் வேண்டுகோள் எல்லாம் இது தான். எதிர்காலத்தில் நடிகர் திலகத்தின் திரைப்படங்களை நவீன மயமாக்கலில் உருவாக்குவோர், திட்டமிடலை இறுதிவரை செய்ய வேண்டும்.
1. முதலில் தெளிவான பிரதி வேண்டும். அதற்கு முடிந்த வரை நெகடிவிலிருந்து தான் எடுக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான படங்களுக்கு நெகடிவ் தமிழ்த் திரைப்படங்களுக்கு இல்லை என்ற சூழல் தான் நிலவுகிறது. இது பரிதாபத்திற்குரிய விஷயம். தமிழ் சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப் படும் விஷயத்தில் செலுத்தப் படும் அக்கறை பழைய படங்களின் நெகடிவ்களை பாதுகாப்பதற்கும் செலுத்தப் பட வேண்டும். இருப்பன வற்றையாவது தவறாமல் பத்திரப் படுத்த வேண்டும். அதற்கு அரசின் அக்கறையும் ஆர்வமும் அவசியத் தேவை.
2. சினிமாஸ்கோப்பிற்கு மாற்றும் போது Proporationate அடிப்படையில் தான் அவசர கதியில் மாற்றுவதாக கேள்விப் படுகிறேன். அதில் நிச்சயம் பலன் கிடைக்காது. அம்முறையில் மாற்றும் போது பிரேமின் தலைப்பகுதியும் கீழ்ப்பகுதியும் அடி வாங்கும். காட்சியிலிருந்து விலகி விடும். இதற்கு உதாரணம், வசந்த மாளிகையில் காதலிக்கு அம்மாளிகையைக் காட்டும் காட்சியில் நடிகர் திலகத்தின் வசனத்தின் போது, பிரேமில் விட்டத்தில் இருக்கும் விளக்கு மட்டும் தெரிவது. எனவே ஒவ்வொரு பிரேமையும் கவனித்து அதற்கேற்றவாறு பிரேமின் நீள அகலத்தை அமைத்துக் கொண்டால் காட்சி சிதையாது. படம் அடிபடாது. இன்றைய நவீன தொழில் நுட்ப வசதி கிடைக்கும் காலத்தில் இது ஒன்றும் முடியாத விஷயமல்ல.
3. ஒலி அமைப்பு ... இசையைப் பொறுத்த மட்டில் எந்த காம்ப்ரமைஸும் கூடாது. எக்காரணத்தைக் கொண்டும் மேற்கொண்டு புதியதாக இசையமைக்கக் கூடாது. இருக்கும் ஒலி சரியில்லை என்றால், அப்படத்தின் நெடுந்தகட்டிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். இது மிகவும் நன்றாக வரும். ஒலியமைப்பை சரி செய்து கொள்ள ஏராளமான வசதி இருக்கும் போது புது இசையை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். அது ஒரிஜினல் இசையமைப்பாளரின் படைப்பினை அவமானப் படுத்துவதும் அவ மரியாதை செய்வதுமாகும். குறிப்பாக மெல்லிசை மன்னரின் இசையில் எக்கச் சக்கமான நுணுக்கங்களை அவர் பாடல்களில் மட்டுமின்றி பின்னணி இசையிலும் அளித்திருக்கிறார். அந்த இசைக் கருவிகளின் ஒலிகளிலும் அவர் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கச் செய்திருக்கிறார். இவையெல்லாம் புதியதாக செய்தால் AESTHETICS கண்டிப்பாக பாதிக்கும்.
4. RESTORATION மற்றும் COLOR CORRECTION செய்யும் போது ஒரிஜினாலிட்டி பாதுகாக்கப் பட வேண்டும். மிகவும் தேவைப் பட்டாலன்றி கலர் மாற்றப் படக் கூடாது. இதுவும் இன்றைய தொழில் நுட்ப வசதியில் சாத்தியமே.
5. நிபுணத்துவம் வாய்ந்த எடிட்டர்கள் நிச்சயம் தேவை. அதுவும் குறிப்பாக இன்றைய தலைமுறை எடிட்டர்களிடம் விட வேண்டும். இன்றைய தலைமுறை ரசனையை அவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள். அதற்கேற்ப படத்தின் நீளத்தை நிர்ணயிக்கும் திறமை அவர்களுக்கு இருக்கும்.
6. இப்படி அனைத்து வகைகளிலும் மிகச் சிறந்த வகையில் படத்தின் பிரதி அமைந்து விட்ட பிறகு முரளி சார் சொன்னது போல் Post Production லிருந்து திரையீடு வரை திட்டமிட்டு செய்தால், நடிகர் திலகத்தின் படம் மட்டுமின்றி எந்த பழைய படமானாலும் மக்களிடம் சென்றடையும்.
நேரம் செலவழித்து இதைப் படித்ததற்கு தங்கள் அனைவருக்கும் நன்றி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
4th October 2013, 07:53 AM
#2849
Senior Member
Seasoned Hubber
இந் நேரத்தில் திருவிளையாடல் திரைப்படத்தின் தரம் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஏற்கெனவே சொல்லப் பட்டது தான். இருந்தாலும் மீண்டும் சொல்கிறேன். உட்லண்ட்ஸ் திரையரங்கில் திருவிளையாடல் படத்தைப் பார்க்கும் போது ஏற்பட்ட பிரமிப்பு இன்று வரை அடங்க வில்லை என்பது தான் உண்மை. 31.07.1965 அன்று வெளியான போது எந்த பிரமிப்பை ஏற்படுத்தியதோ அதனை மீண்டும் உணர நேர்ந்தது. க்ரிஸ்டர் க்ளியர் என்பார்களே, அந்த அளவிற்குத் தெளிவான பிரதி, நவீன மயமான ஒலியமைப்பிலும் மிகவும் அட்டகாசமாகப் பொருந்தி ஒவ்வொரு இசைக் கருவியின் ஓசையையும் தெளிவாகக் கேட்கும் அளவிற்கு துல்லியமான ஒலிப்பதிவு இவையெல்லாம் பழைய படங்களுக்கும் நவீன மயமாக்கலில் சாத்தியமே என்பதற்கு முன் உதாரணம் திருவிளையாடல். இது கலர் படத்திற்கு உதாரணம் என்றால் கருப்பு வெள்ளை படங்களுக்கு மிகச் சிறந்ததாய், First is the Best என்பதாய் அமைந்து விளங்குவது பாச மலர்.
எப்படிப் பார்த்தாலும் தமிழ்த் திரையுலகில் முதன்மையானது, புதுமையானது என்றால் அங்கே நடிகர் திலகம் முதன்மையில் இருப்பார் என்பதை இவை எடுத்துரைக்கின்றன.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
4th October 2013, 07:57 AM
#2850
Senior Member
Seasoned Hubber
முந்தையது emotional fission என்றால் இரண்டாவது emotional fusion.
மிகச் சிறந்த விளக்கம் கண்பத் சார். இரண்டே வார்த்தைகளில் அந்தக் காட்சிகளைப் பற்றி ஏராளமான விஷயங்களை சொல்லி விட்டீர்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks