Page 291 of 399 FirstFirst ... 191241281289290291292293301341391 ... LastLast
Results 2,901 to 2,910 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #2901
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    டியர் கார்த்திக் சார்.நன்றி..தேவிகா பற்றிய.இந்தக் கட்டுரை ராயர் காப்பி கிளப் இணையக் குழுவில் எழுதியது..சொல்லாமல் விட்ட விஷயம்..இது எழுதி சில தினங்களில் (மே 1) என நினைக்கிறேன். அவர் இறந்துவிட்டார் எனச் செய்தி வ்ந்து மிக வருத்தமாக இருந்தது..

    கண்பத் சார் நன்றி.. அப்ப நான் ச்சின்னக் கண்ணன் தான் சார்லாம் வேண்டாம்.. பலே பாண்டியாவை விடவில்லை..எழுதும் போது கொஞ்சம் விடுபட்டு விட்டது (அதில் வரும் பாலாஜி லவ்வர் நன்னாயிட்டு இருக்கும் )

    ராகவேந்திரா சார்..//தலைவரின் முகத்தைப் பாருங்கள்...// நடிகர் திலகத்தின் உணர்ச்சிகள் அபாரமாக இருக்கும்..இன்னொரு காட்சியில் ரோஜாச்செடி வளர்ந்து பதறுவதை..ம்ம் ஓ லஷ்மி ஓ ஷீலா ஓ மாலா வும் நினைவுக்கு வருகிறது...

    சுப்ரமண்யம் ராம ஜெயம் சார்.. நன்றி ஆனந்த ஜோதி ஒன்று தானே அவர் எம்ஜியாருடன் நடித்த படம்.. நான் பாடல் மட்டும் பார்த்திருக்கிறேன்..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2902
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பலே! பலே!

    கண்பத் சார்,

    ரங்கனின் அய்யய்யோவை அற்புதமாக வடித்திருக்கிறீர்கள்.

    சின்னக் கண்ணா சார்,

    உங்கள் காட்டில் அடை மழை. தேவிகா, பாடல்கள் என்று ஒரே கலக்கல்.

    கார்த்திக் சார்,

    தங்கள் பங்கிற்கு குறைவில்லை. கன்னி, அண்ணி என்று எதுகை, மோனை. எனக்கு மஞ்சு ஞாபகம் வந்து விட்டது.

    ராகவேந்திரன் சார்,

    பொருத்தமான வீடியோக்கள் அளித்து ஏனையோர் பதிவுகளுக்கு மெருகு அளித்துள்ளீர்கள்.

    கோ,

    அனைத்துக்கும் நீதான் காரணம். சந்திரசேகரன் சாரையே நீண்ட பதிவு போட வைத்து விட்டாயே! இதில் நீ நிஜமாகவே சாதனை படைத்து விட்டாய்.

    சந்திர சேகரன் சார்,

    படத்தலைப்புகளைப் பற்றிய தங்கள் விளக்கம் அருமை. ஏதேது?... முரளி சார், நீங்கள் எல்லாம் வக்கீல் தொழிலுக்கு வந்திருந்தால் பல பேரை கிலி கொள்ள வைத்திருப்பீர்கள் போல் இருக்கிறதே! எவ்வளவு அறிவார்ந்த பதிவுகள்! முரளி சார்! மீண்டும் தங்களுக்கு நன்றி! மறுமுறை அனுபவித்துப் படித்தேன்.

    இன்று மதியப் பணி சென்றுவிட்டதால் நண்பர்களுடன் சேர்ந்து குதூகலித்து பதிவுகள் இட முடிய வில்லை. ஜாலியான பொழுதை இழந்து விட்டேன்.

    எல்லோரும் கலக்குகிறீர்கள். முக்கியமாக தலைவரின் நடை பற்றிய தங்கள் அனைவரது நடையும் நயம்.

    ம்ம்...எனக்குப் பிடித்த நடை! வருகிறேன். விரைவில் தருகிறேன்.

    அனைவர்க்கும் நன்றி!
    Last edited by vasudevan31355; 4th October 2013 at 10:59 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #2903
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    என் பதிவுகளை மனமுவந்து பாராட்டிய ராமஜெயம் சார், வாசு, கணேஷ் சார், கோபால், ராகவேந்தர் சார், திருச்சி ராமச்சந்திரன் சார்,சந்திரசேகர், கார்த்திக் மற்றும் ஹைதராபாத் ரவி ஆகியோருக்கு மனங்கனிந்த நன்றி.

    நடிகர் திலகம் திரியில் தாமதமாக நுழைந்தாலும் தரமான நகைச்சுவை மற்றும் கவிதைகளால் கலக்கும் சின்னகண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள். [எங்கள் ஊர்காரர் அல்லவா, கலக்குவதற்கு கேட்கவா வேண்டும்? கோபால் நற நறவென்று பல்லைக் கடித்தாலும் இதுதான் உண்மை!]

    கார்த்திக்,

    ஜெய்குமாரி மற்றும் விஜயலலிதா இருவரும் நமது படங்களில் ஏற்று நடித்திருந்த சில கதாபாத்திரங்களை பற்றி நீங்கள் எழுதியிருந்த பதிவுகள் நல்ல ரசனையோடு எழுதப்பட்டிருந்தன. ஒரு சில வார்த்தை பிரயோகங்கள் எல்லாம் மிக பொருத்தமாக அமைந்திருந்தன.

    அன்புடன்

  5. #2904
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நான் வாழ வைப்பேன் சென்னை மகாலட்சுமி திரையரங்கில் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறது. ஒரு வார வசூலில் பல படங்கள் 60 அல்லது 70 ஆயிரங்களை தொடுவதற்குள் நாக்கு தள்ளிப் போகும் சூழலில் அனாயாசமாக நான் வாழ வைப்பேன் 90 ஆயிரத்தை தொட்டிருக்கிறது. இத்தனைக்கும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் பெரும்பாலானோர் படத்தை பார்க்க செல்லவில்லை. நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா சம்மந்தப்பட்ட வேலைகள் மற்றும் ஞாயிறு மாலை T.Nagar வித்யோதயா பள்ளியில் நடைபெற்ற விசில் நிகழ்ச்சியினால் தியேட்டருக்கு போகாமல் இருந்தவர்கள் என்று பல்வேறு காரணங்களினால் ரசிகர்களின் பங்களிப்பு என்பதே bare minimum ஆகிப் போனது. சரி ரஜினியை விரும்புபவர்கள் சென்றார்களா என்றால் அதுவுமில்லை என்கிறார் அரங்க உரிமையாளர். முழுக்க முழுக்க பொது மக்கள் மட்டுமே அமோக ஆதரவு கொடுத்திருக்கின்றனர். திரும்ப திரும்ப ஒரு குரூப் ரசிகர்கள் மட்டுமே பார்க்கும் படமல்ல நடிகர் திலகத்தின் படங்கள். அவை அதையும் தாண்டிய எந்த மன்ற அல்லது அமைப்பு சார்புமற்ற பொது மக்களால் பார்க்கப்படுவது என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.If at all Proof was required! இந்த வெற்றி உடனே ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்ன தெரியுமா? சென்னை பிராட்வே திரையரங்கில் இன்று முதல் தினசரி மூன்று காட்சிகளாக விடுதலை படம் வெளியிடப்பட்டிருக்கிறது.

    இந்த மாதிரி படங்களாக,அதாவது நீதி [நாயகன்-நாயகி காரணமாக ஏதேனும் பிரச்சனைகள் வரக் கூடுமோ?] மற்றும் நான் வாழ வைப்பேன் [நாயக நடிகர்களின் ரசிகர்கள் இடையில்?] வெளியிடுகிறீர்களே சரியாக வருமா என்று சில பலர் சந்தேகம் கிளப்பிய போதும் நிச்சயம் நன்றாக வரும் என சொல்லி Fortune Favours the Brave என்ற பழமொழிக்கேற்ப தைரியமாக நின்று இன்று இந்த வெற்றிகளை குவித்திருக்கும் அருமை நண்பர் சுப்பு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

    இது போன்ற மேலும் பல வெற்றிகள் உங்களை தேடி வரட்டும்!

    அன்புடன்

  6. #2905
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    (காதல் காட்சிகள் தொடரை நான் எழுத ஆரம்ப பதிவாகவும், அண்ணிகள் பற்றி நிறைய பேச படுவதால் என்னுடைய மீள் பதிவு அவசியமாகிறது.)

    படம் - சிவகாமியின் செல்வன். -26 ஜனவரி 1974.
    பாடல்- எத்தனை அழகு கொட்டி கிடக்குது.
    பாடியவர்- எஸ்.பீ.பாலசுப்ரமணியம் .
    பாடலாசிரியர்- புதுமை பித்தன்
    இசையமைப்பு- மெல்லிசை மன்னர்.
    நடிப்பு- சிவாஜி-வாணிஸ்ரீ.
    இயக்கம்- சீ .வீ.ராஜேந்திரன்.

    நான் பதினைந்து வயது வயதுக்கு வந்த விடலையாய் ,மீசை முளைக்கும் பருவத்தில், இனம் பிரியா குழப்ப இன்ப உணர்வுகள் வாட்டி வதைத்த போது ,நான் மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்ந்த படம் (குடந்தை நூர்மஹாலில் வரிசையாய் ஐந்து நாட்கள்)

    அதிலும், என் விருப்பமான ஜோடியின் எத்தனை அழகு பாடலுக்காக மட்டும்(amatory மூட்,erotic arousal எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள்)இத்தனை முறை!!!!????

    ஆனால் அதே பாடலை, உலகத்தில் இன்பங்கள் பாக்கி உண்டா என்ற பருவத்தில் பார்க்கும் போதும், ஒரு உருது கவிதை, ஒரு erotic சிற்பம் (அ )சித்திரம் பார்க்கும் புத்துணர்வை தருகிறது என்றால் எழத பட வேண்டியதே.

    பொதுவாக சிவாஜி,பெண்களை விட ,பெண்களின் அம்மாக்களையே குறி வைத்தவைத்த முதல் அறுபதுகளில் இருந்து விடு பட்டு, பெண்களையும்,வாலிபர்களையும் ஈர்க்க தொடங்கி ,வசந்த மாளிகையில் ராஜாவாய் சுமதி சுந்தரியுடன் , இளைய மன்மதனாக ஜொலித்த கால கட்டம். வேறெந்த நடிகையுடன் நடித்ததை விட, வாணிஸ்ரீ.யுடன் அவர் நெருக்கம் உயர்ந்த மனிதனில் தொடங்கி நல்லதொரு குடும்பம் வரை தொடர்ந்தது.

    காதல் காட்சி என்ற போதும் பொத்தாம் பொதுவாக நடிக்காமல், பாத்திர இயல்பு படி,வித்தியாசம் காட்டி ,சூழ்நிலை, கதையமைப்பு புரிந்து நடிக்கும் சுவை ஆஹா!! அதிலும் எத்தனை variety !!!எவன் எவனையோ காதல் மன்னன் என்று அழைக்கிறோமே?இவனல்லவோ காதல் பேரரசன் என்று தோன்றும்.

    பொதுவாக erotism என்பது நமது கோவில்கள்,மத நூல்களில் கொண்டாட பட்ட போதும் ,british inhibitions காரணமாய் ,sexual slavery and deprivation இல் அகப்பட்டு, நல்ல hightened aesthetics என்று சொல்ல படும் erotic sensual intense romance என்று சொல்ல படும் காட்சிகளே எந்த இந்திய படங்களிலும் இல்லை.(அப்படியே ஒன்றிரண்டு வந்தாலும், காஞ்ச மாடு கம்பங்கொல்லையில் புகுந்த case தான் அல்லது மாலிஷ்.). எனக்கு தெரிந்த வரை இந்த Erotic genre இலும் முழு மதிப்பெண் நம் நடிகர் திலகத்துக்கே.நெஞ்சத்திலே நீ-சாந்தி, மெல்ல நட-புதிய பறவை,பலூன் காட்சி-சுமதி என் சுந்தரி, plum கடிக்கும் வசந்த மாளிகை என்று ஆயிரம் இருந்தாலும் ,இந்த குறிப்பிட்ட பாடல் erotic திலகம்.


    எத்தனை அழகு பாடலில்(ஒரே டேக்கில் படமாக்க பட்டதாம்.hats off ! ஒரு சப்பை முத்த காட்சியை 20 டேக் எடுக்கும் கலிகாலம்) முதலில் களம். தங்களுக்குள் மண பந்த ஒப்பந்தம் புரிந்த(மற்றவர்கள் அறியாமல்) ஒரு ஜோடி ஒரு மழை நிறைந்த குளிர் இரவில்,ஒரு அறைக்குள் மாட்டி, தங்களை இழக்கும் காட்சி. அவனுக்கோ இன்பத்தை சோதிக்கும் ஆர்வமும், சுவைக்க துடிக்கும் அவசரமும்,தன்னை மறந்த நிலை. அவளுக்கோ, தயக்கம் கலந்த சம்மதம், தவிக்க விடும் நாணம்,உரிமையரியா உறவின் அறியா அச்சம் என இந்த ஜோடியின் தவிப்பை, சிவாஜியும் ,வாணிஸ்ரீ யும் அற்புதமாய் expressions ,body language ,suggestive movements என்று பின்னியிருப்பார்கள்.

    முதலில் இந்த பாடலில் சி.வீ.ஆரின் colour sense and psychology யை பாராட்டியே ஆக வேண்டும்.(இதை அவர் சுமதி என் சுந்தரியிலேயே அற்புதமாக கையாண்டிருப்பார்) வாணிஸ்ரீ முதலில் ஒரு பிங்க் நிற புடவை அணிந்து அறைக்குள் வருவார். பிங்க் ஒரு வளர் சிறுமியின் பெண்மை குறியீடு. பிறகு சிவப்பு வண்ண அவசர ஆடைக்கும் மாறுவார்.சிவப்பு feeling of intense excitement ,romantic warmth ஐ enhance பண்ணும் நிறம்.ஆணுடையது வெளிர் பச்சை நிறம்.fertility ,bodily functional assurance குறிப்பது. இந்த இரண்டு நிறங்களின் இணைப்பே பாதி mood elater ஆக காரணியாகும்.

    இதை விட hero -heroine physical ஆன எவ்வளவோ சிவாஜி பாடல்கள் கூட உண்டு. ஆனால், இந்த காட்சி தந்த intensity எந்த காட்சியும் தந்ததில்லை.

    ஒரு இள விமானி, ஒரு target நோக்கி படையெடுக்கும் adventurism ,experimentation முதலிய உணர்ச்சிகளுடன்,ஒரு அவசரம் கலந்த காம விழைவை அற்புதமாய் பிரதிபலிப்பார் NT .வாணிஸ்ரீ (AVM ராஜன் சொல்வது போல சிவாஜிக்காக பிரம்மா ஸ்பெஷல் ஆய் படைத்த கருப்பழகி) சிவாஜியுடன் இழைந்தும், தயங்கியும், உணர்ச்சி வசபட்டும், சூழ்நிலையறிந்து விலகுவதும், இறுதியில் தொடர் தூண்டுதலால் இணங்குவதும் என அற்புதமாய் NT க்கு ஈடு கொடுத்திருப்பார்.

    எழும் போதே suggestive ஆக தன் அவசர விழைவை வேட்கையை உணர்த்தி கையில் முத்தமிடுவார். , பிறகு ஒரு இலக்கில்லாமல் விலகும் வாணிஸ்ரீயை ஒரு குறிப்பின்றி தொடர்ந்து அலை பாயும் உணர்ச்சிகளை உணர்த்துவார் சிறு சிறு தொடல்களில். பிறகு ஒரு இலக்கில்லா passionate முத்தங்கள்(ஒரு awkward அவசரம் தெரியும்),பிறகு குறிப்பை உணர்த்தும் coat -stand காட்சி, திரை காட்சி என அவசர தூண்டல் ,ஓரு அனுபவமின்மையின் awkward desperation ஐ மிக அழகாக உணர்த்துவார். இதில், வாணிஸ்ரீயின் திரையை இறுக்கும் கைகள்,என்று எல்லாமே suggestive erotism .physical ஆக மிக குறைவான ,தேவையான அணைப்புகள் மட்டுமே இருக்கும்.

    பிறகு மஞ்சத்தில் ஓரளவு தயார் நிலைக்கு ஆளானாலும் ,பிறகு அரை மனதுடன் தயங்கி விலகி, தலையணையை மார்புடன் வைத்து காத்து கொள்ள எண்ணும் வாணிஸ்ரீயை ,ஒரு இரையை குறி வைக்கும் இறுதி ஆவேசத்துடன் சிவாஜி அணைத்து இணங்க வைப்பார்.

    ஆபாசம், கவர்ச்சிக்கு விடை தெரியாமல் இன்றும் முழிக்கும், நம் தமிழ் நாட்டு தாய்,தந்தை குலங்களுக்கு, இந்த காட்சியின் அழகும்,அமைப்பும், erotic hightened emotional aesthetics புரியாமல்,இந்த படத்தை கை விட்டனர்.இந்த காட்சியில்,மற்ற காதல் காட்சிகளில் இல்லாத, எந்த மிகையும் இருக்காது. சம்பத்த பட்டவர்களின் உணர்வு மிகு நடிப்பாற்றல்,அழகுணர்ச்சி மிகுந்த suggestive shots &gestures தவிர.,
    Last edited by Gopal.s; 7th October 2013 at 08:27 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #2906
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //நடிகர் திலகம் திரியில் தாமதமாக நுழைந்தாலும் தரமான நகைச்சுவை மற்றும் கவிதைகளால் கலக்கும்// முரளிஸ்ரீநிவாஸ் அவர்களுக்குமிக்க நன்றி..நானெல்லாம் ஒரு துக்கிணியூண்டு ரசிகன்..உங்கள் அளவுக்கு எழுத்தாற்றல் மிக்கவனல்ல.. மறுபடி நன்றி..

    என்னங்க்ணா..கோபாலண்ணா //வாணிஸ்ரீ முதலில் ஒரு பிங்க் நிற புடவை அணிந்து அறைக்குள் வருவார். பிங்க் ஒரு வளர் சிறுமியின் பெண்மை குறியீடு. பிறகு சிவப்பு வண்ண அவசர ஆடைக்கும் மாறுவார்.சிவப்பு feeling of intense excitement ,romantic warmth ஐ enhance பண்ணும் நிறம்.ஆணுடையது வெளிர் பச்சை நிறம்.fertility ,bodily functional assurance குறிப்பது. இந்த இரண்டு நிறங்களின் இணைப்பே பாதி mood elater ஆக காரணியாகும்// சே இதெல்லாம் தெரியாம ஆன்னு வாணிஸ்ரீயே பாத்துக்கிட்டிருந்திட்டியே கண்ணான்னு இடித்துரைக்குது மனசாட்சி.. எஸ்பி பி கூட இந்தப் பாட்டைக் கொஞ்சம் சிரமப்பட்டுப் பாடியதாக எங்கேயோ படித்த நினைவு.. கலக்குங்க..// ஒரு சப்பை முத்த காட்சியை 20 டேக் // என்னது இது அப்ப நீங்க என்னை மாதிரி யூத் இல்லையா
    குத்தமெனக் குவிந்துவிடும் கொவ்வையிதழ் தன்னையே
    முத்தமிட மாறிவிடும் பார் நு யாரோ முனிவர் சொல்லக் கேள்விப் பட்டதில்லையா?!.. ம்ம் நானே இப்போ தான் ராஜாராணி நயன்ஸ் பார்த்துட்டு வந்துருக்கேன்.(நைஸா உன்னப் பத்திச் சொல்லிடு.உன் ஜொ.க்கு அளவே இல்லை.. - மனசாட்சி.கம்னு இரு)

    ** பார் நா உலகம்கற அர்த்தம்!

    கோபால் சார், நீங்க இடலைன்னா நானே கேக்கறதா இருந்தேன். நாளைக்கு. நன்றி..
    Last edited by chinnakkannan; 5th October 2013 at 02:52 AM.

  8. #2907
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நடிகர் திலகம் 85வது பிறந்த நாள் விழா, 01.10.2013, சென்னை சங்கீத வித்வத் சபை அரங்கம் ... காணொளி

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #2908
    Junior Member Newbie Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    நான் வாழ வைப்பேன் சென்னை மகாலட்சுமி திரையரங்கில் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறது. ஒரு வார வசூலில் பல படங்கள் 60 அல்லது 70 ஆயிரங்களை தொடுவதற்குள் நாக்கு தள்ளிப் போகும் சூழலில் அனாயாசமாக நான் வாழ வைப்பேன் 90 ஆயிரத்தை தொட்டிருக்கிறது. இத்தனைக்கும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் பெரும்பாலானோர் படத்தை பார்க்க செல்லவில்லை. நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா சம்மந்தப்பட்ட வேலைகள் மற்றும் ஞாயிறு மாலை T.Nagar வித்யோதயா பள்ளியில் நடைபெற்ற விசில் நிகழ்ச்சியினால் தியேட்டருக்கு போகாமல் இருந்தவர்கள் என்று பல்வேறு காரணங்களினால் ரசிகர்களின் பங்களிப்பு என்பதே bare minimum ஆகிப் போனது. சரி ரஜினியை விரும்புபவர்கள் சென்றார்களா என்றால் அதுவுமில்லை என்கிறார் அரங்க உரிமையாளர். முழுக்க முழுக்க பொது மக்கள் மட்டுமே அமோக ஆதரவு கொடுத்திருக்கின்றனர். திரும்ப திரும்ப ஒரு குரூப் ரசிகர்கள் மட்டுமே பார்க்கும் படமல்ல நடிகர் திலகத்தின் படங்கள். அவை அதையும் தாண்டிய எந்த மன்ற அல்லது அமைப்பு சார்புமற்ற பொது மக்களால் பார்க்கப்படுவது என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.If at all Proof was required! இந்த வெற்றி உடனே ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்ன தெரியுமா? சென்னை பிராட்வே திரையரங்கில் இன்று முதல் தினசரி மூன்று காட்சிகளாக விடுதலை படம் வெளியிடப்பட்டிருக்கிறது.

    இந்த மாதிரி படங்களாக,அதாவது நீதி [நாயகன்-நாயகி காரணமாக ஏதேனும் பிரச்சனைகள் வரக் கூடுமோ?] மற்றும் நான் வாழ வைப்பேன் [நாயக நடிகர்களின் ரசிகர்கள் இடையில்?] வெளியிடுகிறீர்களே சரியாக வருமா என்று சில பலர் சந்தேகம் கிளப்பிய போதும் நிச்சயம் நன்றாக வரும் என சொல்லி Fortune Favours the Brave என்ற பழமொழிக்கேற்ப தைரியமாக நின்று இன்று இந்த வெற்றிகளை குவித்திருக்கும் அருமை நண்பர் சுப்பு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

    இது போன்ற மேலும் பல வெற்றிகள் உங்களை தேடி வரட்டும்!

    அன்புடன்
    Murali Sir

    Super Star Rajini acted in both Naan Vaazha Vaippen & Viduthalai; This is unforgettable fact.

  10. #2909
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by PMC View Post
    Murali Sir

    Super Star Rajini acted in both Naan Vaazha Vaippen & Viduthalai; This is unforgettable fact.
    PMC,

    You have mentioned less 'unforgettable facts'. But....
    Justice Gopinath
    Naan Vaazha Vaippen
    Viduthalai
    Padikkaathavan
    Padaiyappa
    are 'full unforgettable facts'.

  11. #2910
    Junior Member Newbie Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    PMC,

    You have mentioned less 'unforgettable facts'. But....
    Justice Gopinath
    Naan Vaazha Vaippen
    Viduthalai
    Padikkaathavan
    Padaiyappa
    are 'full unforgettable facts'.
    Karthik Sir
    I meant - rereleased movies (Naan Vaazha Vaippen and Viduthalai) and their run only. Credit equally should go to Rajini too.
    That's all.
    (I also know all the movies you listed)

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •