-
11th October 2013, 11:58 AM
#3071
Senior Member
Diamond Hubber
'யாரடா மனிதன் இங்கே என்று கேட்டவரைக் கூட்டி வந்து இங்கே காண்பித்த சகோதரி சரஸ்வதி லக்ஷ்மிக்கு நன்றி!
-
11th October 2013 11:58 AM
# ADS
Circuit advertisement
-
11th October 2013, 02:24 PM
#3072
Junior Member
Newbie Hubber
தூர் தர்ஷன் தொலைத்து விட்ட சிவாஜியை நீ தேடி துருவி தந்ததற்கு மனமார்ந்த நன்றிகள் வாசு.
முரளி,எங்கள் தகவல் சுரங்கமே, அருமை.
சின்ன கண்ணா, என் வழி தனி வழி என்று தூள் கிளப்புகிறாய்.
டியர் ரவி சார்,நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் படி செய்து விட்டீர்கள்.
-
11th October 2013, 03:07 PM
#3073
Senior Member
Senior Hubber
கோபால் ஸார்,
சிவாஜியின் காதல் தொடர் அருமையான துவக்கம். அதுவும் அவரின் துவக்கமான பராசக்தியிலிருந்தே என்பது (வாசுதேவன் சாரும் அவ்வாறே ஆடைகள் தொடரை துவங்கினார். சிறப்பாக சென்று கொண்டு உள்ளது.) உங்கள் தொடரும் சிறப்பாக உள்ளது.
பாராட்டுக்கள். உங்களின் அடுத்த் பதிவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இரு மலர்கள் ஸேர்த்து கொள்ளவும். அந்த நாள் படத்தின் பதிவை மிக ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
-
11th October 2013, 03:18 PM
#3074
Senior Member
Senior Hubber
வாசுதேவன் ஸார்,
ஸத்ரபதி சிவாஜி - டெலி-பிலிம் கட்டுரை எல்லோரும் சொல்வது போல் அரிது ஆனதுதான். அபூர்வமான புகைப்படங்களும் தங்கள் கடின உழைப்பை பறை சாற்றுகின்றன. ஏற்கனவே இதைப்பற்றி சிறிது விவாதிததிருந்தாலும் சுவாரசியம் கூட்டி விரிவாக எழுதி நினைவில் நிறுத்திவிட்டீர்கள். வாழ்த்துகள்.
-
11th October 2013, 03:27 PM
#3075
Senior Member
Senior Hubber
ரவி ஸார்,
நெஞ்சிருக்கும் வரை - என் நெஞ்சில் எந்நாளும் நிலைத்திருக்கும் திரைப்படம். இயக்குநர் ஸ்ரீதர், நடிகர் திலகம் கூட்டணியில் வந்த அருமையான படம். நன்றாகவே எழுதி உள்ளீர்கள். பாடற் காட்சிகளும் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இப்படி சிறந்த படங்களை எடுத்து எழுதுங்கள். வாழ்த்துகள்.
-
11th October 2013, 03:34 PM
#3076
Senior Member
Senior Hubber
நடை அழகைப்பற்றி எழுதி கலக்கி கொண்டிருக்கும் சின்னக்கண்ணன் ஸார்,
நீங்க இங்க மட்டுந்தான் இப்பிடி எழுதறீங்களா. இல்லை எல்லா இடங்களிலும் இப்படித்தானா? வித்தியாசமா ஒவ்வொரு நடை அழகையும் எழுதறது பேஷ் பேஷ். ரொம்ப நன்னா இருக்கு. நெறைய இப்பிடி வித்தியாசமா எழுதுங்க வோய்!!!
-
11th October 2013, 04:25 PM
#3077
Senior Member
Senior Hubber
வாசுதேவன் சார்,கோபால் சார், கல் நாயக் ஸார் நன்றி 
கல் நாயக் ஸார்..எழுதினாப் போச்சு ஓய்.. என்ன கொஞ்சம் மூட் வரணும்
-
11th October 2013, 04:51 PM
#3078
Junior Member
Newbie Hubber
சிவாஜியின் காதல்கள்- 2
அந்த நாளும் வந்திடாதா.......
பராசக்தியிலும்,அந்த நாளிலும் படித்த சிந்திக்கும் பெண்ணை காதலித்து மணந்து நொந்து அந்த நாளில் அவர் பேசும் வசனம் "படித்த பெண்ணை கல்யாணம் செய்தது தவறு என்று புரிந்து கொண்டேன்".(நாம் எல்லோரும் நடைமுறை வாழ்க்கையில் நொந்து கொள்ளும் விஷயம்தான்)
இந்த படத்திலும் sidetrack முதலில் பார்த்து விட்டு, maintrack ற்கு வருவோம்.படத்தில் சிவாஜி ராஜன் என்கிற புதுமை லட்சிய வெறி கொண்ட unethical careerist ஆகவும்,சந்தர்ப்பம் வாய்க்கும் போது அப்படியே மற்ற பெண்ணையும் பதம் பார்க்கும் ஆளாகவும்(காதலித்து கடிமணம் புரிந்தும்)வருவார். அம்புஜம்(சூர்ய லட்சுமியா ,மேனகாவா?),சின்னையா என்கிற (சிவாஜியின் குள்ள குரு சம்பந்தம்) பணக்கார கிழவனின் உறவில் பணத்துக்காக திளைக்கும் நாட்டிய நங்கை. பிக்னிக் வந்துள்ள இடத்தில் ராஜனின் கண்ணில் பட்டு தொலைக்க வேண்டுமா? இட்லியை நன்றாக முக்கி கொண்டிருக்கும் குள்ள கிழவனுக்கு தண்ணி கொண்டு வர செல்லும் அம்புஜத்தை ஹாட் அணிந்து ராஜன் குறும்பு வில்ல சிரிப்புடன் நோட்டமிட்டு ,சின்னையாவிடம் வந்து அமர்ந்து வம்பு வளர்க்கும் ஜாலி வில்லத்தனம் கலந்த குறும்பு அமர்களமாய் இருக்கும்.அம்புஜம் வருவதற்கு முன் அப்புற படுத்த பார்க்கும் சின்னையாவை உட்கார்ந்தே டபாய்ப்பார் . அம்புஜம் வந்ததும் நோட்டமிட்டு கள்ளபார்வையுடன், அம்புஜத்தின் சம்மதமும் கலக்க ,மறைமுகமாக அம்புஜம் தன பூர்விகம்,வாழும் இடம் எல்லாவற்றையும் குறிப்பிட சின்னையா டென்ஷன் ஆவதும், ராஜன் குறும்போடு கணக்கு பண்ணுவதும் படு ஜாலியான யதார்த்தம். பிறகு சின்னையா சின்ன வீட்டிலேயே அம்புஜத்தோடு romance பண்ணும் அழகு.அம்புஜம் கற்பமானதும் சால்ஜாப்பு சொல்லி நாள் கடத்தி உத்தர என்னும் நேர்த்தி.காதல் கடிதங்களை காட்டி மிரட்டும் அம்புஜத்தை துப்பாக்கி முனையில் கடிதங்களை திரும்ப வாங்கி ,அடிக்கும் கமெண்ட்.
உஷாவின் சந்திப்போ பராசக்தி type ,intellectual conflict . அறிவுக்கும்,கல்விக்கும் வந்தனை செய்து,இதில் அரசியல் வேண்டாம் என்று வாதித்து சபையை மயக்கும் உபகார சம்பள அநாதை ராஜனை , சத்யாக்ரக இயக்க சுதந்திர எழுச்சி தலைவர்களின் தியாகத்தை நினைவுறுத்தி ,உறவினர் துன்ப நிலையில் உள்ள போது சிந்தனையா செய்வோம் என்று கேட்டு சபை வளையல் அணிவிக்கும் அளவு பங்க படுத்துவார் உஷா.
ஆனால் அந்த ராஜன் மனதில் புகுந்து விட்டதும்,சில நாட்கள் கழிந்து தொழில் ரீதியாக தந்தையிடம் பேசும் ராஜனை கண்டு ,இருவரும் பழைய பிரச்சினையை கருதாமல் மனமொப்புவதும், முழுக்க முழுக்க அறிவு சார்ந்த காதல்.
கடைசியில் மனைவியிடம் பிடிபட்டு கட்டி வைத்து confront பண்ணும் காட்சி சிவாஜியின் அற்புத நடிப்பை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. சொந்த நாடு அறிவாளிகளுக்கு பாரா முகம் காட்டினால் ,அவர்கள் தங்களுக்கு வசதியான பாதையை தேர்ந்தெடுத்து நியாய படுத்துவது இந்த பட காட்சியில்,வசனத்தில்,நடிப்பில் விகசித்து தெறிக்கும்.சிவாஜி குரூரம்,ஏமாற்றம்,மகிழ்ச்சி,அவசரம்,கடுப்பு,எதிர்பார ்ப்பு எல்லா உணர்வுகளையும் கொடுக்கும் அழகே அழகு.இவ்வளவுதானா உஷா உன் தேச பக்தி என்று மனைவியை கலாய்ப்பது,வெறுக்க வேண்டியது தோல்வி என்னும் போது ஒரு தீவிர வெறி,அம்புஜம் விஷயத்தை கேட்டு ஏன் அவளையும் ஏமாற்றுகிறாய் என்று மன்றாடும் மனைவியிடம் பிடி கொடுக்காமல்,கூட வந்தால் லேடி அம்பாசடர் ஆகா திரும்பலாம் என்ற கொக்கி,துப்பாக்கி நீட்டும் மனைவியிடம் அன்று கடற்கரையில் சொன்னது நினைவிருக்கிறதா இன்பத்தின் எல்லை என்று,புரண்டு படுக்கும் போதும் முழிப்பாயே என்று மனைவியின் உணர்வை தூண்டி divert பண்ண பார்க்கும் போது சிறிதே உணர்ச்சி காதல் தலை தூக்கும்.
மற்ற படி அறிவு காதல்,ஏமாற்று காதல்,துரோக காதல்,காரிய காதல்தான் இந்த படத்தில்.
அடுத்து,இதையெல்லாம் சரி பண்ணும் இரண்டு உணர்வு காதல்கள்.
-
11th October 2013, 05:02 PM
#3079
Senior Member
Senior Hubber
நடிகர் திலகத்தின் நடை
*
4. மிடுக்கும் துடுக்கும்
*
24.07.72
ஷேமம்…
*
அன்புள்ள நீலாவிற்கு.,
நலம் நலமறிய ஆவல்.. எப்படி இருக்கிறாய்.. நேத்துத் தான் ஒண்ணா சினிமா பாத்தோம்..இன்னிக்கு என்ன இன்லேண்ட் லெட்டர் என நீ திகைப்பது தெரிகிறது..உனக்கு ஃபோன் செய்ய வேண்டுமென்றால் பக்கத்து மளிகைக் கடைக்குப் பண்ண வேண்டியதாய் இருக்கிறது..அவன் ம்ம் இருங்கன்னு சொல்லிட்டு யாரிடமோ க.ப 2 கிலோ உ.ப ரெண்டு கிலோ என கடைக் கணக்கைச் சொல்ல ஆரம்பித்து விடுகிறான்..
*
அப்புறம் நீ ஆடி அசைந்து வந்து ஃபோன் எடுத்து குரலெழும்பாமல் வேறு பேசுகிறாய்..நாமென்ன லவ்வர்ஸா.. ஹஸ்பெண்ட் வைஃப் தானே..கொஞ்சம் சத்தமா ஃப்ரீயா பேசவேண்டியது தானே..ம்ம்.
*
ஒண்ணும் கேக்காம இருந்ததா.. அதான்.. ரொமான்ஸே மறந்து போகப் போகுதுன்னு வரச்சொன்னேன்..உங்கப்பாவை யாரு அண்ணா நகர்லாம் தாண்டி வீடு கட்டிவைக்கச் சொன்னார்.. நானிருக்கறது மதுரை டவுன்..உன்னை வந்து என்னோட பஜாஜ் சேட்டக்கில் கூட்டிச் செல்லலாம் என்றால் அதுக்கும் உன் கிட்ட ஆயிரத்தெட்டு வெக்கம். பஸ்ஸிலேயே வருகிறேன் என்று சொல்கிறாய்...அடி போடி இவளே..ம்ம் ஒரு மாசம் அதுவுமிந்த ஆடி மாசம் எப்படிப் போகப் போறதோ தெரியலை..
*
நேத்துப் பார்த்த படம் ஆண்டவன் கட்டளை எப்படி இருந்துச்சு..ஒருவார்த்தை சொல்லவே இல்லை..பழைய படம் கூட்டமே இருக்காதுன்னு பார்த்தா நல்ல கூட்டம்.. அப்பப்ப உன்னைப்பார்த்தாக் கூட சீரியஸா ஸ்க்ரீனையே பாத்துக்கிட்டு இருந்தாய்.. நல்ல படம் தான் இல்லையா..
*
அதுவும் சிவாஜி முதல் காட்சியில் வெகு மிடுக்காய் கோட் சூட் போட்டுக் கொண்டு விசுக் விசுக்கென நடக்கற நடை இருக்கே..அதுவும் ட்ராஃபிக் எல்லாம் ஸ்தம்பித்து குறுக்கே ஒரே விதமாய் நடந்து செல்வாரே வாவ்
*
இந்த தேவிகாப் பொண்ணு கூட கொஞ்சம் நல்லாருக்குல்ல.. ந\ன்னா ஜீரால ஊறின கொழு கொழு குலோப் ஜாமூன் மாதிரி ( நீ சாப்பிட்டிருக்கியோ..இல்லைன்னா ஆரியபவன் – இந்த மாசம் முடிஞ்சு வந்ததும் கூட்டிக்கிட்டுப் போறேன்)
*
அந்த தேவிகாப் பொண்ணு கிட்ட காதல் வலைல்ல விழுந்துட்டு ஆளே மாறிப்போக – முதல்ல காலேஜீக்கு வருவார் சிவாஜி..அந்த சீன் சூப்பர் இல்லை..ரொம்ப அழகிய யூத் நடை..
*
கலக்கலா டிரஸ் பண்ணிக்கிட்டு குட்மார்னிங்க் பாய்ஸ் குட்மார்னிங்க் கேர்ள்ஸ்னு வருவாரே வாவ் நன்னா இருக்குமில்லை..
*
அம்பிகாபதி மாண்டான் – என சந்திரபாபு சொல்ல சிவாஜி அது காதலின் தத்துவம்னு சொல்றச்சே உன்னோட கண்ணு கொஞ்சம் வெளிய வந்து அழகா இருந்துச்சு..கொஞ்ச வெளிச்சத்துல பார்த்தேன்..
*
குட்டியா டச்சிங் டச்சிங்க் கூட பண்ண விடமாட்டேங்கற..ம்ம் நேர்ல வா பார்த்துக்கறேன்
*
மொத்தத்துல படம் ஓகேதான்..ஆனா வீட்டுக்கு பஸ்ஸிலேயே போய்க்கிறேன்ன பாரு அதான் எனக்குப் பிடிக்கலை..பத்திரமாப் போய்ச் சேர்ந்தியா..முடிஞ்சா மளிகைக் கடைக் காரர் ஃபோன்ல எனக்கு பேங்க்குக்கு ஃபோன் பண்ணு..
*
சீக்கிரம் வீட்டுக்கு வந்துடு..ஓ.கே..ஐ மிஸ் யூ டா..
*
உன் அன்புள்ள
மாதவன்..
25.07.72
அன்புள்ள இவருக்கு.,
யோவ்.. என்ன ஒரு துணிச்சல் இருந்துச்சுன்னா தேவிகாவை குலோப் ஜாமூன்லாம் சொல்லுவ.. அதுவும் என் கிட்டயே....இன்னும் இருபது நாள் தான்..நேர்ல ஒங்களை வெச்சுக்கறேன்..அடுத்த வாரம் படத்துக்குக் கூப்பிட்டீங்கன்னா வரமாட்டேன்..
அன்புடன் – நற நற – I didn’t miss you..daa..
நீலா மாதவன்..
*
Last edited by chinnakkannan; 11th October 2013 at 05:04 PM.
-
11th October 2013, 05:09 PM
#3080
Senior Member
Senior Hubber
//அந்த நாளும் வந்திடாதா.......// நல்ல ரைட் அப்.. நன்றாக இருக்கிறது.கோபால் சார்... நடத்துங்க நடத்துங்க.. அந்த நாள் நான் அந்த நாளில் பார்த்தது.. மறுபடி பார்த்து ரெஃப்ரஷ் செய்து கொள்ள் வேண்டும்..
Bookmarks